Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:35:27 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17871
#KOTW17871
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 4, 2016
தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி, வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு நன்றி! பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.பள்ளி ஆசிரியர் அப்துர்ரஊஃப் உருக்க உரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4689 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வறுமையில் துவண்ட தன்னைத் துவக்கமாகத் தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும், இன்றளவும் வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் அப்துர்ரஊஃப் (தொடர்பு எண்: +91 88708 89203), பிரியாவிடை நிகழ்ச்சியில் உருக்கமாக உரையாற்றினார். விரிவான விபரம் வருமாறு:-

எல்.கே.மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் அப்துர்ரஊஃப் - பணி நிறைவில் விடைபெற்றுச் செல்வதையொட்டி, பள்ளியின் மரபுப் படி பிரியாவிடை நிகழ்ச்சி, 03.06.2016. வெள்ளிக்கிழமையன்று 14.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமையாசிரியர் உரை:

அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பணி நிறைவில் செல்லும் ஆசிரியரின் நற்குணங்கள், சேவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.



தன்னை விட வயதில் மூத்தவரான அவரை சக அலுவலராகப் பார்க்காமல், இன்றளவும் குடும்ப உறவுமுறை சொல்லியே அழைப்பதாகவும், அதில் தனக்கு முழு இன்பம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

ஆசிரியர் அப்துர்ரஊஃப் கணித மேதை என்றால் அது மிகையல்ல என்றும், சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில், பாட்டுப்பாடும் ராகத்துடன் அவர் கணிதத்தை நடத்தும் பாணியே தனித்துவம் மிக்கது என்றும் கூறிய அவர் - பழகுவதற்கு இனியவர், யாராலும் விரல் நீட்டிக் குறை சொல்ல வழி வைக்காதவர், உதவும் குணம் கொண்டவர், தன்னிடம் இல்லாத காலகட்டத்திலும் வறுமையை வெளிக்காட்டாமல் கவுரவமாக வாழ்ந்தவர், அவர் இருக்கும் வகுப்பறைக்கு எப்போது சென்றாலும் ஒரு நிமிடம் கூட ஓய்வில் இருந்து அவரைக் கண்டதில்லை என்று புகழ்ந்துரைத்தார்.

அண்மையில் இடுப்பு எலும்பில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகவீனத்தால் - “இனி பிழைப்பாரா?” என்று கேட்குமளவுக்கு படுத்த படுக்கையாகிவிட்ட நிலையிலும், அவரது நல்ல மனதால் கவரப்பட்ட அனைத்து மக்களின் பிரார்த்தனைகளின் பலனாக விரைவிலேயே குணமாகி இன்று நம் முன் பழைய ஆசிரியராகக் காட்சியளிப்பது அற்புதம் என்று கூறினார்.

தாளாளர் உரை:



பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வாழ்த்துரையாற்றினார். கணிதம் என்றாலே அனைத்து மாணவ-மாணவியரும் ரஊஃப் சார் பெயரையே உச்சரிப்பர் என்றும், அவரிடம் டியூஷன் பயில, பெண் மக்களைக் கூட நம்பிக்கையுடன் பெற்றோர் அனுப்பி வைப்பது அவரது நற்குணத்திற்கு ஒரு சான்று என்றும் அவர் கூறினார்.

தலைவர் உரை:

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளியின் ஆட்சிக் குழு தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் வாழ்த்துரையாற்றினார்.



தனது பள்ளிப்பருவத்தில் ஓர் ஆண்டு கூட காயல்பட்டினத்தில் கழிந்ததில்லை என்றும், ஆனால் இப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, காயல்பட்டினத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இத்தனை பணிப்பளுவுக்கிடையிலும் சொந்த ஊருக்கு வந்து செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

தான் எந்த நாட்டில் இருந்தாலும் இப்பள்ளியின் முன்னேற்றம் குறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் அடிக்கடி தொலைதொடர்புக் கருவிகள் வழியே கேட்டறிவது வழமை என்று கூறிய அவர், அண்மையில் நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்காக தலைமையாசிரியரோ, ஆசிரியர்களோ கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், அவரவர் பணியை சிறப்பாகவே செய்ததைத் தான் அறிந்துள்ளதாகவும் கூறியதோடு, இனி வருங்காலங்களில் முழுத் தேர்ச்சி நிலையை அடைய அனைவருடனும் தானும் இணைந்து முயற்சிக்கப் போவதாகவும், நடப்பில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முன்பு போல சிறப்பான தேர்ச்சியை வழங்க அனைத்தையும் செய்யவுள்ளதாகவும், இது விஷயத்தில் தலைமையாசிரியர் எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நிர்வாகம் முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும் கூறினார்.

விடைபெறும் ஆசிரியர் குறித்துப் பேசிய அவர், அவரது சேவைகளை நினைவுகூர்ந்தார். உடல் நிலை கவலைக்கிடமான தகவல் தனக்குத் தெரியவே தெரியாது என்றும், “இனி இதுபோன்ற நிலை யாருக்கும் வராமல் இறைவன் காப்பாற்றட்டும்... ஒருவேளை நம் பள்ளியில் பணியாற்றும் யாருக்காவது அல்லது யாருடைய இரத்த உறவினருக்காவது உடல்நலக் குறைவு என்றால், என்னாலான அனைத்து உதவிகளையும் செய்ய ஆயத்தமாக உள்ளேன்” என்று அவர் நிகழ்ச்சியின்போதே அறிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கரவொலியெழுப்பி அதை வரவேற்றனர்.

தங்க நாணயம் & விருது அன்பளிப்பு:

விடைபெறும் ஆசிரியருக்கு அடுத்து விடைபெறும் ஆசிரியர் தங்க நாணயம் வழங்குவது பள்ளியின் மரபு. அதன்படி, அடுத்து விடைபெறப் போகும் ஆசிரியர் ஆனந்தக் கூத்தன் தற்போது விடைபெறும் ஆசிரியர் அப்துர்ரஊஃபுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தங்க நாணயம் வழங்கினார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி அவருக்கு விருது வழங்கினார். தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அன்பளிப்பு வழங்கி கண்ணியப்படுத்தினார்.









வாழ்த்துரை:

அனைத்து ஆசிரியர்கள் சார்பாக, ஆசிரியர் முஜீபுர்ரஹ்மானும், முன்னாள் மாணவர்கள் சார்பாக எஸ்.கே.ஸாலிஹும் வாழ்த்திப் பேசினர்.



ஏற்புரை:

நிறைவாக விடைபெறும் ஆசிரியர் அப்துர்ரஊஃப் ஏற்புரையாற்றினார்.



10.05.1958ஆம் ஆண்டு பிறந்த நான், எம்.ஏ. (பொருளியல்), பி.எஸ்ஸி. (கணிதம்), பி.எட். ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்து முடித்துள்ளேன்.

படிப்பு முடிந்ததும் 1978ஆம் ஆண்டில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றினேன். என்றாலும், ஆசிரியர் பணியில் அதிக நாட்டம் இருந்ததால், காயல்பட்டினத்தில் புதிதாக மெட்ரிகுலேஷன் பள்ளி திறக்கப்படுவதாகவும், அதற்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் அறிந்து அதற்காக விண்ணப்பித்தேன்.

அதன்படி, 1979ஆம் ஆண்டில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் எனக்கு ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மனமுவந்து அதை நான் செய்து வந்தேன். சாதாரண ஆசிரியராக, பின்னர் உதவி தலைமையாசிரியராக, பின்னர் தலைமையாசிரியராகவெல்லாம் அங்கு என்னைப் பணியாற்றச் செய்து உயர்த்தினார்கள்.

அங்கு அப்போது கிடைத்த ஊதியத்தைக் கொண்டு பி.எட். படித்து முடித்தேன். டியூஷன் நடத்திய வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவினங்களைக் கவனித்துக் கொண்டேன்.

பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் அப்போதைய ஆட்சிக்குழு தலைவர் மர்ஹூம் கனி காக்கா அவர்கள், என்னைப் பற்றிக் கேட்டறிந்தும், அவர் வீட்டிற்கருகிலேயே இருந்த அவருக்குச் சொந்தமான இன்னொரு வீட்டை வாடகையின்றி எனக்களித்தும் எனது சிரமத்தில் பங்கேற்றார்.

என்னைப் பற்றி நன்கு அறிந்த அவர், அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கத் தூண்டினார். அதன் விளைவாகவே இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, இன்று விடைபெற்றுச் செல்லும் நிலையிலிருக்கிறேன்...

எனது பணிக்காலங்களில், என்னுடன் ஒத்துழைத்த அனைத்து ஆசிரியர்களையும் நான் வெகுவாக மதிக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னை அவர்களுள் ஒருவனாக மதித்துப் பார்த்துக் கொண்டார்கள். நான் விடைபெறும் இந்தத் தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

என்னை அடையாளங்காட்டி தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தையும், எனக்கு வாழ்வளித்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தையும் என் வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...

நான் சுகவீனப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, என் வாழ்வு முடியப்போகிறது என்றே கருதினேன். அந்த நேரத்தில், யாரென்றே தெரியாத - என்னிடம் பயின்று தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் மாணவர் ஒருவர் அனைத்துத் தடைகளையும் தாண்டி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, சுகம் விசாரித்து, “உங்கள் சிகிச்சைக்கு பணம் ஒரு தடையாக இருக்கவே கூடாது... அன்று கஷ்ட நிலையிலிருந்த எனக்குக் கணிதம் சொல்லித் தந்து நீங்கள் ஆளாக்கியதாலேயே இன்று நான் இந்த அளவுக்கு முன்னேற்றத்துடன் இருக்கிறேன்... உங்கள் சிகிச்சைக்கு எவ்வளவு பொருள் செலவானாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்...” என்றார்.

இத்தகைய நல்ல நிர்வாகங்களையும், சக ஆசிரியர்களையும், வியத்தகு மாணவர்களையும் பெற்றுள்ள நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவன்...

பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் பயமுறுத்தும் வகையில் பல மாணவர்களின் சேட்டைகளும், குறும்புகளும் இருக்கும் என்றாலும், படித்து முடித்த பின்பு அவர்கள் இன்றவும் காண்பிக்கும் பாசத்திற்கும், நேசத்திற்கும் ஈடு இணை கிடையாது. இந்தப் பள்ளியில் பணியில் சேருவதற்காக ஒற்றைப் பைசா கூட நம்மிடம் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக, இன்றளவும் நம் நன்மைக்காக அவர்கள் தங்கள் கைக்காசை தாராளமாக செலவு செய்து வருகின்றனர். அப்பேர்பட்ட இந்த நிர்வாகத்திற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே கைமாறு, இந்தப் பள்ளிக்கு நல்ல தேர்ச்சியையும், சிறந்த சாதனை மதிப்பெண்களையும் பெற்றுத் தருவதாகத்தான் இருக்கும். அதை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்...

என் பணிக்காலத்தில் உங்களில் யாருக்கேனும் எனது சொல்லாலோ செயலாலோ வேதனையளித்திருந்தால் இறைவனுக்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்... என்றும் உங்களுள் ஒருவனாக நான் இருப்பேன். என்னை நேசித்த உங்கள் யாவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் நிறைவான உடல் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு பலவாண்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்...


இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது. பின்னர், விடைபெறும் ஆசிரியருடன் நிர்வாகிகளும், ஆசிரியர்கள் - அலுவலர்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



இல்லம் வரை...

பின்னர், பள்ளி வழமைப் படி, அனைத்து ஆசிரியர்களும் - பணி நிறைவில் செல்லும் ஆசிரியரின் - காயிதேமில்லத் நகரிலுள்ள இல்லம் வரை சென்று வழியனுப்பி, குடும்பத்தாருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றனர். அனைவருக்கும் அங்கு தேனீர் & சிற்றுண்டி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.





விருந்துபசரிப்பு:

முன்னதாக, அன்று மதியம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் அனைவருக்கும் சைவ / அசைவ விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது.

படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ


எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AbdulRazak (Chennai) [05 June 2016]
IP: 12.*.*.* United States | Comment Reference Number: 44001

Rawoof sir = Maths + Amaidhi + Panivu + suya mariyadhai + kavalaiyudan koodiya kandippu + pun muruval + kanidhatthilum raagam...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Muthu Mohamed (NOIDA ) [05 June 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 44002

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல மனிதர் பழகுவதற்கும் இனிமையானவர். மாணவரிடையே அமைதியாக பேசுவார் இவரிடம் படித்த வர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை.

கற்று கொடுப்பதில் கைதேன்றவர் அல்லாஹ் இவருக்கு நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக ஆமீன்

முத்து முஹம்மது
NOIDA ( UP )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by முத்துவாப்பா (al khobar) [05 June 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44003

அன்பின் உருவம்
பொறுமையின் சிகரம்
கணிதத்தின் உயரம்
தங்களின் ஓய்வு சற்று துயரம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் தங்களின் ஓய்வு காலம் நிம்மதியாகவும் , நோய் நொடி இல்லாத சுக வாழ்வோடு வாழ அருள் புரிவானாக ....

படித்து 16 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை காணும் பொழுதெல்லாம் என் பெயர் மறவாமல் நலம் விசாரிக்கும் உங்களின் அன்பு மாணவன் - புஹாரி ( முத்துவாப்பா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கண்கள் பனித்தது இதயம் இனித்தது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [05 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44004

முஹம்மது அப்துல் ரவூப் ஆசிரியர் அவர்களிடம் கணிதம் கற்கும் மாணவனாக நான் இருந்திருக்க வேண்டாமா என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தும் அளவுக்கு இங்கே அவரது பிரியாவிடை நிகழ்ச்சி எழுச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் நடைபெற்றிருக்கிறது.

பெற்றோர் மாணவர் அவைத்தலைவர் முஸ்தபா அவர்களின் மகனார் எனது மருமகனார் ஊர் வந்தபோது ரவூப் சார் அவர்களிடம் பாடம் கற்றிருக்கிரீர்களா என்று கேட்டேன். என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். ஒரு DEDICATED TEACHER என்று நான் அடையாளம் கட்டவேண்டுமானால் அவரைத்தான் சொல்வேன் என்றார்.

எனது கண்கள் பனித்தது இதயம் இனித்தது. அப்படிப் பட்டவரை நான் சந்திக்க வேண்டுமே என்றேன் இன்ஷா அல்லாஹ் இன்று நாளை அவரை சந்தித்து நல்லாசி பெற இருக்கிறேன்.

அவர்களுக்கு நோய் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து ஒரு மாணவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வேண்டிய சிக்கிச்சை செலவை தானே ஏற்றுக் கொள்வதாக ஆசிரியப் பெருந்தகை நன்றியுடன் இந்த நேரத்தில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார். ஆசிரியர் மாணவர் உறவு எவ்வளவு உறுதியாக பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஏணியும் தோணியும் பிறர் கரை சேர பயன்படுகிறது. அதன் பிறகு ஏணி சுவரிலே சாய்ந்து பின்னர் சரிந்து கிடக்கிறது. தோணி கரையிலே ஒதுங்கி தன்னை நீரிலிருந்து காத்துக் கொள்ள தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆசிரியர்கள் வாழ்வு இருக்கிறது. எல்லோரும் இந்த நிகழ்ச்சியை இந்த இணையத்தளம் மூலம் அறிந்திருப்பார்கள்.

ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இறை மறை செல்வர்களுக்கு பட்டயம் அளித்து கௌரவித்தபோது அங்கே ஒரு செய்தியை சொன்னார்கள்.

சுலைமான் என்ற ஒரு சிறுவனுக்கு சுற்றுலா செல்வதற்கு ஒரு ரியால் பணம் கொடுக்க முடியாத வறுமை நிலை. அவனுடைய ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்து போட்டியில் வென்றவர்களுக்கு ஒரு ரியால் பரிசளிப்பதாக சொன்னார். சுலைமான் வென்றான். ஒரு ரியால் பரிசையும் பெற்று அதை ஆசிரியரிடமே கொடுத்து மற்ற மாணவர்களுடன் சுற்றுலா சென்று சந்தோசமாக வீடு திரும்பினான்.

50 ஆண்டுகள் கழிந்தன. சுலைமான் இப்போது ஒரு கோடீஸ்வரன். அல் ராஜி வங்கியின் அதிபர். அவர் தன் ஆசிரியரை தேடுகிறார் கண்டு பிடிக்கிறார். ஒட்டிய வயிறும் உலர்ந்த நாவுமாக வறுமைக் கோட்டில் இருக்கும் ஆசிரியருக்கு சுலைமான் தன்னை அறிமுகப் படுத்தி எல்லா மரியாதைகளையும் செய்து ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்.

''நீங்கள் வாழும் காலமெல்லாம் உங்களுக்கு உணவு உடை இருக்க இடம் எல்லாம் நானே தருகிறேன். சந்தோசமாக இருங்கள்'' என்று சொல்லி அனுப்புகிறார்.சிந்திக்க வேண்டிய செய்தி.

ஆசிரியர்களை கண்ணியப் படுத்துவோம். நாம் கற்ற பள்ளியை கண்ணியப் படுத்துவோம். மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்கள் மனம் குளிர செய்வோம்.

I SALUTE ,YOU , RAWOOF SIR ,YOU ARE REALLY GREAT .

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்,
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களின் இருலோக வாழ்க்கையையும் வளப்படுத்துவானாக ஆமீன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [05 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44005

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வறுமையிலும் பொறுமைகாத்து பள்ளிக்கும்,மாணவர்களுக்கும் தமக்கும்,பெருமைசேர்த்து ஓய்வுபெற்றிருக்கும் ஆசிரியர் ஜனாப் அப்துர்ரஊஃப் உங்களை நன்றியுடன் வாயாரவும்,மனதாரவும் வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்

மாதா,பிதாவழியாக குறும்பாலம்கழிந்து உலகம்கண்டு தெய்வமெனும் நிறைவழியடைய நெடும்பாலமான குருவழியேஉதவுகிறது. அப்படியொருமகத்தானபணியே ஆசிரியப்பணி.

கற்பித்தலென்பது ஒளிகொடுக்கும் கண்களைப்போன்றது அந்தவகையில் ஒருகுருவாக கருவாகவிழிகொடுத்து வழிகாட்டியிருக்கிறீர்கள் தாங்கள்காட்டிய அந்தவழியில் தங்களிடம்கற்ற மாணவச்செல்வங்கள் தங்குதடையின்றி தங்கத்தடம்பதிக்கவேண்டும் அதுவேமாணவ,மாணவிகள் தங்களுக்காற்றும் மரியாதைநிமித்தசேவைகள் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவார்கள்.

இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களின் ஒய்வுகாலங்களையும் நல,வளமாக்கி இருலோகபாக்கியத்துடன் ஒளிமயமாக்குவானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Musthafa MIN (Dubai- UAE) [06 June 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44010

அஸ்ஸலாமு அழைக்கும்,

ராஊப் சார் இனிமையான மனிதர் மா ஷா அல்லாஹ். அழகான நடையில் எளிமையான முறையால் சற்றேன புரியும் படி ராகத்துடன் கணிதம் நடத்தும் ஆற்றல். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு டியூஷன் படித்த அனுபவம்(காரணம் பள்ளி பயின்றது முஹ்யிதீன் ஸ்கூல் ).

சக நண்பர்களோடு காலை 6.30 மணிக்கு கொட்சியர் தெரு(அப்போதைய வாடகை வீடு) வீட்டில் டியூஷன். டியூஷன் முடிஞ்ச கையேடு கடற்கரையில் சங்கமம்.

those days will never come back. we have opportunity to learn from him for only two years. but believe if i ask my friends about him for sure i'll get good response. Rauf Sir impressed us a lot. thank you sir for service to our Kayal Students. we pray to ALLAH for your good health and wealth. in shaa allah .

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.N.Sulaiman (Qatar) [06 June 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 44012

எல்லோருக்கும் பள்ளிபருவத்தில் ஒரு ஆசிரியரை பிடிக்கும். அந்த வகையில் என்னை கவர்ந்த, எனக்கு பிடித்த முதல் ஆசிரியர் மரியாதைக்குரிய ரவூப் சார் அவர்கள்.

அவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் தனி கட்டுரையே எழுத வேண்டும். அந்த அளவிற்கு அவர்களுடன் நெருங்கிய பழக்கம். அவர்களிடம் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை டியுசன் பயிலும் காலத்தில் அவர்களது குடும்பத்தின் அங்கத்தினராகவே இருந்தோம் நானும் என்னுடன் பயின்ற சில மாணவர்களும் .

மர்ஹூம் கனி காக்கா அவர்களின் வீட்டில் வைத்து டியுசன் படிக்கும் சமயம் அண்டை அயலார்ருக்கு இடையூறு இல்லா வண்ணம் மிதிவண்டிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியது மட்டுமல்லாது தாங்களே அவ்வபோது வெளியே சென்று மிதிவண்டிகளை சரி செய்தது தங்களுக்கே உரிய சிறப்பம்சம்.

டியுசன் பயிலும் காலத்தில் எங்களது வீட்டில் இருந்ததை விட தங்களது வீட்டில் தான் அதிகமாக இருந்துள்ளோம். அரட்டை மற்றும் ஆனந்தத்தின் எல்லை அது. அதே சமயம், கண்டிப்பிலும் குறை இருக்காது.

எல்லோரும் கூறுவது போல உங்களிடம் வெறும் கணிதம் மற்றும் கற்றுக்கொள்ளவில்லை. மேலாக, பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்வது எப்படி என்பதனையும் எங்களுக்கு வாழ்ந்து வழிகாட்டிய ஆசான் நீங்கள்...!

குறிப்பாக, தங்களது தாய் தந்தையர்களின் இறுதி தருணத்தில் தாங்கள் செய்த சேவைகளை உங்கள் உடனிருந்து கண்டவன் நான் (இறைவன் அவர்களை பொருந்தி கொள்வானாக...!)

தாங்கள் பொறுமையின் மறு உருவம் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரும்பாலும் எல்லோரும் பொறுமையை இறுதிகட்டத்தில் தான் மேற்கொள்வர் ஆனால் அதனை ஆரம்ப கட்டத்தில் கையாள்வதே இறைவன் விரும்பும் செயல். அதனையும் தாங்கள் பின்பற்றி நடந்தீர்கள்.

எத்தனை முறை மருத்துவமனை கஷ்டம் அதன் சிரமங்களில் தவித்தபோதும் கூட பொறுமையுடன் இருந்தீர்கள். நிச்சயம் இறைவனின் நற்கூலி உங்களுக்கு உண்டு.

இன்னும் பல இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்......

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் வழங்கி மீதமுள்ள வாழ்நாளை மன நிம்மதியுடன் கழித்திட பிராத்திக்கின்றேன்.--


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved