Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:02 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17947
#KOTW17947
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 17, 2016
தம்மாம் கா.ந.மன்றம் & இக்ராஃ இணைந்து - கோடை விடுமுறையில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு! திரளான மாணவர்கள் பயன்பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றம் & காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, கடந்த கோடை விடுமுறையின்போது, மாணவ-மாணவியருக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்புகளை நடத்தி முடித்துள்ளன. இவற்றில் திரளான மாணவ-மாணவியர் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும்,இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். அது மட்டுமல்ல ஏராளமான மாணவர்கள் தமக்குள் திறமையிருந்தும் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கல்லூரிகளில் பின்னடைவை சந்திப்பதையும், பட்டப்படிப்பை முடித்து விட்டு பணிக்குச் செல்கையில் நேர்காணலில் (Interview) தோல்வியடைந்து மனம் வருந்துவதையும், பணிசெய்யும் நிறுவனங்களில் பதவி உயர்வு (promotion) கிடைப்பதற்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது ஒரு தடையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது.

இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து 2016 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) பள்ளிகளின் கோடை விடுமுறையில் நடத்தியது. இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.





இந்த கோடை கால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 05-05-2016 அன்று துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக இக்ராஃ கல்விச் சங்கத்தின் இணைச் செயலாளர் அல்ஹாஃபிழ் S.K.ஸாலிஹ், தம்மாம் காயல் நல மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இதன் முக்கியத்துவம், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விரிவாக விளக்கி, இந்த நல்ல வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு பலனடையுமாரும், குறித்த நேரத்தில் வருகை தர வேண்டியதன் அவசியத்தையும், கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்கங்கள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.



நிகழ்ச்சியின் துவக்க நாளன்று பிரபல ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியாளர் திரு. சுப்ரமணியன் Why English? Why Now? என்ற தலைப்பில் பாடம் நடத்தினார்.



அதனைத்தொடர்ந்து திரு R.உதயவேல் தினமும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார். இந்த ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 05-05-2016 முதல் 30-05-2016 வரை நடை பெற்றது.





இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:45 வரை கீழ நெயினா தெருவில், இக்ராஃ அலுவலகத்திக்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்திலும், மாணவிகளுக்கு மதியம் 02:00 மணி முதல் 04:30 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றது.இதில் 22 மாணவர்களும், 12 மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சி குறித்தும், நிறை- குறைகள் குறித்தும் கருத்துக் கேட்டு மாணவர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம் அளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகள் நன்முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும் ''வரும் காலத்தில் எழுதுவதற்கு மேஜை மற்றும் கழிவறை வசதிகள் செய்து தருமாறும்'' மாணவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்த spoken English course தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், பயிற்சியாளர் திரு R.உதயவேல் அவர்கள் மிகவும் அழகான முறையில், தெளிவாக புரியும் படி பாடம் நடத்தியதாகவும், இந்த கோடை விடுமுறையில் தாங்கள் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதனை ஏற்பாடு செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கும், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மாணவர்களிடம் பேசிய இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகவும், கருத்துக் கேட்புப் படிவத்தில் மாணவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வரும் வருடங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும், எங்களால் நடத்தப்படும் இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் எப்போதும் பங்குபெற்று பயனடையுமாறும் மாணவர்களை கேட்டுக் கொண்டதோடு, ,ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பை நடத்திய திரு R.உதயவேல் அவர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.



அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து இறுதியாக ஆசிரியருடன் குழுவாக இணைந்து படம் எடுத்துக் கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்புக்கு மாணவர்களிடமிருந்து ரூபாய் 400 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மீதமுள்ள கட்டணங்கள் மற்றும் செலவுகளை தம்மாம காயல் நற்பணி மன்றம் பொறுப்பேற்றுக்கொண்டது. கலந்துகொண்ட மாணவர்களுக்கு file, Pen, Notes, course kit, Refreshments வழங்கப்பட்டது. இந்த 2016 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM ஏற்பாடுகளை இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, அலுவலகப் பொறுப்பாளர் மஹ்மூது புஹாரி மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்ற செயலாளர் செய்யது இஸ்மாயில் ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM -2014 ஆம் வருடம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாத காலம் நடை பெற்றது என்பதும், இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:15 வரை மற்றும் 11:30 முதல் மதியம் 01:30 வரை இரண்டு கட்டங்களாக பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்ல அரங்கிலும், மாணவியருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றதும், அதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து பயனடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.)


தம்மாம் கா.ந.மன்றம் & இக்ராஃ இணைந்து 2014ஆம் ஆண்டில் நடத்திய ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தம்மாம் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எல்லைகள் இல்லா உலகம் என் எண்ணமும் அதுபோல் விளங்கும்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [17 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44050

நமதூர் மக்கள் கல்வியில் முன்னேற எதிர்காலத்தில் வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள கடல் கடந்து வாழும் காயல்பட்டினம் உடன்பிறப்புக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். இணையதளங்களை சொடுக்கி பார்த்தால் எவ்வளவு செய்திகள் சுபுஹானல்லாஹ்.

இக்ரா தோன்றிய காலம் முதல் இந்த வெளிநாடு வாழ் காயல் நலமன்றங்கள் செய்கின்ற கல்வி சேவை இங்கு மக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு அதன் பயனை அனுபவித்துக் கொண்டு முன்னேறி வாழ்க்கையில் வளமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் கருதுக்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்காக உழைப்பவர்களின் மனங்களில் தாங்கள் செய்யும் உதவி முயற்சி சரியான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற ஆத்ம திருப்தியும் இன்னும் செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் அதிகரிக்கும்.

சில வேளைகளில் நமக்கு விரக்தியும் வருகிறது. இவ்வளவு வசதி வாய்ப்புகள் மாணவ மாணவிகளின் காலடியில் வந்து விழுந்தும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இலவசங்களின் பரிணாமமும் அதுதான். எங்கே என்ன பொருள் இலவசமாக கிடைக்கிறதோ அதற்கு மதிப்பு இருப்பதில்லை.

PRECIOUS THINGS ARE NOT CHEAP .
CHEAP THINGS ARE NOT PRECIOUS.

எங்களை படிக்க வைக்க எங்கள் பெற்றோர்கள் என்ன பாடு பட்டார்கள். யார் யாரிடமெல்லாம் மடிப் பிச்சை கேட்பதுபோல் கெஞ்சினார்கள். இவனை படிக்கவை, உன் மகளுக்கு இவனை மாப்பிள்ளையாக எடுத்துக் கொள் என்று பெரும் தனவந்தர்களிடம் அவர்கள் தங்கள் மக்கள் படிப்புக்காக ஒரு பெரும் விலை கொடுத்தார்கள் என்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.

கடந்த கால கசப்பான அனுபவங்களையும் இந்த இக்ரா உறுப்பினர்கள் நிர்வாகத்தினர் காயல்நல மன்ற உறுப்பினர்கள் இந்த புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும். அல்லாஹ் உங்கள் எல்லோரையும் சிறப்பாக்கி வைப்பானாக நீங்கள் கல்விக்காக செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் சதகதுன் ஜாரியாவாக உங்கள் செய்லேட்டில் எழுதப்படும் என்பதில் ஐயமில்லை.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்
ஆலயம் பதினாயிரம் அமைத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவித்தல் என்று தமிழ் நூல்கள் சொல்லும்.

சிறைபிடிக்கப் பட்ட கைதிகளை விடுதலை செய்ய அவர்கள் தங்களுக்கு தெரிந்த சில சூராக்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் . திருமண பெண்ணுக்கு மகர் கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் தான் மணக்கவிருக்கும் பெண்ணுக்கு திருமறையை ஓதிக் கொடுப்பதையே மகராக அறிவித்த நபிகள் நாயகம் இந்த கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறோம். உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று இரண்டுவிதமாக பிரித்துப் பார்க்கும் காலம் இது ஆனால் இரண்டும் ஒன்றாகவே பிரிக்க முடியாமல் இரண்டறக் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் நபி வழி. அரபி அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்த வேற்று மொழிகளை கற்கும்படி நபி தோழர்களை நபிகள் நாயகம் வற்புறுத்திய செய்திகளை உலமாக்கள் சொல்லி காட்டுகிறார்கள். பணத்தை செலவழிப்பதைவிட இப்படி நேரத்தை ஒதுக்கி சேவை செய்வதற்கு ஒரு தியாக உள்ளம் வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

எனவே பெற்றோரும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி காயல்நல மன்றங்கள் இக்ரா இணைந்து நடத்தும் இந்த அரிய நிகழ்சிகளில் தங்கள் மக்கள் கலந்து பயனடைய வேண்டும் என்று அவர்களை தூண்ட வேண்டும். அவர்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் உங்கள் நல்ல முயற்சிகளுக்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பானாக என்று து ஆ செய்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved