Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:51:29 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5779
#KOTW5779
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 9, 2011
காயிதேமில்லத் நகரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4603 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் 07.03.2011 அன்று புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய பள்ளிவாசல்:
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி காயிதேமில்லத் நகர். இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இங்கு ஒரு மஹல்லா பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற தேவை இருந்து வந்தது.

நிலம், பொருளுதவி:
சுமார் 25 வருடங்களுக்கு முன், இப்பகுதி நிலங்ளுக்கு மொத்த உரிமையாளரான காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த பி.டி.எஸ்.இப்றாஹீம், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளி நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளிவாசல் இயங்க வேண்டும் என்று விதிமுறையிட்டு, தனது நிலத்தில் 13 சென்ட் இடத்தை பள்ளிவாசல் கட்டுவதற்காக தானமாக வழங்கினார்.

திறப்பு விழா:
பின்னர், நகரின் தனவந்தர்கள் மற்றும் வணிகர்களின் பொருளுதவியுடன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, 07.03.2011 அன்று திறப்பு விழா கண்டது.





பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல் என்ற பெயரிலான இப்பள்ளியின் திறப்பு விழா, அன்று காலை 11.00 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ பள்ளிவாசலைத் திறந்து வைத்து வக்ஃப் சாசனத்தை வாசிக்க, பள்ளி வக்ஃப் செய்யப்பட்டது. பின்னர், துவக்கமாக அனைவரும் இரண்டு ரக்அத் பள்ளி காணிக்கைத் தொழுகை (தஹிய்யத்துல் மஸ்ஜித்) தொழுதனர்.







அதனைத் தொடர்ந்து துவங்கிய திறப்பு விழா நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்து வழங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், ஹாஜி கே.இசட்.சேகு அப்துல் காதிர், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.டி.சேகு அப்துல் காதிர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா தலைவர் பெயரை, பள்ளி செயலாளர் ஹாஜி ஏ.கே.கலீல் (ஜெஸ்மின் பாரடைஸ்) முன்மொழிய, துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா வழிமொழிந்தார்.

மஹ்ழரா அரபிக்கல்லூரி குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளியின் துணைச் செயலாளர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ திறப்பு விழா உரையாற்றினார்.

வாழ்த்துரை:
பின்னர், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாருக் ஃபாஸீ,

அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர்,

முஹ்யித்தீன் பள்ளிவாசல் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ,

பன்னூல் ஆசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



பள்ளி தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் நன்றி கூற, பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்க் அலீ மவ்லானா துஆவுடன் விழா நிறைவுற்றது. விழாவில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.







முதல் தொழுகை:
பின்னர் தொழுகைக்கான முதல் அழைப்போசையை (பாங்கு) அம்பலம் மஹ்மூத் நெய்னா நிகழ்த்தினார். முதல் தொழுகையை மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ வழிநடத்தினார்.



விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் செயற்குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Allahu akbar....
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [09 March 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 3128

Masha allah...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. masha allah
posted by s.e.m. abdul cader (bahrain) [09 March 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 3135

it is very sweetful news at this world as well as other world. i pray from deep heart to almighty allah to give worthful reward those who donated land as well as other needful help for this beautiful masjid. almighty allah may reward janathul ferdhous for them . a'meen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆலயம் தொழுவது சாலமும் நன்று!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3152

மாஷா அல்லாஹ்! இந்த இறை இல்லத்தை உருவக்க பாடுபட்ட அனைவர்களின் இம்மை,மறுமைத் தேவைகளை வல்ல அல்லாஹ் பூர்த்தி செய்வானாக!அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சொர்க்கபதியில் நிலையான இருப்பிடத்தை வழங்கியருள்வானாக!ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Subhannallah
posted by S.T. Labeeb (Kayalpatnam(Kuthukkal St)) [10 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3153

Marvalleous achievement. As for as I know Hajee V.B.M. Mohamed Iqbal of Kuthukkal street is the maiden person to think to build a house for Allah in that area and he worked hard from the begining. May Almighty Allah reward for all who involved to construct the new Masjid.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. msg
posted by sameerazhar (kayalpatanam) [14 March 2011]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 3250

MASHA ALLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved