Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:11:01 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19016
#KOTW19016
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 5, 2017
ஹாமிதிய்யாவின் மறைந்த ஆசிரியரது தாயார் காலமானார்! ஏப். 06 காலை 11.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2994 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கும் மத்ரஸா ஹாமிதிய்யாவின் முன்னாள் ஆசிரியர் – மர்ஹூம் மார்க்க அறிஞர் மவ்லவீ எஸ்.ஏ.அஷ்ரஃப் ஃபாஸீ உடைய தாயார், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த நஹ்வீ எம்.கே.உம்மு ஹபீபா, இன்று 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83. அன்னார்,

மர்ஹூம் நஹ்வீ முஹம்மத் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ அவர்களின் மகளும்,

மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்கு அலீ அவர்களின் மனைவியும்,

இளைஞர் ஐக்கிய முன்னணி துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 98655 57912) உடைய சகோதரியும்,

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் மர்ஹூம் சொளுக்கு எஸ்.ஏ.அஷ்ரஃப் ஃபாஸீ, சொளுக்கு எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் தாயாரும்,

நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத் உடைய மாமியாரும்,

மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.), எம்.எல்.செய்யித் இப்றாஹீம் (எஸ்.கே.) ஆகியோரின் சிறிய தாயாரும்,

நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ (தொடர்பு எண்: +91 94881 01357), அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.டீ.கிழுறு முஹம்மத் ஃபாயிஸ், சொளுக்கு எம்.ஏ.முஹம்மத் தம்பீ ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் 06.04.2017. வியாழக்கிழமையன்று 11.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[விரிவான விபரம் இணைக்கப்பட்டுள்ளது @ 06:15 / 06.04.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Condolence
posted by Shaikna (Abu Dhabi) [05 April 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45429

Innalilahi wa inna ilayhi rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... ஹாமிதிய்யாவின் மறைந்த ஆசிரியரது தாயார் காலமானார்!
posted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (ஹுப்பள்ளி.) [05 April 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45430

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!

இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் கொடுப்பாயாக!

யா ரஹ்மானே ! இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!.

சாளைM.A.K.முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி
கர்னாடக மாநிலம்,
ஹுப்பள்ளி,
2017 ஏப்ரல் 6.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [06 April 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45431

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக – ஆமீன்.

தாஜுல் அனாம்.
மதீனா முனவரா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பயணம் செல்லும் நேரம் வந்துவிட்டதென அதிகம் என்னிடம் கூறுவார்...
posted by SK Shameemul Islam (Chennai) [06 April 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45432

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் பற்பல நினைவுகள் என் மனக்கண்ணில் தோன்றி என் கவலையை கிளர்கிறது.

புன்னகை மாறாத பேரரசி. குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதில் ஒப்பற்றவர். பிறரது பிரச்சினைகளில் ஈடுபட்டு சரிசெய்வதில் மேன்மை தங்கியவர். குடும்பத்தையும் வட்டாரத்தையும் அரவணைப்பதில் அரும்பண்பு கொண்டவர்.

இருக்கும்போது ஈந்துவப்பதிலும் இல்லாதபோதும் கொடுத்து மகிழ்வதிலும் பண்பாளர். பிடிக்காதவற்றையும் நயமாகச் சுட்டிக்காட்டுவதில் நாகரீகம் மிக்கவர்.

என் குழந்தைப்பருவம் முதல் என் ஒவ்வொரு அசைவிலும் வலுசேர்த்தவர். என் பாசமிகு தந்தையின் கடைசி காலம் வரை அவர்களையும் தன் பிள்ளை போல கொஞ்சி மகிழ்ந்தவர்.

ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களை பார்க்காமல் வந்ததில்லை. சிலபொழுது பார்க்காமல் வந்துவிட்டாள் பல நாட்கள் அது வடுவாக மனதில் தேங்கி நிற்கும். ஒவ்வொரு முறையும் என்னை உச்சி முகர்ந்து வாய் நிறைய பிரார்த்தனைகளாலும் வாழ்த்துக்களாலும் தன் இரு கைகளால் என் உடலெல்லாம் தழுவி நானாக விடுபடும் வரை வாழ்த்திக்கொண்டே இருப்பார். என் பிள்ளைகளையும் அப்படித்தான்.

மரணத்தை நினைத்து இவர் அஞ்சியதில்லை. கடைசி காலத்தில் அதை பயணம் செல்லும் நேரம் வந்துவிட்டதென அதிகம் என்னிடம் கூறுவார். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விதமாக பார்க்கும்போதெல்லாம் நல் அமல்களில் ஈடுபட்டுக்கொண்டும் தஸ்பீஹ் செய்துகொண்டுமிருப்பார். கொள்கை ரீதியான வேறுபாடுகளையும் நகைமுகத்துடன் வாதிட்டே கோபம் தீர்த்துக்கொள்வார். சிலபொழுது கோபப்பட்டாலும் எப்பொழுதும் முகத்தைக்கூட திருப்பிக்கொண்டதில்லை. அவர் செலுத்திய தாயன்பில் பஞ்சம் வைத்ததுமில்லை. அவரது தந்தை ஒரு மார்க்க அறிஞர். அவரது கணவர் (என் பாசமிகு அப்புமாமா மர்ஹூம் முத்துச்சுடர் மாத இதழில் தொடராக எழுதி வந்தவரான) மர்ஹூம் ஷெய்கு அலி மாமா அவர்கள் அக்காலத்திலேயே சொல்லாலும் எழுத்தாலும் சமூக அக்கரைக்கு வித்திட்ட சிந்தனைச்செம்மல்.

மகளார், பிள்ளைகளின் மறுமைக்கான தயாரிப்பிலேயே தன் வாழ்நாளை உலகப்பற்றில்லாமல் வீட்டிலேயே முடித்துக்கொண்ட, சீதேவி மனுசி பாசமிகு என் சாச்சி மர்ஹூமா முஹ்யித்தீன் பாத்திமா. நகைச்சுவையும் புன்னகையும் கொண்ட பாசமிகு என் சாச்சப்பா மர்ஹூம் அஷ்ரப் அலி ஆலிம் ஃபாஸி என ஒரு முழு மார்க்கப்பாங்கான குடும்பம்.

கருணையாளன் அல்லாஹ் அவர்கள் அனைவரின் இருப்பிடங்களையும் சுவர்க்கப்பூங்காவாக ஆக்குவானாக ஆமீன்.

எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய மாண்பாளன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து குற்றங்களை மன்னித்து கப்ரின் கேள்விகளை இலேசாக்கி பர்ஸஃக் வாழ்வையும் மறுமை வாழ்வையும் உயரிய சுவன வாழ்வாக ஆக்கித்தருவனாக.

மர்ஹூமாவை இழந்து வாடும் என்குடும்பத்தவர் யாவருக்கும் ஸப்ரன் ஜமீலாவை தந்தருள்வானாக.

நீங்கா கண்ணீரோடு, பேரன் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் & குடும்பத்தார், கொச்சியார் தெரு மற்றும் எல்.கே.காலனி. காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by kazhi alavudeen { ceylon fancy kazhi } (mayiladuthurai.) [06 April 2017]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 45433

இன்னா லில்லாஹி. வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [06 April 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45434

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எங்கள் குடும்பத்தின் மூத்த வழிகாட்டி...
posted by S.K.Salih (Kayalpatnam) [07 April 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45435

என் தந்தையின் சிறிய தாயார் என்றாலும், அவர்களை வளர்த்த தாயார்.

என் தந்தையார் தனது வாழ்நாளில் ஊரிலிருந்த நாட்களில் - நானறிய ஒரு நாள் கூட அங்கு சென்று தன்னை வளர்த்த இரு தாய்களையும் சந்திக்காமல் இருந்ததேயில்லை. அவ்வளவு பாசம்!

அதேயளவு பாசத்தை என்னிடமும், என் உடன்பிறப்புக்களிடமும் தொடர்ந்து காண்பித்து வந்தவர்கள்தான் இந்தச் சீமாட்டி அவர்கள்.

மிகுந்த நகைச்சுவை உணர்வுகொண்டவர்கள். சில காலம் படுக்கையில் அவதியுற்றபோதும் கூட, தன்னைப் பார்க்க வருவோரிடமெல்லாம் - தன் கவலையை மறந்து, தனது வழமையான நகைச்சுவை உரையாடலை நடத்துவார்கள்.

தன் மரணத்தை எதிர்பார்த்து இரண்டு செட் கஃபன் துணியும் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அவர்களைக் குளிப்பாட்டி கஃபன் துணியெல்லாம் அணிவித்த பிறகு கிடைத்து - மிகவும் கைசேதமுற்றோம். என்றாலும், அவர்கள் ஆசைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் வைத்திருந்த துணியில் ஒரு பகுதியையும் - அணிவித்த கஃபனுடன் சேர்த்துக்கொண்டோம்.

அதுபோல, தன் மறுமை நலனுக்காக 100 முறை திருமறை குர்ஆனை ஓதி முடித்து கத்ம் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

தன் கடைசித் தருணங்கள் முழுக்க இறை தியானத்திலேயே கழித்து - நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளார்கள்.

இதுபோன்ற சீமாட்டிகள் இன்னும் ஓரிருவர்தான் கண்களில் தென்படுகின்றனர். கால மாற்றத்தால் காணாமல் போகும் நல்முத்துக்கள், நமதூரில் மீண்டும் வளர்ந்தோங்க அல்லாஹ் அருள்வானாக!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா (வாப்பிச்சா) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூமா அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [07 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45438

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எனது பாசத்திற்குரிய மாமி நஹ்வீ எம்.கே.உம்மு ஹபீபா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மிகச் சிறந்த ஆலிமா மார்க்கச் சட்டங்கள்.நுணுக்கங்கள் குடும்ப பாரம்பரிய செய்திகள் , மலரும் நினைவுகள் இவைகளை நல்ல ஞாபகத்துடனும் ,சிரிப்புடனும் , நகைச்சுவை உணர்வுடனும் சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என வாழ்ந்து காட்டியவர்கள்.

இறைவணக்க வழிபாடுகளில் திக்ர்,சலவாத்து ,மௌலித் ,புர்தா என அனைத்திலும் திறமை பெற்றவர்கள்.

ஒவ்வொரு சபரிலும் அவர்கள் இல்லம் சென்று சந்தித்து உரையாடி விடைபெறும்போது அவர்களின் வாழ்த்துக்களையும் இனிய துஆக்களையும் பெற்றுக் கொள்ள தவறமாட்டேன்.

நமது சொளுக்கார் ,நஹ்வி குடும்பத்தில் ஒரு சிறந்த ஒரு சீதேவியை இழந்து விட்டோம்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா (மாமி ) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

மர்ஹூமா அவர்கள் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் மேலான சபாஅதை பெறவும் அன்னாரோடு ஜன்னத்தில் அசல் பாகத்தில் குடியுருக்க வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!!!!!

மர்ஹூமா அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [08 April 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45441

இன்னா லில்லாஹி. வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை – மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!

மேலும், நிறைய முறை என் மனைவியுடன் அவரகள் இல்லம் சென்று உரையாடி வந்துள்ளேன். அவரகள் என்னையும் விட்டு வைக்கவில்லை, அவர்ஹளுக்கே உரிய பாணியில் கலாய்த்தது என் மனதில் நிழலாடுகிறது. நல்லபடி துஆ செய்து, வழி அனுப்பியது மறக்க முடியாதது. அவர்ஹளை நான் முதல் முறை சந்தித்தது மக்காவில், அந்த சீதேவி மனுஷியின் வபாத் செய்தி அறிந்தது மதினாவிற்கு போகும் வழியில், என் வாழ் நாளில் மறக்க முடியாத பாசத்துக்குரிய மாமி. ஒய். மருமகனே! சுகமா இருக்கீறீரா? என்று அடிக்கடி கூறுவர்ஹல்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக ஆமீன், ஆமீன், யா ரப்பால் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ்.எச்.
எஸ். எச். உம்மு ரஷீதா ஆலிமா முஅஸ்கரிய்யா,
எஸ். இ. முஹம்மது ஹரீரி.
எஸ். இ. ஹுசைன் சலாஹுதீன்.
எஸ். இ. ஹம்தான் இபுறாஹிம்.
எஸ். இ. ஹஸ்ஸான் இபுறாஹீம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (dubai) [09 April 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45449

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved