Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:12:34 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7635
#KOTW7635
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 30, 2011
உண்டியல் திறப்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ரூபாய் சேகரிப்பு! சிங்கை கா.ந.மன்ற செயற்குழு தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3581 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக நிதி சேகரிக்கப்படும் உண்டியல் மூலம், இந்திய ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 19.11.2011 அன்று 19.45 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.





செயலர் அறிக்கை:
பின்னர், கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகளை மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய, உழைக்கவியலாத, ஆதரவற்ற மக்களுக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) துல்-ஹஜ் மாதத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

வருங்காலங்களில் இத்திட்டம் சகோதரர் மஹ்மூத் லெப்பை மூலம் நிறைவேற்றப்படுமெனவும், பயனாளிகள் பற்றிய ரகசியம் எப்போதும் போல் பாதுகாக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அண்மையில் அவர் தாயகம் சென்றிருந்தபோது, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டதையும், அக்கூட்ட நிகழ்வுகளையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட வின்னப்பங்களுக்கான உதவித்தொகை இந்த மாதம் (நவம்பர் 2011) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூபாய் 1,13,000 ஆகும். இது இந்த மாதத்தில் நமது உள்ளூர் பிரதிநிதி சகோதரர் கே.எம்.டி.சுலைமான் மூலம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, செயற்குழு அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. 2011ஆம் ஆண்டிற்கான சந்தா தொகை மற்றும் துல்-ஹஜ் மாதம் செயல்படுத்தபட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம் (Groceries for Needy Kayalites - GNK) ஆகியவற்றுக்கு நிதியுதவி அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

உண்டியல் திறப்பு:
நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிடும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. இம்முறை இந்திய ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் தொகை வசூலாகியுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



உள்ளூர் பிரதிநிதி தொலைபேசி அழைப்பு:
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அவர் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) மற்றும் வீடு புனர்நிர்மாணம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கினார். மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

புதிய உறுப்பினருக்கு வரவேற்பு:
சிங்கப்பூர் காயல் நலமன்றத்தில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள சகோதரர் முஹம்மது சிராஜுத்தீன் அவர்களை செயற்குழு வரவேற்றது.



இவருக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்திட உதவி செய்த உறுப்பினர்கள் முஹ்ஸின் தம்பி மற்றும் ஜவகர் இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நாடி வரும் சகோதரர்களுக்கு தகுந்த வேலை கிடைத்திட அணைத்து உறுப்பினர்களுக்கும் உதவி செய்ய கேட்டுகொள்ளபட்டது.

ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியம் நன்கொடையளித்தல்:
ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியம் நன்கொடையளித்தல் திட்டம்பற்றி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த திட்டம் மன்றத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக சோதனை முறையில் செயல்படுத்தப்படும். பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்பட்டது. வருகிற (Jan 2012) பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றிய மேலதிக விபரம் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் இந்த திட்டம் வருடாந்திர பொதுக்குழு நடைபெறும்பொழுது (March 2012) செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு மன்ற நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹசன் அவர்கள் விளக்கமளித்தார்.

விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், உறுப்பினர் எம்.ஆர்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் 21.45 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இதய உண்டியல் திறக்கப்பட்டது.......!
posted by zubair (riyadh) [30 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13939

அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கை கா.ந. மன்றத்தின் இதய உண்டியல் திறக்கப்பட்டதில் தெறிய வந்தது...... உறுப்பினர்களின் இதயத்தின் நல்லெண்ணம் பிரதிபலித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

யா அல்லாஹ் எங்களை..... எங்களின் ஊர் மக்களுக்கு உதவ எல்லாவகையிலும் பரக்கத்தை தந்தருள்வாயாக,எங்களிடையே... சைத்தானை அப்புறப்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்டிடுவாயாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உண்டியல் திறப்பில் ஒரு லட...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [30 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13940

அஸ்ஸலாமு அலைக்கும்.

உண்டியல் திறப்பில் ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ரூபாய் சேகரிப்பு! சிங்கை வாழ் காயல் நகர மக்களுடைய காயல் நகர மக்களின் நல்வாழ்விற்க்கான "நன்கொடை" தொகையாக இந்த சிறப்பான தொகையை அளித்த சகோதர்களுக்கு வல்லோன் அல்லாஹ் இம்மையில், மறுமையில் அதிகமான இறைஅருள் மிக்க தொகையை வழங்குவானாக!

உண்மையில் நமதூர் மக்களின் நல்வாழ்விற்கான நாம் சேகரித்த இந்த உண்டியல் தொகை ,ஒரு வகையில் நாளை மறுமைக்காக நமக்காக (சதகதுன் ஜாரியா ) இம்மையிலேயே நாம் சேகரித்த நன்மை "உண்டியலாகும்"

எல்லாம் வல்ல அல்லாஹ் இம்முறை 1 ,20 000/=இந்திய தொகையை வருங்காலத்தில் சிங்கை தொகையாக மாற அனைவருக்கும் பேரருள் புரிவானாக ~ ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உண்டியல் திறப்பில் ஒரு லட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [30 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13942

அஸ்ஸலாமு அலைக்கும்

சிங்கப்பூர் வாழ் நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும்.என் மனமார நல் வாழ்த்துகள்.என் அன்பு சகோதரர்களாகிய உங்கள் யாவர்களின் இந்த உண்டியல் மூலம் ஏற் படகூடிய நல்ல காரியங்களுக்கு .( முயற்சில் ) வல்ல நாயன் நற் கிருபை செய்வானாக ஆமீன். மேலும் உங்களின் எல்லா நற் காரியங்களுக்கு இறைவன் துணை நிற்பானாக ஆமீன்.

** உங்களின் இந்த உண்டியல் திட்டம் அருமையானது.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உண்டியல் திறப்பில் ஒரு லட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13944

HATS OFF SINGAPORE KAYALITES. HE ALONE LIVES WHO LIVE FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE.

WHAT A WONDERFUL SYSTEM OF UNDIYAL! HITHERTO THE UNDIYALS ARE KEPT IN DHARGAS FOR USING THE MONEY FOR THE PURPOSE OF URS AND KANDOORIS BUT THIS UNDIYAL MONEY GOES TO THE DOWNTRODDEN AND WEAKER SECTIONS OF THE KAYALPATNAM CITIZENS. KEEP IT UP. LET THIS MONEY BECOME SINGAPORE DOLLARS IN THE YEARS TO COME. ONE DAY SALARY SYSTEM IS A WONDERFUL BRAINCHILD OF THOSE WHO PROPOSED IT. DEFINITELY IT WILL WORK OUT. IN TAMIL THERE IS A VERSE,

பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள், மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். பணம் இருப்பவர்களெல்லாம் நிம்மதியாக இருப்பதில்லை, நிம்மதியாய் இருப்பவர்களெல்லாம் பணக்காரர்களே.

உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் துணை நிற்பான். சிங்கைக்கு வேலை தேடி வருவோருக்கு வேலை வாங்கி கொடுப்பதைவிட, நல்ல வேலைகளுக்கு தகுதியானவர்களுக்கு உங்கள் முகவர்களிடம் விசா வாங்கி அனுப்பலாம். அதற்காக சிறிது SERVICE CHARGE வாங்கி அதை மன்றத்துக்கு சேர்த்து மீண்டும் காயல் மக்களுக்கு உதவ பயன்படுத்தலாம். இது சாத்தியமா எனபது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம்.

"THE WORD "IMPOSSIBLE" SHOULD BE TAKEN OUT FROM THE DICTIONARY "என்ற நெபோலியனின் வீர வசனங்கள் வெறும் வீராப்பு அல்ல. தெளிவான திட்டம், கடும் உழைப்பு, விடா முயற்சி, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.

வாழ்த்துக்கள்,
மக்கி நூஹுதம்பி
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உண்டியல் திறப்பில் ஒரு லட...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [30 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13956

அஸ்ஸலாமு அலைக்கும்!

எதிலும் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டும் . சிங்கப்பூர் காயல்நல மன்றத்தினர்கள் உண்டியல் கலாச்சாரத்திலும் புகுந்து செய்யும் சேவையே சேவை. . பாராட்டுக்கள் இவர்களின் முன்மாதிரியை யாரெல்லாம் பின்பற்று கிறார் களோ அவர்களசெய்யும் அமல்களிலும் இவர்களூக்கு இயற்கை யாகவே த்வாபுகள் அள்ளிபோகும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிங்கைன்னா சும்மாவா சிங்கம்ல்லெ!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [02 December 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14010

ம்ம்ம்...வசதியான நலமன்றம்ங்கோய்! வசூல்லெயும் தாராளமா இருக்காங்க! வாய்க்கு ருசியிலெயும் தாராளமாத்தான் இருக்காங்கடோய்! அட! அவங்க ஒன்றுகூடலைத்தான் சொன்னேன்.அசத்திப்புட்டாங்கல்லெ...!!! இப்படித்தான் இருக்கணும்! சிங்கைன்னா சும்மாவா சிங்கம்ல்லெ!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved