Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:49:59 PM
திங்கள் | 13 மே 2024 | துல்ஹஜ் 1747, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:37
மறைவு18:29மறைவு23:35
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5119:1719:43
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5972
#KOTW5972
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 13, 2011
ஏப்.08இல் நடைபெற்ற சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகத்தின் முதல் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3057 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு கடந்த 26.03.2011 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில், நடப்பு பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. இப்புதுக்குழுவின் முதல் செயற்குழுக் கூட்டம் 08.04.2011 அன்று 19.45 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நடப்பு பருவத்திற்கான முதல் செயற்குழுக் கூட்டம் 08.04.2011 அன்று 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

சாளை நவாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக உறுப்பினர்களனைவருக்கும் மன்றத் தலைவர் ரஷீத் ஜமான் நன்றி தெரிவித்தார். கடந்த பொதுக்குழுவை சிறப்புற நடத்தியமைக்காக ஏற்பாட்டுக் குழுவினருக்கு கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.



அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் முக்கிய செயல்திட்டங்களுள் ஒன்றான அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகரிலுள்ள 39 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த 30.03.2011 அன்று ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருளுதவி வழங்கப்பட்டதாக மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் தெரிவித்தார்.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து மன்றத்தின் வழிகாட்சி ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உறுப்பினர்களிடம் விளக்கிப் பேசினார்.

சந்தா தொகை 10 டாலராக நிர்ணயம்:
மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சந்தா தொகையாக, உறுப்பினர்களின் நீண்ட விவாதத்திற்குப் பின் 10 சிங்கப்பூர் டாலர் தொகை நிர்ணயிக்கப்பட்டது. விரும்பும் உறுப்பினர்கள் அதிகப்படியான தொகையை சந்தாவாக வழங்கலாம் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உறுப்பினர் மாதாந்திர சந்தா தொகையை வசூலிக்கும் பொறுப்பு மன்றத்தின் துணைப் பொருளாளர் எஸ்.ஐ.எஸ்.ஷேக் அப்துல் காதிர், துணைச் செயலாளர் ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்றத்திற்கான புதிய வங்கிக் கணக்கு எண் மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்கள் தமது மாதாந்திர சந்தா தொகைகளை குறித்த காலத்தில் தவறாமல் அனுப்பித் தருமாறும், அனுப்பிய விபரத்தை மன்றச் செயலருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி குறுஞ்செய்தி வாயிலாக உடனுக்குடன் தெரிவிக்குமாறும் மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா கேட்டுக்கொண்டார்.

உதவி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை:
பல்வேறு தேவைகளுக்காக உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இக்கூட்டத்தில் பார்வையிடப்பட்டது. இதுகுறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்குள் இறுதி முடிவு செய்யப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்ராஃவுக்கு நிதியுதவி மற்றும் வீடு கட்ட பொருளுதவி:
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுவதற்காக ஒருவருக்கு முப்பதாயிரம் ரூபாய் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இக்ராஃவிற்கான மன்ற ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
இக்ராஃவிற்கான மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொடர்பாளராக உறுப்பினர் டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் நியமனம் செய்யப்பட்டார். இக்ராஃ தொடர்பான அனைத்து தொடர்புகள் மற்றும் 2011-2012 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை நிலுவையை வசூலிக்கும் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மே 07இல் உண்டியல் திறப்பு:
நகர்நலப் பணிகளுக்கான மன்றத்தின் நிதியாதாரத்தை உயர்த்தும் நன்னோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், நடப்பு பருவத்திற்கான உண்டியல் திறப்பு 07.05.2011 அன்று நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் 06.05.2011 தேதிக்குள் நிரப்பப்பட்ட தமது உண்டியல்களை மன்றத்தில் ஒப்படைக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மன்றச் செயலாளர் உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, குறித்த நேரத்தில் உண்டியலை ஒப்படைக்கச் செய்வார்.

இலச்சினை குறித்த உறுப்பினர்களின் கருத்து வரவேற்பு:
மன்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இலச்சினை உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த தமது கருத்துக்களை உறுப்பினர்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இரத்த தான முகாம்:
வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ள இரத்த தான முகாமில் மன்ற உறுப்பினர்களைப் பங்கேற்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்யப்பட்டதும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும், முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள உறுப்பினர்கள் மன்றச் செயலரிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

மகளிருக்கான பொறுப்புகள்:
வரும் பொதுக்குழுவில் நடத்தப்படவுள்ள வினாடி-வினா போட்டிக்கான கேள்விகளை ஆயத்தம் செய்திடும் பொருட்டு, இஸ்லாமிய தலைப்புகள் பல மகளிரிடம் வழங்கப்பட்டுள்ளது.

மன்ற உறுப்பினர் விபரப்பதிவு:
மன்ற உறுப்பினர்களின் விபரங்களை முறைப்படி பதிவு செய்வதற்கான மென்பொருள் பதிவேடு ஒன்றை உருவாக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹஸன் மவ்லானா வசம் ஒப்படைக்கப்பட்டது.

வேலை தேடும் காயலர் ஜூலையில் வரவழைப்பு:
வேலை தேடும் பொருட்டு சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படவுள்ள காயலருக்காக மன்றத்தால் கட்நத டிசம்பர் 2010 முதல் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. அவர் வரும் ஜூலை மாதத்தில் சிங்கை வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீடு கட்ட உதவுவது குறித்து பரிசீலனை:
நகரில் குடியிருக்க வழியின்றி தவிக்கும் - குறிப்பாக மழை நேரங்களில் கடும் சிரமங்களை அனுபவிக்கும் ஏழை மக்கள் குடியிருப்பதற்காக வீடு கட்ட உதவித்தொகை மன்றத்தால் வழங்கப்பட வேண்டும் என உறுப்பினர் சாளை நவாஸ் கருத்து தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் மாதங்களில் மன்ற செயற்குழு ஆயந்தறிந்து, அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லாத நிலையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வரவேற்ப்புக்குழு தலைவி
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [13 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3931

புதிய நிர்வாகத்தின் புதிய செயற்குழுக் கூட்டமா.. வெரி குட். அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அனைத்து அம்சங்களும் வழமை போல சூப்பர்.

வீடு கட்ட உதவுவது குறித்து தாங்கள் "தம்மாம் காயல் நற்பணி மன்றத்தை" உதவிக்கும், ஆலோசனைக்கும் அணுகலாமே. இவர்களும் இந்த திட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அனுபவம் உதவும் அல்லவா...

- கூட்டத்தில் ஒரு சின்ன "கூயூட் ரோஸ்" ஒன்று உள்ளதே,ஏதும் பதவி கொடுத்து உள்ளீர்களா? இல்லை என்றால் வரவேற்ப்புக்குழு தலைவி ஆக ஆக்கிவிடலாமே.. மாஷா அல்லாஹ்.

வாழ்துக்களுடன்,

சாளை.S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருப்பான்
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [13 April 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 3932

அஸ்ஸலாமு அலைக்கும். வல்ல நாயன் அல்லாஹ்வின் நல்லருளால் நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் புதிய நிர்வாக முதல் செயற்குழு கூட்டம் மன்றத்தின் முன்னாள் தலைவரும், இந்நாள் மன்ற வழிகாட்டியுமான அல்ஹாஜ் பாளையம் முஹம்மது ஹசன் அவர்களின் முன்னிலையில், மன்றத்தின் புதிய தலைவர் ஜனாப் ரஷீத் ஜமான் அவர்களின் தலைமையிலும், மன்ற நிர்வாக குழு அனைவர்களின் பங்களிப்புடன் நடந்தேறிய நிகழ்வு அறிந்து சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.

புதிய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் அணைத்து நிர்வாக குழுவினர்க்கும் எனது வாழ்த்துக்களையும், து'ஆக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களுக்கு ஆற்றும் சேவை வல்ல அல்லாஹ்விற்கு ஆற்றும் சேவையாகும்.(قال النبي صلي الله عليه وسلم ::والله في عون العبد ما كان العبد في عون أخيه::"

"ஒரு அடியான் பிற அடியானுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருப்பான்.நபிமொழி: புகாரி)

எனவே! நமது மக்கள் பொதுப்பணி தொடரட்டும். வல்ல நாயன் அல்லாஹ் நம் யாவரின் வாழ்நாளை நீடித்து, நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தந்தருளி அதிகமான பரக்கத்தை அள்ளி, அள்ளி வழங்கி நாமும் பிறருக்கு அள்ளி அள்ளி வழங்க அருள் பாலிப்பானாக! அமீன்! யாரப்பல் ஆலமீன்!

அன்புடன் மன்ற உறுப்பினர்:
எம்.எஸ். காஜா மஹ்லரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள் .
posted by K M A bdul Hadhi(Eta) (Jeddah Ksa ) [14 April 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3943

புதிய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் அணைத்து நிர்வாக குழுவினர்க்கும் எனது வாழ்த்துக்களையும், து'ஆக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



"ஒரு அடியான் பிற அடியானுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருப்பான்.நபிமொழி: புகாரி) 00966509046595



இன்ஷா அல்லாஹ் வறுமை இல்லாத, நோய்கள் இல்லாத, சந்தோசமான காயல் உருவாகட்டும், நம் சந்ததியர்களுக்கு



அமீன்! யாரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஏப்.12 அன்று நல்ல மழை!  (13/4/2011) [Views - 2427; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved