Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:00:37 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20832
#KOTW20832
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 11, 2018
காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும்! செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள விபர அறிக்கை:-

காயல்பட்டினத்தில் போதைப் பொருளைத் தடை செய்ய தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கடந்த 06.08.2018. திங்கட்கிழமையன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா வைத்திருந்ததாகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் நடமாட்டத்திற்கெதிராக அரசிடம் முறையிடும்போதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகளைப் பெயரளவுக்கு எடுத்துவிட்டு, அமைதிகாத்து விடுவதாகக் கூறி, நிரந்தர நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா தெருவிலுள்ள – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கட்டிட வளாகத்தில், 10.08.2018. வெள்ளிக்கிழமையன்று 10.30 மணியளவில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.







இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தலைமை தாங்கினார். நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தால் நல்ல குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பெருவாரி இளைஞர்கள் அத்தீய பழக்கத்தில் சிக்கிச் சீரழிந்து வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இத்தீமையை நகரிலிருந்து முற்றிலும் ஒழித்திட – நகரின் பல்வேறு பொதுநல அமைப்புகள் தொடர்ந்து கோரி வருவதாகவும், காவல்துறை டிஜிபீ உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தான் இதுகுறித்துக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறிய அவர், எனினும் ஒவ்வொரு கோரிக்கைக்குப் பிறகும் காவல்துறை கண்துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு அமைதிகாத்துவிடுவதாகவும், இதனால் நகரில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்குப் பகரமாக மிகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், கடந்த 06.08.2018. திங்கட்கிழமையன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட – காயல்பட்டினம் நகர நிர்வாகிகளுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோரிடம் நேரில் தான் மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், அதற்குப் பிறகும் காவல்துறை கண்துடைப்பு நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

காயல்பட்டினத்திலிருந்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் அகற்றுவதற்காக – நகரின் நலன் விரும்பும் அனைத்து பொதுமக்களும் இணைந்து செயலாற்றிட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், அதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறும் அவர் – கூட்டத்தில் பங்கேற்ற நகரின் சமூக ஆர்வலர்களைக் கேட்டுக்கொண்டார்.

பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களின் நிறைவில், 11.08.2018. சனிக்கிழமையன்று (இன்று) நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்களின் அங்கத்தினர் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டத்தை, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.





அதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, 11.08.2018. சனிக்கிழமையன்று 10.30 மணிக்கு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி, அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வலிமையான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜலாலிய்யாவில் நடைபெறும் கூட்டம் குறித்து, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் அறிவிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இறைவனின் திருப்பெயரால்......
posted by mackie noohu thambi (kayalpattinam ) [11 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46248

இறைவனின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எங்கு பார்த்தாலும் காயல்பட்டினத்திலிருந்து வெளிவரும் எல்லா துண்டறிக்கைகளிலும் அழைப்பிதழ்களிலும் தலை எழுத்தாக குறிக்கப்படும் இந்த நகரிலா போதை பொருள்.... கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.

திரையரங்கு இல்லாத ஊர்
மதுக்கடை இல்லாத ஊர்
காவல் நிலையம் இல்லாத ஊர்

என்றேல்லாம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு வரலாற்று சிறப்பு மிக்க ஊராக மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக் காட்டாக இருந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானத்தை துடைத்தெறிய ஊர் நலம் காக்கும் நல்லவர்கள் கூடும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற பேரவா இருந்தாலும் தவிர்க்க முடியாத உடல்நிலை காரணத்தால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

எல்லா மக்களின் மனத்திலும் இந்த கவலை பற்றிக் கொண்டு எரிகிறதை பார்க்கிறேன்.இது இஸ்லாமிய விழுமியங்களை தங்கள் வாழ்வியலாக கொண்டிருக்கும் நமது மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல எங்கிருந்தோ இறக்குமதியாகியுள்ள இந்த சாபக் கேட்டுக்கு நமது இளைஞர்கள் பலிகிடாவாக்க பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

இளமைப் பருவம் தீமைக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகிறது. மார்க்க அறிவு குன்றிப் போனதையே இது காட்டுகிறது. எல்லா பள்ளிவாசல்களிலும் மார்க்க விஷயங்களை போதிக்கும் மதராஸாக்களிலும் ஊரில் நடக்கும் எல்லா திருமண கந்தூரி சொற்பொழிவு மேடைகளிலும் இந்த இழிவை பற்றி பேச வேண்டும் சுதந்திர தின உரைகளிலும் இது இடம் பெற வேண்டும்.

நேற்று நடைபெற்ற கஸ்வா கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் சகோதரி பர்வீன் சுல்தானா அவர்கள் பதின்ம வயதினரிடம் எப்படி இந்த தீமை பற்றிக் கொள்கிறது என்று விரிவாக சொன்னார்கள். சுகந்தம் தரும் நீண்டு உயர்ந்து நின்று மணம் வீசும் சந்தன மரத்தை நச்சுப் பாம்புகள் சுற்றி பின்னிக்கொள்கின்றன என்று சொன்னார்கள்.

தீயவை தீய்மை பயக்கும் ஆதலின்
தீயவை தீயினும் அஞ்சப்படும்
என்று வள்ளுவம் சொல்கிறது.

ஒருவர் ஒரு தீய செயலுக்கு துணைபோனாலோ அல்லது அந்த தீய செயலை பரிந்துரைத்தாரோ அந்த தீமை நடக்கும் காலமெல்லாம் அந்த தீமையில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு என்று திருமறை சொல்கிறது. இந்த தீய சக்திகளை நமதூரிலிருந்து அப்புறப்படுத்த இன்று எடுக்கப் படும் எல்லா முடிவுகளுக்கும் நமதூர் மக்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது தார்மீக மார்க்க கடமை.

நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் தலைமையில் இந்த கூட்டம் கூட்டப்ப படுவது மிக பொருத்தமானது. சட்டமன்றம் வரை இந்த செய்தியை கொண்டு சென்று ஒரு அரசாணை பிறப்பிக்க கூட அவருடைய பங்களிப்பை அவர்கள் செய்ய முடியும். புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களாலும் இன்றைய ஆட்சியாளர்களாலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக ஆமீன்.

இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved