Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:21:50 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5518
#KOTW5518
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 21, 2011
முஸ்லிம் பெண்களின் வளமான வாழ்வுக்கு உதவுங்கள்: முன்னாள் நகராட்சி மன்ற தலைவி வஹிதா வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல் நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவி ஆ.வஹிதா அவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கத்தின் கவுரவ செயலாளராக உள்ளார். இந்த மகளிர் உதவிச்சங்கத்தின் மூலம் காயல்பட்டினம் மற்றும் மாவட்டத்தில் பரவலாக வாழும் முஸ்லிம் பெண்களுக்கு அரசின் உதவிகளை கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த அமைப்பின் செயல்திட்டம் பற்றியும், இதற்கான உதவிகளை அளித்திடுவது பற்றியும் அவர் இன்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவது மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கம். அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்று முஸ்லிம் மகளிர் உதவித்திட்டம். இந்த உதவித்திட்டம் எந்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறதென்றால், தனவந்தர்கள் அல்லது பொதுநல அமைப்புகள் இந்த முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கத்திற்கு எவ்வளவு உதவித்தொகை வழங்குகிறார்களோ அதற்கு இணையான தொகையை அரசும் வழங்குகிறது. அரசு அதிக பட்சமாக ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் பத்து லட்சம் வரை இந்த உதவித்திட்டத்திற்கு வழங்குகிறது. இதன் அடிப்படையில் நாம் ரூபாய் பத்து லட்சம் வரை சேகரித்து அதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உறுதிப்படுத்தினால் அதற்கு இணையாக அரசும் ரூபாய் பத்து லட்சம் உதவித்தொகை வழங்குகிறது. ஆக மொத்தம் ரூபாய் இருபது லட்சம் உதவித்தொகையினை நம் முஸ்லிம் பெண்களுக்கு பயனுள்ள பல வழிகளில் உதவிட இயலும்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் நலன்களுக்காக, குறிப்பாக சிறுதொழில், கல்வி,மருத்துவ உதவி போன்றவைகளை, நமது பெண்களுக்கு அளித்திட இயலும். இந்த திட்டத்தினை நடைமுறை சாத்தியமாக்கிட முஸ்லிம் பெண்கள் உதவிச்சங்கம் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பல மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு முஸ்லிம் பெண்கள் பலன் பெற்று வருகின்றனர். ஆனால் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் மகளிர் உதவிச்சங்கம் துவக்கப்பட்டும், போதிய விழிப்புணர்வு இன்மையால் அது செயல் வடிவில் உயிரோட்டமின்றி இருந்து வருகிறது. எனவே இந்த பயனுள்ள அரசுத்திட்டத்தை நமது சமுதாய மக்கள் பயன் பெற்றிடச்செய்யும் வகையில் இது குறித்த விளக்க மற்றும் ஆலோசனைக்கூட்டம் கடந்த 01-01-2011 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது நல அமைப்புகள், பைத்துல்மால் அங்கத்தினர்கள், தனவந்தர்கள், வெளிநாடுவாழ் காயல்வாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் வழங்கினர். அத்துடன் அரசின் இந்த உதவித்திட்டத்தை நாம் முழுமையாக பயன்படுத்தும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது என்றும், இந்த உதவித்தொகைக்கான நமது பங்களிப்பிற்காக நமதூர் செல்வந்தர்கள், வெளியூர், வெளிநாடுகளில் வாழும் நமது மக்களிடமும் ரூபாய் பத்து லட்சம் வரை வரும் மார்ச் மாதத்திற்குள் சேகரிப்பது எனவும், இதன் மூலம் துயறுற்று வரும் நமது முஸ்லிம் பெண்களை உயர்நிலைக்கு கொண்டு வரும் வகையில் உதவித்திட்டங்களை செயல்படுத்துவது எனவும், இதற்கான செயல்பாடுகளை முனைப்புடன் செயல்படுத்த ஊரில் A.வஹிதா, S.S.சதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா), ஹாஜி TAS.முஹம்மது அபூபக்கர், A.தர்வேஷ் முஹம்மது, S.செய்க் அப்துல் காதர், ஹாஜி S.I.புஹாரி, ஹாஜி MNL. சுலைமான் ஆகியோரையும் சென்னையில் இதற்கான பணிகளை மேற்கொள்ள ஹாஜி இபுனு சுவூது, ஹாஜி LKK. லெப்பைத்தம்பி, ஹாஜி SSM.சதக்கத்துல்லாஹ், S.இம்தியாஸ், டைமன்ட் செய்யது ஆகியோரையும் தேர்ந்தெடுத்து இதில் முழு வெற்றி பெற உழைப்பது எனவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அமைப்பில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உறுப்பினர்களாக சேர்ந்து பணியாற்றலாம். இதில் ரூபாய் ஆயிரம் செலுத்தி ஆயுள் கால உறுப்பினர்களாகவும், வருடந்தோறும் ரூபாய் ஐநூறு சந்தா செலுத்திடும் உறுப்பினர்களாகவும் இணையலாம்.இந்த கூட்டத்தின் போதே நாற்பது ஆண்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். அத்துடன் தனவந்தர்கள் பலர் இரண்டு லட்சம் ரூபாய் வரை நன்கொடை வழங்குவதற்கு வாக்களித்தனர். இது போக இன்னும் எட்டு லட்ச ரூபாய் சேகரிக்க வேண்டியுள்ளது.

எனவே, சமுதாய நலனிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்ட அன்பிற்கினிய உள்ளூர், வெளியூர், மற்றும் வெளிநாடுவாழ் சகோதர, சகோதரிகள், முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவிச்சங்கத்திற்கு தங்களின் தாராளமான பொருளுதவியை அல்லாஹ்வுக்காக வழங்கி ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இதன் மூலம் துயரில் வாடும் நமது முஸ்லிம் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இயலும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
A. தர்வேஷ் முஹம்மத்,
அப்பா பள்ளித் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved