Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:31:19 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8602
#KOTW8602
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 11, 2012
தஃவா சென்டர் 15ஆம் ஆண்டு நிறைவு விழா! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2955 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, இம்மாதம் 10ஆம் தேதியன்று (நேற்று) மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் - அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெற்றது.

காயல்பட்டினம் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். தஃவா சென்டர் நடத்தும் புனித குர்ஆன் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.



இவ்விழாவில், இஸ்லாமைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி மாணவ-மாணவியர் தமது அனுவங்களை உரைகளாக அளித்தனர்.



இவ்விழாவில், இஸ்லாமிய அழைப்பாளரும் - எழுத்தாளருமான சிவசுப்பிரமணியம் என்ற சிராஜுத்தீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “சாதி ஒழிந்தது” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றினார்.



இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு, அசைபட விரிதிரை வசதியுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். தொலைக்காட்சி இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.







விழா ஏற்பாடுகளை, தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) தலைமையில், எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், ஆரிஸ், உமர், பிலால் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தஃவா சென்டர் 15ஆம் ஆண்டு ...
posted by arabishuaib (jeddah) [11 June 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19274

மாஷாஅல்லாஹ்! அழகிய நிகழ்வு. அருமையான நேரலை. இஸ்லாமை வாழ்வியலாக்கிய இதயங்களின் கண்ணீர் பதிவு.

அழைப்புப்பணியை இன்னும் வீரியமாக்கி மாற்றாரின் உள்ளங்களை வென்றெடுப்போம் இன்ஷாஅல்லாஹ்.

தஃவா மைய்யத்தின் பணிகள் தொடரட்டும்.

அரபி ஷுஅய்ப்,
ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஈமானில் உறுதி ...
posted by sheit (Dubai) [12 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19280

அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சஹோதர, சஹோதரிகளின் ஈமானின் பலம் அதுபோல் எங்களுக்கும் ஆக்கி வைப்பாயாக ஆம். அவர்களின் நெஞ்சுறுதி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த நிகழ்வின் பொறுப்பாழர்க்கு என்றும் என் துவாக்கள். ஜஜாக்கல்லாஹ் ஹைர

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கொடைகுணமுள்ள புண்ணிய கண்களின் பார்வை தஃவா சென்டர் பக்கம் சீராக விழ வேண்டு ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [12 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19288

ஒரு வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கை நெறி, உண்மைநிலை, மதிப்பு, மரியாதை நேர்மை மற்றும் நீதியான நடத்தை சம்பவங்களடங்கிய அனைத்து அம்சங்கங்களையும் அந்த வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சொல்வதை விட, வெளியில் உள்ளவர்கள் அந்த வீட்டின் மகிமையை பற்றி சொல்வார்களேயானால், அக்குடும்பத்தின் கண்ணியம் கரைகள் இல்லாத காற்றாற்று வெள்ளம் போல் வியாபித்துருக்கும்!

இந்த உண்மையை அறிந்து அந்த வீட்டிற்குள் சென்று அக்குடும்பதிலுள்ளவர்களுடன் ஒரிங்கிணைந்து அவர்களில் ஒருவராய் வாழத்துடிக்கும் ஏக்கமுடைய இததுடிப்புகளை, உண்மையான உணர்சிகளை வார்த்தைகளால் கொட்டியதை :தஃவா சென்டர் ஆண்டுவிழா அற்புத காட்சியில் கண்டு அசந்துவிட்டேன்! அல் ஹம்துலில்லாஹ் !

ஆமாம், இஸ்லாம் என்ற நம் குடும்பத்தோடு இணய துடித்து எல்லையில்லா ஆவலுடனும் ,இதய சுத்தியுடனும், எவருடைய தூண்டுதலுக்கும் துணை போகாமல் சுதந்திரமாக தூய இஸ்லாத்தை தெரிந்து, அறிந்து அதனுள் நம்மை இணைத்துகொள்வோம் என்ற மார்க்க வேட்கையில் எந்த வேதனைக்கும், சோதனைக்கும் ஏன் உயிர் தியாகத்திற்கும் கூட தயாராகி தன்னுடைய நிலையான முடிவில் எள் முனையளவும் பிசகாது நம் புனித மார்க்கத்தை தழுவிய அந்த அன்பு சகோதர, சகோதிரிகளின் உண்மையான விசுவாச வார்த்தைகளை கேட்க்கும் வாய்ப்பை பெற்ற அவ்வைபவத்தில் கலந்து கொண்ட அனைவர்களையும் கண்ணீர் காட்சிகளாக்கி விட்டார்கள் அந்த இளம் நெஞ்சங்கள் !

ஒய்யார கூத்தில்லாமல், ஓசையில்லா உன்னத தன்னலமற்ற சேவையால் நம் சமுதாயத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் முயற்சியில் தங்களை முழுவதுமாக அற்பணித்து பாமரத்தனமானவர்களையும், இப்புண்ணிய மார்க்கதில் புக துடிப்பவர்களையும் அல்லாஹுக்குகந்த அருமையான பாதையில் அழைத்து செல்ல துடிக்கும் அன்புள்ளங்கள் அடங்கிய அமைப்புதான் நமதூர் :தஃவா சென்டர்!

கம்பீரதோற்ற அழகும், அமைதியுமாக அலியார் தெருவில் அமைந்துள்ள அமைப்பு. இஸ்லாத்தை எழுச்சியூட்டும் காரியங்கள் எதனை எத்தனைதான் செய்து கொண்டிருக்கிறது. புண்ணிய சேவையின் பட்டியலை வாசிக்கும்பொழுது புல்லரிக்கறது நம் உள்ளமெல்லாம்!

நம்முடைய புனித மார்க்கத்தின் மகிமையை பிறவி முஸ்லிம்களாகிய நம்மில் பலருக்கு இன்னும் புரிந்து கொள்ள முடியாத நிலையில், பிற மதத்தில் இருந்து வந்த சகோதர சகோதிரிகள் நமக்கு பல மார்க்க உண்மைகளை உள்ளம் உருகும் நிலையில் எடுத்து கூற வைத்து, அவர்களின் தனித்திறமையை இவ் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் தூய தளம்தான் தஃவா சென்டர் என்றால் அது மிகையல்ல! .

இப்புண்ணிய பணி செய்யும் அந்த அமைப்பு இன்னும் எத்தனை எத்தனையோ புண்ணிய பயணம் செல்ல தயாராக இருந்தாலும் பொருளாதாரம் என்ற முட்டுகட்டைகளும், முட்புதர்களும் பயணத்தை முடக்கிபோட முயற்சிக்கிறது. அதை முறியடிக்க தாராள மனமுடைய முஃமீன்களாகிய நம்மில் தகுதியானவர்கள் முன்வந்து உதவி செய்து, அல்லாஹ்வின் அன்புக்குறியவர்களாக ஆவோமாக ஆமீன்!

ஒவ்வருவரும் அவர்களால் இயன்ற உதவியை எந்த கோணத்திலாவது செய்ய வேண்டுகிறேன். என்னால் இயன்றதை தஃவா சென்டர்க்கு செய்த சம்பவம்

1 நெல்லையை அடுத்துள்ள குக்கிராமதிற்க்கு காலையில் இருந்து மாலைவரை அல்லாஹ்வின் அழைப்பு பணிக்கு சென்று அப்பணியில் ஈடுபட்டேன்!.

2 :தஃவா சென்டரின் பல ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு என்னுடைய சிறய ஆலோசனைகளை கூறியதோடு, சில கூட்ட ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய வாய்பைபெற்றவன்.

3 தஃவா சென்டர்க்கு வேன் வாங்க வேண்டும் என்ற வசூல் குறுஞ்செய்தி என் அலைபேசிக்கு வந்தது ஒரு பங்கு 10,௦௦௦ என்றும் மொத்தம் 11 லட்சம் என்றும் சொல்லப்பட்டது.அக்குறுஞ்செய்தியை பலருக்கும் அனுப்பினேன், அப்படி அனுப்பிய அன்பு சகோதரர்களில் ஒருவரும், ஆபரன தங்ககடை அதிர்பரான சகோதரர் அளித்த பதில் செய்தியானது, இப்புண்ணிய காரியத்திற்கு என்னுடைய பங்கை அளிக்க விரும்புகிறேன் என்ற உதவிகரத்தை நீட்டினார்.. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் அதற்குள் அனைத்து பங்கும் பூர்த்தியாகிவிட்டது.

இதுபோல் எந்த நல்ல காரியங்கள் எத்தரப்பில் எத்திசையில் நடந்தாலும் அத்திசை நோக்கி கொடைகுணமுள்ள கருணைகண்கள் கூர்மையாக நோக்கியவண்ணமாகத்தான் இருக்கிறது. அப்புண்ணிய கண்களின் பார்வை தஃவா சென்டர் பக்கமும் சற்று சீராக விழ வேண்டும் என்று வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!.

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved