Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:43:13 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8189
#KOTW8189
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 24, 2012
தூத்துக்குடி- சென்னை இடையே புதிய ரெயில் இயக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் ஜெயதுரை எம்.பி. பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3537 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி-சென்னை இடையே புதிய ர‌யிலை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை கோரிக்கை விடுத்தார்.

மத்திய ரெயில்வே பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-

ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் பாதுகாப்பு, புதிய வழித்தடங்கள் அறிமுகம், இரட்டை வழி தடங்கள், அடிப்படை தேவைகள் போன்ற தொலை நோக்கு பார்வையுடன் அமைந்துள்ளதால் நான் மனமார வரவேற்கிறேன்.

தூத்துக்குடி துறைமுக நகரம். இங்கே பல தொழிற்சாலைகள் நகரத்தின் உள்ளேயும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கி வருகிறது. தூத்துக்குடியில் மட்டும் பல அனல்மின்நிலையங்கள் இருப்பதாலும், புதிதாக உருவாக்கப்பட இருப்பதாலும், ரெயில் சேவை அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே, மதுரை&தூத்துக்குடி இடையே இரட்டை வழித்தடத்தை விரைவில் அமைக்கவும், மதுரை-தூத்துக்குடி இடையே மின்மயமாக்கும் வேலையை விரைவில் நடைமுறைபடுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி &திருச்செந்தூர் இடையே ஓடும் பாசஞ்சர் ரெயில் (எண்: 56761) சுமார் 5 மணி நேரமும், வண்டி எண்: 56763 சுமார் 6 மணி நேரமும் திருச்செந்தூரில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பஸ் கட்டண உயர்வால், ரெயிலில் செல்லும் பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள், பணிக்கு செல்வோர் அதிகமாகியிருக்கிறார்கள். அதனால் மேலே குறிப்பிட்ட ரெயில் வண்டிகளை இந்த நேரத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் இடையே கூடுதலாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகளின் வேண்டுகோளாக திருச்செந்தூரிலிருந்து சென்னை வரும் பொழுதும், சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரும்போதும், அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும்போதும், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்போதும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஆணையிட வேண்டும்.விவேக் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயிலை தூத்துக்குடியிலிருந்து இயக்க வேண்டும்.

இந்த ஆண்டு ரெயில் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒரு புதிய ரெயில் இயக்க வேண்டும்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் தூத்துக்குடி-மதுரை இடையே ஒரு புதிய பகல் நேர ரெயிலை அறிமுகப்படுத்த ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை பேசினார்.

நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by Zackariya Moulana (Singapore) [24 March 2012]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 17865

ஓ நம்ம தொகுதி எம்.பி. பெயர் ஜெயதுரையா? தொகுதியில் பார்த்து ரொம்ப நாளாச்சே?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17866

நம் MP , மருத்துவர் ஜெயதுரை அவர்களுக்கு நன்றிகள், தொகுதிக்காக நாடாளுமன்றத்தில் வாயை திறந்ததற்க்கு..!!

முதலில் அந்த முத்து நகர் வண்டியை பராமரிக்க சொல்லுங்க. ஐயா. - சிறிய மழை பொழிந்தால் போதும், பெரும் வாய்க்கால் வண்டி பெட்டிக்குள் ஓடும்.

- ஒரு முறை சென்னை சென்ற உறவினரிடம், என் தங்கைக்கு தம்மடை பார்சல் கொடுத்து அனுப்பினேன், கடைசியில் தங்கையிடம் சேர்ந்தது, சைக்கிள் செயின்னில் சிக்கிய பிளாஸ்டிக் பை மாதிரி ஒரு பொட்டலத்தை கொடுத்தார்கள்.

விசாரித்ததில் முத்து நகர் ட்ரெயினில் எலிகளின் அட்டகாசத்தில் மிஞ்சியதாம்.. சனியன் புடித்த எலிகள், என்னுடைய தம்மடை இருந்த அட்டை பெட்டியையா குறி வைக்கனும். அட்லீஸ்ட், அட்டை பெட்டியில் வேறு பாகத்திலாவது கடித்து இருக்கலாம் அல்லவா.

- ஒரு முறை ஹஜ்ஜுக்கு உறவினர்களை அனுப்ப, தூத்துக்குடி சென்ற போது, ட்ரைன் சீட்டுக்கு அடியில் கை விரல்கள் உராசிவிட்டன. விரல் முழுவதும் இரத்தம், அனால் காயம், வலி ஒன்றும் இல்லை. சீட்டின் அடியில் பார்த்தால், படை படையாய் மூட்டை பூச்சிகள்.. புல்லரித்து விட்டது.

என்ன செய்ய... என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது, "உங்கள் பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்" என்ற டிக்கெட்டில் இருந்த வாசகம் கண்ணில் மின்னலடித்தது. நானும் அது மாதிரி துஆ செய்து, ஹாஜிகளை அனுப்பி வைத்தேன்., கூடவே புகார் பெட்டியில் புகாரையும் தட்டிவிட்டு.

இதை எல்லாம் முதலில் நிவர்த்தி செய்யுங்க MP சார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by Lebbai (Riyadh) [24 March 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17867

சகோதரர் தொகுதியில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று ஆதங்கப்படுகிறார். இதாவது பரவாஇல்லை. நான் இவர் பேரை கேட்டே ரொம்ப நாளாச்சு. திரும்பவும் இவரை நினைவு படுத்தியதற்கு நம் இணைய தளத்துக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [24 March 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17869

தங்களது கோரிக்கைக்கு நன்றி, புதிய ரயில்வே மந்திரி இதை நிறைவேற்றி தருவார் என நன்னம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.

மரியதிக்குரிய நமது தொகுதி எம். பி அவர்களும் கோரிக்கை வைத்தோம் வேலை முடிந்நதது என்றில்லாமல் தொடர்ந்து வற்புறுத்தி கோரிக்கையை நிறைவேற்றிட பாடுபட்டு வெற்றி பெற அன்புடன் வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by MOHAMMEDLEBBAI MS (dxb) [24 March 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17870

பாவம் ஜெயதுரை MP இத்தனை நாள் பேசாமல் இருந்த மாதிரி இப்பவும் இருந்திருந்தால் எங்க பிள்ளைங்க கையாள விமர்சனப்படவேண்டியிருக்குமா????????

நல்லது பேச போய் பொல்லாப்பா போய்டுச்சு என்பது இதுதானோ??????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [24 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17878

நமது தொகுதி பாராளுமண்ட உறுப்பினர் 4 ஆண்ட காலமாக, தேர்ந்து எடுத்த மக்களின் குறைகளை பர்லிமண்டில் பேசாது,இன்னும் 6 மாதத்தில் கலைக்கப்பட இருக்கும் சமயம் பார்த்து வாய் திறந்து பேச முன்வந்து இருப்பது வியப்பின் சரித்திரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தூத்துக்குடி- சென்னை இடைய...
posted by D.S.ISMAIL (HONG KONG) [24 March 2012]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 17883

தூத்துக்குடி - மைசூர் செல்லும் புகைவண்டியின் SPECIALITY என்ன தெரியுமா ? இரவு முழுவதும் மூட்டைகடி. It was the worst experience i ever had in my train journey in India.

Every passanger was complaining it was normal and no improvement made even after complaining so many times. If our M.P. take some action to improve the service it will be useful to everyone


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஆட்டைய போட்டது யாரு...? (?!)  (25/3/2012) [Views - 4234; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved