Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:09:15 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8607
#KOTW8607
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 12, 2012
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4131 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர (மே மாத) கூட்டம், 31.05.2012 வியாழக்கிழமை மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.



கூட்டப் பொருளை நகர்மன்றத் தலைவரே வாசித்தார்.



பொருள் எண் 01:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 02:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 03:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 04:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 05:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 06:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 07:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 08:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 09:


ஆடறுக்குமிடத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வருவதாக 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தகவல் தெரிவித்தார்.

பொருள் எண் 10:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 11:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 12:


இவ்வகைக்கு ஏற்கனவே பழைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நிதியொதுக்கப்பட்டுள்ளதால், தற்போது இதனை நிறைவேற்றத் தேவையில்லை என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கருத்து தெரிவித்தார்.

பொருள் எண் 13:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 14:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 15:


நகராட்சியால் நிறுவப்படும் தகவல் பலகைகளை விஷமிகள் தீண்டாவண்ணம் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டுமானால், அந்தந்த வார்டுகளிலுள்ள பள்ளிவாசல்கள் அருகிலும், புறநகரில் சமுதாயக் கூடங்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் அருகிலும் நிறுவலாம் என பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

குடிநீர் அளவை அறிந்திட அமைக்கப்படும் மீட்டர் அறைக்குத் தேவையான மீட்டர் கருவியை நகராட்சியே நேரடியாக வாங்க வேண்டுமென்றும், ஒப்பந்தக்காரரிடம் மீட்டர் வாங்கத் தேவையில்லை என்றும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொருள் எண் 16:



விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 17:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 18:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 19:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 20:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 21:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 22:


விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.

பொருள் எண் 23:


“நகர்மன்றத் தலைவர் பதவியேற்ற அன்று, நகராட்சியின் அனைத்து ஊழியர்களையும் நேரில் சந்திக்கச் சென்ற நாள் முதல் இன்று வரை, தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் நஸீர் என்பவர் தலைவரை மதிப்பதேயில்லை என்றும், நகர்மன்ற நடவடிக்கைகளில் தலைவர் இடும் உத்தரவுகளை அவர் செயல்படுத்துவதேயில்லை என்றும், இவ்வாறானவர்களைப் பணியில் வைத்துக்கொண்டு நகர்மன்றப் பணத்தை ஊதியம் என்ற பெயரில் வீணாக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், “பல விஷயங்களில் நகர்மன்றத் தலைவர் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பது ஒருபுறம் இருந்தபோதிலும், அதற்காக இதுபோன்ற - ஊழியர்களின் அவமரியாதையான நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வாய் மூடி இருக்க இயலாது” என்றும் தெரிவித்தார்.

பொருள் எண் 24:


(1) கடற்கரையின் நடுப்பகுதியில் இருப்பது போல வட-தென் புறங்களிலும் ஒளி வெள்ள விளக்கு அமைத்தல்...

(2) கடற்கரையின் வட-தென் புறங்களில் இரண்டு சிறு மண்டபங்கள் உள்ளன. திடீரென மழை பெய்கையில், ஒதுங்குவதற்காக பொதுமக்கள் இந்த மண்டபங்களையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதனைக் கருத்திற்கொண்டு, அந்த மண்டபத்தை சற்று விரிவாக்கிக் கட்டுதல்...

(3) கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக, தனி நடைபாதை அமைத்தல்...

(4) கடற்கரையில் இருக்கும் கழிப்பறைகளை புனர்நிர்மாணம் செய்தல்... பொதுமக்கள் தேவையைக் கருத்திற்கொண்டு கூடுதலாக கழிப்பறைகளைக் கட்டுதல்...

(5) காயல்பட்டினத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னமொன்றை நுழைவிடத்தில் அமைத்தல்...

(6) கடற்கரையில் கடைகளுக்கென தனியிடத்தை ஒதுக்கி, கடைகளை அமைத்துக்கொடுத்தல்...

(7) கடற்கரையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் துப்புரவு செய்திட நவீன கருவி வாங்கல்...

ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

கல் கட்டிடங்களிலேயே வாழ்க்கையை நடத்தி வரும் பொதுமக்கள் மன அமைதிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் கடற்கரை மணற்பரப்பை நாடியே வருவதாகவும், அந்த மணற்பரப்பை எக்காரணம் கொண்டும் புதிய கட்டிடங்கள் என்ற பெயரில் அழித்துவிடக் கூடாது என்றும், தற்போது கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களையும் அப்புறப்படுத்தி, கடற்கரை மணற்பரப்பை விரிவாக்கித் தர வேண்டும் என்றும், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.

பொருள் எண் 25:


காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், கடைகளை வைத்துள்ள குத்தகைதாரர்கள் மற்றும் அவர்களிடம் உள் வாடகை அடிப்படையில் கடை நடத்தி வரும் நபர்களை அழைத்து, 02.05.2012 அன்று நகர்மன்றக் கூட்டரங்கில் நடத்தப்பட்ட கூட்டத்தின் முழு விபரங்களை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்தில் தெரிவித்தார்.

நகர்மன்றக் கட்டளைப்படி ஒருவர் மட்டுமே வாடகையை உயர்த்தித் தர சம்மதித்ததாகவும், பிறரால் அவரும் தடுக்கப்பட்டார் என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நகர்மன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட இசையாத கடைக்காரர்கள் விஷயத்தில், அடுத்தடுத்த நடவடிக்கைகள் முறைப்படி எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள இரு சக்கர வாகன காப்பக குத்தகை குறித்து கூட்டத்தில் வினவப்பட்டது. அதற்கு விளக்கமளித்த நகராட்சி ஆணையர் அஷோக் குமார், ஏற்கனவே அதனை குத்தகைக்கு எடுத்தவர் தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதாகவும், நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பின்னர் அது பொது ஏலம் விடப்படும் என்றும் தெரிவித்தார்.

கூட்டத் துளிகள்...



3 தினங்களுக்கு முன்பே அஜெண்டாவைத் தாருங்கள்...
“நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருட்களடங்கிய அஜெண்டாவை கூட்டம் நடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பாகவேனும் அளிக்க வேண்டும்... அப்போதுதான் உறுப்பினர்கள் தகுந்த தயாரிப்புகளுடன் வர இயலும்...” என்று, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.

அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், இக்கருத்தை தான் வரவேற்பதாகவும், தனக்கே கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகத்தான் அஜெண்டா வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தலைவியம்மா வளைஞ்சி கொடுக்கனும்...
“நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறாதமைக்குக் காரணம், நகர்மன்றத் தலைவர் சிறிதும் வளைந்து கொடுக்காததுதான்... காரியம் நடக்க வேண்டுமெனில் சிறிது அனுசரித்துத்தான் நடக்க வேண்டும்” என்று 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.

“அனுசரித்துக் கொடுப்பதென்றால் என்ன செய்ய வேண்டும் என உறுப்பினரே தெரிவிக்கலாம்” என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் தெளிவான விடையெதுவும் அளிக்கவில்லை.

இருப்பில் ஒன்று, நடப்பில் ஒன்றா...?
“நகர்மன்ற உறுப்பினர்கள் தமது வார்டு பணிகளுக்கென சம்பளம் எதுவும் பெறுவதில்லை... எனினும், மாதாந்திர கூட்டத்தில் வழங்கப்படும் சிறுதொகை, குறைந்தபட்சம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவாவது பயன்படுகிறது... அரசு ஆணைப்படி ரூ.600 வழங்கப்பட வேண்டும்... ஆனால் ரூ.500தான் வழங்கப்படுகிறது... இது ஏன்?” என 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கேள்வியெழுப்பினார்.

அதனை ஆதரித்து, 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

வெளிநடப்பு...
பொருள் எண் 17 வாசிக்கப்பட்டபோது, “நகராட்சி பொது நிதியிலிருந்து பல திட்டங்களுக்கு நிதியொதுக்கப்படும் அதே நேரத்தில், பொது நிதியில் உள்ள மொத்த இருப்புத் தொகை எவ்வளவு என பதவியேற்ற நாள் முதல் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கேட்டிருந்தும், இதுவரை அதுகுறித்து தகவல் தரப்படவில்லை... அதற்காக நான் வெளிநடப்பு செய்கிறேன்...” என்று கூறி, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூட்டத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார்.

திருமண விருந்தில் துப்புரவுப் பணி...
திருமண விசேஷங்களின்போது தெருக்களில் நடத்தப்படும் விருந்துகள் நிறைவுற்ற பின்னர், அங்கு சேரும் குப்பைகளை இதுகாலம் வரை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களே துப்புரவு செய்யும் வழமை உள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டில் துப்புரவுப் பணிக்குச் செல்ல முனைந்த பணியாளர்களை நகர்மன்றத் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்த 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.அபூபக்கர் அஜ்வாத், “உங்க இஷ்டத்துக்கு நீங்க தனியாக உத்தரவு போடக்கூடாது... நீங்க செய்த இந்த வேலையால் என் உறவினர் பாதிக்கப்பட்டுள்ளார்...” என்று கோபம் பொங்க தெரிவித்தார்.

அதற்கு விளக்கமளித்த நகர்மன்றத் தலைவர், “நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளனர்... கடற்கரையில் தினமும் குப்பை தேங்குவதாக பொதுமக்கள் பலர் அனுதினமும் என்னிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றனர்... ஒரு திருமண வீட்டில் துப்புரவு செய்வதற்கு நகராட்சிப் பணியாளர்கள் செல்லாவிட்டாலும் அங்கு வேறு யாரையாவது வைத்து திருமண வீட்டாரால் வேலை வாங்கிக்கொள்ள இயலும்... ஆனால், கடற்கரையைத் துப்புரவு செய்ய வேண்டிய நேரத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், யாரைக் கொண்டு அந்த வேலையை வாங்குவது? எனவே, எது முக்கியமோ அதற்கே நான் முன்னுரிமையளித்தேன்” என்று தெரிவித்தார்.

நடுவீதியில் திருமணப் பந்தல்...
அதனையடுத்து கருத்து தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், “நகரில் வீதிகளில் கல்யாணப் பந்தல் அமைப்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை என்றாலும், தற்காலத்தில் மக்கள் நெருக்கம் அதிகளவில் உள்ளதால், சாலையை அவர்கள் பயன்படுத்துவதும் மிகவும் அதிகரித்துள்ளது.

முந்தைய காலங்களில் பள்ளிக்கூடங்களுக்கு இத்தனை வாகனங்கள் இல்லை... இன்று அவை அதிகம்...

முந்தைய காலங்களில் அதிகளவில் மருத்துவ தேவைகள் ஏற்படவில்லை... இன்று தினந்தோறும் அதற்காக பொதுமக்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர்...

இயற்கைச் சீற்றங்கள், தீ விபத்துகள் போன்ற எதிர்பாராத தருணங்களில் மீட்பு மற்றும் தீயணைப்பிற்காக வாகனங்களில் செல்வோரை இதுபோன்ற பந்தல்கள் தடுத்தால் அதனால் ஏற்படப் போகும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

தற்காலத்தில் நகரின் எல்லாப் பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் விரிவாக்கி கட்டப்பட்டுள்ளது... எத்தனையோ பேர் பொது இடங்களில் தமது திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்கின்றனர்... எனவே, பொதுமக்கள்தான் இது விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும்... அவரவருக்கென்று வரும்போதுதான் உணர்வோம் என்று யாரும் இருந்து விடக்கூடாது...

கல்யாணப் பந்தல் விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் தனி சட்டத்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்...
என்று தெரிவித்தார்.

புதிய பொறியாளர் நியமனத்திற்கு நன்றி...
காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய பொறியாளர் நியமிக்கப்டுவதற்கு நன்றி தெரிவிப்பதாக, 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு வராம இருந்துட்டீங்களே...?
நகரில் குடிநீர் வினியோகம் குறித்து சில உறுப்பினர்கள் விளக்கங்களைக் கோரினர். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர், இன்று காலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) அதிகாரிகள் நகராட்சிக்கு வந்து - நகரில் குடிநீர் வினியோகம் குறித்து பல்வேறு ஆலோசனைகளைத் தந்தனர்... இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் - பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமலிருந்தது வருத்தமளிக்கிறது... இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 18 உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் எதிர்பார்த்தேன்... ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது... அவர்கள் அனைவரும் வந்திருந்தால், ஏராளமான அரிய விளக்கங்களைப் பெற்றிருக்கலாம்... தமது சந்தேகங்களுக்கும் தீர்வு பெற்றிருக்கலாம்...” என்று தெரிவித்தார்.

ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து, காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பம்பிங் மோட்டார், நகரின் 4 பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை மட்டும் கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நகரிலுள்ள அனைத்து தொட்டிகளுக்கும் முறையாக குடிநீரை பம்பிங் செய்தனுப்ப இந்த மோட்டார் போதாது என்றும், எனினும் இப்பிரச்சினையை தற்காலிகமாகத் தீர்த்திட, காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியருகில் ஒரு Sump தொட்டி அமைக்கப்பட வேண்டுமென்றும், காலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்த நகர்மன்றத் தலைவர், “அவ்வாறு Sump தொட்டியமைக்க அனைவரும் ஒப்புக்கொள்கிறீர்களா...?” என்று கேட்க, உறுப்பினர்கள் ஒருமனதாக அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

எனக்கு இது தேவையா...?
நகரில், குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுவது எல்லா இடங்களிலும் நடப்பதாகக் கூறப்பட்டாலும், எழுத்துப்பூர்வமாக தகவல் பெறப்பட்டால் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதைக் கருத்திற்கொண்டு, பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஓரிடத்திற்கு ஆய்வு மேற்கொள்ள தான் சென்றதாகவும், இதனையறிந்த அப்பகுதி உறுப்பினர் தன்னை வாய்க்கு வந்தபடி பேசியதாகவும், எனது பொறுப்பிலிருந்து கொண்டு இதுபோன்ற சொற்களையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும், நகராட்சி ஆணையர் அஷோக் குமார் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அரசுக்கு நன்றி...
இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்குத் தேவைப்படும் இடத்தை அரசே அளிக்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வங்கி கணக்கறிக்கை
நகராட்சிக்கு பல வங்கிகளில் பணம் இருப்பு உள்ளபோதிலும் இதுவரை Bank Statement பெறப்படாத நிலையில், தற்போது இரண்டு வங்கிகளிலிருந்து அது பெறப்பட்டுள்ளதாகக் கூறி வங்கி கணக்கறிக்கையை நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் காண்பித்தார். ஆங்கிலத்திலிருந்த அந்த அறிக்கையை 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கூட்டத்தில் வாசித்து விளக்கமளித்தார்.

குடிநீரை காய்ச்சியே பருகுங்கள்!
நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் எப்போதும் காய்ச்சியே குடிக்குமாறு - நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென நகராட்சி ஆணையர் அஷோக் குமார் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [12 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19298

13 வது வார்டு உறுப்பினர் சம்சுதீன் அவர்கள் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு, தமது வார்டு பணிகளுக்கென சம்பளம் எதுவும் பெறுவதில்லை எனினும், மாதாந்திர கூட்டத்தில் வழங்கப்படும் சிறுதொகை, குறைந்தபட்சம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவாவது பயன்படுகிறது, அரசு ஆணைப்படி ரூ.600 வழங்கப்பட வேண்டும்... ஆனால் ரூ.500தான் வழங்கப்படுகிறது... இது ஏன்?” என நியாயம் கோருகிறார். நகரமண்டம் அரசு நிர்ணயம் செய்த உறுப்பினர்களின் படிதொகையை குறை இல்லாமல் கொடுத்து உதவ வேண்டுகிறேன்.

புதுகோட்டை இடைதேர்தல் முடிவுக்கு பின்னர் மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள் அடுத்து வரும் நகர மன்றம் மாதாந்திர கூட்டதிற்கு வழங்கப்படும் சிறுதொகையில் 10 % உயர்த்தி கொடுக்க முன்வர இருக்கிறார்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [13 June 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19307

நகர் மன்ற ஆணையரை பனி செய்ய விடாமல் அவதூறாக ஒரு உறுப்பினர் பேசியதாக ஆணையர் கூட்டத்திலே புகார் கூறியுள்ளார். யார் அவர்? சட்டதின் முன் அனைவரும் சமமே. ஏன் அந்த உறுப்பினர் பெயரை ஆணையாளர் சொல்லவில்லை? அப்படி என்றால் அந்த உறுப்பினரும் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்ச துணை போகிறார் என்றுதான் அர்த்தம். அவருக்கு ஆணையாளர் பயபடுகிர்ரர் எண்டு அர்த்தம்.

ஆயிரம் முறை தொழுதாலும், தண்ணீர் விசயத்தில் கை வைத்தால் அல்லாஹ் சும்மா விட மாட்டன். இத்தகுல்லாஹ் . அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள். மன்னன் அன்றே கொள்வான் .தய்வம் நின்று கொல்லும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [13 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19308

ஒரு உறுப்பினர் சொந்தக்கார கல்யாண வீட்டுக்கு துப்புரவுக்கு ஆள அனுப்பாம கடற்கரைக்கு தலைவி அனுப்பின கடுப்பில இருக்கிறாரு!

மற்றொரு உறுப்பினர் வலைஞ்சி கொடுக்க சொல்றாரு!!



அடாடாடாடா! என்னே பொதுநலம்பா இவங்களுக்கு? கூட்டத்துல நடந்தது இவ்வளவுதான். ஆனா அம்மா பதவியேத்த நாள் முதல் இன்னைக்கு வரைக்கும் பல வேண்டுகோள்கள் அவங்களுக்கு!

கட்சில சேரணுமாம்! சுயேட்சையா நின்னு வெற்றிபெற்றேன். எந்தக் கட்சியையும் சாராத ஒரு நல்ல நகர்மன்ற தலைவரா என்னால அரசு பிரதிநிதிகளை சந்திக்க முடியும்ன்னு சொல்லிட்டாங்களாம்.

மெட்ராஸ்ல காக்காவ பார்க்கனுமாம். மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்களாம்.

பெரியவங்களோட ஆலோசனையை கேக்கனுமாம். பெரிய மனசுள்ள பெரியவங்களோட ஆலோசனையை நிச்சயம் கேட்பேன்னு சொல்லிட்டாங்களாம்.

பா........வம்! இவிங்க என்ன செய்வாங்க! அங்க கோடு போடுறாங்க! இங்க ரோடு போட முயற்சி நடக்குது!

ஹூம்... நல்லது நடந்தா சரிதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Cnash (Makkah) [13 June 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19309

வளைந்து கொடுத்தால்தான் வேலை ஆகும், என்று உறுப்பினர் பதுருல் ஹக் சொல்லி இருக்கிறார்? எப்படி, யாருக்கு வளைந்து கொடுக்க வேணும், என்பதை விளக்கமா அடுத்த மீட்டிங்லேயாவது சொல்லுங்க!!!

ஏதோ சொல்ல வாறீங்க சொல்ல முடியலே, விக்கவும் காக்கவும் முடியாம இருக்கிற உள்ள நிலைமை நல்ல புரியுது!!

இதுக்குதான் முன்னே ஒரு உறுப்பினர் மீடியாவையும், பார்வையாளர்களையும் இந்த கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்று வாதாடினார்? இப்படி மீடியா கவர் பண்ண போய்தானே .அவர்களால் எதையும் திறந்து பேச முடியவில்லை.???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [13 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19311

தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க நாங்க ரெடி தான், ஆனால் தண்ணீர் வந்தால்தானே?

பற்பல வருடங்களுக்குப் பிறகு ஊரில் குடிநீர் பஞ்சம் உள்ளது. என்றைக்கு தண்ணீர் வருகிறது என்று கேட்ட மக்கள், இப்போது எப்படி தண்ணீர் வருகிறது என்று கேட்கிறார்கள். மாங்கு.. மாங்கு.. என்று அடித்தாலும் ஆட்டுக்குட்டி ஒன்னுக்கு போன மாதிரிதான் தண்ணீர் வருகிறது.

தலைவி உடைய நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவரின் ஆட்சிக்காலம் பிரச்சனைகள், குடைச்சல்கள் போன்றவற்றை சமாளிப்பதிலும், ஊழல் லஞ்சம் நடைபெறாமல் தடுப்பதிலும், வெளி மற்றும் உள்ளுக்குள் நடைபெறும் துரோக செயல்களை எதிர்கொள்ளவுமே சரியாக ஆகிவடும் போல தெரிகின்றது. தீர்மானம், புதிய திட்டங்கள் கொண்டுவருவது கஷ்டம்தான். வல்ல ரஹ்மான் அவர்களுக்கு நல்ல காரியங்களில் உறுதுணையாக இருப்பானாக.

வளைந்து கொடுப்பது என்பதற்கு அர்த்தம்தான் தெரியவில்லை, அதிகம் விவரமாக எழுதினால் அட்மின் உடைய கத்திரி நிச்சயம்.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் மட்டும் தணிக்கை செய்யப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இந்த தற்காலிக ஊழியருக்கு நிரந்தர பணி கொடுக்கப்பட்டால் நகராட்சி என்ன நிலைமை ஆகுமோ...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [14 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19315

நகராட்சியில் தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் ஒரு ஊழியர் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் அவமரியாதையாக நடந்துகொள்வதாக 1வது வார்டு உறுப்பினர் ஜனாப் லுக்மான் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்... இந்த அவமரியாதை அவர்களுக்கு மட்டும் அல்ல...! நகராட்சிக்கு பல வேலைகள் நிமிர்த்தமாக வந்து போகும் மக்களிடமும் அப்படியே நீடிக்கிறது...! வீட்டு தீர்வை, தண்ணீர் பணம் செலுத்த போகும் பல நபர்கள் இந்த ஊழியரின் அடாவடி தனத்தை பொறுக்க முடியாமல் மன உளைச்சல் அடைந்துள்ளார்கள்...

ஆக மொத்தத்தில் நமது வரிபணத்தில் கணினியில் பொழுது போக்கும் இந்த தற்காலிக ஊழியர் இந்த நகராட்சியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்..

இந்த தற்காலிக ஊழியருக்கு நிரந்தர பணி கொடுக்கப்பட்டால் நகராட்சி என்ன நிலைமை ஆகுமோ...

Moderator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [14 June 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19326

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் ஊர் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள் படித்தேன். நம் மரியாதை கூறிய உறுப்பினர்கள் ஓரு சிலரின் .நிறையா தேவையற்ற வார்த்தைகள் உள்ளன.

NO. 1...... நம் தலைவி அவர்கள் '''''' வளைஞ்சி கொடுக்கனும் '''''' நம் தலைவி ''''சிறிதும் வளைந்து '''' கொடுக்காத காரணத்தால் தான். நம் “நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறாதமைக்குக் காரணம், ரொம்ப தெளிவாக.நமது 10 .வது வார்டு உறுப்பினர் S.M.B..பத்ருல் ஹக் தெரிவித்தார். சரி OK அருமை சகோதரர் என்னதான் நம் தலைவி இடம் எதிர் பார்கிறார்???? முன்பு நம் நகர்மன்றத்தில் மக்களால் தேர்ந்து எடுத்த .... உறுப்பினர் ஓரு சிலரால் ... நம் மக்கள் பட்ட அவஸ்தை போதாதா ????? ஓரு நாட்டை தான் சூறை ஆடுவார்கள் என்று நாம் படித்தும் / பார்த்தும் உள்ளோம்.( நம் ஊரே சூறை ஆடபட்டது நியாபகம் உண்டா ) ஆனால் நம் ஊரில் போன 5 வருடம் நடத்த மட்டமான. நகர்மன்றத்தை போலவா... இப்போதும் நடக்கணும் என்று. உறுப்பினர் S.M.B..பத்ருல் ஹக் எதிர் பார்கிறாராம். முழுமையான விபரம் தெரிந்தால் நல்லது .

நம் அருமை சகோதரர் ஓருவர் கூறியது போன்று நம் தலைவி சுயச்சையாக அமோகமான மாபெரும் ( நாமே எதிர் பார்க்காத ) வெற்றி பெற்றவர்.... +... இவர் துனிச்சல் உள்ளவர் & நம் ஊரை ஓரு முன் மாதிரி ஊராக்கி காட்ட நினைகிறார்கள். தயவு செய்து தலைவியின் இந்த செயல் வடிவத்துக்கு உறுப்பினர்கள் ஆகிய நீங்கள் தான் இவருக்கு FULL சப்போட்டு பண்ண வேண்டியது .

NO.2..... ரொம்ப முக்கியமான வடிவம்... இதுதான். தற்காலிக பணியாளராகப் பணிபுரியும்.MR. நஸீர் என்பவர். நம் தலைவி அவர்களை .... மதிப்பதேயில்லை...... என்றும். தலைவர் இடும் உத்தரவுகளை அவர் செயல்படுத்துவதேயில்லை என்கிற போது நாம் கண்டிப்பாக இது போன்ற நபரை வேலையில் வைக்கவே கூடாது.உண்மையில் நம் உறுப்பினர் ஜனாப் A .லுக்மான் அவர்களின் கோரிக்கை நியமானது தான். நாம் ஏன் நம் நகர்மன்றப் பணத்தை வீணாக்கத் வேண்டும். .MR. நஸீர் ( ஊழியர் ) அவர்களின் அவமரியாதையான செயல்களை கண்டிப்பாக பார்த்துக்கொண்டு வாய் மூடி இருக்க முடியாது. தற்காலிக பணியாளராகப் பணிபுரியும் போதே இவர் இப்படி என்றால். இவர் பட்டும் '''''' பெர்மனெட்''''''' ஆகிவிட்டால். இவர் எப்படி செயல் படுவார் என்று கற்பனை பண்ணி பார்த்தால் திகைப்பாக இருக்கிறது.

NO. 3 .... கடற்கரையின் திட்டங்கள் தேவையானது தான். நம் ஊர் கடற்கரையில் ஒளி வெள்ள விளக்கு அமைத்தல்.+அந்த இரு மண்டபத்தை சற்று விரிவாக்கிக் கட்டுதல்..( திடீரென மழை பெய்கையில்... பெண்களுக்கும் / குழந்தைகள் / வயதானவர்களுக்கு தான் ரொம்ப கஷ்டம் ) கடைகளுக்கென தனியிடத்தை ஒதுக்கி கொடுப்பது அவசியம்.நிச்சயம் தேவை . நல்ல திட்டம்.

NO.4..... நம் ஊரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னமொன்றை அமைப்பது நல்லது தான்.வெளி ஊர் மக்கள் நம் கடற்கரைக்கு வந்து போவதால் இது அமைப்பது சரியானது.

NO.5....கல்யாணப் பந்தல் விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் கொஞ்சம் தயவு கட்டலாமே. காரணம் பணவசதி குறைவானவர்கள் நம் ஊரில் நியாயமான மக்கள் ( உள்ளார்கள்.) இருபதால் ரோடில் பந்தல் போட்டுதான் கல்யாணம் முடிப்பார்கள். ஆதலால் நிர்வாகம் தயவு கட்டலாமே

NO.6.....நம் நகராட்சி ஆணையர் அவர்களிடம் நம் உறுப்பினர் ஓருவர் தேவை அற்ற சொற்களையெல்லாம் சொன்னது மஹா தவறானது. ஏன் அப்படி நம் உறுப்பினர் அவர்கள் நடந்து கொண்டார்கள் ??? உறுப்பினர் அவர்களும். நம் தலைவி & நகராட்சி ஆணையர் இவர்களுடன் ஒன்றாக கைகோர்த்து சென்றால் தான் நம் ஊருக்கு நல்லது.

NO.7.....நம் ஊருக்கு எப்ப ..... சார் இந்த"" இரண்டாவது பைப்லைன் திட்டம் வரும் ??/ நம் மக்கள் ஆர்வத்துடன் எதிர் பார்த்து கொண்டு உள்ளார்கள். இந்த திட்டம் வந்தால்லாவது நம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஓரளவு தீரும் அல்லவா . குடிநீரை பொதுமக்கள் எப்போதும் காய்ச்சியே குடிப்பது தான் மிக சிறந்தது. பொது மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ரொம்ப அவசியம். இந்த விழிப்புணர்வு நம் நகராட்சி தான் செயல் வடிவமாக்கனும்.

குறிப்பு ....... ஆமா எங்களின் '''' மகலற நகர் '''' தொகுதி பிரச்னையான .... தார்ரோடு போடுவது / தெரு விளக்கு / மழை காலங்களில் தேங்கும் தேவை அற்ற மழை நீர் .... இவை பற்றி எல்லாம் எங்களின் மரியாதை கூறிய ஐயா. சாமி அவர்கள் இந்த கூட்டதில் பேசி நல்ல முடிவு வாங்கி தருவார்கள் என்று மிக ஆவலுடன் எதிர் பார்த்தோம். ஏமாற்றம் தான் கிட்டியது. ஐயா அவர்கள் பேசியதாக ஒன்றும் வரவில்லையே....PLZ ஐயா அவர்களே வயதான பெண்கள் / குழந்தை உள்ள பகுதி ஆதலால் கொஞ்சம் கவனம் செலுத்தி வரவும். நாங்கள் உங்களிடம் பல தடவை கோரிக்கை வைத்து விட்டோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [15 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19336

முதல்ல இந்த நகர்மன்றதோட வரவு செலவு கணக்கு அறிக்கை வெளியிட சொல்லுங்களேன் பார்ப்போம்.

pipe மாட்டுறதுக்கு, FIRE ENGINE க்கு PHONE பண்ணுறதுக்கு எல்லாம் ஒரு தலைவர் போனால்தான் வேலை நடக்குமா?

சென்னை போய் வந்ததற்கு பலனாக நம் நகர்மன்றதிற்கு கிடைக்க போகும் திட்டம் மற்றும் நிதி ஆதாரம் என்ன என்ன தெரிவிக்க முடியுமா?

வெளிப்படையான இந்த நகர்மன்ற கூட்டங்களில் நம் ஊரை சேர்ந்த அனைத்து ஊடகங்களுக்கும் அனுமதி உண்டா?

தயவு செய்து அனைத்துக்கும் escape ஆகாமல் பதில் அளிக்கவும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved