Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:14 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20363
#KOTW20363
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 6, 2018
“நடப்பது என்ன?” 4ஆவது குருதிக் கொடை முகாமில், 28 பெண்கள் உட்பட 122 பேர் கொடையளிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3738 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில், ரசாக் மருத்துவமனையில் நடத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில், 28 பெண்கள் உட்பட 122 பேர் குருதிக்கொடையளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) உடைய சமூக ஊடகப்பிரிவான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பில், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - கடந்த ஆண்டு முதல் இரத்த தான முகாம்கள் - நகரில் நடத்தப்பட்டு வருகின்றன.

2017-2018 பருவத்தில் நடந்த 3 முகாம்கள் மூலம், சுமார் 250 பேர் இரத்த தானம் செய்தனர். 2018-2019 பருவத்திற்கு 500 பேர் என்ற இலக்கோடு, நடப்பது என்ன? குழுமத்தின் நான்காவது (இப்பருவத்தின் முதல்) இரத்த தான முகாம், நேற்று (ஏப்ரல் 4), காயல்பட்டினம் ரத்தினாபுரியில் உள்ள ரசாக் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைத்திருந்த இந்த முகாமை - தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் இரத்த வங்கி பிரிவு நடத்தியது.

இம்முகாமின் துவக்க நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் (JOINT DIRECTOR) டாக்டர் பரீதா ஸீரின் - சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.



MEGA அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன் தலைமை தாங்கினார்.

முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) மூத்த உறுப்பினர் ஹாஜி நஹ்வி அஹமது முஹைதீன், டாக்டர் நர்கிஸ் பானு, டாக்டர் ஜாபர் சாதிக், டாக்டர் இத்ரீஸ், டாக்டர் இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

MEGA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.நூஹ் - இறைமறையில் இருந்து வசனங்கள் ஓதி - நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்.

MEGA அமைப்பின் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலி அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் பரீதா ஸீரீன், டாக்டர் நர்கிஸ் பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

MEGA அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.புஹாரி உடைய நன்றியுரையுடன் துவக்க நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

நிகழ்ச்சியினை MEGA அமைப்பின் உறுப்பினர் இ.அஹமத் சுலைமான் - நெறிப்படுத்தினார்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இம்முகாமில் - 129 பேர் பங்கேற்றனர். அவர்களில் 122 பேர் - இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 28 பேர் பெண்கள், 94 பேர் ஆண்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!



இரத்த தான முகாம் துளிகள்:

// அக்டோபர் 2017 இல் நடந்த முகாமில் 116 பேர் கலந்துக்கொண்டனர். அந்த எண்ணிக்கையை விட இம்முறை கலந்துக்கொண்ட கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகம்

// அக்டோபர் 2017 இல் நடந்த முகாமில் 27 பெண்கள் கலந்துக்கொண்டனர்; இந்த முகாமில் 28 பெண்கள் இரத்த தானம் செய்தனர்

// முகாமில் - ரசாக் மருத்துவமனை செவிலியர்கள் பலர் இரத்த தானம் செய்தனர்

// 110 முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்துள்ள காயலர் கானி எம்.ஏ.முஹம்மது மொஹைதீன் - மூன்றாவது முறையாக நடப்பது என்ன? குழுமத்தின் முகாமில் தானம் செய்தார்



// மருத்துவர்கள் - டாக்டர் ஹில்மி, டாக்டர் இர்ஷாத் ஆகியோர் முகாமில் இரத்த தானம் செய்தனர்

// திருச்செந்தூர் தாலுகா துணை வட்டாச்சியர் (DEPUTY TAHSILDAR) திரு ஆர்.கோபால் கிருஷ்ண சுந்தர் முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தார்



// தாவா சென்டர் மாணவர்கள் பலர் முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தனர்

// மாற்று திறனாளி திரு பி.சுடலை முத்து - முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தார்



இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: ஏப்ரல் 5, 2018; 3:30 pm]
[#NEPR/2018040501]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved