Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:34:30 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8109
#KOTW8109
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 7, 2012
கடையடைப்பு குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? கூட்டத் தலைவர் வாவு நாஸர் விளக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4349 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கான அறிவிப்பை உள்ளடக்கிய பிரசுரம் நகரில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நேற்று முழுக்க வினியோகிக்கப்பட்டது.

இக்கடையடைப்பிற்கு ஒத்துழைப்பளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் பிரசுரமொன்றும் நேற்றிரவில் நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வினியோகிக்கப்பட்டது.

அதுபோல, இக்கடையடைப்பிற்கும் தமக்கும் தொடர்பெதுவுமில்லை என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடையடைப்பு நடத்துவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கி, அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

தொடர் மின்வெட்டு...
காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 10 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்க இருப்பதால் - மாணவர்களின் படிப்பு நலனைக் கருத்திற்கொண்டும், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதை அறிந்துள்ள நிலையிலும் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்புற ஊர்களில் கடையடைப்பு...
மேற்சொன்ன இதே சிரமங்களைக் காரணமாகக் கொண்டு, காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களைச் சார்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் தத்தம் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மாதம் அந்த ஊர்களில் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் செய்யப்பட்டு வந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது.

ஆனால், காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்திலுள்ள மேற்படி ஊர்களைச் சார்ந்த வியாபாரிகள், “இக்கடையடைப்பில் காயல்பட்டினம் வியாபாரிகளும் கலந்துகொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, காயல்பட்டினம் வியாபாரிகள் சங்கம் என்று வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, பொதுமக்களைப் பற்றியோ, வியாபாரிகளைப் பற்றியோ கவலைப்படாமல், இன்வெர்ட்டர் வாழ்க்கை நடத்தும் காயல்பட்டினம் வியாபாரி சங்க நிர்வாகி மறுத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு:
எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி, தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கி, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்திற்கு - 02.03.2012 வெள்ளிக்கிழமையன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது.

எங்களது அழைப்பை சர்வ கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வியாபாரிகள் சங்கமும் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றோர்:
02.03.2012 வெள்ளி மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர முஸ்லிம் லீக் தலைவராக உள்ள எனது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,

காங்கிரஸ் சார்பில் அதன் நகர தலைவர் சதக்கத்துல்லாஹ், துணைத்தலைவர் காயல் முத்துவாப்பா,

தேமுதிக நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,

பிஜேபி நகர தலைவர் மகேஷ், பண்டாரம்,

மார்க்ஸிய கம்யூனிஸ்ட் சார்பில் திருத்துவராஜ்,

எஸ்.டி.பி.ஐ. சார்பில் எஸ்.எம்.கே.முகைதீன்,

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர துணைச் செயலாளர் மும்பை முகைதீன், அப்துல்லா, கவுன்சிலர் ஜமால்,

முஸ்லிம் லீக் சார்பில் மன்னர் பாதுல் அஸ்ஹப், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், சித்தீக், சுஹைல், ஏ.கே.சுலைமான்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் முத்து ஹாஜி,

சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, ஹஸனாலெப்பை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் பி.என்.எஸ்.சுல்தான்,

காயல் நுகர்வோர் பேரவை சார்பில் ஸ்டெஃபினாக்,

அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மஹ்மூது ரஜ்வி,

ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித்,

டிரைவர்கள் சங்கம் சார்பில் வினோத் குமார், ஜாபர், சாகுல், ஜானகிராமன்,

காக்கும் கரங்கள் நற்பணி மனற்த்தின் சார்பில் ஆசிரியர் அப்துல் ரசாக்,

காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெற்றிவேல்,

இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஃபிழ் ஈஸா ஷஃபீக்,

முஸ்லிம் லீக் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதிமுக கலந்துகொள்ள மறுப்பு:
தொடர் மின்வெட்டைக் கண்டிக்கும் விஷயத்தில் தம் கட்சித் தலைமைக்கு ஆதரவுக் கருத்துள்ளதாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்கும் விஷயத்தில் கட்சித்தலைமை எதிரான கருத்திலுள்ளதால், இக்கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ள இயலாது என மதிமுக கட்சி சார்பில் முன்பே தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, கூட்டம் துவங்க வேண்டிய நேரத்தில், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் காதர் அவர்களை, “கூட்டம் ஆரம்பிக்க உள்ளது... உங்களுக்காக தாமதம் செய்கிறோம்...” என்று நாம் தொலைபேசியில் தெரிவித்தபோது, “நான் தூத்துக்குடியில் இருக்கிறேன்... எனவே செயலாளர் கண்ணனை அனுப்பி உள்ளேன்...” என்று தெரிவித்தார் அவர். ஆனால், கூட்டம் முடியும் வரை கண்ணன் வரவில்லை.

கலந்துகொண்டோர் கருத்துரை:
கூட்டம் துவங்கியதும், அதில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். “மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் - ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்... மற்ற ஊர்களில் குறைந்த நேரமே மின்வெட்டு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நமதூருக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? எனவே, நமதூர் மக்கள் அனைவரும் எதிர்ப்பைக் காட்டி கடையடைப்பு நடத்துவோம்...” என்றும், “கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுவதை எதிர்க்கும் மக்களின் அச்சத்தைப் போக்கி, அது திறக்கப்பட வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்தனர்.

அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் பேசியோர், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடையடைப்பு தீர்மானம்:
மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை - பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி திறக்கக் கோரியும், 06.03.2012 செவ்வாய்க்கிழமையன்று கடையடைப்பு நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வருகை தந்த அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் தீர்மானத்தை எழுந்து நின்று வழிமொழிந்தனர்.

கூட்ட நிறைவுக்குப் பின் தமுமுக ஆதரவு:
கூட்டம் முடிந்த பிறகு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம், தேமுதிக தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் கூட்ட தீர்மானங்களைக் காண்பிக்க, அதனைப் படித்துப் பார்த்த ஜனாப் ஜாஹிர் ஹுஸைன், அதற்கு ஆதரவளிப்பதாக தமுமுக - மமக சார்பில் கையொப்பமிட்டுள்ளார். கடையடைப்பு சம்பந்தமாக கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகளிடம் கடையடைப்பு நடத்த நோட்டீஸ் வினியோகம் செய்து ஒத்துழைப்பு தருவதாக உறுதியும் அளித்தனர்.

கடையடைப்பை மறுத்து பிரசுரம்:
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில பொருளாளர் ஜனாப் எம்.ஜே.செய்யிது இப்றாஹீம், காயல்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜனாப் எம்.ஏ.எம்.அப்துல் காதர் ஆகிய இருவரும், “காயல்பட்டினத்தில் நாளை கடையடைப்பு இல்லை” என்று நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அப்பிரசுரத்தில் பொய்யான தகவலையும் சொல்லி, ஐக்கியப் பேரவையை களங்கப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லாத இவர்கள் வதந்திகளைப் பரப்பி, குழப்பத்தை விளைவிக்கிறார்கள். கடையடைப்பு போராட்ட நோட்டீஸில், மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் கடையடைப்பு செய்வோம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கருத்து என்ன?
ஆனால், கடைகளை அடைக்கக் கூடாது என்று சொல்பவர்கள் தங்களது நோட்டீஸில் வந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. மின்வெட்டை இவர்கள் ஆதரிக்கிறார்களா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறார்களா? பொதுமக்கள் இவர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள்!

ஜனநாயக வழியில், பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் கட்சிகளை - இயக்கங்களை, அதிகாரத்தில் - ஆட்சியில் இருக்கிறோம் என்று தடுக்க நினைப்பவர்களை பொதுமக்கள் ஓரங்கட்டுவார்கள். கடையடைப்பு போராட்டத்தில் ஒத்துழைத்த நல்லவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடைசியாக கிடைத்த தகவல்படி, திமுக நகர செயலாளர் ஜெய்னுத்தீன், அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.இப்றாஹீம் ஆகியோர், கடையைத் திறக்கச் சொல்லி தம்மை நிர்ப்பந்தித்ததாக வியாபாரிகள் புகார் செய்துள்ளனர்.


இவ்வாறு, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by CADER (JAIPUR) [06 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17526

நம்ம ஊரு அரசியல்வாதிகளால் எந்த பயனும் கிடையாது நம் காயல்பட்டணம் மக்களுக்கு. இதில் கூட ஒற்றுமை இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by solukku.me.syed Md.Sahib.@said moosa (qatar) [06 March 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17527

அஸ்ஸலாமு அலைக்கும். நமது பணம் வீண் விரயம் ஆகாமல் மக்களுக்கு பயன் அளிக்க நடைப்பட்ட கடை அடைப்பு நல்ல ஏற்பாடு. முன்னால் ADMK செயலாளர் கலந்து கொள்ளாமல் இருந்ததோடு, மற்றவர்களையும் கலந்துகொள்ளாமல் தடுத்தது கண்டிகதக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by Cnash (Makkah ) [06 March 2012]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17528

எல்லா விளக்கமும் நல்லா தான் இருக்கு! இப்டியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் விளக்கம் கொடுத்துகிட்டே இருங்க விளங்குன மாதிரி தான்!

உங்கள் ஊரு நல அக்கறைக்கு நன்றி!! போரடனும்து உங்க கூட்டடணி தலைவர் 4 நாளைக்கு முன்னாடி மௌனம் கலைத்து கூடங்குளத்தை திறக்கவேண்டும் என்று அறிவித்த பின்பு தான் விழிப்பு வந்ததா? ஊரில் உள்ள மின்சார தட்டுபாட்டை நீக்க சொல்லி கடையடைப்பு நடத்துவதோடு நிறுத்தி கொள்ள வேண்டியது தானே!! அந்த கூடங்குளத்தை சுற்றி உள்ள மக்களின் உணர்வுடன் விளையாட, அவர்களின் கோரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த நீங்கள் யார்? DCW பற்றிய அச்சம் நீக்கி அதை மேலும் விரிவாக்கம் செய்து உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று சொல்லி உங்களுக்கு பாடம் நடத்த நாளை ஒரு பிஜேபி யோ அல்லது வேறு ஒரு கட்சியோ அல்லது ஊரோ கடையடைப்பு நடத்தினால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா? கேட்டால் இன்வேர்டர் வாழ்கை ஜெனரேட்டர் வாழ்கை என்று இப்படி தான் பிதற்றுவீர்களா?

மாதத்திற்கு 5 பேரை கேன்சர் என்ற பெயரில் காவுகொடுத்து கொண்டிர்க்கிறோம், அதற்கு காரணமா இருக்கிற இந்த தொழிற்சாலையை எதிர்த்து போராடவோ, கடையடைப்பு நடத்தவோ ஒரு நாதி இல்லை!! எங்கேயோ உள்ள கூடங்குளத்தை திறக்கனுமாம்!! திறந்த உடன் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் உங்களுக்கு தந்துவிட போறாங்களா? ஏன் இந்த அரசியல் விளையாட்டுக்கு ஊரை புரட்டுகிறீர்கள்? எந்த கட்சியையோ சார்ந்து இருந்து விட்டு போங்கள்? முடிந்தால் உங்கள் கட்சி பேரை வச்சி கூடங்குளத்தை திறக்கணும் என்று அழைப்பு விடுத்து பார்க்க வேண்டியது தானே? எதற்கு ஊர் உள்ள மின்சாரா பிரச்சனையை கூடன்குளத்துடன் ஏன் முடிச்சி போடுகிறீர்கள்? யாரை திருப்தி படுத்த?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by theak mujeeb (ernakulam) [07 March 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 17530

நல்ல முயற்சி தொடர்ந்த போராடினால் வெற்றி கிடைக்கும்

காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களைச் சார்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் தத்தம் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மாதம் அந்த ஊர்களில் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் செய்யப்பட்டு வந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது கேட்பதுகே சந்தோசமாக உள்ளது தகவல் உண்மையாக இருந்தால் சந்தோசம்

அன்புடன் தேக் முஜீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by nizam (india) [07 March 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 17532

kayal people will never forgive you for inviting BJP to this meeting? Are you agreed with BJP principle that muslim should be wiped out from indian subcontinent? Secondly this agitation will send wrong signals to DCW that kayalite no more cared about environment.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [07 March 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17533

இந்த குழப்பங்களுக்காக தான் பல காலமாக பலரும் கூவிக்கொண்டு இருக்கின்றார்கள், அதாவது அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கனும் என்று.

நம் ஐக்கிய பேரவை வலுவுள்ளதாக மாறனும். அவர்கள் ஒரு கருத்தை சொன்னால் அனைத்து மக்களும் மறுசொல் சொல்லாமல் ஆதரிக்கனும். ஐக்கிய பேரவை தலைமைக்கு அனைவர்களும் கட்டுப்படனும்.

அதற்கு, நம் ஐக்கிய பேரவையும் சுயநலம் இல்லாமல், கருத்து மற்றும் கொள்கை பிரச்சனைகளில் சிலரின் மூக்கை உள்ளே நுழைய விடாமல் பார்த்து, அனைத்து மக்களையும் அரவணைத்து, மக்கள் நலமே முதன்மையாக கொண்டு, தனி மனித அதிகாரம் இல்லாமல், வல்ல ரஹ்மானுக்கு பயந்து நடக்கனும்.

அப்புறம் என்ன, யாருடைய தயவையும் நாடத்தேவை இல்லை, அனைவர்களும் நம்மை தேடி வருவார்கள்.

இன்ஷா அல்லாஹ், வல்ல இறைவன் அதற்க்கு துணை நிற்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by Eassa Zakkariya (Jeddah) [07 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17538

கட்சி விசுவாசம்; சமூக நலன்களுக்கு இடையுறு இல்லாமல் இருப்பதே நல்லவை பிறந்திட வழி வகுக்கும் (எல்லா காலத்திற்கும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. எங்க அப்பன் புதருக்குள்ளே இல்லே
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [07 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17539

"""""தொடர் மின்வெட்டு...

காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 10 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்க இருப்பதால் - மாணவர்களின் படிப்பு நலனைக் கருத்திற்கொண்டும், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதை அறிந்துள்ள நிலையிலும் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்புற ஊர்களில் கடையடைப்பு...

மேற்சொன்ன இதே சிரமங்களைக் காரணமாகக் கொண்டு, காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களைச் சார்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் தத்தம் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மாதம் அந்த ஊர்களில் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் செய்யப்பட்டு வந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது."""""

அவர்கள் நடத்தி வெற்றி கண்டார்கள் என்பது உண்மையாக இருப்பின் அதற்க்கு ஒரே காரணம் அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் என்ற அரசியலை புகுத்த வில்லையே? நீங்கள் அதை புகுத்த போய் தானே இந்த சல சலப்பும், இப்போது நீங்கள் விட்ட அறிக்கையும்.

நீங்கள் இப்போது விட்ட இந்த அறிக்கையே "எங்க அப்பன் புதருக்குள்ளே இல்லே" என்று சொல்வது போல அல்லவா உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by OMER ANAS (DOHA QATAR.) [07 March 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17541

சீச்சீ இந்த பழம் புளிக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாயை திறையா........ சீனியை அல்லி போடட்டும்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [08 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17546

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆலைகளை பொறுத்தவரை சுற்று சூழல், சுத்திகரிப்பு, மாசு கட்டுப்பாடு இவைகளை கவணிப்பதில் அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது அதை கவனிக்கும் பொருட்டு பிரச்சனைகள் இல்லை என்றே....... எனலாம்.

கூடங்குளம். நம் மின்சார பற்றாக்குறையை தீர்க்கவில்லை என்றாலும்........ நம் இந்திய நாட்டின், இந்தியரின் மானம்களை காக்க உதவும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வஸ்ஸலாம்.

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by mohmedyounus (Trivandram) [08 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17557

பாபரி மஸ்ஜித் விசயத்தில் " போஸ்ட் கார்டு அனுப்பி போராடும்" உங்கள் கட்சி "கூடங்குளம் விசயத்தில் "கடை அடைப்பு நடத்தி, நீங்கள் தான் உண்மையான தாய்சபை (?) என்று நிருபித்து விட்டீர்கள் ! சபாஷ்!

இந்த தீர்மானம் போடும்போது, அருகில் உள்ள நச்சு ஆலை உங்களுக்கு யாபகம் வந்தததா? நாளை எந்த " இன்முகத்தோடு" நமக்கு அருகில் உள்ள மீனவர்களிடம் இந்த நச்சு ஆலையை மூட போராட்டம் நடத்த ஆதரவு கேட்பீர்கள்?

கூடங்குளம் ஆலையினால் அவர்களுக்கு வருவது "புற்று நோய் என்றால், D.C.W ஆலையினால் நமக்கு வருவது வெறும் "தும்மல்" மட்டும் தனா? இருவர்களின் கோரிக்கையும் ஒன்று தானே! உங்கள் தோழமை பாசத்தை காட்டுவதற்கு இது களம் அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by Salai. Mohamed Mohideen (USA) [08 March 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 17569

தங்களுடைய கட்சி தலைமையின் கூடன்குள அணு ஆதரவு கொடுக்கும் முடிவை தங்கள் தலைவர்களின் அரசியல் சித்தாந்தத்தையே பயன்படுத்தி தொடர் மின்வெட்டை பிரதானமாக காண்பித்து 'மறைமுகமாக' தங்களின் அணு ஆதரவை சில கூட்டணி கட்சிகள் சாதித்துள்ளது போல் தெரிகிறது. அதற்க்கு பலிகடாக்களாக அப்பாவி பேரவை, தங்கள் தலைமையின் கூடன்குள அணுமின் எதிர்ப்பை கூட அறியாமல் ஏற்ப்பாட்டாளர்களின் தந்திர வலையில் சிக்கிய கட்சி(கள்) மற்றும் ஒன்றும் அறியாத ஊர் மக்கள் சார்பாக நோட்டீஸ் மற்றும் அறிக்கைகள்.

பிஜேபி இக்கூட்டதிட்க்கு அழைக்கபட்டதின் மர்மம் என்னவோ? நானறிந்து காயல் வரலாற்றிலேயே முதன்முறையாக பிஜேபியினரும் இதுமாதிரியான ஊர் சம்பந்தபட்ட கூட்டதிற்கு அழைத்து நமதூரில் பிஜேபி யும் இருக்கிறது..இனிமேல் அவர்களையும் அழைக்க வேண்டும் என்ற என்னமோ அல்லது போன மாதம் நமது பேருந்து நிலையத்தில் அணுஉலையை எதிர்ப்பு பரப்புரையை செய்தவர்களை அடித்து விரட்டிய காவிசிந்தனை (?) கொண்ட வியாபாரிகளின் ஆதரவும் வேண்டும் என்பதினாலா அல்லது வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி யுடன் கூட்டணி எண்ணத்தின் முன்னோட்டமோ என்னவோ.

ஒரு வேளை நமது பேரவை மட்டும் 'பலம்' பொருந்தியதாக இருந்திருந்தால் இது மாதிரியான ஊர் சம்பந்த பட்ட முடிவை அரசியல் கட்சிகள் எடுத்திருக்க முடியுமா. இனி வரும் காலங்களில் இதுமாதிரியான ஊர் சம்பந்தபட்ட கடையடைப்பு மற்றும் ஒருமித்த முடிவுகள் சீரமைக்கபட்ட நமது பேரவையின் மூலம் வருவதே சாலச்சிறந்தது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by Salai. Mohamed Mohideen (USA) [08 March 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 17571

கடையடைப்பு ஏற்ப்பாட்டாளர்கள் குறிப்பிட்டது போல் இக்கடையடைப்பு மற்ற பகுதிகளில் 8 மணி நேரம் இருந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது போல் நமதூரிலும் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:கடையடைப்பு குறித்த கலந்தா...
posted by samu shihabdeen (colombo) [09 March 2012]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17590

salam, kayal people will never unite for any kind of good hapening to our community , tis is not the 1st time , it is hapening for past more then 50 years , history will tell the truth. allahu has to unite us . all youngsters r still searching any way to unite the comunity in the future


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved