Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:03 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6060
#KOTW6060
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 1, 2011
மார்ச் 13இல் காயல்பட்டினம் ஐக்கிய சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னையில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதன் செயலர் ஏ.கே.பீர் முஹம்மத் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூட்டம் நடந்த அன்று தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க இயலாமல் போனதாகவும், எனவே தாமதமாகவே தீர்மானத்தை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் - 1
எதிர்காலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் உள்ளது. அதற்காக காயல் மஹ்பூபு, S.I.காதர் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு, அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் மூலம் உள்ளாட்சி துறை அமைச்சர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி அதற்கான திட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ரூ.32 கோடியில் திட்டம் நடைபெற்று வருகிறது. அதற்காக ஒரு மின்நிலையம் அமைக்க நமதூர் எல்லையில் 1 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால், நிதி, சுமார் 15 லட்சம் தேவை. அதற்காக முயற்சி மேற்கொண்டு உவைஸ் ஹாஜியார், ஹாஜி பிரபு சுல்தான், நமதூர் நகராட்சி தலைவர் ஹாஜி வாவு சேகு அப்துல் ரஹ்மான், ஃபாசி ஹாஜியார் மற்றும் நமதூர் முன்னணி தலைவர்கள் ஆகியோர் இதன் வகைக்காக ரூ.5 லட்சம் வரை நிதி வசூல் செய்து மேலும் குறைவாக உள்ள ரூ.10 லட்சம் வரை நிதி திரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீர்மானம் - 2
நமதூர் எல்லையில் பன்நெடுங்காலம் இருந்து வருகின்ற கோசுமறை அருகில் மீனவர்கள் என்ற பெயரில் சுனாமி நிதியில் இருந்து 169 குடியிருப்புகளை சட்ட விரோதமாக நிலம் கையகப்படுத்தி மத்திய அரசு நிதி ரூ.6 கோடியில் இந்த குடியிருப்புகளை கட்டியது மட்டுமல்லாமல் நமதூர் பஞ்சாயத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றபடாமல் இரவு பகலாக கட்டிடம் கட்டும் வேலை நடந்து வந்த சமயம் இதை அறிந்த நமதூர் இளைஞர் சங்கங்களும், காயல்பட்டணம் ஐக்கிய பேரவையும் முயற்சி மேற்கொண்டு இந்த முயற்சியை உடனடியாய் நிறுத்தும் முகமாக கடந்த 4.1.2011 அன்று கடை அடைப்பு செய்ய மிகப்பெரிய கூட்டம் நமதூரில் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் திருச்செந்தூர் முனிசிபல் கோர்ட், தூத்துக்குடி கோர்ட், மதுரை உயர்நீதிமன்ற கிளை கோர்ட் ஆகியவற்றில் இந்த முயற்சியை நிறுத்திட சட்டப்படி முயற்சிக்கு மேற்கொண்ட நிலையில், தூத்துக்குடி கோர்ட்டில் ஒரு தடை கிடைத்துள்ளது. இது நமக்கு மனநிறைவை தருகிறது. இது தற்காலிகமானதுதான். தொடர்ந்து காயல்பட்டணம் ஐக்கிய பேரவை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த 169 குடிஇருப்புகளில், 7 பேர் மட்டும்தான் முஸ்லீம்கள். மற்ற அனைவர்களும் நமதூரை சாராதா முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்பதை பார்க்கும்போது, மிகவும் திட்டமிட்ட கொடுஞ்செயல் என்பது நமதூர் மக்களுக்கு அதிர்ச்சியையும், அனியாய செயலாகவும் நினைக்க தான் தோன்றுகிறது.

எனவே, எதிர்வரும் காலத்தில், இது எப்படி தீர்ப்பு வரும் என்பதை நினைவு கொள்ள முடியாத நிலையில், உள்ள படியால் தொடர்ந்து கோசுமறை பள்ளி அருகில் நாம் முயற்சிக்கு மேற்கொண்டு, 200 குடியிருப்புகள் கட்டி நமதூர் வீடற்ற ஏழை குமர்களுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கிட முயற்சி மேற்கொண்டும், நமதூரில் உள்ள தனவான்களும், நமதூரை சார்ந்த சென்னை, பிற ஊர்களில் வாழ்ந்து வரும் தனவான்களிடமும் நிதிவசூல் செய்து சுமார் 5 ஏக்கர் நிலம் வாங்கிட ரூ.50 லட்சம் வரை நிதி தேவைப்படுவதால், நாம் அனைவர்களும் இந்த நேர்மையான முயற்சிக்கு தாராளமாய் நிதி உதவி தந்திடவும், கோசுமறை பள்ளி அருகில் நிலம் நியாயவிலைக்கு இந்த முயற்சிக்கு தந்து உதவிடவும் இந்த முயற்சிக்கு வெற்றி பெற்று அல்லாஹ் கிருபை செய்திடுவானாகவும் ஆமீன்.

இம்முயற்சிக்கு காயல்பட்டினம் மற்றும் சென்னை வாழ் நமதூரை சார்ந்தவர்கள் கொண்ட 7 நபர் குழு ஒன்று அமைத்திடவும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 3
நமதூரில் வசதி உடையவர்கள் நமதூரை சுற்றி வரும் ஆபத்தை உணர்ந்து, நிலம் உள்ளவர்கள் அயலூர்களைச் சார்ந்தவர்கள் என்ன விலை கிடைத்தாலும் நிலத்தை விற்க கூடாது என்பதாக இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 4
நமதூரில் உள்ள இ.பி. ஆபிஸ் மிகவும் தூரத்தில் உள்ளதால் பெண்கள் தூரம் சென்று பணம் செலுத்தவும், கம்பளைண்ட் செய்யவும் பல கஷ்டங்களுக்கு உள்ளிட நேறுகிறபடியால், அந்த ஆபீசையும் மின்வாரிய பொறியாளர் மற்றும் ஊழியர்களுக்கும் இல்லம் கட்டி கொடுக்க வாரியம் முன்வந்து நிலம் இல்லாததால் அந்த ஆபிஸை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நிலம் உள்ளதால், வரும் மே மாதம் 14ம் தேதிக்கு பின்அமையும் புதிய அரசை அணுகி இம்முயற்சிக்கு தீர்வு காண ஒரு குழு அமைத்திடவும், இதை உடனடியாய் செய்து முடித்திடவும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5
நமதூர் எல்லையில் இயங்கிவரும் DCW தொழிற்சாலை யில் கடந்த காலங்களில் நம்மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாமலும், நமதூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் குறைந்தது 20% வேலைவாய்ப்பு இல்லாமலும், நிலவரி DCW ஆய்வுக்குழுவே ரூ.7 லட்சம் மாத வாடகை சிபாரிசு செய்தும், 1¼ லட்சம் தான் வாடகை இத்தனை ஆண்டுகளும் செலுத்தி, மீதியை வேறுவகை செலவாக DCW கணக்கு காட்டுகிறது. DCW நிர்வாகம் பணத்தை மோசடி செய்து வருவது சமீபத்தில்தான் நாம் அறிகிறோம். எனவே குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்த புதிய வரியை கேட்டு, அதற்காக வித்தியாச தொகையை கேட்டு பெற நாம் ஒரு குழு அமைத்திடும் கட்டாய நிலையில் முயற்சி மேற்கொள்ள இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அத்துடன் புதிதாக ஒரு தொழிற்சாலை DCW துவங்க இருப்பதை உடனடியாய் நிறுத்திடவும் இதன் விளைவாக நமதூர் மக்களுக்கு ஏற்படும் கேன்சர் நோயை கட்டுபாட்டில் வைத்திட இந்த புதிய தொழிற்சாலை வர கோர்ட்டில் தடைகோறி வழக்கு தொடர்ந்திடவும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செய்தி திருத்தப்பட்டது


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. முக்கியமான தீர்மானங்கள்
posted by mauroof (Dubai) [01 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4177

மிக முக்கியமான தீர்மானங்கள். தீர்மானங்கள் வெற்றி பெற்று அதன் பலனை நமது சமுதாயம் அடையவேண்டுமெனில் பொருளாதாரம் மற்றும் பல்வேறு விதமான உதவிகளும் இந்த சங்கத்திற்கு செய்திட வேண்டியது நம் கடமை. இன்ஷா அல்லாஹ் நமது பங்களிப்புகளை இனிதே செய்திடுவோம்.

DCW-வை பொறுத்தமட்டில் அதை முழுவதுமாக மூடவேண்டும் என்ற முயற்சியில் நாமிருக்கும்போது அங்கு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தீர்மானத்தில் கன்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை. சரி எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கத்தானே செய்யும். நில வரியை முறையாக வசூல் செய்யவேண்டிய நகராட்சியின் பொருப்புதாரியை தனியாக கவனிக்கிறார்களோ என்னவோ, இதற்கு ஆப்பு வைக்கும் விதம் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு சின்ன DOUBT, ஸ்டாலின் முன்னாள் உள்துறை அமைச்சர் எனில், இந்நாள் அமைச்சர் யார்?

ஹூம் அப்புறம் என்ன கருத்துப்புயல்களை கானோம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நல்ல மனம் வாழ்க!
posted by கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர் (துபாய்) [01 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4178

அனிதா மற்றும் ஸ்டாலின் அவர்களை, முன்னாள் என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டதில் ஐக்கிய சங்கத்தின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.

சுனாமிக்குடியிருப்பு விஷயத்தில், மக்கள் மத்தியில் இழந்து விட்ட நம்பிக்கையை ஐக்கியப்பேரவை மீட்டெடுக்கவேண்டும். அவர்கள் எடுத்துவந்த, வரும் நடவடிக்கைகளை நகரமக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

நமதூர் மக்கள், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு, வெளியூர்வாசிகளுக்கு, நிலத்தை விற்கவேண்டாம் என்ற வேண்டுகோள், இ.பி.அலுவலகம் மற்றும் DCW குறித்த தீர்மானங்கள் பாராட்டுக்குரியவை.

நீண்டகாலமாக சமூக நலப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் AK.பீர் முஹம்மத் காக்கா அவர்கள் இறையருளால் நீடூழி வாழ வாழ்த்தும் அதே நேரத்தில், ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போவதால், ஒரு அமைப்பின் தீர்மானமே வாசிக்க இயலாமல் போய்விட்டது என்னும் கருத்து ஏற்புடையது அல்ல என்பதனை பதிவு செய்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. WELCOME BUT NEED LAW FULL FIGHT TO GET BACK OUR RIGHTS
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [01 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4179

ASSALAMUALAIKKUM.VARAH. WELCOME AGENDA AT THE SAME TIME NEED MORE SPRIT TO FIGHT BACK LAW FULLY TO GET VICTORY ON EVERY ISSUE.aLLAH WILL HELP US.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சென்னை ஐக்கிய சங்கத்திற்கு வேண்டுகோள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [01 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4181

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காயல்பட்டணம் ஐக்கிய சங்கம் சென்னை, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அத்தனையும் நல்லவையும், இப்போதைக்கு அவசியமானவையும் கூட. தீர்மானங்களை தீர்மானித்ததுடன் நின்றிடாமல் செயலாக்கம் பெற்று நாம் பயனடைந்திட வல்ல அல்லாஹ்! உதவிடுவான்.
--------------------------------
தீர்மானம் - 1 & 2 இந்த இரண்டையும் பொறுப்பேற்றிருப்பவர்கள் கடினமாக முயற்சித்து இன்ஷா அல்லாஹ்! நிச்சயமாக வெற்றியாக்கித் தருவார்கள் என்று நம்புகிறோம்.

தீர்மானம் - 3 இந்த தீர்மானத்திற்கு நேர்மையானவர்களும், தமது வாரிசுகள் நல்லமுறையில் வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களும், சமுதாயமும் , கலாச்சாரமும் சீர்குலையக் கூடாது என்று நினைப்பவர்களும் கட்டுப்படுவார்கள் என்று நம்புகிறோம்.

தீர்மானம் - 4 இதுவும் நல்ல யோசனைதான், அதன்படி முயற்சி செய்தோமானால் வெற்றிக்கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!.

தீர்மானம் - 5 இந்த தீர்மானம் நமது உரிமையை கேட்டுப் பெறுவது என்பதால் சிறந்தது என்றாலும் இதிலே மிகவும் நுட்பமாக நமது கவனத்தை செலுத்தி செயலாற்றிட வேண்டும்.
---------------------------------
DCW தொழிற்சாலை நிலவரியிலே மோசடி செய்திருப்பது இத்தனை ஆண்டுகளாக நமது நகராட்சிக்கு எப்படித் தெரியாமல் போனதோ?

DCW ஆய்வுக்குழுவே ரூ.7 லட்சம் மாத வாடகை சிபாரிசு செய்தும் 1¼ லட்சம்தான் வாடகை இத்தனை ஆண்டுகளும் செலுத்தி மீதியை வேறுவகை செலவாக கணக்கு காட்டுகிறது என்றால் இது மிகப்பெரும் மோசடியே.

குறைந்தது 10 ஆண்டுகளுக்குரிய வித்தியாச தொகையை பெறுவதென்றாலும் ஏறத்தாழ 7 கோடி ரூபாய் கிடைக்கும்.

நமதூர் மக்களுக்கு 20 % வேலை வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவு வேலை வாய்ப்புக் கிடைக்கலாம்.

புதிதாக தொழிற்சாலை தொடங்க தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடங்கிடவும் செய்யலாம், இதெல்லாம் நல்ல திட்டங்களே! இதற்காக ஒரு குழு அமைத்திட பொதுக்குழு தீர்மானித்திருப்பது நல்ல செயலே.
-------------------------------------
சென்னை ஐக்கிய சங்கத்திற்கு வேண்டுகோள் :-

DCW தொழிற்சாலை சம்பந்தமான செயல்களுக்கு ஒரு 'குழு'வை அமைத்திடும்போது மிகவும் நுணுக்கமாக ஆலோசித்து அதற்குத் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள். எவரும், யாருக்கும் பணிந்து போய்விடக்கூடாது.

இப்படி எழுதுவதால் யாரும் பணத்தையோ, பதவியையோ வாங்கி கொண்டு பணிந்திடுவார்கள் என்ற அர்த்தமட்டுமில்லை மிரட்டலுக்கும் பயந்திடக்கூடாது என்பதே.

ஊரில் ஏற்படுகிற கொடிய நோய்களுக்கெல்லாம் DCW தொழிற்சாலை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது என்றாலும்கூட மிக முக்கிய காரணமாக இருப்பது DCW தொழிற்சாலைதான் என்பதை பல ஆய்வுகளையும் DCWயின் நடவடிக்கைகளையும் வைத்து சொல்லலாம்.

மேலும் DCW சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு 'குழு'வை நியமிக்கும்போது, தற்போது DCW செயல்பாட்டை கண்காணித்து செய்திகளை சேகரித்துக் கொண்டும், சாம்பிள்களை எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி பரிசோதித்துக் கொண்டும், மேலும் புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நமது அமைப்புக்களையும் அந்த 'குழு'வில் இடம்பெற செய்ய வேண்டியது.

இப்படி ஒரு கூட்டமைப்பாக செய்யும்போது பல விசயங்களும் - கலந்துரையாடல் மூலமும், ஆவணங்கள் மூலமும் ஆராயப்பட்டு நல்லதொரு செயல்வடிவம் பெறும்.

அதல்லாமல், அந்த அமைப்புகள் எல்லாம் செய்வது நோய்கள், சுகாதாரம் சம்பந்தமான அணுகுமுறை, நாங்கள் செய்யப்போவதோ அரசியல் ரீதியான அணுகுமுறை அதனால் அவர்களையெல்லாம் இதில் சம்பந்தப்படுத்த தேவை இல்லை என்று தயவு செய்து தப்புக் கணக்கு போட வேண்டாம்.

நாம் எல்லோருமே ஊருக்கும், ஊர் மக்களுக்கும் நன்மையை செய்யவே நாடுகிறோம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் இது விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட்டு வெற்றிக் கொள்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒற்றுமையாக, ஒரு கொடியின் கீழ் இருந்து செயல்பட்டு செயலாற்றிட கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நிலம்வாங்கி வறியவர்களுக்கு வீடு கட்டுவது
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [01 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4186

நமதூரில் தனவந்தர்கள் சிலருக்கு அபரிதமாக நிலங்கள் கற்புடையார் வட்டம், மற்றும் கடயகுடி பகுதியில் பறந்து விரிந்து கிடக்கின்றது. அப்படி பட்டவர்களிடம் ஐக்கிய பேரவை, மற்றும் சென்னை காயல் நல மன்றமும் இணைந்து ஒரு கமிட்டி அமைத்து நேரில் பேசி அல்லாஹுக்காக நமதூர் கலாச்சரம் அழிந்திடாமல் காப்பாற்ற உங்களின் நிலங்களை தாருங்கள் என்று பேசி நிலத்தை பெற்று முஸ்லிம் வறியவர்கள் குறிப்பாக நமதூர் மக்களுக்கு அரசு மூலம் வீடு கட்ட முயற்சி செய்யுங்கள்.

அல்லாஹ் உங்கள் முயற்சி யாவும் வெற்றி பெற அருள் புரிவனாக. யார் யாருக்கு நிலங்கள் அதிகமாக உள்ளது என்பது ஐக்கிய பேரவை நிருவாகி அனைவர்களுக்கும் தெரியும். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. DCW
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [01 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4187

அன்பு சகோதரர் மஹ்மூத் அவர்களின் கருத்து படி DCW விவகாரத்தில் சமூக நல ஆர்வலர்கள் திரு நல்லகண்ணு, திரு வைகோ, பேராசிரியை பாத்திமா பாபு, உள்ளிட்ட நபர்களை நேரில் தொடர்புகொண்டு STERLITE விவகாரத்தில் எப்படி துரித நடவடிக்கையில் இறங்கி வெற்றிபெற்றுள்ளர்களோ அதே போன்ற அணுகுமுறையில் நாமும் கட்சிகளுக்கு எல்லாம் அப்பற்பட்டு உழைப்போம். அல்லாஹ் வெற்றியை தருவான்.

அதற்கும் நமதூரில் இப்படிபட்டவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தி நல்ல முடிவு எடுப்போம். அதற்கான முயற்சிகளை சென்னை காயல் நகர் நல மன்றம் முழு முயற்சியுடன் இறங்க அன்புடன் ரியாத் காயலர்களின் சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved