Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:04:01 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5707
#KOTW5707
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 23, 2011
காசோலை மோசடி விவகாரம்: நகராட்சி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமா?
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3526 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் காசோலை மோசடி செய்யும் முயற்சியில் செய்யித் முஹம்மத் என்பவர் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காயல்பட்டினம் நகராட்சியின் துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்காரின் சகோதரர் என அறியப்படுகிறது. இதுகுறித்து நகராட்சிகள் மண்டல அதிகாரி மோகன் நேற்று நகர்மன்ற அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.



ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

தற்போதைய காசோலை மோசடி முயற்சி பல கேள்விகளை எழுப்புகிறது. வரும் அக்டோபரில் புது தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ள காயல்பட்டினம் நகராட்சி, தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற தவறு இதற்கு முன்னர் நடைபெறவில்லை என்பதை மக்கள் முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என்ற அவசியத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் நகராட்சி மூலம் நகரில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, நேற்று மதியம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அவசரக் கூட்டத்தில், நகராட்சி உறுப்பினர்கள் சிலர் பதவி விலக முன் வந்ததாகத் தெரிகிறது. தார்மீகப் பொறுப்பேற்று உறுப்பினர்கள் பதவி விலகுவது பல மக்கள் மன்றங்களில் காணப்படும் காட்சிதான் என்றாலும், பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இது அவசியமற்ற செயலாகவே தெரிகிறது.





மேலும், உறுப்பினர்கள் பதவி விலகினால், நகராட்சி நிர்வாகம் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் வரும். கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருப்பது அரசாங்கத் துறைகள் தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது.

ஆகவே, உறுப்பினர்கள் பதவி விலகல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொண்டு, கடந்த 4.5 ஆண்டில் நகராட்சி மேற்கொண்ட பணிகள், அவற்றுக்கான செலவுகள் போன்ற விபரங்களை மக்களிடம் தெரிவிக்கலாம். தற்போது நகராட்சியின் மேல் மக்கள் கொண்டுள்ள அதிருப்திக்கு விளக்கம் கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்வாவதற்கு ஒரு விளக்க வாய்ப்பாகவும் இது அமையும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பதவி விலகல்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [24 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2835

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர் மன்றத் தலைவர் அவர்கள் கருத்துப்படி பார்க்கையில் சில உறுப்பினர்கள் பதவி விலக முன் வருவது அவசியமற்றச் செயலாகவேத் தோன்றுகிறது.

1. பதவிக்காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது என்பது ஒரு காரணம்.

2. கற்புடையார் பள்ளி வட்டம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருப்பது அரசாங்கத் துறைகள் தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது என்பதும் சிந்திக்க வேண்டியதே.

3. சதி வேலை முறியடிப்பு: ஜனவரி 31 வரை கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மறுதரப்பாருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு ஒரு திட்டமிட்ட சதி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக செய்யப்பட, அந்நேரத்தில் அங்கிருந்த நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், அதிகாரிகள் கேட்டதுபோல் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அக்கடிதத்தைக் கொடுக்கக் கூடாது என்று தடுத்து, இதில் நகர்மன்றத்திற்கு ஒப்புதலில்லை என்று மற்றொரு கடிதம் எழுதி வந்திருந்த அதிகாரியிடம் கொடுக்க, “ஆட்சேபனையில்லை” என்ற கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த அவர், “ஆட்சேபனை” கடிதத்தைப் பெறாமலேயே சென்றுவிட்டார். இதன் மூலம் அன்று ஏற்பட இருந்த சதி முறியடிக்கப்பட்டது.

4. மக்கள் பிரதிநிதிகள் இருந்ததால்தான் திட்டமிட்ட சதிகள் முறியடிக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம் நேரடியாக அரசாங்கத்தின் கையில் இருந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.

5. அதே நேரத்தில் எந்த ஓர் உறுப்பினராவது காசோலை மோசடி வழக்கில் நேரடியாக ஈடுபட்டிருப்பாரானால் அவர் அவசியம் விலக வேண்டியவரே.

6. மற்றப்படி தார்மீகப் பொறுப்பேற்று விலகுகிறோம் அப்படி, இப்படி என்று தயவு செய்து யாரும் அரசியல் ஆதாயம் பார்க்க வேண்டாம்.

ஊரின் நன்மையை கருதி , எல்லோரும் ஆலோசித்து எதையும் செய்யுங்கள்.

எந்த ஓர் உறுப்பினரும் மக்களுக்கு துரோகம் செய்வாரேயானால் அவருக்கு நிச்சயம் தண்டனை இறைவனால் இவ்வுலகிலும் கிடைக்கும் என்பதை நினைவு கூர்ந்து செயல்படுவார்களாக.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ‘கறுப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும்...டும்...டும்...!!!
posted by முஹம்மது ரஃபீக்,(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [24 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2836

கறுப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும்...டும்...டும் குள்ள நரி தெரிஞ்சு போச்சு டும்...டும்...டும், ஆடு போலெ வேஷம் போட்டு,கறுப்பு சாயம் மேலெ பூசி,உள்ளே வந்த குள்ள நரி கொன்று தின்ற ஆட்டுக்குட்டி,குறைஞ்சு போன காரணத்தால் குழம்பி நின்ன இடையனுக்கு குரங்கு வந்து சொல்லிடிச்சாம்.மழை பெய்ஞ்ச மறு கனமே கரைஞ்சு போன சாயம் கண்டு பேயரைஞ்ச முகம் போலெ பேதளிச்ச குள்ள நரி,வாலையெல்லாம் சுருட்டி வெச்சு வனத்துக்குள்ளே ஓடிடிச்சாம்!!!

இது போன்ற குள்ள நரிகளை ஓட விட்டுவிடாதீர்கள் நான் மேலே தந்த கவிதை குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பில் வரும் பாடல் பகுதி போல கற்பனையாய் தந்தது நம் உள்ளங்களில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் இன்னும் எத்தனை பெரிய நரிகள் நம் நகராட்சிக்குள் புகுந்துள்ளதோ?சாயம் வெளுக்க நியாய மழை பெய்ய வேண்டும்.அப்போது தான் இவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும்.காத்திருப்போம்!!!அந்த மழைக்காலம் வரும் வரை...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எவன் மோசடி செய்தானோ அவன் நம்மை சார்ந்தவன் இல்லை (நபிமொழி)
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen. Mahlari. (Singapore.) [24 February 2011]
IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 2840

காசோலை மோசடி செய்தி வுன்மையாக இருக்குமேயானால் இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.பொதுமக்களின் அமானித சொத்தை பாழாக்கும் எவரும் தயவு தாட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.இதில் முஸ்லிமோ,முஸ்லிம் அல்லாத எந்த உறுப்பினராக இருந்தாலும் மனசாட்சிப் பிரகாரம் மக்களுக்கு முன்பு பதில் சொல்ல வேண்டும்.வூழல் ,லஞ்சம்,மோசடி,நம்பிக்கை துரோகம், செய்யும் எவனும் இதில் விதிவிலக்கில்லை.மக்களுக்கு சேவை செய்ய வரும் எவரும் சொந்த வாழ்விலும் ,பொது வாழ்விலும் நம்பிக்கைக் குரியவராக இருக்க வேண்டும். அந்த தகுதி இல்லாதவர்கள் தானாகவே விலக்கிக்கொள்ள வேண்டும்.தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து மக்கள் பணிக்கு அனுப்புவது மக்களின் கடமையாகும்.நமது நகர்மன்ற தலைவர் அவர்கள் தன் வாழ்விலும் ,பொதுவாழ்விலும் அப்பழுக்கற்றவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வுள்ளோம்.அவர்கள் இப்படி இருப்பது கூட சில வுருப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.காரணம் தனது திருகு தாளங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு இல்லையே என்பது சில வுருப்பினர்களின் ஆதங்கம்.எனவே பொது மக்களே இந்த விசயத்தில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்தால் தான் எதிர்வரும் புதிய நகர்மன்ற நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.எனவே நாம் சிந்தித்து செயல் புரிவோமாக! வல்ல அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காசாசை
posted by ABUAYESHA (dubai) [24 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2846

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….! மனிதனுக்குள்ள மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கறுப்பாடுகள் இருக்கும் வரை கஜானாவுக்கு காவுதான்
posted by ABOOHUMAIDH (CHENNAI) [25 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2860

கறுப்பாடுகள் இருக்கும் வரை கஜானாவுக்கு காவுதான் யார் பணத்தை யார் சூறையாடுவது? காசோலை காற்றில் பறக்கிறது கதவில்லா கயவர் குயுக்தி ! பேரூர் ஆட்சி மன்றமா பேய் கூடமாயா ? கொதிக்குதையா இளைங்கர்களான எம் குருதி? பாய்ந்ததடா கயவர்களின கபளீகரம் கள்ள காசோலை வடிவில். தர்மம் செய்யும் காயலர் மன்றங்கள் ஒரு பக்கம் ஏழைவரி , தீர்வை., வரைப்பட கட்டனங்கள் போன்ற வற்றை சுருட்டும் கறுப்பாடுகள் மறுபக்கம்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved