Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:01:10 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5999
#KOTW5999
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 16, 2011
இல்லம் தேடி இனிய பானம்! “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி! அவர் எனர்ஜி!!” (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 9783 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் கொச்சியார் தெரு தென்கோடியில் அமைந்துள்ள தண்ணீர் வினியோக திறப்புக் குழாய் தொட்டியின் இன்றைய காட்சிதான் இது!

எப்போதும் நிறைந்த குப்பை சகிதமாகக் காட்சியளிக்கும் இத்தொட்டி, நகராட்சியின் தண்ணீர் வினியோகத்தின்போது மட்டும் நிறைந்து வழிந்து, சாலையிலும் தண்ணீர் வழிந்த நிலையில் காணப்படும்.



அவ்வாறு நிறையும் தண்ணீர், சூழ்ந்துள்ள குப்பை கூளங்களின் ரசத்தை (ஜூஸ்) உறிஞ்சியெடுத்து, தண்ணீர் வினியோக நிறைவு நேரத்தின்போது இத்தொட்டியில் வழிந்த நீர் வினியோகத் திறப்புக் குழாய் வழியே உட்சென்று “புதிய ஊட்டச்சத்தை“ உருவாக்கும்.

மறுமுறை தண்ணீர் வினியோகிக்கப்படும்போது, உள்வாங்கப்பட்ட இந்த “ஊட்டச்சத்து பானம்”தான் துவக்கமாக அனைத்தில்லங்களையும் சென்றடையும்.

இத்தொட்டியைச் சூழ்ந்திருக்கும் குப்பை கூளங்களில் வீடு துப்புரவு செய்யப்பட்ட கழிவுகள், பச்சிளங்குழந்தைகளின் அடித்துணி (நாப்பீஸ்), மாதவிடாய் பெண்களின் கழிவுத்துணிகள் என பல “விசேஷ” பொருட்கள் உள்ளடக்கம்.



இக்குறையை சரிசெய்யக் கோரி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதியைச் சார்ந்த சிக்கந்தர் என்பவர் தெரிவித்தார்.



மாதிரிக்கு கொச்சியார் தெருவின் இத்தொட்டி படமெடுக்கப்பட்டுள்ளபோதிலும், நகரின் பெரும்பாலான குடிநீர் வினியோகத் திறப்புக் குழாய் தொட்டிகளின் நிலையும் இதுவாகத்தான் உள்ளது.

பார்க்க:- (1) (2) (3)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுகாதார கேடில்லாத ஊராக
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [16 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3970

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சுப்ஹானல்லாஹ்!!! இப்படியுமா? நமதூரில் சுகாதாரம் சீரழிக்கப்படுகிறது?.

சுத்தம் சுகம் தரும் என்று பள்ளிக் கல்வியிலும் - சுத்தம் ஈமானில் பாதி என்று மார்க்கக் கல்வியிலும் படித்திருந்தும் , பல முறை ஹதீதுகளை காதுக் கொடுத்துக் கேட்டிருந்தும் சுத்தத்தைப் பேணவில்லை என்றால் மக்களை என்னவென்று சொல்வது?.

இக்குறையை சரிசெய்யக் கோரி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டதாகவும், ஆனால் இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதியைச் சார்ந்தவர் தெரிவித்தார் என்ற செய்தி உண்மையாக இருக்குமேயானால் அப்படிப்பட்ட நகர்மன்ற உறுப்பினரால் வார்டு மக்களுக்கு என்ன பயன்? மக்களே சிந்தியுங்கள்?
----------------------------------------
முதலில் இது குப்பைத் தொட்டியோ அல்லது தண்ணீர்த் தொட்டியோ அல்ல. தண்ணீர் குழாய்களின் இணைப்புக்கள் சந்திக்குமிடம் இதிலே தண்ணீர் திறந்து விடுவதற்கான அல்லது மூடுவதற்கான வால்வுகள் இருக்கும். பூமிக்கு அடியில் உள்ள அந்த வால்வுகளை எளிதாக உபயோகப்படுத்துவதற்காக பூமிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அறையே தவிர அது தொட்டி அல்ல.

மேலும் பொது மக்கள் அதிலே குப்பைக் கூளங்களை கொட்டுவது 100% தப்புத்தான். அதைப் பார்த்து சும்மா கண்டும், காணாதும் இருப்பது, அதை பற்றி வார்டு உறுப்பினருக்கோ அல்லது நகர்மன்றத்திற்கோ தெரிவிக்காமல் இருப்பது எல்லாம் பொதுமக்களின் தவறு என்றாலும் கூட, குடிநீர் குழாய்களை திறந்து விடுவதற்கும், அதை மூடி செல்வதற்கும் வரக்கூடிய நகர்மன்ற ஊழியர் அதை பார்ப்பதில்லையா?

பொது மக்கள் எல்லோருக்கும் பார்க்க கூடிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் புகார் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தண்ணீர் குழாயை திறந்து, மூடக்கூடிய ஊழியர் ஒவ்வொரு முறையும் அதை பார்க்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை கண்டிப்பாக அவர் புகார் செய்திருக்க வேண்டும் அது அவருடைய வேலையின் ஒரு பகுதி.

அவருடைய வேலையே அந்த தொட்டியில்தான் அதனுள்ளே உள்ள வால்வைத்தான் அவர் திறக்கிறார், மூடுகிறார். அதில் குப்பைக் கூளங்களோ, தண்ணீரோ தேங்கியிருக்குமானால் அது அவருடைய வேலைக்குத்தான் இடைஞ்சலாக இருக்கும். மேலும் குடிநீர் என்பதால் அது சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதல் என்பதை அவர் தெரியாமலிருப்பாரா? அவர் கடனுக்காக வேலை செய்யக்கூடாது! கடமையை நிறைவேற்ற வேண்டும்.
-------------------------------------------
பொது மக்களே!

நம் ஊரிலே இப்படிப்பட்ட சீர்கேடுகள் மிகவும் மலிந்துக் கிடக்கிறது அவைகளை எல்லாம் சீர்படுத்த வேண்டும். இவைகளை சீர்படுத்தாத வரை ஊரிலே ஏற்படக்கூடிய நோய்களுக்கு பஞ்சம் இருக்காது. முதலிலே மக்கள் சுயநலத்தை மறந்து பரந்த மனப்பான்மையுடன் வீட்டையும், ரோட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும்.

மேலும் திறமையில்லாத நகர்மன்ற உறுப்பினர்களையும், ஊழியர்களையும் மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி, வருகின்ற நகர்மன்ற தேர்தலில் உங்களுக்கு பிடித்தமான, உங்களுடைய சொந்தமோ, பந்தமோ யாராக இருந்தாலும் திறமை உள்ளவர்களாக அதாவது இலஞ்சம் வாங்காத, இறைவனுக்கு பயந்த, சுறு சுறுப்புள்ள உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து செயலிழந்த நகர்மன்றத்தை செயல்பட செய்யுங்கள். இறைவன் உதவியால் நம் ஊர் சிறப்பாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் ஊரை சுகாதார கேடில்லாத ஊராக திகழச் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நடு மண்டைலே கொட்டனும்
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [16 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3971

நச்.. நச்.. நச்.. என்று நடு மண்டைலே கொட்டனும் போல உள்ளது, யாரையா? நம் மக்களைதான்.

சுத்தம் ஈமானின் ஒரு பாதி என்று சொல்லிகொடுத்த மார்க்கத்திலும், சுத்தம் சோறு போடும் என்று சொல்லும் நாட்டிலும் வாழும் நாம் எப்படி இருக்கின்றோம். இப்படி இருந்து விட்டு, வீட்டில் இந்த நோய், ஊரில் அந்த நோய் என்று கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்.

எத்தனை விழிப்புணர்வு கூட்டம் நடத்தினாலும் என்ன பயன். அப்புறம் இஸ்மாயில் டாக்டரிடம் போயி, நீங்க கொடுத்த மருந்தினாலும் பிள்ளைக்கு வாந்தி, பேதி நிக்கவில்லை என்று சண்டை போட்டு, அவங்களை டென்ஷன் பண்ணுவது. தண்ணீரை கொதிக்க வைத்து கொடுங்க என்று காட்டு கத்து கத்தினாலும் ஏறாது. என்னத்த எழுத.. (இந்த மேட்டரை மஹ்மூத் மாமாவிடம் விட்டு விடுவோம்...)

அப்புறம், நகராட்சியில் குப்பைகளை, குப்பை தொட்டி மற்றும் ரோட்டோரம் இருப்பதை மட்டும்தான் அள்ள வேண்டும் என்று ஏதும் சட்டம் உள்ளதா? கொஞ்சம் உள்ளேயும் எட்டிப்பார்க்கலாம் அல்லவா..தண்ணீர் தொட்டிக்குள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஜாக்கிரதை மக்களே....
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [16 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3972

நண்பர்களே நம்மை கொல்ல D C W நிறுவனம் இல்லை - அடுத்த வீட்டில் தானே தீ என்று இருந்தால் அந்தத் தீ உன்னையும் அழிக்கும். சுயநலவாதிகள் சிலரால்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Yarai Kurai Solluvathu
posted by Sayna (Bangkok ) [16 April 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3974

intha newsuku yarai kurai solluvathu yandru onnumay puriyalai, Intha Vardu orupinar tharukodie yallam sutham saiuvar, kadarkari yallam sutham saivar, Ithaimattu yaan vittu vitar yandru puriya villai,

Kayal makkal yapoluthu thaan thirunthu vargal, Ooril ithanai noie, vanthum innum thiruntha villai yandaral, Allah thaan kapathanum,

Thannoda veetai suthamaga vaipathu parithu alla, sutrupura sugatharam vendum, Saithiel ullay padikum pothu aruvarupaga irukirathu,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Hijri Month
posted by vsm ali (kangxi, Jiangmen, china) [16 April 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 3977

Assalamu Alaikkum Haji TMR ,

In your comment, you have noted Hijri Date 11-4-1432 , instead of 11-5-1432 . all your comments Hijri month is wrong .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நகர் மன்றம்
posted by Salai S Nawas (Singapore) [16 April 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 3978

N.S.E. மஹ்மூது மாமா, அனைத்து தகுதியும் உள்ள நீங்கள் தான் நம் நகர் மன்ற பொறுப்புக்கு வர வேண்டும் என்பது என் அவா. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யுங்களேன்! எங்கள் ஆதரவு கரம் உங்களுக்கு எப்போதும் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. குறைபாடு , நமக்கு அருகில்
posted by vsm ali (Kangxi, Jiangmen , China) [17 April 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 3979

கான்சருக்கும் , பிற நோய்களுக்கும் DCW தான் காரணம் என்று கூவிக்கொண்டு இருக்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் திருவாளர் kayalpatnam .com தான். கொஞ்சமாக இருப்பதையும் மிகைப்படுத்தி , பெரிதுபடுத்தி எழுதி , நம் வீட்டில் , நமக்கு அருகில் என்ன குறைபாடு உள்ளது என்பதை பாராமல் , மக்களின் கவனத்தை திசை திருப்பி , ஊரில் உள்ள ஒட்டுமொத்த நோய்களுக்கும் DCW மட்டுமே காரணம் என்பதை மக்களின் மனதில் " பசுமரத்து ஆணி " போல பதிய வைத்து விட்டார்கள். ஸாலிஹ் காக்கா , இதுபோன்ற காட்சிகளை அவ்வப்போது படம்பிடித்து , ஊரில் உள்ள நோய்களுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை எடுத்து சொல்லுங்கள். (குப்பைகளை அள்ளி செல்ல நகராட்சி மூலம் ஒவ்வொரு தெருவுக்கும் குப்பை வண்டி வருகிறது . குப்பைகளை வண்டியில் கொட்டாமல் , தண்ணீர் தொட்டியில் கொட்டிவிட்டு , அவர் சரியில்லை , இவர் சரியில்லை என்று கூவிக்கொண்டிருப்பது சரியாக தெரியவில்லை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. DCW
posted by Administrator (Chennai) [17 April 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3981

Since Kayalpatnam.com started publishing its recent series on DCW in October 2010, nearly 41 news items have been published (till date). They can be searched using the search tag DCW or accessed quickly through the cross link in DCWmonitor.com website. Click here.

In none of the news items, has the Website linked DCW to diseases in Kayalpatnam. Where it has, it is usually the user comments or opinions of doctors. As a media outlet, kayalpatnam.com has merely brought out environmental risks posed by DCW - needing further investigation.

We would like to point out kayalpatnam.com hasn't been unifocussed either. Even before we touched the DCW aspect, we have been publishing about health and hygiene issues in Kayalpatnam. Links to some of those news items are there in the current news too.

Kayalpatnam.com and the Trust that manages it are involved in various ongoing/upcoming projects that address health issues in Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நகராட்சியின் நாகரீக வளர்ச்சி...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [17 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3982

எப்ப பாரு!மஹ்மூது மாமாவுக்கு நம்ம நகராட்சியை சாடுவதே வழக்கமாப் போச்சு!ஜப்பான்,சீனா,அமேரிக்கான்ணு யார் யாரெல்லாமோ என்ன என்னலாமோ புதுப் புது டெக்னாலஜிகளை இண்டர்டியூஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க! நம்ம நகராட்சி டூ-இன்-வன் சிஸ்டத்தை அறிமுகப் படுத்தியிருக்காங்க...அட!ஆமாங்க...தண்ணீர்க் குழாய் வால்வாகவும்,அதே சமயம் குப்பைத் தொட்டியாகவும் நாம யூஸ் பண்ணிக்கலாம்!நீங்க வேறெ ஆ!ஊ!ன்ணா ஆளை மாத்தணும்ன்ணு வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்த தறீங்க! இது மாதிரி இன்னும் நிறைய ஸ்கீம் வெச்சிருக்காங்க!அதை அப்பப்போ நம்ம சாலிஹ் காக்கா ஃபோட்டோ எடுத்துக்காட்டுவாங்க! வாழ்க நம்ம நகராட்சி!!!

குறிப்பு: நாம எந்தத் தூண்லெப் போயி முட்டிக்கிறது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Kayalpatnam.com
posted by Sayna (Bangkok) [17 April 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3984

Oru Anbu Sagotharar comments la sollie irukirar,
DCW than mulukaranam yadru kayalpatnam.com sollie irukirar yandru,
Kayalpatnam.com Athuku undana Aatharathaium sollie irukirargal,
Ithu naal varaikum DCW du company mattum thaan yallorukum tharium, athin ullay yanna nadakindrathu yandu ungaluku thairuma,
yanaku suthamaga thariyathu,
Thiruvalar kayalpatnam.com thaan athin ullay yanna nadakindrathu, innum yanna nadaka pogindrathu yandru yallam sollie irukirargal,
Ondru mattum nichayam,
Unmaiyai solla ponal pirachanaigal varathaan saium manasum kasakum,
DCW ya vai pathie pesa niraya arasiyal vathigal vanthargal oru thadavai kodie pidithaar gal, athudan mudiu adainthu vittathu,
Intha kayalpatnam.com mattu yathukum asaiya mattargal innum yanna nadaka pogindrathu yandru thelivaga solluvargal Admin kandipa DCW mattera konjam series sa yadunga,
Orula olukama suthamaga iruka sollunga, Ithil ovaru kanavan margalum thannudaiya illatharasigaluku yaduthu sollungal, veetai suthamaga vaipathu perithu yalla, veetai sutrie suthama vaithu kollungal,
Aduthavargal sothaium nam sothu pola pathu kathu kollungal yandru arivuruthungal,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உன் குத்தமா என் குத்தமா...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [17 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3985

உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல...

அந்த தொட்டியில் " இதில் குப்பை போடுபவர்களுக்கு கும்மாங்குத்து இலவசம் " அப்படினு எழுதி போடுங்க எல்லாம் சரி ஆகிடும்.

மக்களே கொங்சம் சிந்தியுங்கள்...
நாம் மாக்கள் அல்ல மக்கள் என்பதை......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. மிகைப்படுத்தவில்லை
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [17 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3986

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே !

திருவாளர் காயல்பட்டணம்.காம்தான் கொஞ்சமாக இருப்பதையும் மிகைப்படுத்தி , பெரிதுப்படுத்தி எழுதுவதாக நினைப்பது முழுத்தவறு.

முதலாவதாக DCW பற்றிய செய்திகளை காயல்பட்டணம்.காம் மூலமாகத்தான் நம்மில் பெரும்பாலோர் அறிகிறோம். மற்ற எந்த ஊடகத்திலும் DCW பற்றிய செய்திகள் நல்லவையாக ( விளம்பரம், விளையாட்டு,விழாக்களாக ) இருந்தால் மட்டுமே வரும்.

அவர்களுக்கு பாதகமான சுற்றுச்சூழல் சம்பந்தமான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டாலும் அந்த செய்தி நமது கண்ணில் படவும் செய்யலாம் அல்லது கண்ணில் படாமலும் போய்விடலாம். அது மட்டுமில்லாது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி செய்திகள் தெரிவது மிகவும் அரிது.

அதே நேரத்தில் காயல்பட்டணம்.காம் இணையத் தளத்தை நம் ஊர் மக்கள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டிலே இருப்பவர்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஊர் செய்திகள் பலதும் அறிவதுடன் குறிப்பாக ஊர் சுகாதாரத்தையோ , ஊர் கலாச்சாரத்தையோ பாதிக்க கூடிய செய்திகள் மிகுதமாக வருவதால் அது நமக்கு சில சமயம் பெரிதுப்படுத்தி இருப்பதாக தோன்றும் அப்படி தோன்றினால் அது தவறு.

-------------------------------------------------

நமது ஊரில் உள்ள மக்களை பாதிக்க கூடிய ஒட்டு மொத்த நோய்களுக்கும் DCW மூலம் வெளியாகும் கழிவுகள் மட்டுமே காரணம் என்று காயல்பட்டணம்.காம் கூறவில்லை.

DCW மூலம் வெளியாகும் கழிவுகள், செல்போன் கோபுரத்தின் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு, நமது உணவு பழக்க வழக்கங்கள் , கலப்பட உணவு பொருட்கள், வீடும் வீட்டின் சுற்றுப்புறமும் சுகாதாரமின்மை மற்றும் முறையான சிகிச்சை பெறாமை போன்ற எத்தனையோ காரணங்கள் கூறப்பட்ட போதிலும் DCW கழிவுகளினால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் அது உண்மையிலும் உண்மை.

----------------------------------------------------

தொழிற்சாலைகள் இருக்கும் ஊர்களில் அதுவும் சாயப்பட்டறை , வெடிபொருள் , பிளாஸ்டிக் போன்ற இரசாயனப் பொருட்களை கொண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள ஊர்களில் கண்டிப்பாக கேன்சர், மூச்சுத் திணறல் போன்ற பல கொடிய நோய்கள் இருக்கத்தான் செய்யும்.

காரணம் தொழிற்சாலையை நடத்தக்கூடியவர்கள் அதற்கான சட்டத்திட்டங்களை பின் பற்றுவதில்லை, அவர்களின் எண்ணமெல்லாம் பணம் சம்பாதிப்பதுதான். அதனால்தான் நம் நாட்டிலே தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலே மிகுதமான நோய்கள் பரவி கிடக்கிறது.

அந்த விதிமுறை மீறல்களுக்கு நமது DCW மட்டும் விதிவிலக்காக இருக்குமா? என்பதே நமது மக்களின் ஐயம்?

அதனால்தான் DCW பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து நமது ஊருக்கு வரக்கூடிய அபாயங்களை , ஆபத்துக்களை கூடிய மட்டும் குறைப்பதற்குண்டான முயற்சிகளை நமது சகோதரர்கள் முழுமூச்சாக செய்து வருகிறார்கள்.

---------------------------------------------------

ஊருக்குள்ளே உள்ள பலதரப்பட்ட சுகாதாரக்கேட்டை நிவர்த்தி செய்ய முயற்சித்த போதிலும் மிகவும் ஆழமாக, முதன்மையாக DCW க்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம். அது மிகுந்த பாதிப்பை, உயிர் சேதத்தைக் கொடுக்கும் என்பதே!!!. அல்லாஹ்! காப்பாற்றுவான்.

பல ஊர்களிலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் மற்றும் பல தொழிற்சாலைகள் இந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

போபாலில் 1984 ல் யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட விபத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டனர். இன்னும் அதன் தாக்கத்தால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்! அந்த மாதிரி ஒரு நிகழ்வு நம் ஊருக்கு வராமல் காப்பாற்றுவானாக.

---------------------------------------------------

மக்களே!

ஊர் மக்களின் நன்மைக்காக எத்தனையோ நல்ல விசயங்களை செய்து வரும் நன்மக்களுடன் திருவாளர். காயல்பட்டணம்.காம்' க்கு மிக,மிக நெருங்கிய பெறும் தொண்டு உண்டு என்பதை மிக விரைவில் அறிவீர்கள். அவர்கள் எதையும் திசைத்திருப்பியோ, மிகைப்படுத்தியோ கூறவில்லை என்பதை உணர்வீர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒற்றுமையாக இருந்து ஊருக்குத் தொண்டு செய்யக் கிருபை செய்வானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Kayal Red Sea
posted by Sd M Sahib SMI (Jeddah) [17 April 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3987

தாரங்கதார கெமிக்கல் மட்டுமே காரணம் என்று காயல்.காம் சொல்லவில்லை, அதுவும் ஒருகாரணமாகலாம் என்றுதான் கருத்துசொல்கின்றது. ஆனால் நமதூர் கடல் அடிக்கடி செங்கடல்போல் காணுமே அதன் காரணம் அந்த இராசாயன கழிவினால்தான் ஏற்படுகின்றது, அந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் ஏற்படும். முறையான வழியில் சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் நமது கடல் தன்னிறம் இழந்து செந்நிறம் பெறுகின்றது நமது உடலினுல் செங்குருதி தன்தன்மையும் வெளிராகின்றது, பலநோய்கிருமிகளுக்கு தோதுவாகின்றது. இதுஎப்போதே இருக்கும் பாதிப்புதான் அன்றய ஆரோக்கியமான உணவினால் கொஞ்சம் உடல்திறம் தாக்குபிடித்திருக்கலாம், ஆனால் இன்றய இரசாயன உணவின் சக்தி நம்மை அத்தனை காப்பதில்லை, அத்தோடு விஞ்சானமும் வளர்ந்ததினால் அதன் பாதிப்பை நாம் ஓரளவு உணரமுடிகின்றது. அத்தோடு சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தால் நலமாகும், எந்த வீட்டில் அப்லோடு(அடுப்பாங்கறை) அறையும், டவுன்லோடு அறையும் சுத்தமாக பாராமறிக்கப்படுகின்றதோ அந்தவீட்டில் சுகாதாரமும் பாதுகாக்கப்படும்…


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. To brother VSM Ali
posted by Javed Nazeem (Chennai) [17 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3994

சகோதரர் VSM.அலி அவர்களே! கொஞ்சமாக இருப்பதை மிகைப்படுத்தி, பெரிதுபடுத்தி எழுதியிருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டி இருக்கின்றீர்கள். தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் ஏற்படும் விளைவுகளும், கடல் நீர் நிறம் மாறுவதும், கொஞ்சமாக இருப்பவை அல்ல. அதே நேரத்தில், அவை மட்டுமே காரணம் என்று யாரும் சொல்லவில்லை (புற்றுக்கு வைப்போம் முற்று, CD உட்பட).

DCW மட்டுமே காரணம் என்று திசை திருப்ப வேண்டி இருந்திருந்தால், தண்ணீர் தொட்டியின் நிலை பற்றிய இந்த செய்தி kayalpatnam.comல் வெளியாகி இருக்காதே! இந்த வெப்சைட் மேல் உள்ள நம்பிக்கையில்தானே இது போன்ற செய்திகளை இன்னும் வெளியிடச் சொல்லிக் கேட்கின்றீர்கள்.

ஒருவேளை நீங்கள் அந்தச் செய்திகளை முழுமையாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது DCW மீது அபிமானமோ, kayalpatnam.com மீது ஏதாவது வருத்தமோ இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் குற்றச்சாட்டு ஆச்சரியத்தை வரவழைப்பதால் இப்படி சிந்திக்கத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் குறையாகத் தோன்றியதை நேரடியாக வெளிப்படுத்தியதற்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. To brother VSM Ali - Contd.
posted by Javed Nazeem (Chennai) [17 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3995

//குப்பைகளை வண்டியில் கொட்டாமல், தண்ணீர் தொட்டியில் கொட்டிவிட்டு, அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று கூவிக்கொண்டிருப்பது சரியாக தெரியவில்லை //

இது ஓரளவு ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்துதான். அதே நேரத்தில் நகரமன்றத்தின் மீதும் குறை உள்ளது. நகர்மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டதாக அப்பகுதியைச் சார்ந்த சிக்கந்தர் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

சகோதரர் N.S.E. மஹ்மூது அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: “குடிநீர் குழாய்களை திறந்து விடுவதற்கும், அதை மூடி செல்வதற்கும் வரக்கூடிய நகர்மன்ற ஊழியர் அதை பார்ப்பதில்லையா? ….. (அவர்) ஒவ்வொரு முறையும் அதை பார்க்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை கண்டிப்பாக அவர் புகார் செய்திருக்க வேண்டும் அது அவருடைய வேலையின் ஒரு பகுதி.”

யார் குப்பை கொட்டினாலும், யார் அதை கவனிக்க மறந்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான் என்ற சுயநலமாவது இருந்திருந்தால் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை இன்னும் முனைப்புடன் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அல்லது நாமே அதை சுத்தப்படுத்தி தொடர்ந்து சுத்தமாக இருக்கும் வகையில் கவனித்திருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved