Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:16:28 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7736
#KOTW7736
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 18, 2011
காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாட்டில் மன நல கருத்தரங்கம்! டிச. 20, 21 தேதிகளில் நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2904 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) ஏற்பாட்டில் இம்மாதம் 20, 21 தேதிகளில் காயல்பட்டினம் துளிர் அரங்கம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகிய இடங்களில் மனநல கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

மகிழ்வோடு வாழ்ந்திட - மாபெரும் கருத்தரங்கம்! காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாடு!!

நலமான வாழ்க்கை என்பது வெறும் உடல் நலத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. உடலும் மனதும் ஒன்றாக சிறந்து நலத்துடன் திக ழும்போது மட்டுமே நிறைவான ஆரோக்ய வாழ்வாக கருதப்படும்.

கடந்த மே.29 அன்று நமதூர் தஃவா சென்டரில் பண்பாட்டு சீரழிவு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றதை நாம் அறிவோம் அதில் நமதூர் மக்களிடையே வளர்ந்து வரும் பண்பாடு வீழ்ச்சிக்கான காரணங்கள், விளைவு, தீர்வுகள் அலசி ஆராயப்பட்டன.

குறிப்பாக மன விலக்கு, தோல்வியில் வந்து முடியும் மன வாழ்வு, நம் குடும்பங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், நமதூர் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஒழுக்க ரீதியான சவால்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நமதூரை பிடித்தாட்டும் தலையாய பிரச்சனைகளாக கண்டெடுக்கப்பட்டது.

இந்த பிரச்னைக்கான சிறந்த பல தீர்வுகள் விவாதிக்கப்பட்டன.அவற்றில் முக்கியமானதாக குடும்ப உளவள மையம் ஒன்றை நமதூரில் ஏற்படுத்துவதை பற்றி அனைவரிடமும் ஒற்றைக் கருத்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொடர் ஆலோசனைக்கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இத்தொடர் ஆலோசனைகளின் மூலம் உளவள மையம் நிறுவும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு அதன் தொடக்கமாக உள வளத்தின் தேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிச,20-21 ஆகிய இரு தினங்களில் கீழ்கண்ட இடங்களில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

கருத்தரங்கத்தை வழிநடத்தி உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிப்பவர்:
சகோதரி A.S குர்ஷித் பேகம் M.A PSYCHOLOGY & MSW அவர்கள்
(மனநல ஆலோசகர், சென்னை)

நிகழ்ச்சி நிரல்:

கருத்தரங்கம் 1 : உள்ளத்தை வெல்வோம்!
நாள் : 20-12-2011 அன்று செவ்வாய்க் கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : அன்னை ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகம், காயல்பட்டினம்

கருத்தரங்கம் 2 : நிம்மதி உங்கள் சாய்ஸ்!
நாள் : 20-12-2011 அன்று செவ்வாய்க் கிழமை
நேரம் : மாலை 4:30 மணி
இடம் : துளிர் அரங்கம், காயல்பட்டினம்

கருத்தரங்கம் 3 : சாதிப்போம் வாருங்கள்!
நாள் : 21-12-2011 அன்று புதன் கிழமை
நேரம் : காலை 10 மணி (கல்லூரி மாணவிகளுக்கு மட்டும்)
இடம் : வாவு வஜிஹா மகளிர் கலைக் கல்லூரி, காயல்பட்டினம்

நமதூர் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நன்நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்குகளில் அனுபவம் வாய்ந்த அறிஞர்களின் கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியான இடவசதிகள், கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் தனிப்பட்ட முறையில் வல்லுனரை சந்தித்து ஆலோசனைகள் பெறுதல் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்கள் குடும்பத்தோடு இக்கருத்தரங்க நிகழ்ச்சிகளுக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஃபிர்தவ்ஸ்,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளை,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by ismail (Dammam) [18 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14788

மாஷா அல்லாஹ்..

தற்போதைக்கு மிகவும் அவசியமான தலைப்புகளில் கருத்தரங்கம்.. பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி.

இம்மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்த முடியாவிட்டாலும் அவ்வப்போதாவது நடத்தினால் நல்லது..

ஜசாகுமுல்லாஹு கைரா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மிக மிக அவசியமான கருத்தரங்கம்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [18 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14791

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பானவர்களே! இந்த அவசர உலகதில் அதிலும் நமது காயலுக்கு மிக மிக முக்கியமான அவசியமான கருத்தரங்கம் என்றால் அது மிகையாகாது. ஏன் காலத்தின் கட்டாயம் கூட. அனைவர்களும் குடம்பத்துடன் கலந்து பயன் பெறுங்கள். ஏற்பாட்டாலருக்கு என் இனியகணிந்த வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [18 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14793

காயல்பட்டினம் நல அறக்கட்டளைக்கு பல கோடி நன்றிகள். இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்தரங்கம், இந்த மன நல கருத்தரங்கம்.

<<<< சில சமயம் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.>>>>>

அதிகமான தூக்க மாத்திரைகள், நரம்பு தளர்வு மாத்திரைகள் அதிகம் விற்பனையாவது நம் ஊரில் தான். மருந்துக்கடையில் வரும் சீட்டுகளில் அதிகம் இருப்பது இது மாதிரியான மருந்துக்கள் தான்.

தூக்க மாத்திரை இல்லாமல் தூங்கும் அம்மணிகள் மிகவும் குறைவு தான். முன்பு நம் ஊரில் பணிபுரிந்த மருத்துவர் காந்திமதி அம்மா கூறுவார்கள் " இந்த மாத்திரை மட்டும் இல்லை என்றால், உங்கள் ஊரில் பாதி அம்மாமார்கள் தூங்கவே முடியாது" என்று.

ஏன் எதற்கு என்று யாருக்கும் புரிவதில்லை. புரிந்தாலும் அப்படி ஒன்றும் பெரியதாக அலட்டிக்கொள்வதில்லை.

எனது நண்பன் வீட்டில் ஒரு பெண்மணி இருக்கின்றார். அவரின் கணவர் வளைகுடாவில் இருந்து இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் ஒருமுறை ஊர் வருவார்.

நார்மலாக இருக்கும் இந்த சகோதரி, அக்கம் பக்கத்தில் யாருடைய கணவராவது, சபராக ஊர் வந்தால், அந்த செய்தி தெரிந்த மறு நிமிடம் இவர்களுக்கு ஹிஸ்டீரியா போன்று வந்து, இரண்டு நாளைக்கு வீட்டில் நிம்மதி கிடையாது. அப்புறம் நார்மல் வாழ்க்கை தொடரும், அடுத்த யாராவது சபராக வரும் வரை.

இது மாதிரி பற்பல சம்பவங்கள் நம் ஊரில் தொடராக நடை பெறுகின்றது.

இந்த ஒரு சம்பவம் தான் வலை தளத்தில் பகிர்ந்து கொள்ள குறைந்த அளவு டீசன்ட் ஆனா சம்பவம்.

மற்றவைகளை எழுதவோ, கூறவோ முடியாத அளவு தராதரம் உள்ளது. இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சரியப்படும் அளவு உள்ளது பல நிகழ்வுகள்.

கொஞ்சம் ஊரின் மக்கள் மீது அக்கறை எடுங்க.. நல்ல விழிப்புணர்வு கொடுங்க..வல்ல ரஹ்மானிடம் எல்லோருக்காகவும் துஆ கேளுங்க.

மனக்கஷ்டத்துடன் நான் எழுதும் கமெண்ட்ஸ் இது..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இப்படியும் இருக்காங்கடோய்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்) [18 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14804

சாளையாரே! கணவன் ஊர் வரவில்லையேன்னு ஏங்கி மனைவிக்கு ஹிஸ்ட்டீரியா வர்றது சகஜம், ஆனால், ஏன்டா? மப்பிள்ளை வருஷா வருஷம் வந்து தொலைக்கிறானேன்னு ஹிஸ்ட்டீரியா வர்ற அம்மிணிகளை என்னன்னு சொல்ல?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கால சூழ்நிலைக்கு அவசியமான நிகழ்ச்சி, KWTக்கு நன்றிகள்..
posted by M Sajith (Dubai) [18 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14816

PEER PRESSURE (தமிழில் தெரியவில்லை) இதுவும் மனநலம் பாதிப்புக்கு மிகவும் முக்கியமான காரணம்..

படிக்கும் மாணவ பருவத்தில் அதுவும் இப்பொதெல்லாம் LKG யில் இருந்தே துவங்கும் 'உன்னை விட அவன் அரை மார்க் கூட எடுத்திருக்கிறான்' நீ ஒரு பிள்ளையா என துவங்கி.. அவனைப்பார் உன்கூடத்தானே படித்தான் எப்படியாகிவிட்டான் நீயும் இருக்கியே.. என தொடர்ந்து

உன்னேட வயசு உள்ளவங்கள் எல்லாம் எப்படி கல்யாணம் பிள்ளைகள்ன்னு ஆகிட்டங்க நீ தான் இப்படியே இருக்கேன்னு வலுக்கட்டாயமா கல்யாணம் செய்து வைத்து, அப்புறம் வீட்டோட கிடக்காத சம்பாதிக்க போ போன்னு ஏதாவது ஒரு விசாவுல கல்ஃபுக்கு ஏத்திவிட்டு..

அப்புறம் ஊருல அவங்க புலம்ப, இங்க இவன் புலம்ப.. இதுல பிள்ளை வர கொஞ்சம் சுனங்கினா, கேக்கவே வேண்டாம்..!!

மாத்திரை விக்காம என்ன செய்யும்.., மொதல்ல இந்த ஒப்பிட்டு பேசுவதையும், நமக்கும் நம்மை சார்ந்தவருக்கும் ஏற்படுத்தும் இந்த அழுத்ததை ஏற்படுத்தவில்லை என்றாலே பாதி பிரச்சினைகள் காணாமல் போகும்..
---------------------------------
நம் உடலில் வேறு எந்த உறுப்பில் சுகவீனம் வந்தாலும் நாம் சொல்லித்தான் மருத்துவருக்கே தெரியவரும், ஆனால் மனதில் ஏதாவது மாற்றம் வந்தால் அது சம்பந்த பட்டவரைத் தவிர மற்றவர் அனைவருக்கும் தெரிந்துவிடும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) சொல்லக்கேட்டது..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [18 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14820

One way is possible, No Medicine & No Doctors .....Then What ?

Create the Recreation clubs (Indoor games & Volley ball, Badminton) for the woman in your own area (Stictly for woman), let she come out from the orthodox home & talk & chat with thier friends & enjoy the life within the level of islam permits....

It will help woman to reduce the mendal stress
Face to Face intracting with other woman
Enjoy the fresh Airs
Reduce the weight
Out from TV serial.....

You can try within the principles of Islam,
KSC
USC
RED STAR
YUF & OTHERS Saudi Arabia is having clubs for ladies & why don't we try.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14854

நல்லதொரு ஏற்பாடு. சில யோசனைகளை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு இந்த இனைய தளத்தின் மூலம் சொல்வதற்கு ஆசைப்படுகிறேன். கருந்தரங்கில் தங்கள் வேதனைகளையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்துபவர்களின் குரல்கள் ஒலிவாங்கிக்கு முன்னால் ஒலிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களின் எதிரணியினர் அவற்றை காதில் வாங்கிக்கொண்டு பிரச்னையை இன்னும் தீவிரமாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. நல்லது செய்யப்போய் கெட்ட பெயரை வாங்கிக்கொள்ள கூடாது.

எனவே இன்றே சந்தேகம் கேட்க விரும்புவர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு தங்கள் சந்தேகங்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

ஒரு பொதுவான இடத்தில அல்லது கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில ஒரு தபால் பெட்டி மாதிரி வைத்து அவர்கள் கடிதங்களை அங்கு போட ஏற்பாடு செய்யலாம்.

சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்பவர்கள் தெருவை மட்டும் சொல்லி விளக்கங்களை சொல்லலாம். சம்பந்தப்பட்டவர்கள் விஷயத்தை விளங்கி கொள்வார்கள். மற்றப்படி அதை பெரிதாக நினைக்காதவர்கள் தாராளமாய் கருத்தரங்கில் கேட்க அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கலாம்.

ஒரு நபர் கேள்வி கேட்கும் நேரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் நிறைய பேர் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்.

சிலர் ஆரம்பிக்கும்போது, வாழ்த்துரைகள், புகழாரங்கள் சூட்டி பேசி பிரச்சினை என்னவென்று சொல்வதற்கே பத்து நிமிடங்கள் ஆகி விடுகின்றன. இதெல்லாம் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.

காலம் மிகவும் பெறுமதியானது, நடக்கவிருக்கும் நிகழ்சிகளும் அதை நடத்துபவர்களும் அதில் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் தரவிருப்பவர்களும் மிக மிக பெறுமதியானவர்கள். எனவே இந்த சிறியவனின் ஆலோசனைகளை உதாசீனம் செய்துவிடாதீர்கள்.

எல்லா நிகழ்சிகளும் திட்டமிட்டபடி நடந்து நமதூர் மக்கள் நற்பயன்பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by Mohamed Adam Sultan (kayal patnam) [19 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 14857

சென்ற தாவா சென்டர் மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக மக்கள் மத்தியில் வரவேற்பும் எதிற்பார்பும் ஏற்பட்டதால் இது போன்ற பயனுள்ள கருத்தரங்கம் மறுபடியும் நடத்த வேண்டும் என்று KWT முடிவெடுத்தது.

அந்த கருத்தரங்கில் மக்கி நூஹு தம்பி காக்கா போன்றவர்கள் மாநாடு பந்தலிலேயே இது போன்ற கருத்தரங்கு நமதூரில் அடிக்கடி தேவை என்ற வேண்டுகோளிக்கிணங்கவும், இந்த ஏற்பாட்டை மிகவும் திட்டமிட்ட முன் ஏற்பாடோடு செய்ய காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

நீங்களும் எங்கள் நல்ல நோக்கம் வெற்றியடைய வல்லோனை வேண்டிகொள்வீர்களாக!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by M.N.Sulaiman (Bangalore) [20 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14908

காயல் நல அறக்கட்டளைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்...!!! நம் நகரின் இன்றைய கால கட்டத்திற்கு இன்றியமையாத ஓர் "கருத்தரங்கம்".

பல்வேறு விதமான சீரழிவுகளில் சிக்கி தவிக்கும் நம் நகருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "கருத்தரங்கம்".

வீட்டில் உள்ள அணைத்து பெண்களும் தவறாது கலந்து பயன்பெற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by Mohmed Younus (trivandram) [20 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14909

உலகில் உள்ள பாதி மக்களை ஏதோ ஒருவகையில் மன நோய் பாதித்து உள்ளது. உடம்பில் ஏற்படும் 90% சதவீதமான நோய்கள் மனதில் இருந்து தான் தோன்றுகின்றது.

இன்றைய போட்டி நிறைந்த சூழ்நிலையில் நடுத்தர வயதினர் இந்த நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மன நல சம்பந்தமான மாத்திரைகளை அதிகமான அளவில் உடகொள்ளுவதில் 35% நடுத்தர வயதினர் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது.

அடுத்தவனை விட அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஏற்படும் மன சஞ்சலத்தினால் கூட இதய பாதிப்பு ஏற்படுவதாக பிரபல இதய நிபுணர் சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரையில் படித்து இருக்கின்றேன். இப்போதெல்லாம், எந்த நோய் என்று மருத்தவரிடம் சென்றாலும், அவர்களில் முதலில் சோதிப்பது மனதைத்தான். ஏன் என்றால் மனதை தவிர எல்லாவற்றயுக்கும் அவரிடம் மருத்துவரிடம் மருந்து உண்டு.

இந்த நிலையில், இத்தகைய மருத்துவ முகாம் நடத்துவது மிகவும் சாலச்சிறந்தது. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வித வகையிலும் உதவி புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மனதின் போராட்டங்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [20 December 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14911

நமது சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான தலைப்பில் நடக்கும் இந்த கருத்தரங்கம் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன். எனது தாழ்மையான வேண்டுகோள் எல்லாம், மன வியாதிக்கான மருத்துவத்தை மக்களுக்கு அறியப்படுத்தும் முன்பு, அதற்க்கான காரண காரணிகளை மக்கள் மத்தியிலிருந்து களைவதர்க்குண்டான உத்திகளையும் தயவு செய்து சொல்லிக்கொடுக்க வேண்டும.

வீட்டிற்கு வீடு வாசப்படி என்றும் பிரச்சனைகள் இல்லாத குடும்பங்களே இல்லை என்றும் பொதுவாக சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மன உளைச்சலோ அல்லது மன வியாதியால் பாதிக்காப்படாத பெண்கள் இல்லாத வீடுகளே இல்லை எண்னும் அளவிற்கு நமதூரில் பெருமாலான பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள் (இதில் சில ஆண்களும் அடங்குவார்கள்).

இளம் வயது முதல் (தூக்க) மாத்திரை பழக்கத்திற்கு அடிமை என்பது பெருகிக்கொண்டே இருக்கிறது. நமதூருக்கு வருகைதரும் மருத்துவர்களும் இதனை நல்லவிதம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு நோயாளிக்கும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது கன்சல்டிங் பண்ணுவார். இதில் கூட சுகம் காணும் நம் பெண்கள் திரும்ப திரும்ப மருத்துவரிடம் சென்றாலாவது மனதிற்கு ஆறுதலாய் இருக்கிறது என்று மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள். அப்படி என்றால் அவர்களுக்கு எங்கோ சொல்லேனாத்துயரம் மனதில் அடிமண்டிக்கிடக்கிறது, அதை வீட்டில் கூட ஏன் என்று கேட்க நாதியில்லாததால் தானே, மனப்புழுக்கத்தில் வேற்று மனிதர்களிடம் தங்களின் குறைகளை எடுத்து சொல்கிறார்கள் - என்று தானே அர்த்தம். ஏன் இந்த கொடுமை? நமதூரில் அப்படி என்னதான் நடக்கிறது?

எங்கோ நமது வாழ்வியலில் நாம் குறைகளை வைத்துக்கொண்டு, எதற்கோ பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

எனது சிற்றறிவிற்கு தெரிந்த சில தவறுகள்;

மிகவும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம்
கட்டாய கல்யாணங்கள் / ஒவ்வாத கல்யாணங்கள்
குடும்பங்களுக்கிடையில் ஏற்ற தாழ்வுகள்
ஆண்களின் நீடித்த பயணங்கள்
பெண்களுக்கு பொழுதுபோக்கின்மை
பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் அக்கறையின்மை (பொடுபோக்கு)
இஸ்லாமிய கலாச்சாரத்தின் தீவிரமின்மை

இன்னும் இது போன்ற வெளியில் சொல்ல முடியாத பல நமது சமூகத்திலிருந்து களையப்பட்டாலொழிய, இத்தகைய குறைபாடுகள் கூடிக்கொண்டே தான் போகும்.

என்ன சொல்றீக நீங்க ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாள் முழுக்க நல்ல மழை!  (19/12/2011) [Views - 2957; Comments - 0]
இலக்கிய மன்ற விழா  (19/12/2011) [Views - 2580; Comments - 0]
இரவில் சிறு சாரல்!  (19/12/2011) [Views - 2562; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved