Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:55:15 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8400
#KOTW8400
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 4, 2012
பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த டாக்டர் வாசுதேவன் காயல்பட்டினம் வருகை! ப்ளாஸ்டிக் சாலை குறித்து நகர்மன்றத்தில் விளக்கினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2852 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளில் - சாதாரண தார் சாலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் - உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் 90 சதவீதம் பிடுமின் என்ற வேதிப்பொருளும், 10 சதவீதம் பிளாஸ்டிக்கும் கலக்கப்பட்டு, சாலைகள் போடப்படும். இதுபோன்ற சாலைகள் நீண்ட ஆயுட்காலம் கொண்டதாகவும், மழை நீர் தேக்கத்தால் பாதிப்படையாததாகவும் இருக்கும்.

இந்த பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஆர்.வாசுதேவன். அதற்கான Patent உரிமையை இவர் பெற்றுள்ளார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை தலைவரான இவர், நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதாவின் அழைப்பின் பெயரில் 03.05.2012 அன்று (நேற்று) காயல்பட்டினம் வருகை தந்தார்.

காலை 10:30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.



நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், டாக்டர் வாசுதேவன், ப்ளாஸ்டிக் சாலை குறித்து விரிதிரை உதவியுடன் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-

கான்க்ரீட் சாலை, தார் சாலைகளைக் காட்டிலும் ப்ளாஸ்டிக் சாலை மிகவும் பாதுகாப்பதும், சேதப்படாமல் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியதுமாகும்...



இந்த சாலை அமைக்கப்படும்போது, அதன் இரு ஓரங்களிலும் இடைவெளி விடப்படும்... இந்த இடைவெளி வழியே மழை நீர் போன்றவை பூமிக்குள் சென்று, நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும்.

ப்ளாஸ்டிக் சாலையில், சாலையினூடே துளை (Pot hole) உருவாகாது. எனவே, அத்துளைகள் வழியாக மழை நீர் உட்சென்று, அரிப்பை ஏற்படுத்தி சாலையை சிதிலமடையச் செய்ய வழியில்லை. ப்ளாஸ்டிக் சாலை போட பயன்படுத்தப்படும் கற்களில், சூடாக்கி திரவப்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் கழிவு ஊற்றப்படும். அவை சாலைக்கு நல்ல பொலிவைக் கொடுப்பதுடன், நீர் உள்ளே செல்லாமல் பாதுகாக்கும். இந்த ப்ளாஸ்டிக் படிவத்தால் (லேயர்) சாலையில் இருக்க வேண்டிய உராய்வுத் தன்மை (Friction)யில் எவ்வித பாதிப்பும் இருக்காது.



அழைக்கப்படும் அனைத்திடங்களுக்கும் சென்று எங்களால் விளக்கமளிக்க இயலவில்லையெனினும், இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் இதுகுறித்து நாங்கள் விளக்கி வருகிறோம்... ஷிம்லா, ஜேம்ஷெட்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் ப்ளாஸ்டிக் சாலை அமைத்துள்ளோம்... அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.



இந்த ப்ளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்திற்கு நாங்கள் பேடன்ட் உரிமை வைத்துள்ளபோதிலும், இந்தியாவில் இச்சாலை அமைப்பதற்கு நாங்கள் இலவசமாகவே எமது தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறோம்.

இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டியவை என பொத்தாம்பொதுவாக சொல்வதை விட, அவற்றை மறுசுழற்சி முறையில் இதுபோன்று பயன்படுத்தச் சொல்வதே சிறந்தது.

இந்த சந்திப்பின் மூலம், காயல்பட்டினம் நகராட்சிக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், இதுபோன்ற திட்டங்களுக்காக ப்ளாஸ்டிக் கழிவுப் பொருட்களை சேகரிக்கத் துவங்கினால், சிறு கழிவு கூட உங்கள் நகராட்சிப் பகுதியில் குப்பையாகக் கிடக்காது. எனவே, இக்கழிவுகளை சேகரிக்க முறையான செயல்திட்டம் வகுத்து, வாரம் ஒருமுறை ப்ளாஸ்டிக் கழிவுகளை மட்டும் சேகரிக்க நகராட்சி பணியாளர்களைப் பயன்படுத்துங்கள்... நகராட்சிக்கு அதன் மூலம் வருமானத்தைப் பெற்றிடுங்கள்...


இவ்வாறு டாக்டர் வாசுதேவன் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளக் கோரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், உடன்குடி ஆகிய ஊராட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தக்காரர்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா விடுத்திருந்த அழைப்பின் பேரில், ஆத்தூர் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் எம்.பி.முருகானந்தம், நிர்வாக அதிகாரி வி.முத்து கிருஷ்ணன், ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி குமார் மற்றும் காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு, இத்தொழில்நுட்பம் குறித்த தமது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.



நிறைவாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் நன்றி கூறினார். காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பை சேகரிப்பிற்காக விரைவில் நவீன டம்பர் ப்ளேசர் இயந்திரம் வாங்கப்படவுள்ளதாகவும், ப்ளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்ட பின்னர், அவை முறைப்படி சேகரிக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார். பின்னர், காயல்பட்டினம் நகராட்சி சார்பில், ஆணையர் அஷோக் குமார் டாக்டர் வாசுதேவனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



டாக்டர் வாசுதேவனுடன், முதுநிலை ஆய்வாளர் ராமலிங்க சந்திரசேகர், இளநிலை ஆய்வாளர் சுந்தர கண்ணன், உதவியாளர் கங்காதரன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, கே.ஜமால் ஆகியோரும் இக்கருத்தரங்கில் சமூகமளித்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பிளாஸ்டிக் சாலை தொழில்நுட...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [04 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18661

அப்பாடா.. பிளாஸ்டிக்குக்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டது.

பிளாஸ்டிக் கவரை என்ன செய்வது, உடைந்த பிளாஸ்டிக்கை என்ன செய்வது, திருமணத்திற்கு சகன் சாப்பாட்டில் கறி, கத்தரிக்காய் கின்னிக்கு என்ன செய்வது... போன்ற மண்டையை குடைந்துக்கொண்டு இருந்த பல விசயங்களுக்கு விடை கிடைத்து விட்டது.

பிளாஸ்டிக் குப்பையை மட்டும், மக்கள் சரியாக பிரித்து, கட்டிவைத்து நகராட்சி குப்பை வண்டியில் கொடுத்தால் பல சிரமங்கள் நீங்கும்.

இப்படி பல உக்திகளை பயன்படுத்தி நம் ஊருக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என்று நினைவு பூராவும் ஊரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் நகராட்சி தலைவிக்கும், உறுப்பினர்களுக்கும், மற்றும் நல்லவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சூடாக்கப்படும் பிளாஸ்டிக்கினால் ஏதும் ஆபத்துக்கள் உண்டா?
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [05 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18673

அஸ்ஸலாமு அழைக்கும்.

நமது நகரத்திற்கு அறி உரைகளை தந்த விஞ்ஞானி வாசுதேவன் மற்றும் ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் நன்றி!

உலகமே பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஏன் நமது காயலில் கூட C.F.F.C இன் கான்சர் ஒழிப்பு முயற்சிக்கு மத்தியில் இந்த விஞ்ஞான புதுமையிலும் ஓர் ஆழ்ந்த சிந்தனை தேவை!

கழிவு என்று ஒதுக்கிய பிளாஸ்டிக் பொருட்களை எரித்து வெப்பமயமாக்கப்படும்போது ஏற்படும் சுகாதார ஆபத்துக்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதல் அத்துடன் இத்திட்டத்தின் தீமைகளையும் ஆராய்ந்து நன்மைகள் தீமைகளை விட அதிகமாகவும், எக்காரந்த்தைக்கொண்டும் கான்சர் போன்ற உயீர் கொல்லி நோய்கள் ஏற்படாத வண்ணம் இருந்தால் வரவேற்க்கத்தக்கதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved