Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:03:10 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20265
#KOTW20265
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 13, 2018
திரும்புதோ பாரம்பரியம்? (!?)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3473 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காலத்தின் ஓட்டத்திற்கேற்ப இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து, செயற்கையில் மதிமயங்கி மனிதகுலம் ஓடிக்கொண்டிருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எளிதாகக் கிடைத்த பல உணவுப் பொருட்களும், பாத்திரங்கள் உள்ளிட்ட பாண்டங்களும், கட்டுமானப் பொருட்களும் இன்று ஊர் ஊராகச் சென்று தேடினாலும் கிடைக்காத நிலையிலுள்ளது.

குறிப்பாக உணவுப் பொருட்களில் பெரும்பாலும் செயற்கையை உள்வாங்கிக் கொண்டு, இயற்கையைத் துரத்தி விட்டுவிட்டதால் – இன்று கழிவுகள் தேங்கி, அவற்றை வெளியேற்ற மனித உடல் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்று வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவற்றின் கேடுகள் குறித்து பல அரிய தகவல்களை மேற்கோள் காட்டி அன்றாடம் எண்ணிலடங்காத அளவுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

அதன் காரணமாகவோ என்னவோ – திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தானியங்கள், பழங்கள் என இயற்கையான உணவுப் பொருட்கள் மட்டுமே தொன்றுதொட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டு வந்த நிலை மாறி, உறைக்குள் அடைக்கப்பட்ட – வேதிப்பொருட்களை உள்ளடக்கிய பண்டங்களே இத்தனை காலமாய் அந்நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்டு வந்தது.

இவ்வாறிருக்க, நிகழாண்டு ஜனவரி மாதம் துவங்கி காயல்பட்டினத்தில் சில மாற்றங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஜனவரி மாத நடுப்பகுதியில் நடைபெற்ற – காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெரு ஞானியார் இல்லத் திருமணத்தில் நடப்பு வழமைக்கு மாற்றமாக, நகர மக்கள் பல்லாண்டு காலம் பயன்படுத்தி, சில ஆண்டுகளுக்கு முன் மறந்துவிட்ட மண் கலசத்தில் குடிநீரும், மண் குவளையில் இறைச்சியும் – பருப்பும் வைக்கப்பட்டு, திருமண விருந்து பரிமாறப்பட்டது.





அடுத்த சில நாட்களில், மரைக்கார் பள்ளித் தெரு அரபி இல்லத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பில், சாக்லேட் – செயற்கைக் குளிர்பானங்கள் போன்ற நடப்பு பயன்பாட்டு வழமையைத் தவிர்த்து – கடலை மிட்டாய், எள் மிட்டாய், மணிலா கேக் உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டோருக்குப் பகிரப்பட்டது.



நேற்று, சொளுக்கார் தெரு கம்பல்பக்ஷ் இல்லத்தில் நடைபெற்ற சுன்னத் நிகழ்ச்சியின் நிறைவில் – நிலக்கடலை மிட்டாய், வேர்க்கடலை மிட்டாய், எள் மிட்டாய், மணிலா கேக் ஆகியவற்றைக் கொண்ட பொதி அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.









இத்திருமணங்களிலும், இன்னும் சில திருமணங்களிலும் இதுபோன்று பாரம்பரிய தின்பண்டங்கள் பயன்படுத்தப்பட்டு, தற்போது அது நகரில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. “ரொம்...ப நாளைக்கு அப்புறம் கடலை மிட்டாய் சாப்பிடுறேன்...”, “மணிலா கேக் சாப்பிட்டு எவ்......ளோ நாளாச்சி...?”, “இத திங்கும்போதே பழசெல்லாம் நெனப்புக்கு வருதே...?” என பொதுமக்கள் பேசிச் செல்வதை இவ்விடங்களில் தவறாமல் கேட்க முடிந்தது.

மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் நவீன வழமையைத் தவிர்த்து, இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் நாவிதர்களைக் கொண்டே சுன்னத் செய்யப்பட்டமை கூடுதல் தகவல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரில் நாவிதர்கள் மட்டுமே சுன்னத் செய்து வந்த நிலை முற்றிலும் மாறிவிட்ட நிலையில், தற்காலத்தில் பத்தில் ஓரிரு குழந்தைகளுக்கு பாரம்பரியம் மாறாமல் நாவிதர்களாலேயே சுன்னத் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க, ரமழான் நோன்பு துறப்பு – இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல்களில் கஞ்சி பரிமாற ப்ளாஸ்டிக் குவளைகள் தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் ரமழான் மாதத்தில் மீண்டும் மண் குவளைகளில் கஞ்சி வழங்க ஒரு பள்ளிவாசலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், குவளைகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vilacksma (jeddah) [13 March 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46059

பாரம்பரியம் திரும்பி வருவதில் சந்தோசம் . களைய தண்ணீருக்கு டாங்கியில்இருந்து தண்ணீர் எடுக்கும் முறையில் சற்று சுத்தம் பேணினால் சிறப்பாக இருக்கும் .

< " பொதி " அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. > C & P

பொதி , இதுவும் தமிழின் பாரம்பரிய சொல்தான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆனால்....
posted by mackie noohuthambi (kayalpatnam ) [16 March 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46063

மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைத்தான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

ஆனால் முன்காலத்தில் இல்லாத பல புதிய சம்பிரதாயங்கள் நம் இல்லங்களில் புகுந்து விட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். பெண்கள் பூப்பெய்தி விட்டால் அவர்களுக்காக உறவும் சுற்றமும் அள்ளிக் குவிக்கும் பரிசுப் பொருட்களும் அதை பெற்றுக் கொண்ட பூப்பெய்த பெண்ணின் பெற்றோர் அதற்கு கைமாறாக சட்டி சட்டியாக சோறு ஆக்கி வீடு வீடாக கொடுத்து வரும் அவல நிலை- காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் கூட மிகவும் ஆடமபரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

எல்லா நிலையிலும் ஏழைகள்தான் பாதிக்கப் படுகிறார்கள் அவர்கள் வீட்டில் செய்தார்களே நாமும் ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று கடன்களை வாங்கி செய்கிறார்கள் பின்பு அந்த கடனை அடைக்க வங்கியில் கடன் வாங்குகிறார்கள் பின்பு வங்கிக்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பணக்காரர்களான மல்லையாவும் நீரஜ் மோடியும் வெளி நாட்டுக்கு இலேசாக தப்பி போய் விடலாம். சாமானியர்கள் என்ன செய்வார்கள் .வசதி படைத்தவர்கள் நபி வழியில் நின்று சிந்திக்க வேண்டும் திருமணத்தில் சிறந்தது செலவால் குறைந்த திருமணம்தான் என்று நபிகள் நாயகம் சொல்வதாக மேடையில் முழங்குகிறார்கள். மேடையை விட்டு கீழே இறங்கியதும் அந்த நபி மொழிக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. நன்மையை ஏவுவது மட்டுமல்ல தீமையை விலக்கவும் வேண்டும் செலவுகளை குறைக்கவும் வேண்டும்....

KUNTHUM KHAIRA UMMATHIN UKHRIJATH LINNAAS...THAUMUROONA BIL MAUROOFI VA THANHAUNA ANIL MUNKAR என்று அல்லாஹ் திருமறையில் சொல்வதை கொஞ்சம் நினைத்து பார்த்து நமது எல்லா வைபவங்களிலும் ஆடம்பரங்களை தவிர்த்துக் கொண்டால் நல்லது.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பூக்களின் கழுத்தில் மாலையா ?
posted by சாளை பஷீர் (மண்ணடி, சென்னை) [17 March 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46064

நமது மரபுடையில் மாலையணிந்த பிஞ்சுகளை பார்க்கும்போது மனமும் அறிவும் இளகி மென்மையாகி விடுகிறது.

மானுடத்தின் துளிர் மனிதப்பிஞ்சு என எத்தனை சொற்களை கொண்டு வர்ணித்தாலும் ஆற்று நீர் மலைக்கு திரும்ப முடியாதைப்போலஅவர்களின் குழந்தைமைக்குள் நாம் ஒரு போதும் திரும்பிச் செல்லவியலாது.

சிறு முத்தத்தின் வழியாக எளியதொரு அணைப்பின் வழியாக அந்த குருத்துக்களின் தடுமாறும் எட்டுக்களின்வழியாக எதிர்காலத்தின் எட்டாத்தொலைவில் உருக் கொள்ளும் நமது பண்பாட்டின் அசைவை பார்த்து மனம் நிறையலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் திடீர் இதமழை!  (12/3/2018) [Views - 1446; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved