Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:59 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17345
#KOTW17345
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 21, 2016
உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயர்வு; தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1978 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஏற்கனவே 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படுகின்றன.

கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 458 பதவி இடங்களில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

50 சதவீதமாக உயர்வு

இந்த இடஒதுக்கீட்டை தமிழக அரசு தற்போது 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவி இடங்களில் பாதிக்கு பாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சட்டசபையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

அந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்களுக்கு அதிகாரம்

1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்குவதற்கு வகை செய்கிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்தும் வகையிலும், ஊரக வளர்ச்சியில் பெண்கள் பங்கு பெறுவதை எளிதாக்கும் வகையிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு சதவீதம், இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கு என்று இருப்பதை 50 சதவீதம் என அதிகரிக்க செய்வது தேவையானது என அரசு கருதுகிறது. அதற்கு இணங்க 1994-ம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தை மேற்சொன்ன நோக்கத்திற்காக பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நகராட்சி சட்டங்கள்

இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்த) சட்ட முன்வடிவையும் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நகர உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கினை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வகை செய்கிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்துவதற்காகவும், நகரத்தின் மேம்பாட்டில் பெண்கள் பங்கு கொள்வதை எளிதாக்கும் வகையிலும் இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மாநகராட்சிகள்

இதை ஒன்றில் பாதியாக (50 சதவீதம்) அதிகரிப்பது தேவையானதாக இருக்கிறதென்று அரசு கருதுகிறது. அதற்கு இணங்க 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம், 1971-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டம், 1981-ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டம், 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள், 1994-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி சட்டம், திருநெல்வேலி மாநகராட்சி சட்டம், சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளின் சட்டங்கள் ஆகியவற்றை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என அரசு முடிவு செய்கிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மசோதாக்கள் நிறைவேறின

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு பாதி இடங் களை ஒதுக்க வகை செய்யும் இந்த இரு சட்ட திருத்த மசோதாக்களும் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. எனவே, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து நடைபெறும் தேர்தலின் போது 50 சதவீத பதவி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

தகவல்:
தினத்தந்தி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பெண்களின் ஆளுமை திறன்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [22 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43207

அம்மா அவர்களின் அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உண்மை நிலை நிதர்சன உண்மைகள், கடந்த காலங்களில் பெண்கள் ஆட்சி நடந்த நாடுகள் , அவர்கள் அரசோச்சிய முறைகள் எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்தால் ஏமாற்றங்களே விஞ்சி நிற்கின்றன .

இஸ்லாம் பெண்களுக்கு சிறப்பான இடத்தை கொடுத்திருந்தாலும் சுமார் 1,25,000 நபிமார்கள் அல்லது திருமறையில் பெயர் குறிப்பிடப் பட்டுள்ள நபிமார்கள் யாருமே பெண்களாக இருந்ததில்லை . பெண்களைப் பற்றி இறைவன் சொல்லும்போது கூட

''ARRIJAALU QAWWAAMOONA ALAN NISAAYI BIMAA FALLALALLAAHU BAULAHUM ALAA BAULIN VA BIMAA ANFAQOO MIN AMVAALIHIM ...''

என்று அந்த வசனம் நீண்டதொரு செய்தியை மனித இனத்துக்கு சொல்கிறது.

ஆண்கள் தொடர் வண்டியை போன்றவர்கள் என்று வைத்துக் கொண்டால் அந்த தொடர்வண்டி போய் சேரவேண்டிய இடத்தை பாதுகாப்பாக போய் சேரவேண்டுமானால் அது ஓடும் தண்டவாளங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ரயில் தடம் புரண்டால் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றால் அல்லது தண்டவாளத்தில் விரிசல்கள் இருந்தால் அந்த ரயில்கள் விபத்துக்களை சந்திப்பதை கண்கூடாக கண்டுவருகிறோம். எனவே ரயில் ஓடுவதற்கு தண்டவாளங்கள் எவ்வளவு இன்றி அமையாதவை என்பது தெளிவாகிறது. ஆனால் ரயில் இப்படி வேகமாக ஓடுகிறதே, நம் மீதுதானே அது சவாரி செய்கிறது என்று தண்டவாளங்கள் நினைத்து நாமும் அதே போல் ஓடுவோம் என்று முடிவெடுத்து தண்டவாளங்கள் ஓட ஆரம்பித்தால் ரயில் ஓடுவதும் தண்டவாளம் ஓடுவதும் இயற்கைக்கு மாற்றமாக அமைந்து விடும்.

எனவே தண்டவாளம் அதன் கடமையை செய்ய வேண்டும் ரயில் அதன் கடமையை செய்ய வேண்டும். இயற்கையிலேயே ஆண்களுக்கு சில உடல் அமைப்புக்களையும் பெண்களுக்கு சில விசேட உடல் அமைப்புக்களையும் இறைவன் வழங்கியுள்ளான். இவற்றை இறை பக்தி உள்ளவர்கள் மட்டுமே சிந்தித்து செயலாற்ற முடியும். குறிப்பாக அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறை இவற்றை ஓதி உணர்ந்தவர்கள் மட்டுமே இதை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

மற்றப்படி இந்திரா காந்தி, கோல்டா மெயர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே போன்றவர்கள் ஆண்ட முறைகள், நமது தமிழக முதல்வர் ஆளும் முறைகள் எல்லாமே நமக்கு கண்முன்னால் தெரிகிறது. உரிமைக்கு குரல் கொடுக்கும் பெண்கள் தங்கள் கடமைகளும் என்ன வென்று அறிந்து வைத்திருந்தால் நல்லது.

இஸ்லாம் பெண்களுக்கு சில ஆளுமை திறன்களை கொடுத்துள்ளது. ஆண்களுக்கும் சில ஆளுமை திறன்களை கொடுத்துள்ளது. இவற்றை உணர்ந்து செயல்பட்டால் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 50 விழுக்காடு ஒதுக்கீடு நாட்டு மக்களுக்கு பயன்தரும்.

இல்லாவிட்டால்....

''தம்பி உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?'' என்று கேட்பதுபோல் இந்த தமிழ்நாடும் அமைந்து விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved