Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:38:07 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8531
#KOTW8531
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 28, 2012
KCGC, KWAB நடத்திய கல்வி வழிகாட்டு முகாம்! திரளான மாணவ-மாணவியர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3447 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டுக் குழு, பெங்களூரு காயல் நல மன்றம் இணைந்து, காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை இம்மாதம் 21ஆம் தேதி நடத்தின. இந்நிகழ்ச்சி குறித்து, KCGC சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே.

காயல்பட்டினம் நகரத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு முறையான கல்வி வழிகாட்டுதலை அளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில், இம்மாதம் 21ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 02.30 மணி வரை, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC), பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) சார்பில் கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு சிறப்பழைப்பு:
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கோரி, நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த 09, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு அவரவர் முகவரிக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதுபோல, இம்முகாம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பிரசுரங்கள் நகர ஜும்ஆ பள்ளிகளிலும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற அகில இந்திய கால்பந்துப் போட்டியின்போதும் வினியோகிக்கப்பட்டது.

மே 21ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியை, ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் தனதினிய குரலால் இறைமறை குர்ஆனின் சில வசனங்களை கிராஅத்தாக ஓதி, அதன் தமிழாக்கத்தையும் வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, இம்முகாமை நடத்தும் KCGC, KWAB அமைப்புகள் குறித்து, KCGCயின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் அறிமுகவுரையாற்றினார்.



அடுத்து, “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெறலாம்? ப்ளஸ் 2 வில் 750 மதிப்பெண் பெற்றால் கூட நல்ல வேலைவாய்ப்புக்கான படிப்புகள் உள்ளனவா?” என்ற தலைப்புகளில் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றோர் உரை நிகழ்த்தினர்.

உரை: திரு.சத்தியமூர்த்தி...
துவக்கமாக, தொழில் நுட்பக்கல்வி இயக்குநரின் தனிச்செயலாளர் (ஓய்வு) சத்தியமூர்த்தி B.A. உரையாற்றினார்.



08ஆம் வகுப்பு முடித்திலிருந்து - உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் குறித்தும், குறைந்த மதிப்பெண் தகுதிகளுடன் உள்ளவர்கள் கூட தொழில்நுட்பக் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகள், அது தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றியும், பொறியியல், மருத்துவம், Space Science, Earth Science உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் பல்வேறு பொதுவான தகவல்களைப் பட்டியலிட்டு அவர் உரையாற்றினார்.

உரை: திரு.சுந்தரராஜூ...
அவரைத் தொடர்ந்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் எஜுகேஷன் முதல்வர் (ஓய்வு) சுந்தரராஜு M.Com., M.Phil., உரையாற்றினார்.



வணிகத்துறையில் உள்ள பல்வேறு படிப்புகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். நகைத் தொழில் சம்பந்தமான படிப்புகளில் பெண்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும், பெண்கள் மட்டுமே பயிலும் வகையில் என்னென்ன படிப்புகள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

உரை: திரு.ஜனஹரன்...
அடுத்து, சென்னை அரசு கல்லூரி மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனஹரன் B.Tech., உரையாற்றினார்.



மாணவ-மாணவியருக்கு படிப்பின் மீதான கவன ஈர்க்கும் வகையில், நகைச்சுவையோடும் - சிந்திக்க வைக்கும் விதத்திலும் உரை நிகழ்த்தினார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளும் கேட்டு உற்சாகப்படுத்தினார். நூறு தந்தை ஒரு தாய்க்குத்தான் சமம் என குடும்பத்தில் தாய் வகிக்கும் முக்கிய பங்குகளைப் பற்றிக் குறிப்பிட்டார். வெறும் பட்டத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே படிக்காமல் பண்புகளை வளர்க்கவும் அறிவை மேம்படுத்தவுமே படிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

உரை: ஜனாப் வி.எம்.எஸ்.சுலைமான்...
பின்னர், மாணவ-மாணவியருக்கு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. இடைவேளைக்குப் பின், KCGC -யின் கல்விக்குழு உறுப்பினர் வி.எம்.எஸ்.சுலைமான் உரையாற்றினார்.



கடலிலும் - கப்பலிலும் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்தும், அவை தொடர்பான படிப்புகள் குறித்தும் - தமது அனுபவத்துடன் கூடிய பல தகவல்களைக் கொண்டு அவர் உரை நிகழ்த்தினார்.

HARD WORK, SMART WORK, SMART THINKING ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் பற்றியும் சிந்திக்கும் விதத்தில் சிறப்பாக அவர் பேசினார்.

உரை: ஜனாப் அஷ்ரஃப்...
இறுதியாகப் பேசிய ETA MELCO நிறுவனத்தின் சீனியர் கன்சல்டன்ட் அஷ்ரஃப் B.E., M.B.A., M.Phil., உரையாற்றினார்.



காயல்பட்டினத்தைச் சார்ந்த - பல்வேறு உயர்ந்த வேலைகளில் பணியாற்றிக் கொண்டிருப்போர் பற்றி அவர் தனதுரையில் பட்டியலிட்டுப் பேசினார். படிப்பின் மூலம் நம் நாட்டிலேயே கிடைக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறிய அவர், படிக்காமல் அரபு நாடுகளுக்குச் சென்று பணிபுரிவோர் சந்திக்கும் பல்வேறு அவலங்கள் குறித்தும் தெளிவுபட விளக்கினார்.

“குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோமே...? நம்மால் இனி என்ன செய்ய முடியும்...?” என்றெல்லாம் நினைக்காமல், “எதையும் நம்மால் சாதிக்க முடியும்!” என்ற தன்னம்பிக்கைதான் ஒருவரது வாழ்க்கையின் உச்சியை அடையச் செய்யும் ஏணிப்படியாக அமையும் என்று அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதையடுத்து பதவியேற்பு விழாவில், தொடர்ந்து அவர் கூறிய “YES WE CAN” என்பதைப் போல “YES I CAN” என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும் என்று பேசினார்.

IPL கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய சுற்றுக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குப் போய் மீண்டும் தேர்வானதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு செயலில் கிடைக்கப் போகும் பலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல் அதில் பங்கேற்பது (PARTICIPATION) என்பதுதான் மிக முக்கியமானது எனக் கூறினார்.

நிகழ்ச்சி நடத்துவதற்கு உதவியளித்த சென்னை ஆலிம் முஹம்மத் சாலிஹ் கல்லூரி, திருச்சி எம்.ஏ.எம். கல்லூரி மற்றும் நமதூர் வாவு வஜீஹா கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்த தகவல்களை, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விளக்கிப் பேசினார்.



KCGC-யின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிஃபாய் அனைவருக்கும் நன்றி கூறினார்.



கேள்வி நேரம்:
தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவியரும், பெற்றோரும் பற்பல கேள்விகளைக் கேட்க, அதற்கான விளக்கங்கள் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்பட்டது.



மாணவ-மாணவியரின் ஆர்வத்தைக் கருத்திற்கொண்டு, கேள்வி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கருத்து கேட்பு:
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து வந்திருந்தவர்களிடம் கருத்து (FEED BACK) கோரப்பட்டது. ஆண் பெண் பகுதிகளிலிருந்து இம்முகாம் குறித்த கருத்துக்கள் பெறப்பட்டன.

நினைவுப் பரிசுகள்:
அடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜு,ஜனஹரன், அஷ்ரஃப் ஆகியோருக்கு முறையே ஸ்மார்ட் அப்துல் காதர் (KCGC), ஜமால் மாமா, அப்துல் ரஹீம் (KWAB), P.A.K. சுலைமான் (KCGC) ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கினர்.



நிகழ்ச்சிகளை, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil., நெறிப்படுத்தினார்.



முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் - முகாம் நுழைவாயிலில் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.



மாணவர்கள் 108 பேர், மாணவியர்கள் 67 பேர் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர்.





நிகழ்ச்சி ஏற்பாடு:
காயல்பட்டினம்-சென்னை வழிகாட்டுக் குழு (KCGC), காயல் நலமன்றம் பெங்களூர் (KWAB) இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உள்ளூரிலிருந்து இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், KCGC -யின் உள்ளூர் பிரதிநிதி என்.எஸ்.இ.மஹ்மூது, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆபிதீன், அதன் ஆலோசகர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஹாஃபிழ் எம்.எம். முஜாஹித் அலீ, ரெட் ஸ்டார் சங்க செயலாளர் ஓ.ஏ.நஸீர் மற்றும் அதன் உறுப்பினர் கட்டா மரைக்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


இவ்வாறு, KCGC சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:KCGC, KWAB நடத்திய கல்வி ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19068

வாழ்த்துக்கள்.

கன்னி முயற்சி என்றாலும் கனிவான, ஜனரஞ்சகமான முயற்சி. எடுத்த எடுப்பிலேயே வெற்றி கண்டுள்ளது உங்கள் முயற்சி. பெற்றோர் மாணவர்கள்தான் வரவேண்டும் என்ற உங்கள் அழைப்பிதழ் சற்று ஏமாற்றம் தந்தது. ஆனால் காக்கும் கரங்கள் தலைவர் நேரில் வந்து என்னை அழைத்ததால் நானும் கலந்து கொள்ள முடிந்தது. என் போன்றவர்களுக்கும் நிகழ்ச்சி பயன்தருவதாகவும் உற்சாகம் தருவதாகவும் அமைந்திருந்தது.

ஜனகரன் அவர்களை வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அற்புதமான பேச்சு, அசத்தலான சொல்வடிவு, பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பாசறையில் வளர்ந்தவர்போல் தெரிகிறது,இருந்தாலும் அவர் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய விதம் புதியது, பாராட்டுக்குரியது

.நிகழ்ச்சி அமைப்பு, அற்புதம். வேகும் வெயில் என்றாலும் ஷாமியானா அமைப்பு, குளிர்பானம் பிஸ்கட் அன்பளிப்பு வெக்கையை மறக்கடிக்க செய்தது.

கொட்டிகிடக்கும் வேலைவாய்புகள் அதற்கான படிப்புக்கள் இது வரை சொல்லப்படாத செய்திகள்.நீங்கள் அழைத்துவந்திருந்த எல்லோருமே அருமையான செய்திகளை தந்தார்கள்.

ஆனால் நீங்கள் இடைவேளை விட்டபோது தொழுகைக்கான அழைப்பு விடும் நேரம். அதையே தொழுகைக்கு விடப்பட்ட இடைவேளையாக அறிவித்திருந்தால், தொழுகை முடித்துவிட்டு அடுத்த அமர்வுக்கு வந்திருக்க முடியும், எல்லோரும் ஆர்வமாக வந்திருந்த மாணவ மாணவிகள்தான். மார்க்க கல்வியை பற்ற்யும் கலாச்சார சீரழிவுகள் பற்றியும் அதிக கவலை கொண்டுள்ள நீங்கள் இந்த நொடியில் சற்று கண்ணயர்ந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன் ஆனாலும் இது ஒரு குறை. இல்லை. வெறும் பாராட்டும் புகழுரையும் மட்டும் சரியான விமர்சனம் ஆகாது. நல்லவைகளை பாராட்டவும் அல்லவைகளை சுட்டிக்காட்டவும் ஒரு முறையான விமர்சகன் தயங்கமாட்டான்.அதை ஒரு SPORTS ஆக நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்றும் நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.

A GOOD START IS HALF DONE என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் உங்கள் ஆரம்பமே நன்றாக அமைந்துள்ளது. கடல் நடுவே தத்தளிக்கும் கப்பலுக்கு ஒரு கலங்கரை விளக்கு வழிகாட்டுவதுபோல் என்ன படிப்பது, எங்கு படிப்பது என்று கைபிசைந்து கொண்டு நிற்கும் மாணவர்களுக்கு நீங்கள் ஒரு கலங்கரை விளக்கம். திசை காட்டி .வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:KCGC, KWAB நடத்திய கல்வி ...
posted by Firdous (Colombo) [28 May 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19070

தக்க தருணத்தில் பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திய KCGC மற்றும் KWAB மனமார்ந்த பாராட்டுகள்.

நாங்கள் படித்த காலங்களில் Engineering யில் சிவில் மட்டுமே அறிந்தோம். +2 படிக்கும் போதுதான் மற்ற departments இருக்கிறது என்பது தெரியும். ஆனால் இப்போதைய மாணவர் சமுதாயத்திற்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது. மேலும் அதை மேற்கேற்றி இன்னும் நல்ல முறையில் முன்னெடுத்து செல்ல வழிக்காட்டும் அமைப்புக்கள் உள்ளன. இன்ஷாஹ் அல்லாஹ் காயல் கல்வி மற்றும் தொழில்துறையில் சிறப்பிடம் அடையும் காலம் வெகு அருகாமையில் உள்ளது.

எனது ஆதங்கம்: இக்காலத்தில் நான் மாணவனாக இல்லையே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:KCGC, KWAB நடத்திய கல்வி ...
posted by M Sajith (DUBAI) [28 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19073

செய்தியில் படித்த தகவல்களும், கூடவே மக்கி காக்காவின் வர்ணனையும், ரெட்ஸ்டார் ஐ தேடவைக்கிறது...

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:KCGC, KWAB நடத்திய கல்வி ...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [28 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19077

இக் காலத்தின் இளைய சமுதாயம் முன்னேறுவதில் அக்கறையும், ஆர்வமும் கொண்டுள்ளது வந்த மாணவர்களின் எண்ணிக்கையிலேயே தெரிகின்றது.

நல்லதோர் வழிகாட்டல்! நன்மை பயக்கும் திட்டம்! செயல்வடிவம் கொடுக்கும் அமைப்புகள்! ஆஹா! சமுதாய மேம்பாட்டிற்கு சந்ததிகளை அழைத்துச் செல்லும் இது போன்ற அமைப்புக்களை பாராட்டியே ஆக வேண்டும்.

மாணவ சமுதாயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு உன்னத சேவையாற்றி வரும் அன்புச் சகோதரர் ரஜாக் சார் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க வாழ்த்துகின்றேன்.

அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடத்தில் உள்ளன. இன்ஷா அல்லாஹ் விரைவில் அவருக்கு அந்த விருது கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
யார் சொல்வது உண்மை?  (29/5/2012) [Views - 2911; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved