Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:08:10 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8849
#KOTW8849
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 8, 2012
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (IUDM) பற்றி தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2040 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION - IUDM) குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 48.45 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இது வரும் 20 ஆண்டுகளில் அதாவது 2030-ஆம் ஆண்டில் 67 விழுக்காடாக உயர வாய்ப்பு உள்ளது. மக்கள் வேலைவாய்ப்புக்காக அருகிலுள்ள நகரங்களுக்கு அதிக அளவு இடம் பெயர்வதாலும், நகரங்கள் அதிவேக வளர்ச்சியடைந்து வருவதாலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் “ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்” (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION - IUDM) என்ற ஒரு திட்டத்தினை தொடங்க ஏற்கெனவே ஆணையிட்டார்கள்.

இத்திட்டத்தின்படி, நகர்ப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு நீர் அகற்றல், சுகாதாரம், மழைநீர் வடிகால், சாலைகள், தெருக்கள், திடக் கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம், பூங்காக்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த மாநகர் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு 5,890.12 கோடி ரூபாயும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு 763.91 கோடி ரூபாயும் என மொத்தம் 6,654.03 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக சென்ற ஆண்டு அதாவது 2011-12 ஆம் ஆண்டு, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 506 கோடியே 48 லட்சம் ரூபாயும், பேருராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 250 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 757.28 கோடி ரூபாய் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று, இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டிலும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட, சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 500 கோடி ரூபாயும், பேரூராட்சிகளுக்கு 250 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளின் அலுவலகங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகைப் புரிவதைக் கருத்தில் கொண்டும், பழைய கட்டடங்களில் இயங்கி வரும் பேரூராட்சி அலுவலகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமையக்கும் பொருட்டும், எல்லா பேரூராட்சிகளுக்கும் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டித்தர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள பென்னாத்தூர் பேரூராட்சி, சேலம் மாவட்டத்திலுள்ள பனைமரத்துப்பட்டி பேரூராட்சி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணைக்காடு பேரூராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சிகள், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி மற்றும் சாயல்குடி பேரூராட்சிகள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு, திருக்குருங்குடி, பத்தமடை மற்றும் திசையன்விளை பேரூராட்சிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பேரூராட்சி என 15 பேரூராட்சிகளுக்கு அலுவலகக் கட்டடம் கட்ட பேரூராட்சி ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் வீதம் 6 கோடி ரூபாயும், திருநெல்வெலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு 1 கோடி ரூபாயும் என மொத்தம் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால், தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மேம்படவும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மேன்மை அடைவதற்கும் வழிவகை ஏற்படும்.


இவ்வாறு அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. good scheme
posted by syedahmed (GZ, China) [08 August 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 21137

An Integrated Urban Development Mission scheme done by our CM is highly appreciated one and it is profound to state that this well planned implementation cause to provoke the environmental structure in 3 ' R concepts which should be reflects with in adequate higher level. We profound our esteemed gratitude to our honourable CM regarding in this newly invented scheme that makes it as right way of right rules & regulations.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“கட்டிங்” முடிந்தது! (?!)  (8/8/2012) [Views - 3350; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved