Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:02:01 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8850
#KOTW8850
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 8, 2012
ஆகஸ்ட் 13 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் இரு சேவைகள் மீண்டும் ஏலம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2705 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகராட்சியின் இரு சேவைகள் மீண்டும் ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது:-

இதனால் காயல்பட்டினம் நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்,

காயல்பட்டினம் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கீழ்க்கண்ட பட்டியலில் காணப்படும் இனங்களுக்கு பொது ஏலம் 2012-2013ஆம் வருடத்திற்கு, 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி அலுவலக கணினி மையத்தில் உரிய ஏலத்திற்கான டேவணித் தொகையை செலுத்தி, செலுத்திய சீட்டு நகலுடன் ஏலத்தில் கலந்து கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரிடம் ஏலப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினமே மதியம் 3.00 மணி முதல் 4.30 மணிக்குள் ஏலத்தில் டேவணித் தொகை செலுத்தி கலந்து கொள்ளும் அனைத்து நபர்கள் முன்னிலையிலும் வெளிப்படையான ஏலம் விடப்படும். ஏலம் எடுத்த ஏலதாரர்கள் ஏலத் தொகை முழுவதையும் 13.08.2012 அன்றே செலுத்தி விட வேண்டும். தவறும் பட்சத்தில் ஏலம் ரத்து செய்யப்படும்.

வ.எண்

ஏலம் விடப்படும் பொருள் / சேவை

குத்தகை காலம்

01

நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டி

14.08.2012 முதல் 31.03.2013 முடிய

02

பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமம்

14.08.2012 முதல் 31.03.2013 முடிய



நிபந்தனைகள்:

(01) ஏலம் கேட்க விருப்பமுள்ளவர்கள், டேவணித் தொகை முழுவதும் செலுத்தி ஏலம் கேட்க வேண்டும்.

(02) கூடுதல் ஏலம் எடுத்தவர், ஏலத் தொகை முழுவதையும் ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

(03) கூடுதல் ஏலம் முடிவு நகராட்சி மன்ற அங்கீகாரத்திற்கு உட்பட்டது .

(04) ஏலம் முடிவு செய்யப்பட்டதும், ரூபாய் 20க்கான ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

(05) ஏலத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும், இதற்கு முன்பு நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட கடைகளையோ அல்லது இடங்களையோ குத்தகைக்கு எடுத்து, முறையாக ஏலத்தொகை செலுத்தாதிருந்தால், அவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(06) எவ்வித காரணமும் காட்டாமல் ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது மறு ஏலம் கேட்கவோ நிர்வாக அதிகாரிக்கு அதிகாரமுண்டு.

(07) எந்த சந்தர்ப்பத்தில் தேவையானது என நிர்வாக அதிகாரி அவர்களால் கருதப்படும் எந்த விதமான முடிவை எடுக்கவும் அவருக்கு அதிகாரமுண்டு.

(08) ஒப்பந்தக் கட்டுப்பாட்டை மீறி நடந்த குற்றத்திற்கான பொறுப்புத் தொகையை பறிமுதல் செய்வதில் மன்றத்தின் தீர்மானமே முடிவானதாகும்.

(09) ஏலத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க நிர்வாக அதிகாரிக்கு உரிமை உண்டு.

(10) நகராட்சி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டுமே ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும்.

(11) மின் கட்டணத்தை ஏலதாரரே செலுத்த வேண்டும்.

(12) மின் மோட்டார் பழுது ஏற்பட்டால் ஒப்பந்தக்காரர் பொறுப்பில் செய்ய வேண்டும்.

(13) ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர் நகராட்சிக்கு எந்த வித பாக்கியம் இல்லை என்ற சான்று நகராட்சியில் பெற்று சமர்பிக்க வேண்டும்.

(14) நகராட்சியின் மூலம் நிர்ணயிக்கும் தொகையினைதான் ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் தொகை வசூலிக்கப்படும் தகவல் தெரியவந்தால் தங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஏலத்தொகை பறிமுதல் செய்யப்படும்.

(15) ஏலம் கிடைக்காத நபர்களுக்கு செலுத்தப்பட்ட டேவணித் தொகை காசோலை மூலம் மட்டுமே இரண்டு தினங்கள் கழித்த பிறகு வழங்கப்படும்.

இவண்,
காயல்பட்டணம் நகராட்சி,
காயல்பட்டணம்.


இவ்வாறு ஏல அறிவிப்பு அமைந்துள்ளது.

இச்சேவைகள் ஏலம் விடப்படுவது - இது மூன்றாவது முறையாகும். மே மாதம் 29 ம் தேதி இச்சேவைகள் ஏலம் விடப்பட்டதில் - நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டியினை S. விஜயன் என்பவர் ரூபாய் 1,81,700 க்கு ஏலம் எடுத்திருந்தார். இருப்பினும் ஆடு-மாடு அறுப்புத் தொட்டி குத்தகைதாரர் - இறைச்சி வணிகர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குத்தகைதாரர் - தனது குத்தகையை ரத்து செய்து கொண்டார். இரண்டாவது முறையாக ஜூலை 2 அன்று இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அப்போது இவ்வினத்தை எவரும் ஏலம் எடுக்கவில்லை.

மே மாதம் 29 ம் தேதி ஏலம் விடப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமத்தை R.S. கோபால் என்பவர் ரூபாய் 90,000 க்கு ஏலம் எடுத்திருந்தார். ஏலத் தொகையை அவர் கட்டாத காரணத்தால், அவரின் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜூலை 2 அன்று இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அப்போது இவ்வினத்தை எவரும் ஏலம் எடுக்கவில்லை.

மே மாதம் 29 ம் தேதி ஏலம் விடப்பட்ட ஓடைக்கரையில் உள்ள மச்ச ஓடை மீன் பிடி உரிமத்தை T. நாராயண நாடார் என்பவர் ரூபாய் 25,000 க்கு ஏலம் எடுத்திருந்தார். அதற்கு முன்னர் - இவ்வினம் ரூபாய் 300 க்கு ஏலத்திற்கு சென்றிருந்தது. இருப்பினும் ஏலத் தொகையை அவர் கட்டாத காரணத்தால், அவரின் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜூலை 2 அன்று இவ்வினம் ஏலம் விடப்பட்டது. அதனை குமார் என்பவர் ரூபாய் 510 க்கு தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார்.

மேலும் - தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏலம் குறித்த அறிவிப்பு, துண்டு பிரசூரங்கள் மூலம் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சைக்கிள் நிறுத்தம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அவ்வினம் இது வரை ஏலம் விடப்படவில்லை. பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரகூடப் பணிகள் நிறைவுறாமல் இருப்பதால் - அவ்வினமும் இது வரை ஏலம் விடப்படவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (saigon , vietnam .) [08 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21134

ஏலத்தொகையை முன்பிருந்த நகர்மன்றத்தைவிட நாங்கள்தாம் அதிக தொகைக்கு கொடுத்துள்ளோம் என்று பெருமைகொள்வதில் அர்த்தமே இல்லை . ஏலம் எடுத்தவர் பணம் கட்டினாரா என்று பார்க்க வேண்டும்.

மே மாதம் 29 ம் தேதி , நடந்த ஏலத்தில் மச்ச ஓடையில் மீன் பிடிக்க 25000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகவும் , இதற்குமுன் , இந்த உரிமை 300 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனதாகவும் பெருமைப்படும் சம்பத்தப்பட்டவர் , ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் அந்த உரிமை அவருக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் , அதனால் ஜூலை 2 ம் தேதி மீண்டும் ஏலம் விடப்பட்டு வேறொருவர் அதை ரூபாய் 510 க்கு எடுத்திருப்பதாகவும் சொல்கிறார் . 25000 ரூபாய் எப்படி 510 ஆனது ? 20000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தால்கூட ஓரளவு சந்தோசப்பட்டிருக்கலாம் . ஆக , செயற்கையாக ஏலத்தொகையை உயர்த்தி , நாங்கள்தான் " கெட்டிக்காரர்கள் " என்று சொல்வதில் அர்த்தமே இல்லை .

செயற்கை என்றும் இயற்கைக்கு ஈடாகாது .

Vilack SMA , Saigon , Vietnam .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“கட்டிங்” முடிந்தது! (?!)  (8/8/2012) [Views - 3348; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved