Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:06:25 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8349
#KOTW8349
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 25, 2012
கோடை விடுமுறையை முன்னிட்டு, சிறுவர்களுக்கான - உருவமற்ற ஓவியப் பயிற்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2347 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பள்ளிக்கூடங்களில் பயிலும் சிறுவர் - சிறுமியர் தமது நடப்பு கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, வரும் மே மாதம் 02ஆம் தேதியன்று, காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலுள்ள சமுதாயக் கல்லூரியிலும், மறுநாள் 03ஆம் தேதியன்று, ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியிலும் உருவமற்ற ஓவியங்கள் வரையும் பயிற்சி தொடர் வகுப்புகள், நகரின் மூத்த ஓவியரும் எழுத்தாளருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமாவால் துவக்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, இம்மாதம் 25ஆம் தேதி முதல்,
வாவு நெய்னா தலைவாசல்,
68, கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்
என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களை, +91 4639 280558 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டறியலாம் என்றும் ஏற்பாட்டாளர் ஏ.எல்.எஸ். மாமா தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கோடை விடுமுறையை முன்னிட்ட...
posted by Shameemul Islam SKS (Chennai) [25 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18496

சபாஷ் மாமா,

வெளியூரிலிருந்து ஊர் வரும் எங்க பிள்ளைகளுக்கெல்லாம் கிடையாதா. போட்டி நாளை கொஞ்சம் தள்ளி (மே 15 க்குப் பின்) வைக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கோடை விடுமுறையை முன்னிட்ட...
posted by musthak ahamed (goa) [25 April 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 18516

ஒரு ஓவியமே ஓவியம் கற்றுத் தரப்போகிறதே.....!

மாமா.........
நீங்களே ஒரு ஓவியம்......
உங்கள் வாழ்க்கை என்னைபோன்றவர்களுக்கு
உயர் காவியம்............

எங்கள் இளந்தென்றலின்
ஆஸ்தான ஓவியர்...

நீங்கள் ஒரு நடமாடும் மதரசா..............

புத்தகம் இல்லாமலே என் புத்தியில்
புகுந்து கொண்டீர்கள்...........
பல நடைமுறை ஒழுக்கங்களை
பலமாய் என்னுள் விதைதத்தீர்கள்.

நடக்கையில் திக்ர் செய்வது...........
நடு ரோட்டின் கற்களை கவனமாய் அகற்றுவது..........

விருந்தினர் எப்படி இருக்க வேண்டும்..
விருந்தினராய் எப்படி இருக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உங்கள்
வாசனையாலே எனக்கு வந்தது............

ஞாபகம் இருக்கிறதா மாமா .........
என் கல்லூரிக்கான முதல் கட்டணம்,
என் கவலங்களுக்கான முதல் பயணம்
உங்களால் ஆனது.

சென்னைக்கு டிக்கெட்டும் எடுத்து தந்து
சென்னையில் வேலையும் வாங்கித் தந்தீர்கள்.

தினத்தந்தியில் நேர்காணல் என்றதும்
பத்திரிகை தொடர்பான புத்தகம் தந்து
பல செய்திகளை பகிர்ந்து கொண்டீர்கள்.

அத்தனை நரம்புகளிலும் அத்தனை திறமைகள்.......
மாஷா அல்லாஹ் .......

இத்தனை திறமைகளில் ஏதாவது ஓன்று இருப்பதாய்
நினைத்தால் கூட - வேறு எவனும்
இந்தியாவின் இதயத்தில் இடம் கேட்ப்பான்.
இலவசமாகவேனும்
விருதொன்றை விரும்புவான்.

இன்னும் பல தலைமுறைக்கான
பதிவு செய்யப்பட வேண்டிய விஷயங்கள்
உங்களிடம் இருக்கிறது...........
அல்லாஹ் உங்கள் ஆயுளை நீளமாக்கட்டும்.

இப்போதெல்லாம் ஆசை ஓன்று அவ்வப்போது
வந்து போகிறது.....
மீண்டும் குழந்தையாய் மாறி
உங்களிடம் அந்த
ஓவியத்தையும் ஒருதடவை கற்றுக்கொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கோடை விடுமுறையை முன்னிட்ட...
posted by T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852) [26 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18522

அஸ்ஸலாமு அலைக்கும்.!

உருவமற்ற ஓவியங்கள் என்றால் விஞ்ஜான காலத்துக்கு ஏற்ப விளக்கத்துடன் எழுதினால் நன்றாய் இருக்கும் . உயிருள்ள உருவமா? அல்லது உயிரற்ற உருவமா? சீனரியா? செடிகொடிகளா? என்பதும் அறியத்தந்தால் பிள்ளைகளுக்கு அதன் படி ட்ரெயினிங் கொடுக்கலாம். அத்துடன் விஞ்ஜான அறிவிப்படி மரம் செடி கொடிகளுக்கும் உயிர் இருப்பதாக அறிவியலும் கூறு கிறதே ? என்று சிறுவர்களும் யோசிக்கிறார்கள். எழுத்தில் கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.(உருவம்- வடிவம், உடல் , சிலை, அழகு ,நிறம்) அவைகள் கழகத்தமிழ் டிகஷனரியில் உள்ள அர்த்தங்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கோடை விடுமுறையை முன்னிட்ட...
posted by T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852a) [28 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18589

அஸ்ஸலாமு அலைக்கும்,

T.M. Rahmathullah Haji, உங்களது கேள்v பற்றி சிறிய பதில். நீங்கள் எனக்கு எழுத்து துறையில் வழிகாட்டியும், ஏராளமான தகவல் தந்து உதவியவரும், நல்ல ஆலோசகறும், என்னால் பேரறிஞராக போற்றி மதிக்கப்படும் உங்களுக்கு பதில் தர - ஒரு மாணவன் என்ற முறையில் அச்சமாக இருக்கிறது. பதில் தராவிட்டால் - உங்கள் மாணவனாக இருக்க தகுதியை இழந்துவிடுவேனோ? என்ற ஓர் பயம் ஒருபுறம் எண்ணெய் பிடித்திருக்கிறது.

உருவம் என்பது வடிவம் சரிதான், அகராதியில் நானும் படித்திருக்கிறேன் உருவம் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் விவாதத்தில் சிறிய பிழை காணப்படுகிறது. பழம், காய்கறி, மலர்கள், உயிரற்ற உருவமாக கருதப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலாலான மிருகம், பறவைகளை அறுக்கும் போது அதற்க்கு வேதனையாக அல்லாமல், கூரிய கத்தியால் அறுக்கும் படி உள்ள ஹதீசுகள் புஹாரி ஷரீப் 7275 ஹதீசுகளில் பலமுறை ரஜபு மாதத்தில் கேட்டிருக்கிறேன். பல்வேறு உலமாக்கள் பேசும் கூட்டங்களிலும் மிருகங்கள், பறவைகள் அறுப்பது பற்றி பல ஹதீசுகளை மேலே சொன்ன மாதிரி கேட்டு வந்துள்ளேன். ஒரு இடத்திலாவது பழங்களை, காய் கனிகளை, மலர்களை அறுக்கும்போது வேதனை செய்யாதபடி வெட்டுங்கள் என்று இதுவரை ஒரு ஹதீஸை கூட கேட்டதில்லை. நீங்கள் கேட்டதற்கு இதிலே பதில் அடங்கயுள்ளது.

உருவமற்ற ஓவியம் என்ற சொல்லுக்கு வேறு என்ன பெயர் வைத்து நான் எனது ஓவிய பள்ளிக்கு போடுவது? நீங்கள் தான் எனக்கு இம்மாதிரியான, புதுமையான, குதர்க்கமான, வினா எழுதி கேட்டு உள்ளீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. உலகம் சுற்றும் இளைஞரான நீங்களா? இப்படி இந்த சின்ன பிள்ளையிடம் கேட்பது.

இன்ஷா அல்லாஹ் எனது ................................. ஓவிய பள்ளி மே 2 ல் சமுதாய கல்லூரியிலும்,மே 3 ல் ரஹ்மானியா பள்ளியிலும் துவங்க உள்ளது. உங்களது பகுதியில் சிறு பிள்ளைகள் இருந்தால் கோடை விடுமுறையில் சேர்ந்து பயனடைய சொல்லுங்கள். விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது 68 A KTM Street வாவு நெய்னா தலைவாசல் வழியாக வந்து ருபாய் 100 செலுத்தி முன்னதாக பெற்றுக்கொள்ள சொல்லவும்.

குற்றால சீசன் ஆரம்பித்துவிட்டது. உங்கள் வீட்டில் தங்குவதற்கு ஒருநாள் முழுவதும் உங்களோடு இருப்பதற்கு, உங்களுடைய அறிவு ஞானத்தை அருவி போல் பெற்றுக்கொள்ள ஆசை பலாண்டுகள் மனதில் வைத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு இந்த சான்சு தருவீர்களா? காத்திருந்து காத்திருந்து பார்க்கின்றேன்.

எழுத்தாளர், சமூகன் ஆர்வலர், ALS , ஓவியர், ஆலோசகர்- ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்சிக் குழு, காயல்பட்டினம்.

இதற்கான பதில் ஒரே சொல் =உயிரற்ற ஓவியம் அல்லது வடிவம் . சரிதானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (24/4/2012) [Views - 2599; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved