Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:30 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7782
#KOTW7782
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 30, 2011
நகராட்சியின் சார்பாக கடைகள்தோறும் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு! ஆணையர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பிரசுரங்களை வினியோகித்தனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3390 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் (தூக்குப் பைகள், கோப்பைகள் உள்ளிட்ட) பொருட்களை காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 01.01.2012 முதல் தடைசெய்து நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வை, வணிக நிறுவன உரிமையாளர்களிடையே ஏற்படுத்தும் நோக்குடன் இன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் களத்தில் இறங்கினர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம், தலைமை அலுவலர் சக்தி குமார் அடங்கிய குழுவினர் காயல்பட்டினம் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், பலகாரக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும், மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களால் விளையும் கெடுதிகள், அதனைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தகவல்கள், நகராட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு ஆகிய தகவல்கள் அடங்கிய பிரசுரத்தை அந்நிறுவன உரிமையாளர்களிடம் வினியோகித்தனர்.











இந்நிகழ்வுகளின்போது, நகர்மன்ற உறுப்பினர் ஜமால் உடனிருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சியின் சார்பாக கடைக...
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15240

ஊருக்குள் இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நமது அரசுகள், மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதில்லை.

லஞ்சத்தை வளரவிட்டு அதற்கான எல்லா வழிகளையும் திறந்து விட்டுவிட்டு லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மக்களிடம் சொல்வார்கள்.

டாஸ்மார்க் கடைகளை திறந்துவிட்டு கோடி கோடியாக லாபம் பார்த்துவிட்டு குடிக்காதீர்கள் என்பார்கள்.

பலவகையான சிகரெட்களை நாட்டில் உலாவ விட்டு புகை இலையில் லாபம்பார்த்துவிட்டு புகைபிடிக்காதீர்கள் என்பார்கள்.

விபசார விடுதிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று போதனை செய்வார்கள்.

அந்த வரிசையில் இப்போது பிளாஸ்டிக் வந்துள்ளது. சட்டத்தை எல்லோரும் மதிக்க கடமைப்பட்டுள்ளோம். அதே நேரம் அரசுகள் தவறு செய்யும்போது, நமது நகர்மன்றத்தில் ஏக மனதாக ஒரு தீர்மானம்போட்டு, பிளாஸ்டிக் பைகள் செய்வதற்கு தடை விதியுங்கள், லைசென்சே வழங்க வேண்டாம் என்று இரண்டு வரியில் ஒரு தீர்மானம் போட்டு அனுப்பினால் புரட்சி தலைவி என்று நமதூரில் நகரமன்ற தலைவியை பாராட்டலாமே, செய்வீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சியின் சார்பாக கடைக...
posted by Mohmed Younus (Trivandram) [30 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15250

எல்லா வழிகளையும் அடைத்து விட்டு, அடைத்த வழிக்கு மற்று வழியும் சொல்ல வேண்டும். இந்த சந்தர்பத்தில் ஜமாஅதே இஸ்லாமி நிறுவனர் அல்லாமா மௌலானா மௌதூதி எழுதிய வரி யாபகம் வருகின்றது.

" விபசார விடுதிகளையும், சினிமா தியேட்டர்களையும், ஆபாச அருவக்கதக்க அனைத்து வழிகளையும் திறந்து விட்டு, விபச்சாரம் செய்தால் தலையை வெட்டுவேன் என்று" குர் ஆன், ஹதீஸ் சட்டம் பேசினால் இது என்ன நியாயம்? அத்தகைய இடத்தில், இறைவனின் சட்டம் நடைமுறை படுத்தமுடியாத சட்டமாக ஆகிவிடும்.

பின், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட, இஸ்லாமிய சட்டம் நடைமுறை படுத்த இயலாத சட்டம் என்றும், இது ஒரு கையாலாகாத சட்டம் என்று மேற்கித்திய நாடுகள் கூக்குரலிடும். இறைவனின் சட்டம் கிண்டல் செய்வதற்கு உரியதாக ஆகிவிடும். எனவே இறைவனின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டு பின் அதை நடை முறை படுத்த துவங்குங்கள்" என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இதை நடைமுறை படுத்த (நடவடிக்கை எடுக்க) முன்வருவீர்களா ...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [30 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15253

முதலில் ப்ளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை முதலில் முடக்குங்கள் (சீல்) வையுங்கள்..! தயாரிக்கும் தொழிற்சாலை இதை நிறுத்தினால் மட்டுமே இது ஒழியும்... அது வரை இதை ஒழிக்க முடியாது...! மக்களும் இந்த தீமையை உணர்ந்து புறக்களிக்க வேண்டும்.. பிறகு எங்கிருந்து இந்த பைகள் கடை வீதிகளுக்கு விற்பனைக்கு வரும்...?

மிக பெரிய நோயை (புற்று நோய்) ஊருக்குள்ளே உற்பத்தி செய்யும் அருகில் உள்ள தொழிற்சாலையை பற்றி மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re பனையாருக்கும்,பையாருக்கும்!!
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [30 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15258

ஆஹா... பனை ஓலைகள் நாளை முதல் முட்டாய் பெட்டிகளாகவும், மீன் கூடைகளாகவும், கறிக்கடைகளில் மடக்கித் தரும் ஓலைகலாகவும் மீண்டும் உலா வரும்!

கத்தம் ஓதி விட்டு கிடைக்கும் சோற்றுப் பெட்டிகள், மங்கையரால் தூக்கி எறிந்த காலம் மாறி, கழுவி கமுத்தி வைக்கப்படும்!

துணிபைகள் எல்லாம் கந்தையானாலும், கசக்கி வைக்கப் படும்! மொத்தத்தில், வரும் ஜனவரி 2012 பனையாருக்கும், துணிப் பையாருக்கும், கல்யாண சீசனுங்கோ!!! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அதிகாரிகளின் செயல்பாடுகள்
posted by Mauroof, S/o. Mackie Noohuthambi (Dubai) [31 December 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15261

இச்செய்தி குறித்து எனது பதிவிற்கு முன்பு பதியப்பட்டிருக்கும் 1 -ஆம், 2 -ஆம் மற்றும் 4 -ஆம் கருத்துக்கள் ஆட்சியாளர்களின் மனசாட்சியை தொடவேண்டும். நகர்மன்றம் அமுல்படுத்தவிருக்கும் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நகராட்சி ஆணையர் என்றும் சுகாதார ஆய்வாளர், துணை ஆய்வாளர், மேற்பார்வையாளர், அலுவலர் என பல அதிகாரிகள் சென்றிருப்பதை பார்க்கும்போது, இவர்கள் மற்றும் இதர ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இருந்தால் எல்லா நிலைகளிலும் கிராமம் முதல் பெரு நகரம் வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளும் மாசற்ற நிலையை எட்டிவிடும்.

இவ்வதிகாரிகள் நமதூரில் இருக்கும் குடிநீர் தொட்டிகள், அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள், பல்வேறு சந்தைகள் இறைச்சி கடைகள் மற்றும் அறுப்புக்கூடங்கள் அனைத்தையும் குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை எவ்வித முன்னறிவிப்பின்றி சென்று பார்வையிட்டு சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் நமதூரின் போக்குவரத்து நிலையம் அதன் பொது கழிப்பிடம், ஒலி மாசுபாடு கட்டுப்படுத்தப்படுதல் மற்றும் அனைத்து சாலைகளின் சுகாதாரம் (ஆக்கிரமிப்புக்கள், வரைமுறையின்றி நிறுவப்படும் கொடிக்கம்பங்கள், விளம்பர தட்டுக்கள், பெரும்பாலும் உணவகங்கள் ஊற்றிவிடும் கழிவு நீர், கால நேர வரைமுறையின்றி கொட்டப்படும் கட்டுமானப்பொருட்கள், சுய நலத்திற்காக தெருக்களின் கரையோரங்கள் உயர்வு படுத்தப்படுதல், சாலைகளின் சுத்தம்) விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஆட்சியாளர்களே! அதிகாரிகளே!!
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [31 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15311

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நாளை முதல் அமுலுக்கு வரும் இந்த தடை நல்ல உபயோகமான தடையாக இருக்க வேண்டும் - அதற்கு உத்திரவாதம் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.

நகராட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தகவல்கள் அடங்கிய பிரசுரத்தை வணிக நிறுவன உரிமையாளர்களிடம் வினியோகித்திருப்பதை பொதுமக்களும் அறியும் வகையில், அதை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் அதன் மூலம் மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவதோடு ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.
-----------------------------------------
மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கு தடை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது - அதை மனித நேயமுள்ள மக்கள் ஒவ்வொருவரும் வரவேற்பார்கள் / வரவேற்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் அதிகாரிகள் முறையாக சோதனைகள் செய்து கடைபிடிப்பார்களா ? என்பதே மக்களின் ஐயம்!!!.

அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, தீவிரமாக நடவடிக்கை எடுத்தால்தான் மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியும்.

இந்த தடைக்கு நமது மாவட்ட ஆட்சியர் மிகவும் கண்டிப்பானவர் என்பது அடியேனுக்கு நன்கு தெரியும் - மனுஷர் எந்த ஒரு மரத்தையும்கூட அகற்ற அனுமதிக்க மாட்டார் - அந்த மரத்தை அகற்றுவதினால் மிகப்பெரிய நன்மை கிடைத்தாலும் சரி.

அந்த மரத்தை அகற்றி வேறு விதமான நன்மை பல, கிடைப்பதை விட - அந்த ஒரு மரத்தின் மூலம் கிடைக்கும் சிறு நன்மையே சிறந்தது என்பார்.

சுற்றுச்சூழல் மாசுப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டார் - மக்களுக்கு நன்மை செய்வதில் மிகவும் அக்கறை கொண்டவர்.

எனவே நமது அதிகாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
--------------------------------------------
அதிகாரிகள் கவனத்திற்கு :

மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்களையும் , விற்பவர்களையும் முதலில் தடை செய்தால்தான் இந்த திட்டம் நிறை வேறும்.

எப்போது பொருள் கிடைக்கவில்லையோ - அப்போது உபயோகம் தடைபடும் = பொருள் இருந்தால்தானே உபயோகிக்க முடியும்!!!.

ஆகையால் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்களையும் , விற்பனையாளர்களையும் கட்டுப்படுத்துங்கள் = பிளாஸ்டிக் உபயோகம் நின்றுப்போகும்.

ஆட்சியாளர்களே! அதிகாரிகளே!! செய்வீர்களா !!!???.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகராட்சியின் சார்பாக கடைக...
posted by HAMZA (riyadh) [01 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15337

இதை போலே அதிகாரிகள் வீடு வீடாஹா சென்று கள்ள மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்சுபவர்கலையும் கலை எடுக்கலாமே ?

இன்ஷாஅல்லாஹ் விரைவில் எதிபர்போம் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2521; Comments - 2]
தல கால் புரியல... (?!)  (27/12/2011) [Views - 7106; Comments - 27]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved