Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:28:25 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18174
#KOTW18174
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 13, 2016
இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4314 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர், காயல்பட்டினம் திருச்செந்தூர் வீதியை (வாவு நகரை)ச் சேர்ந்த வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், இன்று (13.08.2016. சனிக்கிழமை) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் வாவு காதிர் ஸாஹிப் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சாவன்னா அபுல் ஹஸன் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் டபிள்யு.கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, மர்ஹூம் டபிள்யு.கே.எஸ்.முஹம்மத் சுலைமான் ஆகியோரின் சகோதரரும்,

டபிள்யு.எம்.என்.காதிர் ஸாஹிப் உடைய தந்தையும்,

வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.ஏ.அஷ்ரஃப், மர்ஹூம் ஏ.எச்.எம்.ஷாஹுல் ஹமீத்,ஏ.எச்.நெய்னா ஸாஹிப், ஏ.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மச்சானும்,

வாவு முபாரக் உடைய மாமனாரும்,

வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், வாவு எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘ஆசிரியர்’ S.M.அஹ்மத் சுலைமான்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

13.08.2016. சனிக்கிழமையன்று 15.30 மணியளவில் சேர்க்கப்பட்ட (நல்லடக்கம் குறித்த) கூடுதல் தகவல்கள்:-

அன்னாரின் ஜனாஸா, திருச்செந்தூர் வீதியிலுள்ள (வாவு நகர்) அவரது இல்லத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிறைக்கொடி போர்த்தப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

ளுஹ்ர் தொழுகை நிறைவுற்றதும், 13.00 மணியளவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, 10 நிமிடங்களில் குருவித்துறைப் பள்ளியைச் சென்றடைந்தது. அங்கு ஜனாஸா தொழுகையை, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழிநடத்தினார்.

13.30 மணியளவில் குருவித்துறைப் பள்ளியின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ துவக்க துஆ இறைஞ்ச, ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் தல்கீன் ஓதினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ நிறைவு துஆவை இறைஞ்சினார்.

பின்னர், குருவித்துறைப் பள்ளி - வெளிப்பள்ளி வளாகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.



அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ‘முத்துச்சுடர்’ ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர், மறைந்த வாவு நாஸர் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.







மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், அரபியிலும் - தமிழிலும் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

ஜனாஸா தொழுகை, நல்லடக்கம், இரங்கல் கூட்டம் உள்ளிட்ட அனைத்திலும்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாநகர நிர்வாகிகளான நவ்ரங் ஸஹாபுத்தீன், திரேஸ்புரம் மீராசா உள்ளிட்ட கட்சியினரும்,

நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் - அங்கத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

வாவு நாஸர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.







[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:30 / 13.08.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இறைவனின் நாட்டம்...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [13 August 2016]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 44427

அன்பு சகோதரரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் கவலை... வல்ல அல்லாஹ் சுபஹானஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிரதஸுல் அஃலாவில் வீற்றிருக்க செய்வானாக... அன்னாரது கப்ரை பிரகாசமாகவும் விசாலமாகவும் சொர்க்கத்து பூஞ்சோலையாகவும் ஆக்கி வைப்பானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்... குறிப்பாக அன்னாரது மகனார் என் அருமை நண்பர் காதர் சாஹிபுக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன்

தாவூது மற்றும் குடும்பத்தினர்
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 August 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44428

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அல்ஹாஜ் வாவு நாஸர் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அல்ஹாஜ் வாவு காதர் சாஹிப் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹூம் அல்ஹாஜ் வாவு காதர் சாஹிப் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

மாஷா அல்லாஹ் ...ஊரின் .பலவைகயான பொறுப்புகளில் ஒழுக்கமுடன் ,, யார் மனதையும் கொஞ்சமும் நோகடிக்காது ....அங்கம் வகித்து மிகவும் நற்பெயருடன் ,,கலக்கமற்று ... சிறப்பாக ஊர் மக்களின் நலனுக்காகவே பணியாற்றியவர்கள் .....ஒரு பண்புள்ளவரை நமது ஊர் இழந்து விட்டது .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக.....!
posted by எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (Chennai) [13 August 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 44429

சிரித்த முகம், சீதேவி மனம், உதவும் கரம், மக்களுக்காக உழைக்கும் மாண்பு, யாரையும் பகைக்காத உள்ளம், காயல்மாநகர் முஸ்லீம் லீக் என்றாலே நம் நெஞ்சில் உடனுக்குடன் நிறைந்து வரும் நபர், மார்க்க விஷயங்களில் விறுவிறுப்பு என பற்பல நற்குணங்கள் உள்ளடங்கிய எம் நெஞ்சிற்கினிய பெருந்தகையின் திடீர் மரணம் நம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் ஃகபூல் செய்து பிழைகள் அனைத்தையும் பொறுத்து மண்ணரை கேள்வி கணக்குகளை இலேசாக்கி உயர்ந்த சுவனச்சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக.

மேலும் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தவர் அனைவருக்கும் முஸ்லிம் லீக்கின் இனிய அங்கத்தவர்களுக்கு மேலான ரஹ்மான் சப்ரன் ஜமீலாவை நல்கி அருள்வானாக, ஆமீன்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் &
எஸ்.கே.குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamed abdul kader (Dubai) [13 August 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44431

Innalillahi wainnailaihe rajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புன்னகையின் இருப்பிடம்!
posted by S.K.Salih (Kayalpatnam) [13 August 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44433

தன் மலர்ந்த முகத்தால் அனைவரையும் காலமெல்லாம் கவர்ந்தவர்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை ஆகிய இரண்டும் அவர்களது இரண்டு கண்கள் எனலாம். அப்படி இவ்விரு அமைப்புகளிலும் தன்னாலான உழைப்பை நிறைவாக வழங்கியவர்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளராக அடியேன் இருந்தபோது, நகர கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் காலங்களிலெல்லாம் அதைச் செய்தியாக்கி, ஊடகங்களுக்கு அனுப்பிவிட்டு, காயல்பட்டணம்.காம் தளத்திலும் வெளியிடுவேன்.

ஆனால், அதே வாசகங்களை நாஸர் மாமா அவர்கள் ‘மாங்கு’ ‘மாங்கு’ என்று மினிட் புத்தகத்தில் எழுதி சிரமப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு,

“ஏன் மாமா அவதிப்படுறீங்க...? செய்திக்காக எந்த வாசகத்தை வடிவமைக்கிறேனோ, அதை மினிட் புத்தகத்தில் பதிவதற்கேற்ப வாசகங்களை மாற்றியமைத்து, ப்ரிண்ட் எடுத்துத் தருகிறேன்... அதை அப்படியே வெட்டி, மினிட் புத்தகத்தில் ஒட்டிவிட்டு. தங்களது கைச்சான்றை அதில் பதிவு செய்யுங்கள்” என்றேன்.

அதன் பிறகு நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களின் வாசகங்களையும் அடியேனின் உதவியுடன் அவர்கள் அவ்வாறே செய்து வந்தார்கள்.

எனது பணிப்பளு, “வழமையான“ மறதி போன்றவை காரணமாக நாட்கள் தள்ளிப்போகும் காலங்களில், சளைக்காமல் எனது கைபேசியைத் தொடர்புகொண்டு கேட்பார்கள்... பெரிய மனிதர் கேட்கிறார்கள் என்றவுடன் எனது இதர பணிகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு, அவர்களுக்கு ஆக வேண்டியதைச் செய்துகொடுக்கும் பாக்கியம் பெற்றவனாக இருந்தேன்.

நடையில் அவர்களின் வேகத்தை யாரும் விஞ்ச இயலாது என்று கூறுமளவுக்கு வேகமாக நடக்கக் கூடியவர்கள். எனது வீட்டிற்கும் பலமுறை நடந்தே வந்து, மினிட் புத்தகத்திற்குத் தேவையான ஆவணங்களை வாங்கிச் சென்றுள்ளார்கள்.

முஸ்லிம் லீக், பைத்துல்மால் தவிர - கே.எம்.டீ. மருத்துவமனை, ஐக்கியப் பேரவை என தனது பணிகளை விரிவாக்கிக் கொண்டு, தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கியவர்கள்.

கடந்த சில மாதங்களாக சுகவீனப்பட்டு, மருத்துவமனை - வீடு என மாறி மாறி அவர்களது கடைசி கால வாழ்வு அமைந்துவிட்டது. மிகவும் அவதிப்பட்டுவிட்ட அவர்கள், இன்று வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மாமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் - எனதன்பு நண்பன் வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [13 August 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44434

அன்பு சகோதரரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் கவலை...

வல்ல அல்லாஹ் சுபஹானஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாரது நற்செயல்களை ஏற்று மேலான ஜன்னத்துல் ஃபிரதஸுல் அஃலாவில் வீற்றிருக்க செய்வானாக... அன்னாரது கப்ரை பிரகாசமாகவும் விசாலமாகவும் சொர்க்கத்து பூஞ்சோலையாகவும் ஆக்கி வைப்பானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்... சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல ரஹ்மான் வழங்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [13 August 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44435

அஸ்ஸலாமு அலைக்கும்.

" இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அல்ஹாஜ் வாவு காதர் சாஹிப் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, ஜன்னத்துல் பிருதோஸ் என்னும் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம் எஸ்.எச். +குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [13 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44436

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [13 August 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 44437

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! பார்க்கும் நேரமெல்லாம் பரிவுடன் நலம் விசாரிக்கும் ஒரு பண்பான மனிதர்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எர்ன்ற நற்பவியை வழங்கிடுவானாக அமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரில் துவளும் குடும்பத்தாருக்கு "சபுரன் ஜமீலா" என்ற அல்லாஹ்வின் அழகிய பொறுமையை கொடுத்தருவானாக என்று வேண்டியவனாய் என் ஸலாத்தகினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கவும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [13 August 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 44438

சிரித்த முகம், சீதேவி மனம், உதவும் கரம், மக்களுக்காக உழைக்கும் மாண்பு, யாரையும் பகைக்காத உள்ளம், காயல்மாநகர் முஸ்லீம் லீக் என்றாலே நம் நெஞ்சில் உடனுக்குடன் நிறைந்து வரும் நபர், மார்க்க விஷயங்களில் விறுவிறுப்பு என பற்பல நற்குணங்கள் உள்ளடங்கிய எம் நெஞ்சிற்கினிய பெருந்தகையின் திடீர் மரணம் நம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் ஃகபூல் செய்து பிழைகள் அனைத்தையும் பொறுத்து மண்ணரை கேள்வி கணக்குகளை இலேசாக்கி உயர்ந்த சுவனச்சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக.

மேலும் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தவர் அனைவருக்கும் முஸ்லிம் லீக்கின் இனிய அங்கத்தவர்களுக்கு மேலான ரஹ்மான் சப்ரன் ஜமீலாவை நல்கி அருள்வானாக, ஆமீன். யா ரப்பல் ஆலமீன் !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [13 August 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44439

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [13 August 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44440

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

எளிமை மற்றும் பொது சேவையின் இலக்கணமாக வாழ்ந்த அல்ஹாஜ் வாவு K.S. முஹம்மது நாசர் அவர்கள் மறைவு காயல் மற்றும் முஸ்லீம் லீக் பேரியக்கத்துக்கு பேரிழப்பாகும்.பொது வாழ்வில் நேர்மையும்.தூய ஒழுக்கமும்,இனிய பண்பும் கொண்ட தன்னிகரற்ற சேவகனாக வாழ்ந்து வந்தார்கள்.ஊரின் சேவை அமைப்புகளில் அவர்கள் ஆற்றிய சேவை வருங்கால இளைஞ்சர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது எனலாம்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை 'கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெரிவித்து கொள்கிறேன் …..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka ) [13 August 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44441

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

நகர முஸ்லிம்லீக் தலைவர் ஹாஜி வாவு நாஸர் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். நமதூர் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் பொதுவேலைகளில் ஈடுபட்டவர்.அமைதியான சுபாவமும் நல்ல குணமும் உடையவர்.அவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பீடாகும்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொறுமயைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [13 August 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44444

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நல்லசமூகசேவையாற்றி,அனைவர்மனதிலும் அன்பிடம்பிடித்த நல்லமனிதர், வல்ல இறைவன் தன் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டான் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் எல்லா நற்கருமங்களையும்ஏற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையைவிசாலவெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் அவனுடைய அழகுக்காடசியுடன்,நல்லடியார்களுடன் உயர்ந்த சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [13 August 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44447

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [14 August 2016]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44448

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Hassan Sulaiman (Singapore) [14 August 2016]
IP: 165.*.*.* Singapore | Comment Reference Number: 44449

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [14 August 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44450

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

நகர முஸ்லிம்லீக் தலைவர் ஹாஜி வாவு நாஸர் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். நமதூர் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் பொதுவேலைகளில் ஈடுபட்டவர்.அமைதியான சுபாவமும் நல்ல குணமும் உடையவர்.அவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பீடாகும்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொறுமயைக்கொடுப்பானாக.ஆமீன்

தாஜுல் தானாம்
மதீனா முனவரா சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Faizal Rahman (Doha-Qatar) [14 August 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44452

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

நகர முஸ்லிம்லீக் தலைவர் ஹாஜி வாவு நாஸர் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். நமதூர் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் பொதுவேலைகளில் ஈடுபட்டவர்.அமைதியான சுபாவமும் நல்ல குணமும் உடையவர்.அவரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பீடாகும்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக் கொடுத்தருள்வானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கும் நண்பன் காதர் சாஹிபிற்கும் ஸபூர் எனும் பொறுமயைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...Condolenses
posted by Hamed Sultan (Tarapur- Maharashtra) [16 August 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 44457

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு

எனது ஆருயிர் இனிய நண்பரும் பள்ளி தோழரும் ஆன் நண்பர் அல்ஹாஜ் கே.S நாசர் அவர்களின் உபாது அறிந்து கவலை கொண்டேன். இன்னாலில்லாஹி வ ennailaihi ராஜிஊன். .

மர்ஹூம் அவர்களும் நானும் LK எலிமெண்டரி பள்ளியிலும் KA உயர்நிலை பள்ளியிலும் ஒன்றாகவே படித்து வந்தோம்.(1961 ESLC & 1964 SSLC) பள்ளி படிப்பில் மர்கூம் அவர்கள் முதல் மாணவனாக வருவது உண்டு..

பள்ளி பருவத்தில் இருந்தே அவர்களுள்க்கு பிறரை நேசிப்பதும் படிப்பில் உதவி சேயுவதும் தன்னுடைய கடமை என்று நினைத்த கோமகன். இன்று நம் எல்லோரையும் விட்டு இறைவனிடம் சேர்த்துவிட்டார்கள்.

அன்னாரின் நற்பணிகள் நம் அனைவரின் நெஞ்சத்தில் நின்று இருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பாவங்கள் இருப்பின் அவிகளை எல்லாம் மன்னித்து மறுமை நாளில் அல்லாஹ் வின் அர்சில் கீழ் இடம் கொடுத்து கவ்தார் தடாகத்தின் நீரை அருந்த செய்து மித பெரிய உன்னதமான சொர்கம் என்கிற ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கிட பிராத்தனை செய்தவனாக விடைபெறுகிறேன்.

என்னுடை ஆழ்ந்த எறங்களிலும் சலாதனையும் அன்னாரின் குடும்ப மக்களுக்கு தெரிவித்து கொண்டு மீண்டும் விடை பெறுகிறேன் அலைக்கு முஸ்ஸலாம்.

ஹமீது சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved