Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:57:33 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6070
#KOTW6070
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 2, 2011
பழுதாக்கப்பட்ட சதுக்கைத்தெரு சாலையை உடனடியாக சரிசெய்யக் கோரி நகர்மன்ற அலுவலகம் முன் சதுக்கைத்தெரு பொதுமக்கள் முற்றுகை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3290 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெரு உட்பட நகரில் பல தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் டெண்டர் மூலம் பணியளிக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டது.

ஆனால் பொறுப்பளிக்கப்பட்ட பல தெருக்களில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 31.03.2011 தேதிக்குள் புதிய சாலைகள் அமைக்கப்படாமல், தோண்டப்பட்ட நிலையில் குண்டும் குழியுமாக அவை இருந்து வருவதால் அப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அச்சாலைகள் வழியே ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் வர மறுப்பதால், அவசரத் தேவைகளுக்கு உடனடியாக எங்கும் புறப்பட்டுச் செல்லவியலாத நிலையுள்ளது.

குறிப்பாக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக இதுபோன்று தோண்டி வைக்கப்பட்டுள்ளதால் அத்தெருவில் அமைந்துள்ள சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், அஹ்மத் நெய்னார் பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கும், அத்தெரு வழியே செல்ல வேண்டிய காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகம் போன்ற இடங்களுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகரில் பெய்த கோடை மழை காரணமாக இப்பகுதியின் பள்ளமாக்கப்பட்ட சாலையில் தேங்கி நீர் இன்று வரை வற்றாமல் உள்ளது.

இந்நிலையில், இரட்டைகுளத்துப் பள்ளி நிர்வாகிகளான ஹாஜி முஹ்யித்தீன் தம்பி துரை, ஹாஜி எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி உள்ளிட்ட பிரமுகர்களும், இப்பகுதியைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் தம் பகுதி நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.ஓ.செய்யித் அலீ ஃபாத்திமா ஏற்பாட்டில் ஒன்றுதிரண்டு இன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.



நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய சாலை அமைப்புப் பணிகளை முடிக்காமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து அவர்கள் அப்போது தொடர்முழக்கம் செய்தனர்.

பின்னர் அங்கு வந்த நகர்மன்ற ஆணையாளரிடம், “நகராட்சி வாகனங்களின் பயன்பாட்டிற்கான எரிபொருள் கட்டணம், வாகனங்கள் பராமரிப்பு, தெருவிளக்கு மின்கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் தேவையான சொற்ப தொகைகளுக்கு நிதியொதுக்க இயலாத ஆணையாளர், புதிய சாலை அமைப்புப் பணிகளுக்கு மட்டும் எப்படி உடனடியாக பெருந்தொகைக்கான காசோலை அளிக்க முடிந்தது என்று தாம் கேட்டதாகவும், அந்த நிதி முன்னரே ஒதுக்கப்பட்டது என அப்போது அவர் விளக்கமளித்ததாகவும் நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைக் கேள்வியுற்று பின்னர் அங்கு விரைந்து வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, துணை தாசில்தார் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் பீர் முகைதீன், நகரமன்ற தலைவர் வாவு செய்யித் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அங்கு வந்தனர். இப்பிரச்சினை ஓரிரு தினங்களில் சரிசெய்யப்படும் என்றும், நகரின் அத்தியாவசிய பிரச்சினைகள் எதுவானாலும் தன் கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டால் இயன்றளவு விரைவாக அவற்றை நிறைவேற்றித் தர ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தகவல்:
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ் முஹம்மத் தம்பி மூலமாக,
தீன்தீன் முஹம்மத்,
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.

செய்தி திருத்தப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [03 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4222

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பல தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணிகள் துவக்கப்பட்டதாக சொல்கிறார்கள் எங்கே பணிகள் துவக்கப்பட்டது???

சாலை போடுகிறோம் என்ற பெயரில் தெருக்களிலே குழிகளை தோண்டி போட்டு, போக்குவரத்துக்கு இடையூறுகளையும், மழைத் தண்ணீரை தேங்க வைத்து கொசுக்களின் உற்பத்தியையும், அந்த தேங்கிய தண்ணீரின் மூலம் நாற்றத்தையும் உண்டாக்கி மக்களின் முகங்களை சுளிக்கச் செய்து மக்களுக்கு மன உளைச்சளைத்தான் துவக்கினார்களே தவிர - சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கவில்லை.
-----------------------------------
பணிகளை துவக்குகிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு தெருவிலும் மெஷின்களை வைத்து ரோட்டை சில அடிகள் தூரம்வரை தோண்டி அப்படியே விட்டு வைத்திருக்கின்றனர் நாள் கணக்கில் அல்ல மாதக்கணக்கில். இதனால் மக்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பதில்லை.

ஒரு வேலையை ஆரம்பம் செய்தால் அதை செய்து முடிக்க வேண்டும், அல்லது ஆரம்பிக்காமலே இருப்பது நல்லது.

சரி, ரோட்டை தோண்டியாகிவிட்ட பிறகு ஏதாவது காரணத்தால் தொடரமுடியவில்லை என்றால், உடனே தோண்டிய ரோட்டை மூடி, பழைய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிட்டால் மக்களுக்கு மேலதிக இடையூறு இருக்காது.

இவைகளையெல்லாம் முறைப்படி செய்யக்கூடியவருக்குத்தான் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட வேண்டும். இந்த தகுதியை எல்லாம் யாரும் பார்ப்பதாக தெரியவில்லை.
--------------------------------
மேலும் மக்களுக்கு ஏற்படுகிற அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்காகத்தான் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நகர்மன்றம் நடைபெறுகிறது. ஆனால் நமது நகர்மன்றமோ செயலிழந்த மன்றமாக இருக்கிறது. அதனாலே அதிகாரிகள் அவர்கள் இஷ்டம்போல் செயல்பட வாய்ப்பாகிவிட்டது.

அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் தேவையான சொற்ப தொகைகளுக்கு நிதியொதுக்க இயலாத ஆணையாளர், புதிய சாலை அமைப்புப் பணிகளுக்கு மட்டும் உடனடியாக பெருந்தொகைக்கான காசோலையை அளிக்கின்றார் என்றால் அதன் பின்னணி என்ன??? மக்கள் சிந்திக்க வேண்டும்!!!

அதுமட்டுமல்ல நகர்மன்ற தலைவருக்கே தெரியாமல், அதிகாரி பெருந்தொகைக்கான செக்கை கான்ட்ராக்டருக்கு கொடுக்கிறார் என்று கூறப்படுகிறதே!!! அது ஏன்? தலைவருக்கு மறைக்க வேண்டிய காரணம் என்ன???
---------------------------------
சாலைகள் போடும் பணிகள் ஒப்பந்தப்படி 31.03.2011 அன்றே முடித்திருக்க வேண்டும் - ஆனால் இன்னும் ஆரம்பிக்கப்படாத (சாலைகளை சிறிதளவு தோண்டி வைப்பது என்பது ஆரம்பம் ஆகாது) சாலைகளே பெரும்பாலும் இருக்கிறது. இந்நிலையில் காண்ட்ராக்டர் எப்படி பெருந்தொகையை பெற முடியும் ? - மொத்த சாலைகளையும் எப்போது போட்டு முடிப்பார்கள்??

ஒப்பந்தம் எடுத்தவர், ஒப்பந்தத்தின்படி முறையான விதிகளை பின்பற்றி சாலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். ஒப்பந்த காலத்தில் மண், சிமின்ட், கல் என்று பொருட்களுடைய விலைகள் ஏறினால் அது ஒப்பந்தக்காரரை சார்ந்ததே.

விலைவாசிகள் கூடிவிட்டது என்றோ அல்லது வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றோ கூறி ஒப்பந்த காலத்தை தள்ளிப் போடமுடியாது.

ஒரு வேளை புயல்,வெள்ளம், சுனாமி, என்றோ அல்லது நாட்டிலே போர் ஏற்பட்டாலோ விதி விலக்குகள் கிடைக்கும்.

அப்படி எதுவும் இல்லை என்பதால் ஒப்பந்தக்காரர் சாக்குப்போக்கு எதுவும் சொல்ல சட்டரீதியான காரணம் எதுவுமில்லை. எனவே மக்களே! உஷாராக இருக்கவும் ஏமாந்து விடாதீர்கள்.
-------------------------------------------
மக்களே!

நகர்மன்ற உறுப்பினர் சகோதரர் நோனா. ஜாஃபர் தலைமையில் சதுக்கைத்தெரு பொதுமக்கள் மட்டும் நகர்மன்றத்தை முற்றுகையிட்டால் போதுமா? மற்ற பகுதி மக்களும் நகர்மன்றம் நோக்கி சென்றால்தான் விடிவு காலம் பிறக்கும்.

"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்" மற்றும் "கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்" என்ற பழமொழிகளுக்கு ஒப்ப பாதிக்கப்பட்ட தெருக்காரர்கள் என்று மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஊரும் திரண்டு போராடினால்தான் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு சாலைகளை துரிதமாக போடுவார்கள்.

ஆகவே மக்களே நாம் அனைவரும் ஏதோ ஒரு பாதிக்கப்பட்ட தெருவையாவது தினமும் உபயோகிக்கிறோம் அதனால் நம்முடைய உரிமையை நிலைநாட்ட போராடி சாலையை துரிதமாக போட ஆவன செய்யவும்.

நம் முயற்சிகள் வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் ! கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved