Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:31:34 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7811
#KOTW7811
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 4, 2012
ஒருவழிப்பாதையை வலியுறுத்தி, நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் ஆதரவுடன் மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் தாயிம்பள்ளி ஜமாஅத் நேரில் கோரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5992 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (41) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தக் கோரி, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை உள்ளடக்கிய தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில், நகரின் பெரும்பாலான ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனு 02.01.2012 திங்கட்கிழமை - மக்கள் குறைதீர் நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கை வாசகங்கள் பின்வருமாறு:-

மரியாதைக்குரிய ஐயா!

காயல்பட்டினம் கே.டி.எம்.தெரு, தாயிம்பள்ளி ஜமாத் மக்கள் மற்றும் அடியில் சீலிட்ட அனைத்து ஜமாத்தார்களின் ஒட்டுமொத்த விண்ணப்பம் யாதெனில்,

பரந்து விரிந்து விட்ட காயல்பட்டண நகரத்தில் மக்கள் தொகையும், மற்றும் வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதால், அதனால் ஏற்படும் பல இன்னல்களை அன்றாடம் அனுபவித்து வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்த இன்னல்களுக்கு ஒருவடிகாலாக ஒருவழிப்பாதையே சிறந்த தீர்வு என்று முடிவு செய்து, எளிய முறையில், எந்த பொருட் செலவும் வராமல், எந்த குறுகிய வளைவுகளும் இல்லாமல், ஊரிலேயே விசாலமான தெருவாக அமைந்திட்ட பாதையாகிய பெரிய நெசவு தெரு, லெப்பைத்தம்பி சாலை மிக, மிக பொறுத்தம் என்று தேர்வு செய்து பலவௌ;ளோட்டமும் வெற்றியாக நடந்தேறியது.

பேரூந்துகள் அவ்வழியே ஒரு மாதத்திற்கு மேல் சென்று கொண்டிருக்கும்பொழுது மாவட்ட காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை அமுல்படுத்த வேண்டி புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பெரிய நெசவுத்தெரு நுழைவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பல லட்சம் ரூபாய் செலவழித்து ரோட்டினை அகலப்படுத்தினார்கள். இப்பணி நடைபெறுவதற்காக தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்திய நேரத்தில்,

பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த சில நபர்கள் பேரூந்துகள் இவ்வழியே செல்லகூடாது என்ற தடையை பெற்று, போக்குவரத்தை நிறுத்தினார்கள். அவர்கள் வாங்கிய தடை நீங்கிய பிறகும், அத்தெருவைச் சேர்ந்த ஒருசில நபர்கள் சில சுயநல ஆதாயத்தின் அடிப்படையில் இதை எதிர்பதையே இலட்சியமாகவும், ஊர் மக்கள் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மாற்றமாகவும் செயல்படுவதோடு, மாற்று வழியை செயல்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர்கள் கூறும் மாற்றுவழி சாத்தியமே அல்ல. தெருவின் அகலத்தால் நாம் தேர்வு செய்துள்ள இடம் 11 மீட்டர் அவர்கள் சொல்லும் இடமோ 7 மீட்டருக்கு குறைவானது மட்டுமல்ல. மிக, மிக குறுகிய பாதை. அதை சீராக்கி சமநிலை படுத்துவதற்கு பல லட்சங்களை செலவு பண்ணுவதோடு பல வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இடத்தாலும், பொருளாலும், காலத்தாலும் எந்த சிரமமும் இல்லாமல், உடனடியாக பயன்பாட்டுக்குறிய வழி, தாயிம்பள்ளிவாசல் காம்பவுண்டு சுவர் வழியாக சென்று பெரிய நெசவு தெரு, லெப்பைத்தம்பி சாலை வழியாக எளிதாக புதிய பேரூந்து நிலையத்தை அடையும் வழி.

ஊர் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டை மனதில் கொண்டு, தாயிம்பள்ளிவாசல் நிர்வாகம், தங்களுக்கு சொந்தமான ரோட்டோரம் உள்ள இடத்தை, தென்வடல், கிழமேல் திசையாக, சுமார் 2000 சதுர அடியை விட்டு கொடுத்து, காம்பவுண்டு சுவரை உள்வாங்கி கட்டி இருக்கிறோம்.

தற்போதுள்ள வாகன நெருக்கடியால் பல இன்னல்களோடு, பலவகையான பாதிப்புகளுக்கும் ஆட்படுகிறோம். அதிலொரு பாதிப்பாக பல பேரூந்துகள் காயல்பட்டணம் வராமல் அடைக்கலாபுரம் வழியாக சென்றுவிடுவதுதான்.

ஊர் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. ஒருவழிப்பாதை உடனே வர வேண்டும். அதுவும் பெரிய நெசவு தெரு வழியாக வருவது மிக, மிக வசதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

காயல்பட்டணம் முன்னால் நகராட்சி தலைவர் அவர்கள் தலைமையில், ஊர் முக்கியமானவர்களடங்கிய குழு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் ஒருவழிப்பாதைக்கு பொறுத்தமான வழி பெரிய நெசவு தெரு தான் என்று ஏகமனதாக ஏற்று 05-04-2007 அன்று தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறார்கள். அத்தீர்மான நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.

ஆகவே, சமூகம் காயல்பட்டண மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஏற்று உடனடியாக ஒருவழிப்பாதைக்குறிய ஏற்பாட்டை அவசர ஆணையாக பிறபிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கடந்த வெள்ளியன்று எங்கள் ஜமாத் மக்களுடன் ஊர் மக்களும் உங்களை நேரில் சந்தித்து விபரங்களை விளக்குவதற்காக எதிர்பார்த்திருந்தோம். அன்று வெள்ளிக்கிழமையாகையால் முக்கிய பிரார்த்தனையாகிய ஜும்மாத் தொழுகைக்கு சென்றதால், அந்த நேரத்தில் நீங்களும் வருகை புhpந்ததால், எங்களால் சந்திக்க முடியவில்லை.

சந்திக்க காலம் கை கொடுக்காவிட்டாலும், இறைவணக்கத்திற்கு செல்லும் நமக்கு, நல்ல வழியே பிறக்கும், அதற்கு நல்லெண்ணம் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவரும் நடுநிலையுடைய வழியை நமக்கு செய்வார் என்ற நம்பிக்கையில் சென்றோம்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒட்டுமொத்த ஊர்மக்கள் சார்பாக இந்த கோரிக்கை மனுவை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். நன்றி

இவ்வாறு அந்த மனுவின் வாசகங்கள் அமைந்துள்ளது.

அக்கோரிக்கை மனுவுடன்,
1. ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்ட தீர்மான நகல்,
2. மக்கள் குறைதீர்க்கும் திட்டம் மனுக்கள் நகல்,
3. நெடுங்சாலை ஊரகப்பணித்துறை 7339ஃ99-25-11-99 கடித நகல்,
4. நெடுங்சாலை ஊரகப்பணித்துறை 560ஃ2000-21-03-2000 கடித நகல்,
5. போக்குவரத்துத்துறை 34461-இ-2ஃ99-22-11-99 கடித நகல்,

6. போக்குவரத்துத்துறை ந.க.எண் 15ஃ87ஃஇஃ2ஃ2000 11-04-05 கடித நகல்,
7. முன்னால் நகராட்சித்தலைவர் வாவு செய்யது அப்துற்றஹ்மான் ஹாஜி அவர்கள் 30-07-2007 அன்று நடத்திய கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் நகல்,
8. நகராட்சி மன்றம் 11-02-2008 அன்று நிறைவேற்றிய தீர்மான நகல்,
ஆகிய ஆவணங்களும் இணைத்தளிக்கப்பட்டது.

இக்கோரிக்கையின் நகல்,
1. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி,
2. கோட்டப் பொறியாளர் அவர்கள், நெடுஞ்சாலை துறை, தூத்துக்குடி,
3. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்கள், தூத்துக்குடி,
4. தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காயல்பட்டணம் நகராட்சி,
5. ஆணையர் அவர்கள், நகராட்சி, காயல்பட்டணம்,

6. கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) அவர்கள், காயல்பட்டணம்,
7. வருவாய்துறை அதிகாரி (ஆர்.டி.ஓ.) அவர்கள், திருச்செந்தூர்
ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் மேற்படி கோரிக்கைக மனுவின் நகல் தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் வழங்கப்பட்ட காட்சி:-



ஒருவழிப்பாதையின் அவசியம் என்று கருதி, தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் கோரிக்கைக்கு, நகர மஹல்லா ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் முழு சம்மதத்தையும், ஆதரவையும் அளித்து வழங்கியுள்ள முத்திரைப் பதிவுகள் மற்றும் கைச்சான்றுகள் பின்வருமாறு:-





















கோரிக்கை மனுக்களை, தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமையில், துணைத்தலைவர் ஹாஜி ஏ.கே.யாஸீன் மவ்லானா, செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத், துணைச் செயலாளர்களான எஸ்.எச்.முஹம்மத் நியாஸ், எம்.எச்.அப்துல் வாஹித், பொருளாளர் ஹாஜி கே.எம்.தவ்லத், நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி ஆதம் சுல்தான், எம்.என்.காஜா ஹைதர் அலீ, எம்.எச்.ஷம்சுத்தீன், எம்.ஏ.அப்துல் ஜப்பார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான எம்.ஏ.ஷேக், எஸ்.எம்.கே.மெய்தீன், எஸ்.ஏ,சாமு, எம்.எம்.சாமுனா லெப்பை, எம்.சாவன்னா, ஏ.கே.செய்யித் இல்யாஸ், அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் இணைந்தளித்தனர்.



தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி,
பிரதான வீதி, காயல்பட்டினம்.

படங்கள்:
M.A.அப்துல் ஜப்பார்.


செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டது. (05.01.2012 - 08:43hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15480

தாமதமாக போனாலும் நல்ல தரமான ஆதாரங்களுடன் போன எங்கள் ஜமாஅத் பெரியவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கலெக்டர் ஊர் வந்த பொழுது தெருவில் நின்று கொடுப்பதை காட்டிலும் தொழுகைக்கு முக்கியத்துவம் அளித்து வாய்மையே வெல்லும் என்று வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்க சென்ற உங்களுக்கும் நம் ஊர் மக்கள் அனைவருக்கும் நன்மையான இந்த ஒரு வழி பாதை வெகு விரைவில் அமுல்படுத்த வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.

இதற்கு சம்மதம் தெரிவித்து தங்கள் முத்திரை பதித்த அணைத்து நல உள்ளங்களையும் மன்றங்களையும் பள்ளிகளையும் மனதார வாழ்த்துகிறேன்.

தாயிம்பள்ளி ஜமாஅத்தார்களே, நாம் மனு கொடுத்து விட்டோம் நமது கடமை முடிந்து விட்டது என்று கிடப்பில் போட்டு விடாமல் அதை தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டும் இந்த தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து போராடுமாறும் கேட்டு கொள்கிறேன்.

KTM தெரு வாசிகள் செய்தது தியாகம் மற்றவர்கள் செய்தது துரோகம் என்று பெருமை அடிக்க கூடிய விஷயம் இல்லை. பெருகும் வாகன போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இருக்கும் வழிகளில் சிறந்த வழியாக நெசவு தெரு, கூல கடை பஜார் வழி தான் என அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வரும். நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Habeeb Mohamed Nizar (JEDDAH -K.S.A.) [04 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15482

அல் ஹம்துலில்லாஹ்... நல்ல ஒரு ஏற்பாடு....இதுதான் சரியான வழி...நல்வாழ்த்துக்கள் தாஹீம் பள்ளி ஜமாஅதினர்களுக்கு... இறைவன் விரைவாக வெற்றியை தருவான்...

பிடிவாதர்த்திர்க்கு சரியான மருந்தை...கண்டுபிடிதுல்லீர்கள்...

வாழ்த்துக்கள் நல்நெஞ்சம் படைதவர்கலளுக்கு மட்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by koman babu (India) [04 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15483

சுகு அவர்களின் லெட்டர் பேடில் காயல்பட்டினம் ஓடைகரை என்று உள்ளது .ஓடைகரை காயல்பட்டினம் என்று தானே வரணும் ...என்ன என்று எனக்கு தேறிய வில்லை ஆகையால் சின்ன சந்தேகம் தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [04 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15486

இன்ஷா அல்லாஹ், கூட்டுமுயர்ச்சிக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Zainul Abdeen (Dubai) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15487

ஒருவழிப்பாதையை வலியுறுத்தி கொடுக்க பட்ட கோரிக்கை படிவத்தில் , நகர ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் முக்கியமா ஐக்கிய பேரவையும் கையெழுத்து போட்டு கொடுத்து இருகிறார்கள். இனியும் தாமதிக்காமல் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Mr . SUGU ,
நண்பர் சொன்னோதுபோல் நீங்க உங்களது லெட்டர் பேடில் காயல்பட்டினத்துக்கு அப்புறமா தூத்துக்குடி வேண்டும் என்றால் போடலாம் , ஓடக்கரையும் காயல்பட்டணம் நகராட்சி கீழ்தான் வருகின்றது என்று நினைவில் கொள்ளுங்கள்.

சரி அத விடுங்கே இந்த செய்திக்கு கருத்து பரிமாற்றம் வேறு திசையில் செல்ல போயிரபோகுது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ரொம்ப தம் ல போடதீங்க
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15488

டியர் அட்மின்,

நான் அனுப்பும் கமெண்ட்ஸ் எல்லாம் ஒரே waiting list ல போடுறீங்களே.

கல்யாண சீசன் என்பதால் நீங்களும் தம் ல போடுறீங்களோ. அப்படி என்ன தவறாக எழுதி விட்டேன் என்று தெரிய வில்லை. எங்கள் ஜமாஅத் தரப்பு நியாயங்களை கூறுவதற்கு எனக்கு உரிமை இல்லையா ?

பதில் கூறவும். இதையும் தம் ல போட்டுராதீங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [04 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15489

சிறு சிறு வார்த்தை மாற்றங்களை பெரிது படுத்த வேண்டாம்.. நமக்கு முக்கியம் நமது குறிக்கோள். ஒரு வழி பாதை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by mohamed abdul kader (dubai) [04 January 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15493

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்ஷா அல்லாஹ் நமது தெருவிற்கு மட்டும் அல்லாது bazzar, hat st, ஆகியவைக்கும் கூடிய விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும் .நமது ஜமாஅத் எடுத்த இந்த முடிவுக்கு எனது வாழ்த்துகளோடு கடல் கடந்து வாழும் கயல்பதியின் ஒருவளிபாதை ஆதரவாளர்களின் நல்வாழ்த்துகலையும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ரொம்பவும் அருமையான ஏற்பாடு.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [04 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15494

அல்ஹம்துலில்லாஹ், ரொம்பவும் அருமையான ஏற்பாடு.

இந்த முயற்சி வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

~~~சந்திக்க காலம் கை கொடுக்காவிட்டாலும், இறைவணக்கத்திற்கு செல்லும் நமக்கு, நல்ல வழியே பிறக்கும்,~~~

இந்த வார்த்தை ரொம்பவும் நன்றாக அமைந்துள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Tariq (Jeddah) [04 January 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15497

நண்பன் அலி சொன்னது போல "KTM தெரு வாசிகள் செய்தது தியாகம் மற்றவர்கள் செய்தது துரோகம் என்று பெருமை அடிக்க கூடிய விஷயம் இல்லை. பெருகும் வாகன போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இருக்கும் வழிகளில் சிறந்த வழியாக நெசவு தெரு, கூல கடை பஜார் வழி தான் என அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்"

எனவே இதை படிக்கும் பொது நலனில் அக்கறை கொண்ட அனைவரும் நடு நிலையோடு சிந்தித்து உங்களுடைய நியாயமான கருத்துகளை தயவு செய்து இங்கே பதிவு செய்தால் இம்முயற்சியில் ஈடு பட்டுள்ள எங்கள் ஜமாத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரின் பணிகள் தொய்வின்றி வெற்றி பெற ஊக்கமாக இருக்கும்.....

இந்த நற்பணியில் கடல் கடந்து வாழும் எங்களாலும் அங்கு வந்து அவர்களுக்கு ஒத்துழைத்து உதவி செய்ய இயலாமல் போனது வருத்தமளிக்கிறது.... அவர்கள் பணி வெற்றி அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...... வல்ல இறைவன் அனைவருக்கும் நன்மை புரிவான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by A.R.Refaye (Abudahbi) [04 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15499

அன்புக்குரிய வெளிநாடுவாழ் காயலர்களே!!!!!!

மீண்டும் நம் ஊரின் ஒற்றுமையை காப்பதற்கும், நம் சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு வித்திடும் முகமாக தற்போது மிக மிக அவசியமான ஒருவழிப்பாதை திட்டம் நம் வளர்ந்து வரும் நகரின் மிக முக்கியமான மைல் கல்லாகும் அது அவசியமற்ற ஆர்வலர்களால் தவறாக விசுவரூபம் எடுத்துள்ள இந்நிலை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, ஊர் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டை மனதில் கொண்டு, தாயிம்பள்ளிவாசல் நிர்வாகம், தங்களுக்கு சொந்தமான பள்ளி வாசல் இடத்தை, சுமார் 2000 சதுர அடியை விட்டு கொடுத்தது மட்டுமில்லாமல், அனைத்து ஜமாத்தார்களின் ஒட்டுமொத்த விண்ணப்பம் மற்றும் ஊரின் வளர்ச்சிக்கும், மக்களின் போக்குவரத்து பயன்பாட்டையும் மனதில் எண்ணி தாயிம்பள்ளி ஜமாத் மக்கள் கொடுத்துள்ள இந்த மனு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல ஒவ்வுறு காயலர்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் அனைவரும் ஏற்று உலகளாவிய காயல் மன்றம்களும், அமைப்புகளும் இந்த ஒட்டுமொத்த ஊரின் குரலுக்கு வளம் சேர்ப்போம்.

நெசவுத்தெரு ஜமாத் மக்கள் கூறும் மாற்றுவழி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சாத்தியமே அல்ல என்பதை கவனத்தில் கொண்டு ஊரின் வளர்ச்சிக்கு பல வழிகளில் தோல் கொடுத்து வருகின்ற அன்பு காயலர்களை கனிவோடு வேண்டிக்கொள்கிறேன், இதற்காக அணைத்து அமைப்புகளும் தத்தம் உறுபினர்களை ஒன்று கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒருவழிப்பாதை மக்களுக்கு வல்ல நாயன் அருளால் பயனுடையதாக அமைய வேண்டிக்கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [04 January 2012]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 15500

நல்ல ஒரு அணுகுமுறை . " ஒரு வழிப்பாதை " இன்ஷா அல்லாஹ் நிச்சயம் , விரைவில் வரும் , நெசவு தெரு வழியாக .

நான் மத்திய காயல் பகுதியை சேர்ந்தவனாக இருந்தாலும் , இந்த பிரச்சினையால் நானும் அவதிப்படுகிறேன் . வெளியூரில் படிக்கும் எனது மகன் ஒவ்வொரு முறையும் திருச்செந்தூர் சென்று பஸ் ஏறவேண்டிய நிலை. ஏனென்று கேட்டதற்கு , போக்குவரத்து நெருக்கடி என்ற பிரச்சினையால் சில சமயங்களில் பேரூந்து மாற்று வழியில் செல்கிறதாம். முன்னெச்சரிக்கையாக அங்கே சென்று ஏறுவதாக சொல்கிறான். சில நேரங்களில் , இரவு நேரங்களில் ஊர் வரும்போது , ஆறுமுகநேரியில் இறக்கி விடுவதாகவும் சொல்கிறான் . ஆகவே நெசவு தெரு மக்களே , சிரமம் உங்களுக்கு மட்டும் இல்லை , எல்லோருக்கும்தான் . உங்கள் மனதை மாற்றி ஊரோடு ஒத்துழையுங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [04 January 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 15501

சலாம். நமதூரில் பஸ் போக்குவரத்து நடைபெறவேண்டும் என்றால் ஏதாவது ஒரு தெருவாசிகள் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அந்த வகையில் K.T.M. தெருவாசிகள் தியாகம் செய்துதான் உள்ளார்கள்.

ஏன் அதுபோன்ற தியாகத்தை (ஒரு வழி பாதைக்காக) நெசவு தெருவாசிகள் செய்ய மறுக்கிறார்கள். இந்த வசதிக்காக தாயிம்பள்ளி வளாகத்தையே ஒரு குறிப்பிட்ட பகுதியை தியாகம் செய்திருக்கும்போது ஊர் நலனுக்காக, எந்த சுயநலமும் பார்க்காமல் தயவுசெய்து அனைவரும் பாடுபட முன்வரவேண்டும்.

இக்கால சூழலில் நமதூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு ஒருவழி பாதையே அழகான தீர்ப்பாகும். ஊர்நலன் கருதி அனைவரும் ஒருவழி பாதைக்காக "வொரு வழிக்கு " வர அல்லாஹ் அருள்புரிவானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [04 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15506

அஸ்ஸலாமு அலைக்கும்.!

அல்ஹம்துலில்லாஹ். ~ஒரு வழி பாதை திட்டம் நிறைவேறும் தருவாயில் உள்ளது. என நினைக்கிறேன். வஷ்ஷுக்ரன் லில்லாஹ் . 25-30 கையெழுத்து வேட்டை நடத்த்கியபின் ஒரே ஒரு காப்பியை நெசவு தெரு ஜமாத்துக்கும் கொடுத்தால். அவர்களின் பெட்டிஷனை வாபஸ் வாங்கச அவர்களின் தவறை உணர்ந்து அவர்கலாகவே வாங்கிவிட்டால் ஹுதைபியா உடன் படிக்கை போல் இருக்குமாமா? என ஒருவர் என்னிடம் கேட்டார். ஆமாமா என சொல்லி நகர்ந்து விட்டேன்.

ஆனால் "வமா தஷாஊன இல்லா அன் யஷா அல்லாஹ் என்று நம்மளிடம் தெரியுமா என்று அல்லாஹ் கேட்டால் அமா தெரியுமே ஆனால் ....ஆனால் என இழுப்போம். அந்த ஆனாலுக்கு நிறைய பொருளுண்டும். ஈமான் மீட்டர் போட்டுத்தான் பார்க்கணும். பாவம் நெசவு தெரு ஜமாஅத். !??? அவர்களுக்காக துஆ செய வோமாக. அல்லாஹ் தஆலா நம் எல்லோரையும் கரை சேர்த்து காப்பாற்றி கிருபை அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [04 January 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15507

Dear Sister Abitha

Now you can go ahead to pass the special resolution by favoring the One way traffic through Nesavu street & forward to the concenred authority which will support more & Don't care who vote for you and do the right thing which history cannot forget you.

" Bye pass road given by Karunanithi to Kayal"

" Let history says one way given by sister Abitha"

I have seen your bravery in the Municipal election & let's see again.

Request to Dayyim Pallai Jamath - Thanks for your Excellent act do the followings still which is very important to meet in the court,

1. Get support letter from LK Higher secondary school.

2. Get support Letter from the people doing business in LK lebbai thamby street.

3. Get a videos & photos during heavy traffic Jam.

4. Get the singnature from the general public including other community.

5. Also get the accident history (Injury and death) on your road due to heavy traffic.

6. The dismissed petition (court) copy of (Nesavu Jamath) through the Right To Know the Information Act..

Court will hear the opinions of the sufferers, let the sufferers (1 & 2) support us by the sake of public interest with supporters (WE ALL) then no way for court.

I am proud to support to KTM street in this issues for the public interest,
My Grand Fathers (Late)
Vattam-Mohammed Ismail,
Vattam - Omer Abdul cader
Vattam - Abdul Hameed
Vattam - Syed Ahmed
Donated some acres of Land for the HIGHWAY ROAD of (Kayalpatnam to Thiruchendoor) near KMT & Lot of other GAINTS from Kayal which history cannot forget.

"Let us Proud to be kayalan with the great unity"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Cnash (KTM Street) (Makkah ) [04 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15508

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்!

எங்கள் அனைவர்களுடைய உள்ள குமுறல்களையும் உணர்வுகளையும் முதலில் அகிலத்தை ஆள்வோனிடம் வைத்தபின் ஆட்சியர் இடத்தில் மனு அளித்து கோரிக்கை வைத்திருக்கும் எங்கள் ஜமாத்தின் கண்ணியமிகு பெரியவர்கள், இதற்காக முயற்சி செய்த நண்பர்கள், சகோதரர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

எங்களின் கோரிக்கை, வெறுமனே நாங்கள் மட்டும் படும் கஷ்டங்கள் என்று நினைக்காமல் இதில் ஒட்டுமொத்த ஊர் மக்களின் வசதியும், நலனும் சேர்ந்தே இருப்பதை கருத்தில் கொண்டு எங்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளித்த அனைத்து ஜமாத்துக்கள், பொதுநல இயக்கங்கள், ஐக்கியபேரவை, IIM, மஹலரா, ஜாவியா, தமுமுக, KWT, நகர வணிகர் சங்கம், மற்றும் நகர அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், நகரமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் எங்கள் KTM தெருவில் ஒருவனாக அனைவர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.

மேலும் இந்த இணைய தளத்திலும் மற்ற சகோதர தளங்களிலும் எங்களின் உணர்வுகளையும் நியாயத்தையும் கருத்தில் கொண்டு எங்களுடன் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்த அனைவர்க்கும் அன்பார்ந்த நன்றிகள்.

இன்ஷா அல்லாஹ் நம் அனைவரும் விரும்பும் நல்ல முடிவை, வழியை இறைவன் அளிப்பான் என்று நம்பிக்கை உடன் உங்களுடன் நாங்களும் காத்திருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [04 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15509

அமா ...? நெசவுதெரு ஒருவழி பாதை நிறை வேறினால் ரூட் பஸ் , வெளியூர் கணரக வாகனம், லகு வாகனங்களுக்கு தானா?அல்லது நம்மூர் லாரி, (குட்டியானை)லோடு ஆட்டோ ,கார் , உள்ளூர் ஆட்டோ ரிக்ஷா இவைகளுக்கு விதி OWT விலக்கா? என்பதை இப்பவே ஆட்சியாளர்களிடம் கிளீயரா மஷூரா பண்ண வேண்டும்.

விஷயம் முத்திய பின் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் ஆகிவ்விடக் கூடாது. சின்ன தஊரத்துக்கும் வாகன செலவு தளி தெறித்து விடும். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by abbas saibudeen (kayalpatnam) [04 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15513

தாயிம்பள்ளி ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுத்த மனுவில் வுள்ள வுன்மைக்கு புறம்பானவைகள்,

மாற்று ஒரு வழிப்பாதையே நிறைவேற்ற அதிக செலவுகள் ஆகும், அவர்களின் கருத்து. பஸ் ஸ்டாண்ட் லிருந்து எல்.கே.லெப்பை தம்பி சாலை யில் ரோடு போட பல லட்சங்கள் செலவாகியவர்கள் அதையும் செயல்படுத்த முடியும், நம் வரிபணத்தில் நம் அரசாங்கம் அதை செயல்படுத்தும். அதில் தாங்கள் கவலைப்பட எந்த அவசியமும் இல்லை.

பேருந்து வுத்திகைகள் பெரிய நெசவு தெரு ,எல்.கே.லெப்பை தம்பி சாலை வழியாக தோராயமாக ஒன்று அல்லது இரண்டு முறை நடந்தேறியது, ஒரு தடவை நடந்த வுதிகையில் ஒரு மாதம் பஸ் ஓடியது என்று குறிப்பிட்டு வுள்ளிர்கள், அதற்கு ஆதாரம் வுல்லதா, வுன்மைக்கு புறம்பானதை தவிர்த்து வுன்மையே வுரைபிர்,

யார் சுயநலத்துடன் ஒரு வழிபாதையே எதிர்கிறார்கள்....... நெசவு ஜமாத்தார்கள் ஒரு வழிபாதையே ஆதரிக்ககுடியவர்களே....... அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

பெரும்பான்மை மக்கள் பாதிப்பில்லாமல் அந்த ஒரு வழிப்பாதையே நிறைவேற்றவே, பல அதிகாரிகள் முன்காலங்களில் முன்னிறுத்திய மாற்று வழியே நிறைவேற்றி, ஒரு வழிபாதையே நடைமுறைபடுத்தவே பாடுபடுகிறோம்,,,,,,

பெரிய நெசவு தெருவை ஒரு வழியாகி மகிழ்ச்சியடைய பார்க்கும் நீங்கள், கே .டி .எம். தெருவிற்கு ஒரு வழிப்பாதை வேண்டுமாம், ஆனால் அருகில் வுள்ள சின்ன நெசவு தெருவிற்கு ஒரு வழிபாதை அவசியம் இல்லையாம் ...............

சுயநலவாதிகள் யாரர்ர்ர்ர் ...............

மக்கள் மன்றம் தீர்ப்பு சொல்லட்டும் ...................

சகோதர தெருவான சின்ன நெசவு தெரு மக்கள் எப்படி போனாலும் சரி ................ கே.டி.ம். தெரு மக்கள் நன்றாக வாழ வேண்ட்ரும்........................ இவர்கள் சகோதர வுணர்வுகளை பற்றி பேசுகிறார்கள்......................

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. பிரசவ வேதனை தான்...பிறக்கும் வரை...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்) [04 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15514

ஒரு வழிப் பாதைக்கு ஒரு வழி பிறக்கும் வரை ஓயமாட்டோம் என உறுதியுடன் நின்று போராடும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!!!

விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போனதில்லை! பெரிய நெசவுத் தெரு வாசிகள் மிகவும் நல்லவர்கள், பழகுவதற்கு மிக இனிமையானவர்கள், இன்றளவும் பல நல்ல நண்பர்கள் அத் தெருவில் எனக்கு இருந்து வருகின்றனர்.

காலம் கனியும், கோலமும் மாறும், நிச்சயமாக சுகப் பிரசவம் ஆகும் என நாம் எதிர் பார்த்துக் கொண்டிருப்போம்...!!! -ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [04 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15515

முறையான ஆவணங்கள், இது வரை இந்த ஒருவழி பாதைக்காக போட்ட தீர்மானங்களின் நகல்கள், ஊரின் ஒட்டுமொத்த ஜமாத்தின் ஆதரவுகளுடன் மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ள தாயிம் பள்ளி ஜமாஅத்தரின் கோரிக்கை இன்ஷா அல்லாஹ் நிறைவ்ரும் .

நம் நகரின் பெரும்பான்மையினரின் விருப்ப மாகிய இலகுவான, அனைவருக்கும் பாதுகாப்பான வழியான நெசவு தெரு வழியாக மாற்று வழி, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வர அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா ?
posted by S.A.Muhammad Ali (Dubai) [04 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15525

திருவாளர் அப்பாஸ் சைபுதீன் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

சுயநலவாதிகள் யார் என்று கேட்கும் உங்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். சின்ன நெசவு தெருவிற்கு நெசவு தெரு ஜமாஅத் மட்டும் சொந்தம் கொண்ட முடியாது. நீங்கள் கூறும் தெருவில் தான் தாயிம்பள்ளி வணிக வளாகம் உள்ளது. நெசவு தெரு ஜமாஅத் அல்லாத எங்கள் ஜமாஅத் மற்றும் பிற ஜமாஅத்தை சேர்ந்தவர்களின் வீடு மற்றும் நிலங்களையும் கணக்கில் கொண்டால் நெசவு தெரு ஜமாஅத்தார்களை விட மற்றவர்களின் பங்கு தான் அதிகம் உள்ளது. அதிலும் அவர்கள் யாரும் சின்ன நெசவு தெருவிற்கு ஒரு வழி போக்குவரத்து வேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் அனைவரிடமும் நாங்கள் கூறும் ஒரு வழி போக்குவரத்திற்கு ஆதரவாக கை எழுத்து வாங்கினால் உங்கள் கோரிக்கையை வாபஸ் வாங்குவீர்களா?
அல்லது அப்பொழுதும் பெட்ருமாஸ் லைட்டேதான் வேணும் என்று அடம் பிடிப்பீர்களா?

வாதத்திற்கு மருந்து உள்ளது பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.

வலைகுடா நாடுகளில் வாழும் நாங்கள் வங்க கடல் ஓரம் உள்ள வளமான நமதூருக்கு வரும் போது வாகன நெரிசல் இல்லாத வழியை எதிர்பார்த்து இருக்கிறோம். ஒரு வழி ஒன்றே வழி அதுவே நல்வழி நம் அனைவருக்கும் நன்மை பயக்கும் வழி தலை வலிக்கு சிறந்த வலி நிவாரணி.

S.A.MUHAMMAD ALI (VELLI)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [04 January 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 15526

WOW! மிகவும் அருமையான நிகழ்வு. வாழ்த்துகள் பல. பதுருல் ஹக் முதல் அப்த்து வரை - மற்றும் ஷேக், நகர் மன்ற தலைவியின் கணவராக மட்டும் அல்லாமல், ஜமாஅத்தில் ஒருவராகவும் காண்கையில் மிக்க மகிழ்ச்சி.

சகோதரர் அப்பாஸ் அவர்களே, (Comment: 15513): இரண்டு நெசவுத் தெருக்களும் ஒரே ஜமாஅத்தை சேர்ந்திருந்தாலும், புவி இயல் அடிப்படையில் மாறுபட்டவை. மேலும் சின்ன நெசவுத் தெரு விசாலமானது - Highway grade - சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குள் தான் அங்கு பெரும்பாலான குடியிருப்புகள் வந்தன. சின்ன நெசவுத் தெருவை இங்கே விவாதத்தில் கொண்டு வருவது அபத்தமானது. நாளை காட்டு மொகுதூம் பள்ளி அருகே குடியிருப்புக்கள் பெருகினால் அவர்களுக்கும் இதே அக்கறையை, அளவுகோலை செலுத்துவீர்களா? அப்படிப் பார்த்தால் உலகில் எங்குமே பேருந்துக்களை செலுத்த முடியாது.

இந்தக் கோரிக்கையை முன் வைத்தது தாயிம் பள்ளி ஜமாஅத் என்ற போதிலும், அதை கிட்ட தட்ட அனைத்து ஜமாஅத்தினரும் ஆதரித்துள்ளனர். ஒரு தவறான, பொய்யான விஷயத்தை அனைத்து ஜமாஅத்தினரும் ஆதரிக்கப் போவதில்லை.

Brother, Syed Ahmed, (Comment: 15507):
>> " Bye pass road given by Karunanithi to Kayal"

Not really. அது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வந்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை பெரியவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவும். நமதூருக்கு பாடுபட்ட பலரை இன்றைய சமுதாயம் அறிந்திருக்கவில்லை எனத் தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Ahamed Mohideen (Chennai) [04 January 2012]
IP: 94.*.*.* Luxembourg | Comment Reference Number: 15530

"ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில் அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள் . வசனம் 25:72 "

"பேரூந்துகள் அவ்வழியே ஒரு மாதத்திற்கு மேல் சென்று கொண்டிருக்கும்பொழுது" மாவட்ட காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவைகள் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை அமுல்படுத்த வேண்டி புதிய பேரூந்து நிலையத்திலிருந்து பெரிய நெசவுத்தெரு நுழைவு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பல லட்சம் ரூபாய் செலவழித்து ரோட்டினை அகலப்படுத்தினார்கள்.

இந்த பொய்யான செய்திக்கு நீங்கள் சாட்சியாக கையெழுத்து போட்டு இருக்கிறீர்கள்??? கையெழுத்து போட்டு இருக்கும் எவரேனும் இதனை உறுதி படுத்த முடியுமா ? செய்தியின் நம்பக தன்மை அறிந்து கையெழுத்து போட்டீர்களா அல்லது அறியாமல் போட்டீர்கள என்பதை வல்ல இறைவன் அறிவான்.

எங்கள் தெரு வழியாக 3 அல்லது 4 நாட்களுக்கு மேலாக பஸ் போனது கிடையாது. அதுவும் பரிசோதனைக்காகவே சென்றது!!!

"தான் விரும்பியதையே உன் சகோதரனுக்கும் நினை"

வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதால், அதனால் ஏற்படும் பல இன்னல்களை அன்றாடம் அனுபவித்து வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்போதுள்ள வாகன நெருக்கடியால் பல இன்னல்களோடு, பலவகையான பாதிப்புகளுக்கும் ஆட்படுகிறோம். KTM தெரு மக்களுக்கும் மற்றும் அல்ல, HAT தெரு, சின்ன நெசவு தெரு மக்களுக்கும் தான் இன்னல்களும் பாதிப்புகளும் என்பதை கருத்தில் கொண்டே எங்கள் தெரு நெசவு ஜமாத்தார் மாற்று வழி பாதையை முன் வைத்தோம்.

அவர்களின் துயர் துடைக்க சகோதரர்களாய் நாங்கள் நினைத்தவை தவறா ? அல்லது தாங்கள் அனுபவித்து வரும் இன்னல்களும் பாதிப்புகளும் அனைவரும் பட வேண்டும் என்று நினைக்கும் சகோதர்களின் நினைப்பு தவறா ?

வாகன போக்குவரத்து நெருக்கடி நெரிசலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் போகும். அதற்கு நிரந்தர முடிவு என்பது பெரிய நெசவு தெரு வழி இல்லை. மாறாக மாற்று வழியே என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

"ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்கு கீழே அழுந்துப் போய் விடுவான். - இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"

காயல்பட்டணம் முன்னால் நகராட்சி தலைவர் அவர்கள் தலைமையில், ஊர் முக்கியமானவர்களடங்கிய குழு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் ஒருவழிப்பாதைக்கு பொறுத்தமான வழி பெரிய நெசவு தெரு தான் என்று ஏகமனதாக ஏற்று 05-04-2007 அன்று தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறார்கள்.

"தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரையும்"

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் இருப்பதை பற்றி யாரும் கண்டு கொள்ளாமலும், யாரை வைத்து தீர்மானம் போட்டார்களோ (ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர்) அவர்களே பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அறிவித்த பரிந்துரையை ஏற்காமல் நகராட்சி தீர்மானம் பற்றி மட்டும் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீங்கள் யோசிக்கவில்லையா ??

Comment Reference Number: 15500
வெளியூரில் படிக்கும் எனது மகன் ஒவ்வொரு முறையும் திருச்செந்தூர் சென்று பஸ் ஏறவேண்டிய நிலை.

சென்னைக்கு வந்து இறங்கும் உங்களது மகனை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்க்கு பதில் வீட்டு வாசலில் இறக்க சொல்ல முடியுமா அல்லது நீங்கள்தான் தூத்துக்குடியிலிருந்து சீனாவிற்கு செல்ல முடியுமா சகோதரே??

Comment Reference Number: 15501
நமதூரில் பஸ் போக்குவரத்து நடைபெறவேண்டும் என்றால் ஏதாவது ஒரு தெருவாசிகள் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அந்த வகையில் K.T.M. தெருவாசிகள் தியாகம் செய்துதான் உள்ளார்கள்.

ஏன் அதுபோன்ற தியாகத்தை (ஒரு வழி பாதைக்காக) நெசவு தெருவாசிகள் செய்ய மறுக்கிறார்கள்.

நாங்களும் சின்ன நெசவு தெருவை தியாகம் தான் செய்து தான் உள்ளோம் என்பதை சற்று நினைத்து பாருங்கள். இன்னும் கூற போனால், KTM தெரு மற்றும் பிற தெருக்களில் இருக்கும் முடுக்கு கூட எங்கள் தெருவில் இல்லை என்பதை சிந்தித்து பாருங்கள்.

Comment Reference Number: 15509 நெசவுதெரு ஒருவழி பாதை நிறை வேறினால் ரூட் பஸ் , வெளியூர் கணரக வாகனம், லகு வாகனங்களுக்கு தானா?அல்லது நம்மூர் லாரி, (குட்டியானை)லோடு ஆட்டோ ,கார் , உள்ளூர் ஆட்டோ ரிக்ஷா இவைகளுக்கு விதி OWT விலக்கா?

நக்கலாக கேட்பதற்கு முன் தற்போது எப்படி பயன் படுத்துகிறார் என்று ஊரில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா சகோதரே??? யார் எப்படி போனால் என்ன, உங்கள் விவாதத்தில் நான் குளிர் காய்கிறேன் என்று கமெண்ட்ஸ் எழுதும் இவருக்கு நான் என்ன கூறுவது என்று தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Great Approach
posted by Riyath (Hong Kong) [05 January 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 15534

The shortest distance between a problem and its solution is the distance between your knees and the floor. The one who kneels to Allah can stand up to anything. ** Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Husain Noorudeen (Kayalpatnam) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15536

அல்ஹம்துலில்லாஹ். இத்தனை நாட்களாக மனதுக்குள் இருந்த ஒரு இறுக்கம் இப்போதுதான் தளர்ந்துள்ளது. இன்ஷா அல்லாஹ், ஊரின் ஒட்டுமொத்த மக்களின் நீண்ட நெடுங்காலத்திய அவாவாகிய நெசவு தெரு வழியான ஒரு வழிப்பாதை நம் கண் முன்னே தெரிய ஆரம்பித்துவிட்டது.

இதற்கு முன்னேற்பாடாக இனி எல் கே லெப்பைத் தம்பி சாலையில் செய்யப்படவேண்டிய வேலைகளை நகர்மன்றம் முற்கூட்டியே ஆராய்ந்து அதற்குரிய ஆவன செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதானே! முக்கியமாக வாகன நிறுத்தங்களை முதலில் சீர் செய்ய ஆரம்பியுங்கள். அங்கு தத்தம் வேலைகளாக வரும் மக்கள் அதற்க்கு முதலில் பழக ஆரம்பிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [05 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15550

Comment Reference Number: 15513

=====சுயநலவாதிகள் யாரர்ர்ர்ர் ...............
மக்கள் மன்றம் தீர்ப்பு சொல்லட்டும் ...................======

முப்பதிற்கும் மேற்பட்ட சங்கங்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாத்துகள் கையொப்பமிட்டு மனு கொடுத்துள்ளார்கள். இதுதான் மக்கள் தீர்ப்பு.

இதற்குமேல் மக்கள் மன்றம் எங்கிருந்து வரும்?

==== பெரும்பான்மை மக்கள் பாதிப்பில்லாமல் அந்த ஒரு வழிப்பாதையே நிறைவேற்றவே, பல அதிகாரிகள் முன்காலங்களில் முன்னிறுத்திய மாற்று வழியே நிறைவேற்றி, ஒரு வழிபாதையே நடைமுறைபடுத்தவே பாடுபடுகிறோம்,,,,,=======

பெரிய நெசவு தெரு ஜமாத்தை தவிர வேறு யாரும் இதற்க்கு ஆதரவு தருகின்றனரா? இல்லையென்றால் தாங்கள் கூறிய மாற்றுவழி பாதையில் உள்ள மக்களிடம் தாங்கள் கலந்து ஆலோசித்தீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [05 January 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15556

Reply to comment : 15526 of Mr. Javed Nazeem

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது மகாத்மா காந்தி மட்டும் இல்லை ஆனால் ரூபாய் நோட்டில் அவர் படம் மட்டுமே உள்ளது..... எல்லோரையும் போடா முடியாது ஜாவித் .

அதுமாதிரிதான் "By Pass" Road யார் தந்தது என்று பரம்பரை ADMK காரனிடம் கேட்டாலும் கருணாநிதி என்று தான் சொல்லுவான் அதுமாதிரிதான் நானும்....

By Pass ரோடு" காக நிலம் கொடுத்தவர்கள் நிச்சயம் உயர்வானவர்கள் அதில் உங்கள் சொந்தங்கள் யாரும் இருந்தாலும் கூட, அதே உயர்த்த எண்ணத்திலும் என் முன்னோர்களும் என்ற உரிமையில் எழுதிஉள்ளேன், எழுதுவேன்...

எனது பர்சனல் மெயிலில் நீ யார் இவர்களுக்கு (KTM STREET) மற்றும் ONE WAY க்காக' குரல் கொடுக்க? என்று மிரட்டல் வந்தது என்னை யார் என்று KAYALPATNAM.COM மூலம் சொல்லிவிட்டேன் Guys.

I look the public interest here in this issue not personal & very dare to write..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [05 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15565

சஹோ saibuddin....நீங்கள் சொல்வது போல் யாரும் இங்கு உண்மைக்கு புறம்பாக இல்லை... இத்தனை ஊரை சார்ந்த இயக்கங்களும் ,ஊர் மக்களும் அப்படி இருந்தால் துணை போக மாட்டார்கள். இன்னும் நான் புடித்த முயலுக்கு மூணு கால் என்று நிக்காதீர்கள்... தூங்குறவனை எழுப்பிடலாம் அதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது.....

நண்பர் அலி சொன்னது போல சின்ன நெசவு தெருவில் இருப்பது பாதி ktm தெரு, மற்ற தெரு காரர்களும்தான்,, இருந்தாலும் சின்ன நெசவு தெரு இரு வழிப்பாதைக்கு ஏற்றது... இப்படியே எல்லாரும் சொன்னால் நாளை ஓடக்கரை,மொகுதும் பள்ளி ,இப்படி எல்லா தெருவுக்கும் ஒரு வழி வேண்டும் என்று சொல்லி கொண்டு போகலாம்....

மேலும் சின்ன நெசவு தெரு ,ஓடக்கரை, மொகுதும் பள்ளி இல் உள்ள வீடுகளெல்லாம் அங்கு வாகன போக்குவரத்து வந்தபின் தெரிந்து கட்ட பட்ட வீடுகள் அதனால்தான் அந்த தெருக்கள் எல்லாம் அந்த தரத்திற்கு ஏற்றால் போல் இருக்கின்றது, ktm, HAT main தெருக்கள் அதற்கு பல ஆண்டுகள் முன்னாள் உள்ள தெருக்கள். வாகன போகுவரதிற்காக விட்டு கொடுக்கப்பட்ட தெருக்கள்,,,அந்த தெரு மக்களின் தியாகத்திற்கு உங்களின் பரிசு ,,இந்த பிடிவாதம் ,விதண்டாவாதம்..குற்ற சாட்டுகள் தனா ??? எப்பொழுது சுயநலம் தவிர்த்து பொதுநலம் விரும்புவீர்கள்...?

காயல் பட்டினத்தின் நன்மைக்காகவும்,, தாயிம்பள்ளி ஜமாஅத் வெளி நாடு வாழ் மக்களாகிய எங்களின் மன குமுறலுக்கு நல்ல மருந்தாகவும், அமைந்த இந்த கோரிக்கை மனுவை அளித்த தாயிம்பள்ளி ஜமாஅத்தார்களுக்கும், உறுதுணை அளித்த அணைத்து நண்பர்களுக்கும்,கையெழுத்திட்ட அணைத்து இயக்கங்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் மற்றும் ஊடகங்கள் வழியாக ஒரு வழி பாதைக்கு ஊக்குவித்த நண்பர்களுக்கும் தாயிம்பள்ளி ஜமாஅத் வெளி நாடு வாழ் மக்களாகிய எங்களின் மனமார்ந்த நன்றி.....

நல்ல ஒரு முடிவினை வல்ல அல்லா நமக்கு விரைவில் தருவானாக ஆமீன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. மாற்றம் காண மாற்றி சிந்திபீர்!
posted by saburudeen (dubai) [05 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15569

நமதூரில் பல காலங்களாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடி நிலையை சமாளிக்க வழி செய்யும் திட்டமான ஒரு வழி பாதை திட்டம் நான் சிறிய வயதில் இருந்தே அனைவராலும் பேசப்பட்டு கேட்டிருக்கிறேன். அது பல காலங்களாக பேச படுவதும் பின்னர் கைவிடபடுவதுமான நிலையில் தான் இருந்தது.

அனால் இன்றோ அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் படு வேகத்துடன் நிறைவேற்ற கூடிய சாத்திய கூறுகள் கை கூடி இருக்கிறது ,இத்தகைய சூழ்நிலையில் சில எதிர்ப்பு குரலும் வந்துள்ளன. இதில் என்னுடன் படித்த சில நண்பர்கள் இடம் பெற்றிருப்பது இந்த தளத்தின் மூலம் அறிய முடிகிறது இது வேதனையான ஓன்று அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்களில் ஓன்று'விபத்துதான்.

போக்குவரத்து சாலைகளில் கவன குறைவின் காரணங்களினால் விபத்துகள் நிகழ்வது இயல்புதான் இதனால் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும் .அவ்வாறு பாதிக்க பட்டவர்களில் என் குடும்பமும் ஓன்று. சின்ன நெசவு தெருவில் ஏற்பட்ட தனி ,தனி விபத்துகளில் என் குடும்பத்தை சார்ந்த இரண்டு பேரை நாங்கள் இழந்து இருக்கிறோம் .உறுதியாக கட்ட பட்ட கோட்டையில் இருந்தாலும் மரணம் நம்மை அடைந்தே தீரும் என்பது இறைவனின் நாட்டம் .

விபத்துகளின் சாத்திய கூறுகளை ஆராய்ந்து அதை அரசுக்கு உணர்த்தி சரி செய்ய வழி செய்வதே நம்மை போன்ற சமுதாய மக்கள் நலன் உள்ள இளைஞர்களின் கடமையே தவிர பல காரணங்களை சொல்லி நல்ல திட்டதிற்கு தடை போடுவது அல்ல. சாலைகளில் போக்குவரத்து புதிதாக தொடங்க படும் போது மக்களுக்கு ஓர் அச்சம் ஏற்படும் போது நாம் அவர்களுக்கு நமதுரின் வளர்ச்சிக்கு ஒரு வழி பாதை திட்டம் அவசியமானது.

இல்லையில் பேருந்துகள் நமதுரை முற்றிலும் புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படும் இதனால் நம்மை போன்றோர் பெரிதும் பாதிக்க படுவர் என விளக்கி அவர்களின் அச்சத்தை நாம்தான் போக்க வேண்டும்.ஆட்சியாளர்களின் முடிவிற்கு கட்டுப்பட்டு அதன் பின்பும் எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்த ஒரு வழி பாதை என்னும் திட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருந்தது என வரலாற்றில் இடம் பெறட்டும், ஒரு வழி பாதை திட்டம் மலரட்டும் போக்குவரத்து நெருக்கடி இல்லா காயலில் நாமும் நம் சந்ததிகளும் வாழ்ந்து மகிழட்டும்... [என் புதிய முயற்சி

[விசிட்;http://samuthayaseithigal.blogspot.com/]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15576

தாயும் பள்ளியில் ஒருவழிப்பாதை பற்றி கூட்டம் நடக்கும் பொழுது நான் சொன்னேன்,
ஜிம்மா நேரத்தில் மாவட்ட ஆட்சி தலைவரக்கான, ஜிம்மா தொழுகையையும் விட்டு விட்டு சிலர் சந்தித்து இருக்கிறார்கள். அவ்வேளையில் நாம் அல்லாஹ்வை தொழ சென்றோம். அந்த அல்லாஹ்வே பார்த்து கொள்வான் என்றேன்.

அடுத்தநாள் மாவட்ட ஆட்சி தலைவரை பார்க்க ஊர் ஜமாஅத் சார்பாக தாயும் பள்ளி ஜமாத்தார்கள் சென்றோம். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சி தலைவரை சந்திக்க எங்களுக்கு தாரளமாக வசதிகள் செய்து தந்தார்கள்.

மாவட்ட ஆட்சி தலைவரும் கூடியவிரைவில் ஒருவழிபதை நீங்கள் நினைக்கும் வழியாகவே வரும், வேறு வழிக்கு சாத்தியமே அல்ல. ஊர் ஜமாத்தின் சார்பாக ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையல்லவா என்று சொன்னார்..

இந்த வார்த்தையை இறைவன் இவர் வாய்மூலமாக சொல்ல வைத்திருக்கிறான் என்ற திருப்தியில் மனஅமைதி அடைகிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15588

Apologies for digressing:

// Brother Syed Ahmed (Comment: 15556): உங்கள் முன்னோர்களின் தியாகத்தை பற்றியோ, அதை நீங்கள் இங்கே பதிந்தது பற்றியோ, நான் எதுவும் கூறவில்லை. எனது பதிவை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

Bye-pass ரோடு வர எங்கள் சொந்தங்கள் யாரும் நிலம் தந்தார்களா என்று தெரியவில்லை. இது பற்றிய மேலதிக விவரங்களை பெரியவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவும் என்று கூறினேன். முடிந்தால் எனக்கு தெரிந்ததை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன், இன்ஷா அல்லாஹ். இங்கே தொடர வேண்டாம். //


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Velliseyed (Dubai) [05 January 2012]
IP: 174.*.*.* United States | Comment Reference Number: 15615

அல்ஹம்துலில்லாஹ், ரொம்பவும் அருமையான ஏற்பாடு. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வரும். நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Kaleel Rahman (Chennai) [06 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15638

23. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த... (Comment Reference Number: 15530 )

சரியான விளக்கத்துடன் கூடிய கேள்விகள். சபாஷ் சகோதரே!!...

"அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாய் இருக்கிறான்"

சகோ. T,M,RAHMATHHULLAH உங்கள் கதைதான் பாவம். எங்களுக்காக துவா செய்தமைக்கு நன்றி. உங்களுக்கும் துவா செய்து கொள்ளுங்கள்....

சகோ. MOHAMED ADAM SULTAN, ஜிம்மா தொழுகையையும் விட்டு விட்டு சிலர் சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்தீர்களா? அப்படியானால் இங்கு செய்தி எப்படி வந்தது ? செய்தியை இங்கு பதிந்துள்ளவர் தொழுகைக்கு சென்றாரா இல்லையா ?

சகோ. S K ஸாலிஹ் அவர்கள் ஒரு செய்தியில் பதித்த கமெண்ட்ஸ் யையும் வாசியுங்கள்.

அப்பாஸ் சைபுதீன், எல்லோரும் சேர்ந்து கூறுவதனால் பொய் உண்மையாகாது. அடுக்கு மொழியில் எளிதினால் அழகாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் செய்தியில் உள்ள சில உண்மையை மறைக்கவே அப்படி எழுதுகிறார்கள் என்று நாம் அறிவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by SEYED ALI (ABUDHABI) [06 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15639

இன்ஷா அல்லாஹ்.இறைவன் எம்மூர் மக்களின் இந்த ஒருமித்த நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றி தருவானாக ஆமீன்.

எதிர்ப்பாளர்களின் இதையத்தை விசாலமாக்கித்தருவானாக.அரசாங்கம் தெரு மற்றும் வீதியில் தனக்கிருக்கும் அதிகாரத்தை உறுதிப்படுத்தி ஊருக்கு எது நல்லதோ எது மெஜாரிட்டி மக்களின் விருப்பமோ அதை நடு நிலையுடன் சிந்தித்து உறுதியுடன் செயல் பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by ALS maama (Kayalpatnam) [06 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15662

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒருவழிப் பாதைக்காக ஊரில் ஒட்டுமொத்த ஜமாஅத்தார்களும் , அனைத்து பள்ளி நிர்வாகிகளும், சங்கங்களும், பல அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்ச்சித் தோழர்களும் இணைந்து கை எழுத்திட்டு ஒரு வழிப்பாதை தேவை என்கிறார்கள். இது தாயிம் பள்ளி ஜமாத்தை சார்ந்த்த கோரிக்கை அல்ல, ஊர் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதையே தாயிம் பள்ளி விரும்புவதை ஊர் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள் அதனாலேயே அவர்கள் முத்திரையை கையொப்பம் இட்டு தந்ததை இந்த இணையதளத்தில் கண்டோம்.

இன்ஷா அல்லாஹ் ஊர் மக்களின் நலன்கருதி பெரிய நேசவுதெரு ஜமாத்தார்கள் ஒரு வழிப்பாதைக்கு ஒரு மனதாய் வழி தந்தால் காலாகாலமும் இந்த வழித்தடம் மூலம் பேருந்துகள் சிரமம் இன்றி வரும், ஊர் மக்களும் பெரிய நேசவுதெரு ஜமாத்தார்களின் சேவை மனதை பாராட்டி புகழ்வார்கள்.

எழுத்தாளர், பொது சேவை,
மஜ்லிசுள் கௌது சங்கம்,
சீதக்காதி நூலக முன்னால் தலைவர்,
ALS மாமா,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. ஒரு வழி பாதை .........
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [09 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15749

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

எனது சில கருத்துக்கள்......................

1. கூலை கடை பஜாரில் தனியே வரும் பெண்கள் கொள்முதல் செய்வது பஸ் போக்குவரத்தால் பாதிப்படையும்.

2. கடைகாரர்கள் தங்களுக்கு தேவையான சரக்குகளை லாரி, வேன் மூலம் இறக்குவது பஸ் போக்குவரத்தால் பாதிப்படையும்.

3. மேற்படி இரண்டாவது காரணத்தால் டிராபிக் போலீஸ் நமது ஊருக்கு உள்ளே வருவதற்கு வழி அமைந்து விடும். டிராபிக் போலீஸ் வந்தால் போலீஸ் ஸ்டேஷனும் வந்து விடும்.

4. நமது சுற்றுபுற ஊர்களில் நமது ஊர் மட்டுமே அதிகமான பண போக்குவரத்து உள்ள ஊர் - வியாபாரத்திலும், வசதியிலும். நிறைய பேர் வெளியிடங்களில் வாழும் ஊர் என்பதால் பெண்களின் நலனை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

5. மெயின் ரோடும், கூலை கடை பஜாரும் பஸ் போக்குவரத்தைக் கொண்டிருந்தால் நாம் நமது சொந்த வாகனங்களை எங்கு நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்வது.

6. பெரிய தெரு முனையில் உள்ள சீதக்காதி திடலில் தெரு முனை கூட்டங்கள் போட்டு நமது ஊரில் உள்ள நல்லது கெட்டது, மார்க்க விளக்கம் போன்றவற்றை பற்றி விவாதிக்க இயலாது.

7. ஒரு வழி பாதை வந்தால் ஊர் விரிவடையும் என்பது மட்டுமில்லாமல், அதன் கூடவே கலாச்சார சீரழிவும் வந்து சேரும். கலாச்சார சீரழிவுடன் ஒரு மாநகரம் போன்ற ஊருக்கு வருவதை விட தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இருந்துவிடுவதே மேல் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஊர் விரிவடைவது விலைவாசி மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் மற்றி விடும். நில வரி கூடும், தண்ணீர் மின்சாரம் போன்றவைகளும் கூடும். பணக்காரர்கள் சுலபமாக கட்டி விடுவார்கள். அவர்களுக்கு சொத்து நிலம் மதிப்பும் கூடும். ஏழை?.

8. மொத்தத்தில் காயல்பட்டிணம் என்ற அழகு, ஒழுக்கம், மார்க்கப் பற்று நிறைந்த ஊர் மாறிவிடும். இது நமக்கு தேவையா?

இதைவிட ரோடு என்பதை, நமது தேவைக்கான ஒரு பாதையாக மட்டுமே பார்ப்பது தான் நமது ஊருக்கு நல்லது. மேலும் இந்த பிரச்சனையை பெரிதாக மாற்றாமல், ஊர் கூடி பேசி தீர்ப்பது தான் நல்லது. உலகம் முழுக்க உள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் நாமே அடித்துக் கொள்வதைப் போல் பேசுவது அழகா?

வஸ்ஸலாம்.
சினேகத்துடன்
சிராஜூதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by seyed mohamed (ksa) [09 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15751

கடைகாரர்கள் தங்களுக்கு தேவையான சரக்குகளை லாரி, வேன் மூலம் இறக்குவது பஸ் போக்குவரத்தால் பாதிப்படையும்.- sirajudeen

மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளின் எண்ணிகையை விட கூலக்கடை பஜாரில் இருக்கும் கடை எண்ணிக்கை குறைவு. மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளுக்கு சரக்குகள் வரவில்லையா? மெயின் ரோடு இருவழி பாதையில் இதுவரை தாங்கி நிற்கும்போது, கூலக்கடை பஜார் ஜுஜுபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by seyed mohamed (ksa) [09 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15753

தம்பி அஹ்மத் முஹிதீன், சென்னைக்கு வந்து இறங்கும் உங்களது மகனை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்க்கு பதில் வீட்டு வாசலில் இறக்க சொல்ல முடியுமா அல்லது நீங்கள்தான் தூத்துக்குடியிலிருந்து சீனாவிற்கு செல்ல முடியுமா சகோதரே?? என்று கேள்வி கேக்கும் நீங்கள், கோயம் பெட்டில் இறங்கினாலும், மண்ணடிக்கு அநேக நபர் பஸ் புடிச்சி தான் போகணும் அது தெரிய்ய்மா?

உங்களுக்கு என்று வரும்போது தானே மாற்று பாதை சொல்லிகிறீர்கள். இதில் என்ன ktm , hat , மக்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் பேச்சு? அப்படி இருந்தால் ஏன் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு என்ற வாதம் ஏன் வருகிறது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Ahamed Mohideen (Chennai) [09 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15761

சகோ. செய்து முஹம்மத் அவர்களே, கருத்தினை புரிந்து கமெண்ட்ஸ் ஐ பதிவு செய்யுங்கள்.

அதே போல தான் பக்கத்தில் இருந்து நம் ஊருக்கு வர போக பேரூந்தை பயன் படுத்தலாம்.

அழுகின்ற பிள்ளை தான் பால் குடிக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா ? நமது ஊரின் மற்றொரு இணையதளமான Kayaltoday வெப்சைட் ல் "ஒருவழிப்பாதை டி.எஸ்.பி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஆய்வு" (NEWS #2156) என்ற செய்தியையும் பார்த்து விட்டு நடுநிலையோடு உங்களது கேள்விகளை கேளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by seyed mohamed (ksa) [09 January 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15763

தம்பி அஹ்மத் மொஹிதீன், இந்த விஷயமா பல வாக்குவாதம் பண்ணி முடிச்சாச்சு. நீங்க கடைசில புதுசா வந்து ஆரம்பம் செய்கிறீரோ?

அது என்ன "அதே போல தான் பக்கத்தில் இருந்து நம் ஊருக்கு வர போக பேரூந்தை பயன் படுத்தலாம்" புது விவாதம். ஓஹோ காயல் ஒரு பெரிய metropolitan சிட்டி? உடனே அரசு நம்ம ஊருக்கு மட்டும் தனியா பஸ் விட்டு பார்க்கும்.

ஊரைவிட்டு வெளிய இறங்கி இன்னொரு பஸ் புடிச்சு ஊருக்கு வரணும்?. அந்த இன்னொரு பஸ் வந்தா மட்டும் உங்க தெருவில் விடுவீர்களா? அல்லது வழமைபோல் மற்ற தெருவா? அழுகின்ற பிள்ளை தான் பால் குடிக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா ? இது உங்களுக்கு தான் பொருத்தம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:ஒருவழிப்பாதையை வலியுறுத்த...
posted by Cnash (Makkah ) [09 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15773

வெரி குட்!! நல்ல ஐடியா!! இனி மேல் ஆறுமுகநேரிக்கு போறதுக்கு நம்ம தெருவில் இருந்து ஒரு பஸ் புடிச்சி அப்புறம் நீங்க சொல்லுற இடம் வந்து இறங்கி இன்னொரு பஸ் புடிச்சி ஆறுமுகநேரி போய் சேர்வோம் சரியா? உருப்படியா எதாவது யோசனை சொன்னா கேட்கலாம்!! செய்தஅஹ்மத் இதுக்குலாம் போட்டு பதில் எழுதிட்டு ......................

ஒன்னுருத்தர் அங்கே ரூம் போட்டு யோசிச்சி இருக்கார்!! ஒரு வழி பாதை வந்தால் போலீஸ் ஸ்டேஷன் வருமாம், மார்க்க நெறி நம்ம ஊரில் கேட்டு போகுமாம், கூலக்கடை பஜார்லே நாம் வாகனத்தை நிறுத்தி சாமான் வாங்க முடியாதாம்.. இதையெல்லாம் விட முக்கியமான சமாச்சாரம் சீதக்காதி திடலில் கூட்டம் போட முடியாதாம்!!

இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாமே!! எலக்சன் வந்தால் கட்சி கொடி கட்ட முடியாது!

தெரு முனையில் உள்ள செருப்பு தைக்கிறவர், அவுத்தி கீரை விற்கிறவர் தொழில் பாதிக்கப்படும்!,

குரங்காட்டி தெருமுனையின் வித்தை காட்டி சம்பாதிக்க இயலாது அவர் தொழில் பாதிக்கப்படும்!

கூலக்கடை பஜாரில் தெருவை அடைச்சிட்டு நின்னு நாம் கறிகஞ்சி குடிப்பது பாதிக்கபடும்!

LK ஸ்கூல் மாணவர்கள் ஐஸ் வாங்கி அங்கே நின்று கொண்டு திங்க முடியாது என்பதால் ஐஸ் வியாபாரிகள் பாதிக்க படுவார்கள்!!

இன்னும் இப்படி எண்ணற்ற பாதிப்புகள் ஏன் சொல்ல மறந்தார் என்று தெரியவில்லை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved