Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:55 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8230
#KOTW8230
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 31, 2012
நாளை முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம்:

வீடுகளில் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் 1 ரூபாய் 10 பைசா ஆகும்.

மேலும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் இருமாத நிலைக்கட்டணமாக 20 ரூபாய் செலுத்த வேண்டும்.

200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு 1 ரூபாய் 80 காசு ஆகும்.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 50 பைசா வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோரிடம் இருமாத நிலைக்கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 முதல் 500 யூனிட் வரையிலான அடுத்த 300 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இருமாத நிலைக்கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும்.

100 யூனிட் வரை பயன்படுத்தும் வியாபார நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 4 ரூபாய் 30 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்களுக்கான (நகராட்சிகள், பஞ்சாயத்துகள்) கட்டணம் யூனிட்டுக்கு ரூபாய் 5.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5 ஆகும். தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

வழிபாட்டு தலங்களை பொறுத்த மட்டில், 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2.50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 120 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூபாய் 5.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருமாத நிலைக்கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.

குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.50 வீதமும், 501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் கிடையாது. அதாவது 500 யூனிட் வரை இலவச மின்சாரம். 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் யூனிட்டுக்கு 4 ரூபாய் ஆகும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

இந்த மின்சார கட்டண உயர்வு நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. 31.3.2013 வரை இந்த கட்டண உயர்வு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நகுல்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

மின்வாரியம் மொத்தம் ரூ.9,742 கோடிக்கு கட்டண உயர்வு கேட்டது. நாங்கள் ரூ.7,874 கோடிக்கு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். அரசு வழங்கக்கூடிய மானிய விவரங்களை பிப்ரவரி 4-ந் தேதி வழங்கியது. இதனையும் கழித்தே மின் கட்டணம் அறிவிக்கப்படுகிறது. விவசாயம், குடிசைகள் போன்றவைகளுக்கு இலவச மின்சாரம் தொடருகிறது. அவற்றுக்கு அரசு மானியம் வழங்கி விடுகிறது.

மொத்தத்தில் 37 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. மொத்தமாக உயரழுத்த மின் நுகர்வோர் மூலம் ரூ.2,600 கோடியும், தாழ்வழுத்த நுகர்வோர் மூலம் ரூ.5,300 கோடியும் கூடுதலாக கிடைக்கும். இதில் தாழ்வழுத்த வீட்டு இணைப்பு நுகர்வோர் மூலம் மட்டும் ரூ.1,700 கோடி கூடுதலாக கிடைக்கும்.

அரசு வழங்கும் மானியம் எல்லாம் சேர்த்தால் மொத்தம் ரூ.29,347 கோடி மின்வாரியத்திற்கு கூடுதலாக கிடைக்கும். இந்த வருடம் மின்வாரியத்தின் வருமானமும், செலவுகளும் சரியாக இருக்கும். எனவே இந்த ஆண்டு மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாது. 2013-14-ம் நிதி ஆண்டுக்கான மின்கட்டண நிர்ணயத்திற்கான மனுக்கள் வருகிற நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by fathimas (kayalpatnam) [31 March 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 17979

என்னமோ இங்க மின்சாரம் இருக்குற மாதுரி மின் கட்டண உயர்வுக்கு மட்டும் குறை இல்லை...

ஆனா இது ரொம்ப அநியாயம் இதை தட்டி கேட்க்க யாருமே இல்லையா....

என்ன கொடுமை சார் இது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [31 March 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17981

தமிழகத்தில் மின்சாரம் என்று ஒன்று இருகிறதா என்ன .????
இல்லாத ஒன்றுக்கு எதற்கு கட்டணம்? எதற்கு உயர்வோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by koman babu (India) [31 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17985

மேலும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் இருமாத நிலைக்கட்டணமாக 20 ரூபாய் செலுத்த வேண்டும்.(Copy&Paste )

இன்ஷா அல்லாஹ , விலை அதிகமானதால் யாருக்கும் பாதிப்பு இருக்காது , மேலை உள்ள கட்டணம் தான் அனைவருக்கும் வரும் ஆகையால் யாரும் கவலை வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by raiz (Sydney) [31 March 2012]
IP: 120.*.*.* Australia | Comment Reference Number: 17986

திருப்பதியில் சீப்பு விலை ஏறின மாதிரி இருக்குது !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [31 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17987

பொது நிகழ்சி களில் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் சவுண்ட் சர்வீஸ் காரர்களுக்கு எத்தனை சதவீதம் ஏற்றமாம். தெளிவு படுத்த வில்லையே? ஒரு வேலை குடிசைகளுக்கு இலவசம் போல அவர்களு க்கும் இலவசமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by mohmedyounus (trivandram) [31 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17989

அம்மா ஒன்னு ஏத்து ஏத்துன்னு ஏத்துது.
இல்லேன்னா மாத்து மாத்துன்னு மாத்துது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by Abul Kasim (Al Khobar) [31 March 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17991

இப்போ எல்லாரும் மின்சாரமே இல்லேன்னு சாதாரணம் சொல்லிடீங்க, கொஞ்ச நாளுலே சரி ஆயிரிசுனா அப்போ தெரியும் விலை ஏற்றதோட அருமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) [31 March 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17994

மின் கட்டணம்,எரிபொருள்,நில ஆவணப்பதிவுக்கட்டணம் என அனைத்துமே ஏப்ரல் 1 முதல் ஏறுகின்றது.

இந்தக்கட்டண உயர்வு நம்மில் கையாலாகாதத்தனத்தையும்,எரிச்சலையும் ,வெறுப்பையுமே உண்டு பண்ணுகின்றது.

நம்மில் பெரும்பாலானோருக்கு வருமானம் என்பது எண்ணிச்சுட்ட அப்பம்தான்.

என்ன செய்வது!

மின் பயன்பாட்டைக்குறைப்பது,

தேவையற்ற மின் பொருள்களை வாங்காமல் தவிர்ப்பது,

மாற்றுமுறை மின்சாரத்தை பெறுவது ,

தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது

என்பனவற்றை கடைப்பிடித்தால் ஓரளவு சமாளிக்கலாம் எனத்தோன்றுகின்றது.

இவற்றில் சில அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும்.ஆனால் நமது முன்னோர்கள் 30 ,40 வருடங்களுக்கு முன்னர் இப்படித்தான் வாழ்ந்தனர்.அதனால் உடல்,மன நலத்துடன் கொடிய னோய்கள் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by Kader K.M (Dubai) [31 March 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17995

ஓட்டு போட காசு வாங்கும்போதும், நல்ல.........ஓட்டுபோடும்போதும்,டிவி,மிக்சி, கிரைண்டர் வாங்கும்போதும் யோசிக்க மறந்துவிட்டு இப்போது பேசி பலன் இல்லை.இலவசம் என்ன அவர்கள் உழைத்த பணத்திலா தருகின்றார்கள்? ஊரான் வீட்டு நெய்யைப்பாரு என் பொண்டாட்டி கையைப்பாரு என்ற கதைத்தான். இல(இலவு)வசம் கொடுத்த பணத்தை மின்வாரியத்திடம் கொடுத்து இருந்தால் இந்த தேவை இல்லாத மின் உயர்வை தடுத்து இருக்கலாம்.இனி நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவோம், இலவசம் தருபவர்களுக்கு ஓட்டு இல்லை என்று! ஒன்றுபடுவோம்! வெற்றி அடைவோம்!! வஸ்ஸலாம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நாளை முதல் தமிழகத்தில் மி...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [31 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17998

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னப்பா இது அதிசியமாக உள்ளது .......மின்சாரமே இல்லை.......... அப்படி இருக்க மின்சாரத்துகு எதற்கு ??// மின் கட்டண உயர்வு? தமாஷாக இல்லையா'''''' தமிழக அரசாங்கமே நம் மக்களை கொஞ்சம் கவனியுக்கள் .

மின் உருபத்தியை நாம் பல வழிகளில் கூட்டுகிற முயற்சில் ஈடுபட வேணும் . முக்கியம் நம் அரசாங்க விழாக்களில் ( ஆடம்பரத்தை ) மின்சார செலவை குறைத்தாலே போதுமே.

எமது அருமை சகோதரர் ஜனாப் ஜாபர் அவர்களின் கேள்வி அருமையானது தான் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved