Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:09 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8512
#KOTW8512
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 25, 2012
பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்: முதல்வர் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2241 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருநெல்வேலி மாவட்டதில் டெங்கு காய்ச்சலினால் பலர் சமீபத்தில் இறந்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, டெங்கு காய்ச்சலை உடனடியாக முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (23.5.2012) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாடிநவு மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை-1 மற்றும் டெங்கு வைரஸ் வகை-3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், எனது உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனது உத்தரவின் பேரில், 17.5.2012 அன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் திருநெல்வேலி சென்று இது குறித்து கடையநல்லூர், தென்காசி நகராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மாண்புமிகு அமைச்சர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

18.5.2012-லிருந்து ஒரு வட்டாரத்திற்கு இரண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்கள் வீதம், 38 விழிப்புணர்வு முகாம்கள் நாள்தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கூடுதலாக இரண்டு குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒரு வட்டாரத்திற்கு ஒரு பூச்சியியல் வல்லுநரும், மூன்று வட்டாரங்களுக்கு ஒரு மூத்த பூச்சியியல் வல்லுநரும் நியமிக்கப்பட்டு கொசு தடுப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமை பூச்சியியல் வல்லுநர் தலைமையில், 25 பூச்சியியல் வல்லுநர்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ அலுவலரும், ஒரு நகராட்சிக்கு ஒரு மருத்துவ அலுவலரும் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், நோய் கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் மூன்று சுகாதார அலுவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கென கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்புப் பணிகளுக்கென்று 29 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதையும், அதனைக் கட்டுப்படுத்துவதையும், நோய் தாக்கியவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகள் அளிப்பதையும் கண்காணிப்பதற்காக எனது உத்தரவின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து இரண்டு நிபுணர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

16.5.2012-லிருந்து ஒரு வட்டாரத்திற்கு 70 தற்காலிக பணியாளர்கள் வீதம் தினக்கூலி அடிப்படையில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,330 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு காய்ச்சல் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,466 பேர் காடீநுச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 817 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 423 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (23.5.2012) எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்.

2. பொதுமக்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 50 வண்டிகள் மூலம் தெரு முனைப்பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரங்களும் மேற்கொள்ளப்படும்.

3. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக காலையிலும், மாலையிலும் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

4. திருநெல்வேலி மற்றும் தென்காசி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக தனி வார்டுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அனுப்பப்படுவர்.

5. திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கடையநல்லூர் போன்ற டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான தேவையை குறைக்கும் வகையில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.

6. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.

7. மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட மருத்துவ அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவ முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா,
தமிழ்நாடு முதலமைச்சர்


இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பொதுமக்கள் யாரும் டெங்கு ...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [25 May 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19042

யா அல்லாஹ்.... உங்கருணையால் இந்த இன்னும் பல கொடும் நோய்களில் இருந்து எம் யாவர்களையும் காத்தருள்வாயாக ஆமீன் ( தமிழக முதல்வருக்கு நன்றி )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பொதுமக்கள் யாரும் டெங்கு ...
posted by SEYED ALI (ABUDHABI) [26 May 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19051

டெங்கு காய்ச்சல் ஒன்றும் கட்சித்தொண்டன் இல்லை, அம்மாவின் உத்தரவிற்கு பயந்து, ஓடிவிடுவதற்க்கு.போர்க்கால அடிப்படையில் துப்புரவுப்பனிகள் உடனே முடுக்கிவிட வேண்டும். மழைகாலங்களில் வெள்ளம் தேங்க வழியில்லாமல், வடிகால் வசதிகளும் நல்ல ரோடுகளும் மாநிலம் முழுக்க போட வேண்டும்.

சுத்தம் பற்றி நம் மக்களுக்கு நிறைய சொல்ல வேண்டும். வீணான வோட்டு வங்கி வியாபாரத்திலிருந்து அரசும் தொண்டர்களும் விடுபடவேண்டும். மக்களின் வரிப்பணங்களை அரசு பாழடிக்காமல் நல்ல காரியங்களுக்கு பயனாக்கினால், டெங்கு என்ன எந்த தீமையும் நில் என்றால் நிற்கும்,ஓடு என்றால் ஓடிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved