Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:52:01 PM
வியாழன் | 16 மே 2024 | துல்ஹஜ் 1750, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:04
மறைவு18:29மறைவு01:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7205
#KOTW7205
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 10, 2011
நகர்மன்ற தேர்தல் குறித்த ஐக்கிய பேரவை தீர்மானங்கள்: MEGA அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3027 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.

செப்டம்பர் 8 அன்று நடந்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து - மெகா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!

அன்புநிறை காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

நல்லதோர் நகர் மன்றம் உருவாக வேண்டும் என்ற உறுதியோடு,கடந்த ஆகஸ்ட் மாதம் MEGA என்னும் தேர்தல் வழிகாட்டும் குழுவை அமைத்து, அறிவித்து களப்பணியும் ஆற்றி வருகிறோம். இதே குறிக்கோளுடன் வேறுசில அமைப்புகளும் தேர்தலுக்கு பல வாரங்கள் முன்பே பணியாற்றத் துவங்கி இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்கும்,பாராட்டுக்கும் உரிய செய்தியாகும்.

கடந்த எட்டாம் தேதி அன்று, முஸ்லிம் ஐக்கியப் பேரவை கூட்டம், ஜலாலியாவில் கூட்டப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பதினோரு தீர்மானங்களையும் அறிந்தோம். அதன் பல்வேறு தீர்மானங்களை MEGA மனப்பூர்வமாக வரவேற்கிறது.

குறிப்பாக, தீர்மானம் ஐந்து, ஆறு, ஏழு ஆகியன உறுப்பினர்களை அந்தந்த ஜமாஅத்தே தேர்ந்தெடுக்க வலியுறுத்தும் MEGAவின் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்துகிறது.

பத்தாவது தீர்மானமாக வடிக்கப்பட்டிருக்கின்ற, அரசியல்வாதிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கு வழிவகை செய்யும் தீர்மானம் மிகவும் பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில் நான்காவது தீர்மானம், இருபத்து எட்டாயிரம் வாக்காளர்களின் மனநிலை மற்றும் ஜனநாயக உரிமையை, நூறு பேர்கொண்ட ஒரு குழு முடிவு செய்யும் என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயமாகும்.

அது மாத்திரமல்ல. ஜமாஅத்களில் சிறிதென்றும், பெரிதென்றும் நமதூரில் இருக்கிறது. சில ஜமாஅத்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளும் இருக்கிறது. அப்படியிருக்க ஒரு ஜமாஅத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என்பது பல்வேறு கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

அதுபோல, சமூக அமைப்புகளுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படுவதாக சொல்வது, பலவித சர்ச்சைகளை உண்டாக்கும். நமதூரின் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் ஏதோ ஒரு பள்ளியை அல்லது ஜமாஅத்தை சார்ந்தே இருக்கிறது. அப்படியிருக்க, தனிப்பட்ட முறையில் சங்கங்களுக்கு பிரதிநித்துவம் என்பது புதுப்புது அதிகார மையங்களை உண்டாக்கிவிடக்கூடும். இது ஜமாஅத்களுக்கு பலம் சேர்ப்பதைத் தடுத்து மாறாக பலவீனம் அடையச் செய்துவிடும்.

இறுதியாக, நகரின் அனைத்து ஜமாஅத்களின் கூட்டமைப்பாக விளங்கும் ஐக்கியப்பேரவை, ஜமாஅத்களுக்கும், சங்கங்களுக்கும் பிரதிநித்துவம் வழங்கிவிட்டு, 25 தனிநபர்களை தானே தேர்ந்தெடுத்து பிரதிநித்துவம் வழங்குவதாகக் கூறுவது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுப்பதால், நாங்கள் அதனை அறவே ஏற்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவிக்கிறோம்.

நகர மக்களின் உரிமையை தனிநபர் ஆதிக்கம் தடுத்துவிடாமல் இருக்க, நாங்கள் பெரிதும் மதிக்கின்ற பேரவையின் மரியாதைக்குரிய பெரியவர்கள், இருபத்து ஐந்து தனி நபர்களுக்கு பிரதிநித்துவம் வழங்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Solution
posted by M. Sajith (DUBAI) [10 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7864

மாற்று கருத்து உள்ள எவருக்கும் வய்ப்பளிக்காமல் ஒரு(வர்)மனதாக வாசிக்கப்பட்ட ஆலோசனையை தீர்மானம் என்பதே அபத்தம்.

இதை MEGA நிரகரித்து இருக்க வேன்டும்.

Solution:

மீன்டும் ஒரு முறை கூடி, எல்லா ஜமாத்திற்க்கும் ஆலோசனை வழங்க வாய்ப்பளித்து பின் முடிவுக்கு வருவதுதான் காணாமல் போன "ஐக்கியத்தை" கண்டுபிடிக்க சரியான வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by SADAK V D THAMBY (Guangzhou(China)) [10 September 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 7867

MEGA வின் அறிக்கை மிகவும் கண்ணியமாக இருக்கிறது.

ஐக்கியபேரவையுடன் இணைந்துசெல்வது நன்மைபயக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by syedahmed (GZ, China) [10 September 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 7872

The implementation of the MEGA concluded its points has been very much proved as hold together with ikkiya peravai's suggesstion which shows the "UNITY IS STRENGTH". Like ways, we should adopt all the matter of facts by the way of good decision making. Surely this motivates our co-operation as in strong level to fetch good deeds in each and every things of activities we have to face as easily.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by Mohiadeen (Phoenix) [11 September 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 7906

Ikkya peravai is killing democratic rights of all Kayal people by choosing 25 deciding committee panel members themselves. It is the people's right to choose their candidates not by single influenced person behind Ikkya peravai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ...
posted by Mohamed Salihu (New Delhi) [11 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7910

ஐக்கிய பேரவை எடுக்கும் நல்ல முடிவுகளை தட்டிக்கொடுத்து பாராட்டுபவர்களும், அது எடுக்கும் தவறான முடிவுகளை சுற்றி காட்டக்கூடியவர்க்களும்தான் ஐக்கிய பேரவைக்குத் தேவை. இது போன்றவர்களால்தான் ஐக்கிய பேரவை தனது பொது சேவையின் தரத்தை உயர்த்த முடியும்.

பொதுநல அமைப்புகள் தவறான முடிவுகளை சில சமயம் எடுப்பது இயற்க்கை. அனால் தவறுகள் சுற்றிக்காடப்ப்படும்பொழுது, அந்த தவறை உணர்ந்து தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் அது உயர்ந்த நிலையை அடையும், மக்களின் அபிமானத்தை பெரும். சேவையின் தரத்தையும் உயர்த்த முடியும்.

பேரவைக்கு ஜால்ரா போடக்கூடியவர்களால் பேரவைக்கு எந்த நன்மையையும் கிடையாது. பேரவை தனது தவறான நடவடிக்கையை தவறு என்று உணரவும் முடியாது, தனது போக்கை மாற்றவும் முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முன் உதாரணம்!
posted by m.s.m.shaik abdul kader (dubai) [11 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7929

முக்கியமான விஷயங்களில், நமது கருத்தை எப்படி வெளிப் படுத்த வேண்டும் என்பதற்கு மெகாவின் அறிக்கை சரியான முன் உதாரணமாகும்.பேரவையின் பெரியவர்கள் கொண்டு வந்த சில தீர்மானங்கள், மோசமான பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற என்னைப் போன்றவர்களின் உணர்வை இந்த அறிக்கை மிக அழகாக எடுத்ததுக்காட்டி இருக்கிறது.

இடித்துரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரி லனினும் கெடும்

என்ற குறளுக்கு மெகா மரியாதை செய்திருக்கின்றது.அதை காப்பாற்றிக் கொள்வதுதான் பேரவையின் கண்ணியத்திற்கு உகந்ததாக இருக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved