Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:01:06 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20826
#KOTW20826
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 9, 2018
லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2245 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 07.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல், சென்னை சி.ஐ.டீ. காலனியிலும், பின்னர் ராஜாஜி அரங்கிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தென்மாநிலங்களின் திரையுலகத்தினர், இலக்கியவாதிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு, நிறைவில் – அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய ஆவன செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இராணுவ வாகனத்தில் 16.00 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கிடையே சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அண்ணா சமாதிக்கு அருகில் 19.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி, காயல்பட்டினம் உட்பட தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியே சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்தமையால் இயல்பு வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்புகள் எதுவுமிருக்கவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...என் உயிரும் மேலான உடன்பிறப்புக்களே
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46243

இன்னி விரலால் சூரியனை மறைக்கப் பார்க்கிறார்கள். கலைஞரின் உடலை வேறு எங்கும் அடக்கிவிட்டால் அவரது சுவாசம் அடங்கியதுபோல் அவருடைய செல்வாக்கும் அடங்கிவிடும் ஓரத்தில் ஒதுங்கிவிடும் என்று நினைத்தவர்கள் இப்படி ஒரு இமாலய தவறை செய்திருக்கவும் தேவை இல்லை, இப்படி மூக்குடைபட்டு போயிருக்கவும் தேவை இல்லை, விநாச காலே விபரீத புத்தி.

உலகமே உற்று நோக்கி மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.

மரணம் எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்ச்சிதான். கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஆண்டவனே இல்லை என்று ஆர்ப்பரித்தாலும் அவர்கள் பேச்சை இறைவன் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் அவன் தான் எல்லோரையும் படைத்து பரிபாலித்து உணவளித்து பின் தன் பக்கம் அழைத்துக் கொள்பவன்.

தான் பாசத்துடன் பெற்று வளர்த்த பிள்ளை தன்னை அலட்சியம் செய்தாலும் எந்த தந்தையும் அவனை வெறுப்பதில்லை. கடுகளவாவது தந்தை மகன் பாசம் இருக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது உலகெலாம் படைத்தது ஆட்சி செய்யும் இறைவன் அவர்களை கடிந்து கொள்வதில்லை. மாறாக மற்ற பிள்ளைகளுக்கு செய்யும் உதவியைவிட இவர்களுக்கு அதிகமாகவே செய்கிறான்.

விவிலியத்தில் வரும் கதைபோல் THE PRODIGAL SON என்றே இறைவன் அவர்களை நினைத்துக் கொள்வான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வேதனைக் குரியது.

நீதிபதிகள் இந்த இக்கட்டான நிலையிலும் தங்கள் தீர்ப்புக்களை மனித நேயத்துடன் வழங்கி கலைஞரை கௌரவத்திருக்கிறார்கள். சட்டங்களை பார்க்காமல் சரித்திரத்தை பார்த்திருக்கிறார்கள். மத்திய அரசு இந்திய தேசிய கொடியையே அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது. கலைஞரின் உடலை போர்த்தியிருந்த தேசிய கொடியை அவரது மகனிடம் ஒப்படைத்தது இன்னொரு மைல் கல்

ஆனாலும் புரட்சி தலைவி அவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்தது கூடாது என்று வழக்கு தொடுத்தவர்களை அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசியல் சாணக்கியம் என்பது எல்லோருக்கும் கைவந்த கலை ஆகி விடாது. எப்படியோ அண்ணாவின் சமாதி அருகே கலைஞர் அடக்கம் செய்யப் பட்டு விட்டார்.

49 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாவின் மறைவின் போது அண்ணாவின் சமாதிக்கருகில் நின்று கலைஞர் சூளுரைத்தபடி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றிருந்து அதை மீண்டும் அவர் காலடியில் கொண்டு சேர்த்து விட்டார். ஆனால் கலைஞரின் இதயம் இப்போது அவரது தொண்டர்களின் இதயங்களுடன் கலந்து நிற்கிறது.

கலைஞரின் சமாதியில் அந்த மெரினாவின் வீதியிலே கருணாநிதியின் சமாதியில் வருவோர் போவோர் எல்லோரும் படித்து செல்லும் வாசகமாக....''என் உயிரிலும் மேலான என் அன்பு உடன்பிறப்புக்களே'' என்ற வாசகம் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு என்றென்றும் உற்சாகம் தரும் ஒரு அமுத மொழி, தங்க பஸ்பம். தாரக மந்திரம்.....

தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை இந்த இணயதளம் மூலம் சமர்ப்பிக்கிறேன். ....

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நன்றியுடன் நினைவு கூறல் வேண்டும்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [09 August 2018]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46244

ஒரு சரித்திரம் சரிந்துவிட்டது.சாமான்ய,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் காவல்சிங்கம் தன் கடமையை முடித்துக்கொண்டு வெளிவரமுடியா கூண்டுக்குள் சென்றுவிட்டது!

தானைத்தலைவர் தன் வாக்குறுதியை என்றும் காப்பாற்றுவார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு, அறிஞர்அண்ணா மறைவன்று சொன்னது, அருமையண்ணா உன் இதயத்தை எனக்கு இரவலாக தந்துவிட்டு செல், அதை நான் வரும்பொழுது உன் காலடியில் சேர்ப்பிக்கிறேன், என்ற வாக்குறுதியை காப்பாற்றினார்!

குப்பைமேட்டு காகிதம் கோபுரத்தில் ஒட்டிக்கொண்டு,கோமானுக்கு இடமில்லை என்று இருமாப்புடன்,எகத்தாளம் செய்தது, ஆம் அது தன் ஆசானின் ஆணைக்கேற்ப ஆடியது!

நீதி எதுவோ அதுவென்றது,ஒருவேளை தீர்ப்பு மாறி இருந்தால்,இந்த தமிழகம் என்ன நிலைக்கு ஆளாகி இருக்கும் என்பதற்கு அத்தானைத் தலைவனின் இலட்சசோப இலட்ச இறுதிஊர்வல உணர்ச்சிமிகு மக்கள் கூட்டமே சாட்சி.

அத்தனை ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு,கிட்டத்தட்ட அத்தனை பேர்கள் இடமும் ஆன்ட்ராய்டு கை அலைபேசி,இத்தனை வசதிகள் இருந்தும், அருமைத்தலைவனை அருகே பார்க்கவேண்டுமென அலையலையாய் ஆர்ப்பரித்த கண்ணீர்கடல்!

"இட ஒதுக்கீடு பெறுவதில் எவ்வளவு இடையூறுஇருப்பதென்பதை இப்பொழுதாவது உணர்தாயா உடன்பிறப்பே!
உனக்கு பெற்றுதந்ததில்மட்டுமல்ல எனக்கு நானே பெறுவதிலும்கூட" என்ற அன்புத்தலைவரின் மானசீககுரல் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற ஓர் உணர்வு!

இதுவரையாண்ட எந்த முதலமைச்சராலும் கொடுக்கமுடியாத, கொடுப்பதற்கு தடையாயும் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்த தானைத்தலைவர் இஸ்லாமியர்களுக்கு 3.1/2 % சதவீதம் இடஒதிக்கீட்டை கொடுத்து நம்மனைவரின் இதயத்தையும் குளிர வைத்த கோமானை,நம் நாடிநரம்பு இதயத்துடிப்பு நிற்கும்வரை நன்றி உணர்வோடு நினைப்பதுதான் ஒவ்வொரு இஸ்லாமியருக்குமோர் அழகாகும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

நன்றி உணர்வுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (India ) [11 August 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46245

மன்னிக்கவும். கட் பேஸ்ட்டில் விடுபட்டுவிட்டது

என்னடா சுல்தான் காக்கா கமாண்ட் வரவில்லையே என்று எதிர்பார்த்தேன் வந்து விட்டது கலைஞரின் அன்பு தம்பியாயிற்றே அவர்கள்.

கலைஞர் பற்றி கட்டுரை எழுத வேண்டுகிறேன்

சென்னை கலைஞரின் சோகத்தில் இருந்தும் நினைவில் இருந்தும் மீண்டதாக தெரியவில்லை வெள்ளிக்கிழமை வளைகுடா சம்பந்தப்பட்ட நிறுனமானதால் நான் எந்த பணியையும் மேற்கொள்ள வில்லை காலை ஜும்மா சிந்தனையில் காயல் இளவரசு தனது மார்க்க நிகழ்ச்கியை கலைஞர் அஞ்சலியாக மாற்றி விட்டார் பிறகு ஜும்மா முடிந்து வரும் வழியில் சென்னை பக்கம் அரிதாக வரும் மருத்துவர் அய்யா தளபதியின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறி விட்டு காரில் கடந்து செல்லும் நேரத்தில் கையசைத்து வாழ்த்து கூறினேன்.

பகலில் கலைஞர் செய்தியில் முன்னாள் மேயர் என்னை மிகவும் கவர்ந்த மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு சாதாரண தினமணி வாசகர் கொடுத்த ஒரு பூங்கா பராமரிப்பு பற்றி கொடுத்த புகாருக்கு கலைஞர் தன்னை நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய விதம் எனக்கு சென்னையில் பிடித்த ்இடமான செம்மொழி ுபூங்காவை அதன் பனி நடக்கும் காலத்தில் ்தினசரி மூன்றுமுறை கச்சென்று லமேற்பார்வை இட்டது நினைத்த கலங்கினார் பிறகு நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பன் விஷயத்தில் தன்னோடு சாதாரண மனிதன் போல கலந்தாலோசித்ததது அந்த விஷயத்தில் திரு தேவாரம் செய்த தவறுக்கு பழிவாங்காமல் மன்னித்தது நினைத்து உள்ளம் உருகினார், பிறகு சன் தொலைக்காட்சியில் அவரது உதவியாளர் ராஜ மாணிக்கமும் ஷண்முகநாதனும் கொட்டி தீர்த்தனர் ஐயா துரைமுருகன் அவர்கள் ஒரு மாட மாளிகையை கட்டி அதில் கலைஞரை குடியுமாறு வற்புறுத்த அதை அம்பேத்கர் சட்ட பல்கலை கழகமாக மாற்றியதவ் நினைத்து உள்ளம் உருகினேன். மாலையில் எனது ஆருயிர் நண்பர் தி நகர் தங்கம் கமலி சாரின் நண்பர் தி நகர் எம் எல் ஏ சத்யாவிடம் சந்தித்து கேட்டேன் சார் கலைஞர் ஆதிமுகாவான அவர் உடனே இமயம் என்று கூறியது என்னை அதிர வைத்தது.

கடைசியாக கலைனரோடு தனிப்பட்ட அனுபவம் 1991 என்று நினைக்கிறன் எம் ஜீ ஆர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வர் ஆகிறார் முதல் அறிவிப்பு +2 தமிழ் பாடத்தில் முதலாம் இடம் பெறுபவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கையால் பரிசு பாராட்டு என்று எனது தங்கை மாநிலத்தில் முதலில் இடம் பெற்றார் நானும் எனது மறைந்த தந்தையாரும் அதற்காக சென்னை சென்றோம் விழா அரங்கில் காயல் லுங்கியில் இருந்த எனத தந்தையிடம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி நீங்கள் பாண்ட் அணிந்து வந்திருக்கலாமே என்று அதற்க்கு கம்பீரத்துக்கு பெயர் போன எனது தந்தை இது காயல்பட்டினத்தில் அடையாளம் என்று. பிறகு மேடையில் பரிசு வாங்கும் போது ைஎனது தந்தை கலைனரிடம் கூறினார் ஐயா நான் காயல்பட்டினத்தை சார்ந்தவன் என்று அதற்க்கு கலைஞர் அவரது முதுகில் தட்டி மிக்க நன்றி எனக்கு பிடித்த ஊரின் பெண்ணுக்கு பரிசு வழங்குவது குறித்து பெருமை அடைகிறேன் என்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved