Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:13:56 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19149
#KOTW19149
Increase Font Size Decrease Font Size
சனி, மே 6, 2017
“நடப்பது என்ன?” குழுமம் சார்பில் நகரில் 4 இடங்களில் போக்குவரத்து வழிகாட்டுப் பலகை! மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2381 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகரின் ஒருவழிப்பாதை வழித்தடத்தில் 4 இடங்களில் உயர்கோபுர வழிகாட்டுப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் – முதன்மைச் சாலை முனையில் நடைபெற்றது.

MEGA அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன் என்ற மீசை மாமா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, வரவேற்றுப் பேசினார். MEGA துணைச் செயலாளரும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.





குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணரும் – ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் துவக்கவுரையாற்றினார்.







போக்குவரத்துப் பாதையின் மீது ஒரு முஸ்லிமுக்குள்ள உரிமைகளையும், கடமைகளையும் விளக்கும் வகையிலும், தற்காலச் சூழலுக்கேற்ப அதைப் புரிந்துகொள்ளும் வகையிலும் அவரது உரை அமைந்திருந்தது.

தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம் பேசினார்.



“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் பொதுநல நடவடிக்கைகளைப் புகழ்ந்துரைத்ததோடு, அதன் ஆக்கப்பூர்வமான அனைத்துப் பணிகளுக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும், காயல்பட்டினத்தில் போக்குவரத்தை சீர்படுத்துவதை முதன்மைப் பணியாக எடுத்துச் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் பேசினார்.



கடற்கரை தூய்மை, நகரில் விஷக்காய்ச்சல் பரவலுக்கெதிரான நடவடிக்கை என தொடர்ந்து களமிறங்கிப் பணியாற்றுவதற்காக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நன்றி தெரிவித்த அவர், அதன் மக்கள் நலப் பணிகள் அனைத்திற்கும் நகராட்சி முழு ஒத்துழைப்பளிக்கும் என்றார்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நிறுவப்பட்டுள்ள – ஒருவழிப்பாதை போக்குவரத்து வழிகாட்டு உயர்கோபுரப் பலகைகளை – இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்.





தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டுதல், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டிய இரு சக்கர வாகனத்தில் அதிகளவில் மக்கள் செல்லல், கட்டுக்கடங்காத வேகத்தில் வாகனங்களை இயக்குதல், ஓட்டுநர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டுதல், நாற்சக்கர வாகனத்தில் இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணியாமல் பயணித்தல் உள்ளிட்ட செய்கைகளால் ஏற்படும் விரும்பத் தகாத பின்விளைவுகளை விளக்கிப் பேசிய அவர், இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்தி – அவர்களைப் பாதுகாப்பான முறையில் சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்க விழிப்புணர்வூட்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.



திருச்செந்தூர் டி.எஸ்.பி.யாக தான் பொறுப்பேற்ற பிறகு கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவென்று கூறிய அவர், பொதுவாக இதுபோன்ற உயர்கோபுர அறிவிப்புப் பலகைகளைக் காவல் துறைதான் நிறுவும்; அதற்காக அனுசரணையாளர்களைத் தேடும் என்றிருக்க, தாமாக முன்வந்து, முழு உழைப்பையும் கொடுத்து, தம் கைகளிலிருந்து பணத்தையும் செலவழித்து இதுபோன்ற நற்காரியங்களைச் செய்து, அதைத் திறந்து வைக்க தங்களையும் அழைத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றார் அவர்.

நிறைவாக, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் எம்.கே.ஜஃபருல்லாஹ் நன்றி கூறினார்.



ஒருவழிப் பாதையைப் பொதுமக்கள் முழுமையாக மனதிலேற்றி மதித்து நடக்கும் வரை – நகரில் காவல்துறை சார்பில் அன்றாடம் போக்குவரத்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என குழுமத்தின் சார்பில் காவல்துறையினருக்கு அவர் கோரிக்கை வைத்தார்.

“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கானதல்ல என்றும், காயல்பட்டினம் நகர்நலன் கருதி – அனைத்துப் பகுதி பொதுமக்களையும் இணைத்து, அவர்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகள் அடிப்படையிலேயே இக்குழுமம் இயங்குவதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு குழுமத்தால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.









ஒருவழிப்பாதையை உணர்த்தும் உயர்கோபுர அறிவிப்புப் பலகைகள் – காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் – முதன்மைச் சாலை முனை, ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹா – பெரிய நெசவுத் தெரு முனை, தாயிம்பள்ளி சந்திப்பு, பேருந்து நிலையம் – கூலக்கடை பஜார் முனை ஆகிய 4 இடங்களில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vilack sma (jeddah) [06 May 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45508

< ஒருவழிப் பாதையைப் பொதுமக்கள் முழுமையாக மனதிலேற்றி மதித்து நடக்கும் வரை – நகரில் காவல்துறை சார்பில் அன்றாடம் போக்குவரத்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என குழுமத்தின் சார்பில் காவல்துறையினருக்கு அவர் கோரிக்கை வைத்தார். > C & P

sea customs சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஆறுமுகநேரி செல்ல வேண்டும் . எப்படி செல்வது ?

Administrator:

(1) இரண்டு சக்கர வாகனங்கள் நேரே செல்லலாம் (மெயின் ரோட்டில்)

(2) மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் - சிங்கர் ஸ்டோர் எதிரில், இடது புறம் திரும்பி, லெப்பை தம்பி சாலை (கூழக்கடை பஜார்) வழியாக ஆறுமுகநேரி செல்லலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved