Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:15:50 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8226
#KOTW8226
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 30, 2012
ஏப்ரல் 09 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் பொருட்கள் / சேவைகள் ஏலம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2762 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகராட்சியில் பின்வருமாறு பொருட்கள், நகராட்சி சேவைகள் ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது:-

இதனால் காயல்பட்டினம் நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்,

காயல்பட்டினம் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கீழ்க்கண்ட பட்டியலில் காணப்படும் இனங்களுக்கு பொது ஏலம் 2012-2013ஆம் வருடத்திற்கு, 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து, ஆணையர் அவர்களால் அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரால் பொது ஏலத்தில் விடப்படும்.

அத்துடன், எல்லா இனங்களுக்கும் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏலம் நடைபெறும் நாளில் காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பெற்றுக்கொள்ளப்படும்.

வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள், சம்பந்தப்பட்ட இனத்திற்கான ஏலம் ஏலத்தில் கலந்துகொள்ளும் ஏலதாரர்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிதாரர்கள் முன்னிலையில் 03.00 மணிக்கு திறக்கப்படும்.

ஒவ்வொரு இனத்திற்கும், ஏலத்திற்கு தனித்தனியாக வைப்புத் தொகைகள் செலுத்தப்பட வேண்டும்.

இதர விபரங்களை நிபந்தனைகளிலும், அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திலும் நேரில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

New Page 1

வ.எண்

ஏலம் விடப்படும் பொருள் / சேவை

குத்தகை காலம்

டேவணி தொகை ரூ.

01

நகராட்சி வளாகத்திலுள்ள கிணற்றில் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் உரிமம் (காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டும்)

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

5,000

02

நகராட்சி பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடை எண் 5

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

5,000

03

கடற்கரை பூங்காவிற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம்

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

2,000

04

நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டி

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

25,000

05

நகராட்சி பேருந்து நிலைய வளாகத்திலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

5,000

06

நகராட்சி அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தினசரி நாளிதழ் (பிப்.29ஆம் தேதிக்குட்பட்ட நாளிதழ்கள் மட்டும்)

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

100

07

நகராட்சி அலுவலக மற்றும் தெரு விளக்கு உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட பழைய மின் சாதனங்கள், சோக்கு, ஸ்டார்ட்டர், குழல் விளக்கு

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

100

08

நகராட்சியில் ஆடு, மாடு அறுக்கும் தொட்டியில் சேகரிக்கப்பட்ட உதப்பை

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

100

09

நகராட்சி குடிநீர் பிரிவில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த பொருட்கள்

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

1,000

10

சுகாதார பிரிவிலுள்ள பழுதடைந்த பொருட்கள் ஏலம்

10.04.2012 முதல் 31.03.2013 முடிய

100



நிபந்தனைகள்:

(01) ஏலம் கேட்க விருப்பமுள்ளவர்கள், டேவணித் தொகை முழுவதும் செலுத்தி ஏலம் கேட்க வேண்டும்.

(02) கூடுதல் ஏலம் எடுத்தவர், ஏலத் தொகை முழுவதையும் ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

(03) கூடுதல் ஏலம் நகராட்சி மன்ற அங்கீகாரத்திற்குட்பட்டது.

(04) ஏலம் முடிவு செய்யப்பட்டதும், ரூபாய் 20க்கான ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

(05) ஏலத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும், இதற்கு முன்பு நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட கடைகளையோ அல்லது இடங்களையோ குத்தகைக்கு எடுத்து, முறையாக ஏலத்தொகை செலுத்தாதிருந்தால், அவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(06) எவ்வித காரணமும் காட்டாமல் ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது மறு ஏலம் கேட்கவோ நிர்வாக அதிகாரிக்கு அதிகாரமுண்டு.

(07) எந்த சந்தர்ப்பத்தில் தேவையானது என நிர்வாக அதிகாரி அவர்களால் கருதப்படும் எந்த விதமான முடிவை எடுக்கவும் அவருக்கு அதிகாரமுண்டு.

(08) ஒப்பந்தக் கட்டுப்பாட்டை மீறி நடந்த குற்றத்திற்கான பொறுப்புத் தொகையை பறிமுதல் செய்வதில் மன்றத்தின் தீர்மானமே முடிவானதாகும்.

(09) ஏலத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க நிர்வாக அதிகாரிக்கு உரிமை உண்டு.

(10) நகராட்சி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டுமே ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும்.

(11) கிணறுகளில் வண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்துக்கொள்வதற்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் மட்டுமே ஏலதாரருக்கு உண்டு. பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் செய்யக்கூடாது.

(12) மின் கட்டணத்தை ஏலதாரரே செலுத்த வேண்டும்.

(13) மின் மோட்டார் பழுது ஏற்பட்டால் ஒப்பந்தக்காரர் பொறுப்பில் செய்ய வேண்டும்.


இவ்வாறு ஏல அறிவிப்புகள் அமைந்துள்ளன. இந்த ஏல அறிவிப்பை, காயல்பட்டினம் நகராட்சிப் பகுதி முழுவதும் டாம்டாம் செய்து, தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க நகராட்சி சுகாதார ஆய்வாளர் பணிக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஏலதாரர்கள், (நகராட்சி) அலுவலக விளம்பரப் பலகை, கிராம நிர்வாக அலுவலக தகவல் பலகை, சார்பதிவாளர் அலுவலக தகவல் பலகை, காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள், காயல்பட்டினம் நகராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்த ஏல அறிவிப்பின் நகல் அனுப்பப்படுவதாக ஏல அறிவிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஏப்ரல் 09 அன்று காயல்பட்ட...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17975

என்னது...!!!

-- " கடற்கரை பூங்காவிற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம்" -

இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை. இல்லாத பூங்காவிற்கு வாகன நுழைவு கட்டணமா.? நல்லா தாம்ப்பா காமடி பண்ணுறாங்க.

மனுஷன் ஊரில் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமிடம் பாத்ரூமும், நம் கடற்கரையும் தான். அதற்கும் வந்து செல்ல வாகனத்திற்கு கட்டணமாம்.

ஒரு சுத்தம், சுகாதாரம் இல்லை. ஒரே கூலம், குப்பைகள், ஆடு,மாடு, நாய் முதல் குதிரை வரை மலம் கழிக்கும் கடற்கரையை துப்புரவு படுத்த நாதி இல்லை..வந்துட்டாங்க.

மனக்குமுறலை எழுதினால் அட்மின் பெரிய அருவாளை போட்டு விடுகிறார்...

அப்படியே கடற்கரை காத்துக்கும், கடலில் காலை நனைப்பதற்க்கும் வரி போட்டு விடுங்க..சாலச்சிறந்தது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஏப்ரல் 09 அன்று காயல்பட்ட...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [31 March 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17976

கடற்கரையிலுள்ள வாகனங்கள் நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிப்பது என்று மீண்டும் முடிவாகிவிட்டது. சரி, அதை குத்தகைக்கு விட்டு வரும் பணத்தில் கடற்கரைக்கு என்ன செய்யப்போகிறார்கள். அப்படி ஏதாவது உருப்படியாக செய்ய முடிவெடுத்திருந்தால், குத்தகையில் வரும் பணம் அதற்க்கு போதுமாக இருக்குமா? இந்த இனத்தையும் ஏலத்தில் சேர்த்த நல்லவர்கள் பதில் சொல்லட்டும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஏப்ரல் 09 அன்று காயல்பட்ட...
posted by Mohamed Salih (Kayalpatnam) [31 March 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 17978

கடற்கரை பூங்காவிற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் (06.04.2012 முதல் 31.03.2013)

In this point we should not accept... we have lot of way to increase the income to our municipal.. we should fight not collect the parking charges on beach area..

pls the member of beach walker association sopke qwith the municipal chairman in this regard..

With best wishes.
mohamed Salih fro bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அரசு விதி படி ஏலம் அறிவித்தாக வேண்டும்!
posted by Daruttibyan Network (Kayalpatnam) [31 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17980

காயல்பட்டினம் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் தொடர்பாக சில தகவல்கள்...

நகராட்சிக்கு வருமானமீட்டும் பல வழிகளில் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிப்பதும் ஒன்றென அரசு விதித்துள்ளதாக அறிய முடிகிறது. எனவே, நகராட்சியில் அங்கம் வகிக்கும் யாரும் தன்னிச்சையாக அதனை இல்லாமலாக்க இயலாது. மேலும், தணிக்கைக் குழு (Audit) நகராட்சி கணக்குகளைப் பார்வையிடுகையில், மேற்படி ஏலம் குறித்த கணக்குகளும் காண்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 29.03.2012 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் செய்தியாளராக நாமும் இருந்தோம். நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் என யாரும் இதனை வலியுறுத்தவில்லையெனினும், அரசு சட்ட விதிகளின்படிதான் தாம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, அரசு விதிகளின் படி ஏலம் அறிவிக்கப்படுகிறது. ஏலத்தை எடுப்பதும், எடுக்காதிருப்பதும் ஏலதாரர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

கடற்கரை அழகுபடுத்தப்பட்ட பிறகே இவ்வாறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளதையும் நம்மால் உணர முடிகிறது.

எனினும், கடந்த நகர்மன்றத்திலும் இதுபோன்று ஏலம் விடப்பட்டு, அது ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், நகர பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் அவர்களால் கட்டணம் வசூலிக்க இயலாமல் போனதையடுத்து, காவல்துறை துணையுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நிர்ப்பந்தத்தை உணர்ந்த பொதுமக்கள், தமது வாகனங்களை கடற்கரை எல்லைக்குள் கொண்டு வராமல், கொச்சியார் தெருவிற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு கடற்கரைக்கு வருவதை வழமையாக்கிக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஏப்ரல் 09 அன்று காயல்பட்ட...
posted by T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852) [09 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18142

அஸ்ஸலாமு அலைக்கும்!

நாமெல்லாம் முஸ்லிமாகவும் முஃமினாகவும் இருக்கிறோமல்லவா ?. செருப்பின் வாரறுந்தாலும் அல்லாஹ்விடம்தாணே.கேட்கவேண்டும் இப்படி அரசாங்க கெடுபிடிகளில் இருந்து அல்லாஹ் விடமே நிவாரன்ம பெற்று வாழ்க்கை அனுபவித்து வரூம் . நபர்கள்கூட இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை தேடி அறிந்து செயல்படலாமே.அவர்களின் வழிமுறைகள் நபி வழியோடு ஒத்துபோகப்போய் தானே ஆண்டவன் கருணை காட்டுகிறான்.

ஃபஸ் அலூ அஹ்லஜ்திக்ரி இன்குந்தும் லா தஃலமூன்فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

16:43. (; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved