Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:01 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18166
#KOTW18166
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 10, 2016
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கக் கூட்டம்! பிரமுகர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2177 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை - அரசு, பொதுமக்கள் இணைந்து நிறைவேற்றுவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, நோயாளிகள் நலச் சங்கம் இயங்கி வருகிறது.

அதன் கலந்தாலோசனைக் கூட்டம், இன்று காலை 11.00 மணியளவில் மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி கூட்ட அறிமுகவுரையாற்றினார்.



தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி 2, குழந்தைகளின் இதயத்துடிப்பைக் கண்டறிய உதவும் கருவி, குடிநீரை சூடாக்கும் கருவி, சாமான்களைப் பாதுகாக்க இரும்பு பீரோ, நாற்காலிகள் ஆகிய பொருட்கள் அரசு மருத்துவமனைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாகவும், நோயாளிகள் காத்திருப்பு அறை, சிகிச்சை அறைகளில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையின் இந்த நோயாளிகள் நலச் சங்கத்திற்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைவராகவும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செயலாளராகவும், நகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனையை உள்ளடக்கிய பகுதிகளைச் சேர்ந்த 2 நகர்மன்ற உறுப்பினர்கள் அதன் உறுப்பினர்களாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், நோயாளிகள் நலச் சங்கத்தின் நோக்கம், செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

அரசு மருத்துவமனைக்குத் தேவைப்படும் வசதிகளை அரசு நிதி, பொதுமக்கள் தரும் நிதி ஆகிய இரண்டையும் கொண்டு செய்து முடிப்பதே இச்சங்கத்தின் நோக்கமெனக் கூறிய அவர், இதுநாள் வரை - கேட்காலமலேயே தேவையான உதவிகளைச் செய்துகொண்டிருப்பதற்காக நகரின் தனவந்தர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இனியும் தேவைப்படும் உதவிகளையும் அரசுடன் இணைந்து தாராளமாகச் செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இரண்டு கழிப்பறைகள் கட்டித் தந்தமை, மின் விசிறிகள், மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றை அண்மையில் வாங்கித் தந்தமைக்காக நகரப் பிரமுகர்களுக்கு அவர் நன்றி கூறினார்.



இக்கூட்டத்தில், நகரப் பிரமுகர்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன் நன்றி கூறினார்.

தகவல்:
M.A.K.ஜைனுல் ஆப்தீன்


அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. NE
posted by Zainul Abdeen (Dubai) [10 August 2016]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44412

மாஷா அல்லாஹ் !! இது போன்ற சில நல்ல விஷயங்கள் நம்மத்தூரில் ஆங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் .

நமதூரை சார்ந்த தனவந்தர்கள், தன்னார்வலர்கள் இதை முன்னின்று செய்துகொண்டு இருக்கிறார்கள் . ஆனால் எதையும் விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் இதையும் "whatsup " குழுமத்தில் விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் நகர்மன்ற தலைவியை இதற்க்கு அழைக்கவில்லை,

காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன் மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள் , ஏன் என்றால் எதிரிக்கு எதிரி நண்பனாம் அந்த பழமொழி வேற.

காந்திராஜன் அவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர் என்ற முறையில் வந்திருக்கிறார் இங்கே. இது அவர்களின் அறிவீனம் என்றுதான் நினைக்க தோணுது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. .மாஷா அல்லாஹ்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [11 August 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44416

மாஷா அல்லாஹ்! இதுபோன்ற நல்ல காரியங்களை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும்!

ஒரு சகோத்தரர் கருத்து பதிவாக்கியிருக்கிறார்.நகர்மன்ற தலைவியை ஏன் கூப்பிடவில்லை என்றும் சிலர் குறை கூறுகிறார்கள் ,அதை "whattsapp" பிலும் விமர்சித்து இருக்கிறார்கள் என்று சாடியுள்ளார்!.

நகராட்சி தலைவி என்பவர் இந்த நகரத்தின் தலைவியாவார். பெரும்பான்மை மக்களாலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவி, இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு அவருக்கு அழைப்புவிட்டால் என்ன என்று கேட்பது ஒரு விமர்சனம் என்றால்? விமர்சனத்திற்குறிய உண்மையான பொருள் புலப்படவில்லை!

மனித,புனித குணத்திற்கு சொந்தக்காரரும்,அந்த அமைப்பின் அங்கத்தினருமான காஞ்சிரா ராஜன் கலந்துகொண்டதற்கு குயிய்யோ,முயிய்யோ வென்று கதறுவது அவர்களின் அறிவீனம் என்று அந்த சகோதரர் தங்களின் அறிவுமுதிர்ச்சியின் முத்துக்களை உதிர்ந்திருக்கிறார்!

உண்மைதான் காதிராஜன் எப்படிப்பட்டவர் என்ற புகழ்மாலை வாசகங்கள் ஊரின் ஒவ்வொரு சுவர்களிலும் ஒட்டப்பட்டு இருப்பதை ஊர்மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள்.அவரை பல்லக்கில் தூக்கிவைத்து நடத்தும் நாடத்தை நட த்துபவர்களின் தரத்தையும் ரசிக்கத்தான் செய்கிறார்கள்!

ஊருக்கு ஒருவிடிவுகால வெளிச்சம் வெகுதூரத்தில் இல்லை வெகு,வெகு விரைவில் வரத்தான் போகிறது அதுவும் அடுத்து வரும் புனர்காலைப் பொழுதாகாகக்கூட இருக்கலாம்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [11 August 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44420

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊர் தனவந்தர்கள் & ஒரு சில நபர்களின் ..பெரும் தன்மையை மனதில் கொண்டு பாராட்டிய தலைமை DR அவர்களை . நாம் பாராட்டுவோம் ....

எந்த ஒரு விளம்பரமே இல்லாமல் நம் ஊர் கொடைவள்ளகள் இப்படி தன் ஆர்வத்தோடு நம் ஊர் மக்கள் நலனுக்காக அரசு மருத்துவ மனைக்கு உதவிகள் செய்பவர்களை மனம் உகந்து பாராட்டி ..துவா ''செய்வோம் ....

நம் ஊரில் இன்னும் மனிதாபிமானம் '' உள்ளம் படைத்தவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் ....

நமது ஊரின் உள்ளூர் / வெளி நாடு ,, உள்நாடு ,, பொதுநல அமைப்புக்கள் நமது ஊர் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகாரணங்களை துரிதமாகவே கவனத்தில் கொண்டு ....வாங்கி கொடுத்தால் சிறப்பானதே .....

நம் தலைமை மருத்துவமனை DR அவர்களின் . இந்த கனிவான வேண்டுகோளை ...ஊர் பொதுநல அமைப்புக்கள் பண்போடு கவனத்தில் கொள்ளணும் ..இதுவும் ஒரு சிறப்பான நல்ல செயலே .......நோயற்ற வாழ்வை வல்ல நாயன் நம் யாவருக்கும் தந்தருள்வானாகவும் ஆமீன்......

நம் சகோதரர் .ஒருவரின் கருத்துப்படி ...நம் ஊர் நகர் மன்ற தலைவி அவர்களை அழைக்காதது வருத்தப்பட கூடியது தான் .....இதுவும் ஒரு அரசு சம்பந்தமான நிகழ்வு தானே ......அழைப்பதில் என்ன தவறு ....

ஊரின் நலனில் நம் நகர் மன்ற தலைவி அவர்களுக்கும் எப்போதும் அக்கறை உண்டு ..நல்ல காரியத்துக்கு ..ஒரு திறமையானவரை அழைப்பதில் ...கருத்து வேறுபாடு ஏன்....????

இப்போதைய காலத்தில் அதிகமான வேகத்தில் தகவல் தொடர்ப்பு ...மக்களுக்கு ஏற்படுத்துவது ... Whatsapp தான் ..இதுவும் எனக்கு நமது ஊர் WHATSAPP குழுமம் ....மூலமாகவே மிகவும் துரிதமாகவே வந்தது ..... நகர் மன்ற தலைவி அவர்கள் சம்பந்தமாக எந்த ஒரு செய்தியாக இருப்பின் துரிதமாகவே எனக்கு வந்து விடுகிறது ....காரணம் என்னவோ .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved