Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:14:54 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20119
#KOTW20119
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 14, 2018
ஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 2997 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

14.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் சார்பில், எழுத்தாளர் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் வெளியிடப்படுகிறது. விரிவான விபரம் வருமாறு:-

எழுத்து மேடை கட்டுரையாளர்

காயல்பட்டினம்.காம் எழுத்து மேடை பகுதியின் 18 கட்டுரையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாளை பஷீர் ஆரிஃப். இவரும் மர்ஹும் ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமாவும், இப்பகுதிக்காக மிகுதியான (38) கட்டுரைகளை தீட்டியுள்ளனர்.

கூடவே, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் விளங்குகிறார். சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக இவ்வமைப்பு விளங்குவது குறிப்பிடத்தக்கது.



பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் தனித்துவமான ஒரு மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு & வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாளுதல் என இவ்வமைப்பு பல்வேறு விசயங்களை சிறப்பான முறையில் வலியுறுத்துகிறது.

உலகமயமாக்கம் & ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை கூட்டுவது & அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி, கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதையும்; வறுமை, எழுத்தறிவின்மை & ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்களால் மேலும் தீவிரமாக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, 60-க்கும் மேற்பட்ட காத்திரமான சூழலியல் நூல்களை இவ்வியக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூவுலகும்… காயலும்…

பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கும் காயல்பட்டினத்திற்கும் ஒரு ஆழமான தொடர்பு உண்டு. அந்நெருக்கத்தின் தொடக்கமாக, இவ்வமைப்பின் பிரபல ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) அமைப்பின் சார்பில் காயல்பட்டினம்.காம் இணையதள நிர்வாகி எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் எழுதிய ‘மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்’ எனும் சிறப்புக் கட்டுரை, 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது.

அதன் பின்னர், 16.03.2013 அன்று நமதூரின் இலக்கிய ஆர்வலர்களால் துவங்கப்பட்ட ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் அறிமுக நிகழ்வில் பூவுலகின் நண்பர்கள் குழுமத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் பங்கேற்று சிறப்பித்தார்.

24.05.2013 முதல் 26.05.2013 வரை, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடத்தப்பட்ட ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சிப் பட்டறையின் உரை சுருக்கங்களை, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு விரிவாக வெளியிட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, 01.01.2014, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் காயல் மாநகரில் ஆவணப்படங்களை திரையிடும் முயற்சிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அங்கத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மலைப்பாடகனும்… விதையிலிருந்தே மரமும்…

இதே ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறை நிகழ்வினை மையப்பொருளாகக் கொண்டு, 05.07.2013 அன்று – காயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் சாளை பஷீர் ஆரீஃப் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பே ‘மலைப்பாடகன்’!

சாளை பஷீர் ஆரிஃபின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, இதே தலைப்பில் தற்போது புத்தகமாக வெளியிடுகின்றனர் பூவுலகின் நண்பர்கள். இக்கட்டுரைகள், காயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியிலும்; தி இந்து தமிழ், காலச்சுவடு, குமுதம் தீராநதி & காக்கைச் சிறகினிலே ஆகிய நாளிதழ் & சிற்றிதழ்களிலும் வெளியானவை.

நூல் வெளியீடு

சென்னையில் நடைபெற்று வரும் 41-ஆவது புத்தகக் கண்காட்சியின் போது, 14.01.2018 அன்று ‘மலைப்பாடகன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மலைப்பாடகன் - சாளை பஷீர்
மாற்று சூழலியல் வாழ்வைப் பேசும் நூல்
வெளியிடுபவர்- தோழர் பிரபலன் (பூவுலகின் நண்பர்கள்)
பெற்றுக் கொள்பவர்- கவிஞர் குட்டி ரேவதி
நாள் 14-01-2018
ஞாயிறு மாலை 6-30 பொங்கலன்று
கருத்து பட்டறை அரங்கு (கடை எண் 244)


நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கீழே:



பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தொடர்பு விபரம்:

பூவுலகின் நண்பர்கள்
AM-77, 14 வது மெயின் ரோடு,
சாந்தி காலனி, அண்ணா நகர்,
சென்னை - 600 040.
அலைபேசி: 9500186661 / 9444940034
மின்னஞ்சல்: info@poovulagu.org
வலைதளம்: http://www.poovulagu.org


தொடர்புடைய முந்தைய பதிவுகள்

1> ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில், ‘மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்’ – சிறப்புக் கட்டுரை
(21.01.2013; http://www.kayalpatnam.com/shownews.asp?id=9987)

2> ‘எழுத்து மேடை மையம்’ அறிமுக நிகழ்ச்சி! பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் பங்கேற்பு!!
(16.03.2013; http://kayalpatnam.com/shownews.asp?id=10458)

3> பொதிகை மலை அடிவாரத்தில் ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சிப் பட்டறை
(24-26.05.2013; http://www.kayalpatnam.com/shownews.asp?id=10991)

4> ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறை – நிகழ்ச்சி சுருக்கம்!
(25.06.2013; முதல் நாள் - http://www.kayalpatnam.com/shownews.asp?id=11103;
இரண்டாம் நாள் - http://www.kayalpatnam.com/shownews.asp?id=11104 &
மூன்றாம் நாள் http://www.kayalpatnam.com/shownews.asp?id=11105)

5> ‘மலைப்பாடகன்!’ – பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறைக் குறித்த சாளை பஷீர் ஆரிஃபின் எழுத்து மேடை கட்டுரை
(05.07.2013; http://www.kayalpatnam.com/columns.asp?id=95)

6> எழுத்து மேடை மையம் நடத்திய கலந்துரையாடல்! ஆவணப்படங்களை நகரில் திரையிட செயல்திட்டம்!!
(01.01.2014;
http://www.kayalpatnam.com/shownews.asp?id=12780)


சாளை பஷீர் ஆரிப் கட்டுரைகள்

1> காயல்பட்டினம்.காம்
http://www.kayalpatnam.com/columnsbyauthor.asp?id=basheer

2> தி இந்து தமிழ்
http://tamil.thehindu.com/profile/author/சாளை-பஷீர்/


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vilacksma (jeddah) [14 January 2018]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45977

வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mauroof (Dubai) [14 January 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45978

மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பூவுலகின் நண்பன்…
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [14 January 2018]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45979

பஷீர் காக்கா & எஸ்.கே. காக்காவின் எழுத்துகளை வாசித்து எழுதிட பழகியவன் நான். வெறுமனே எழுத்துக் கலையைப் பயில்வதோடு நில்லாமல், ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் சீரிய பணிகளிலும் ஈடுபட்டு, பஷீர் காக்காவிடம் நல்ல பல வாழ்வியல் படிப்பினைகளையும் பெற்று வருகிறேன், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த புத்தக வெளியீட்டு விழா செய்தியினை தொகுத்து எழுதும் பொழுது, எனது முதன்முதல் நூலை வெளியிடுவது போன்று உணர்ச்சிவயப்பட்டேன்.

பஷீர் காக்கா இதுபோன்று பல்வேறு நல்ல நூல்களை வெளியிட இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். இத்தகைய முயற்சிகள் என் போன்ற இளையோருக்கு, இலக்கியத் துறையின் மீதான ஆர்வத்தை நிச்சயம் தூண்டும்.

அன்பும் வாழ்த்துகளும்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
தம்மாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழுவில் ஒருவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [15 January 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45980

இச்செய்தியை வெளியிட்டுள்ள தம்பி அ.ர.ஹபீப் இப்றாஹீம், இப்புத்தகத்தின் ஆசிரியர் குறித்த மேலுமொரு தகவலை மறந்துவிட்டார் போலும்!

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் நமது காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆசிரியர் குழுவினருள் ஒருவர் என்பதே அது!

எம்மோடு இணைந்த எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் ஆக்கங்கள் தனியொரு நூலாக வெளியாகி, உலகப் புகழ் பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளதை நினைத்துப் பார்க்கையில் எனதுள்ளம் மிகவும் பூரிக்கிறது.

நமதூரில் மாற்று வாழ்வியல் சிந்தனையின் துவக்கம் அவர்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அவரது முயற்சிகள் இன்று வேர் விட்டு விழுதுகளாகிப் பல்கிப் படர்ந்து வருவது நம் கண் முன் சாட்சி!

எல்லாம்வல்ல இறைவன் அவரது எழுத்தாற்றலை இன்னும் உயர்த்தி, உலகம் முழுக்கவுள்ள தமிழ் பேசும் மக்களுக்குத் தேவையான அரிய பல நற்கருத்துக்களைக் கொண்டு சேர்க்க உதவியருள்வானாக... அதன் பலன்களை இப்பூவுலகிலும், மேலுலகிலும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved