Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:38:15 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17181
#KOTW17181
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 20, 2016
“கொள்ளை அடித்து பிரித்துக்கொடுக்கும் மந்திரிகள்!” - அ.தி.மு.க. எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேச்சு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3490 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பழ.கருப்பையா எந்தக் கட்சியில் இருந்தாலும் தனது சொந்தக் கருத்தைச் சொல்லத் தயங்காதவர். யாருக்கும் பயப்படாமல் பாய்ந்துவிடக் கூடியவர். ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் பொங்கல் நேரத்தில் பொங்கிவிட்டார் கருப்பையா.

“இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகார வர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோத்ததன் விளைவுதான். அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள். இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது” என்று பழ.கருப்பையா ஆவேசமாகப் பேசினார்.

சென்னையில் நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் அவரது பேச்சு மொத்தமே ஆளும் கட்சியை, ஆட்சியை மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்தது. “சட்டமன்றத்தில், 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார்” என்று 110 விதியை கலாய்த்தவாறு தன் பேச்சை ஆரம்பித்தார் பழ.கருப்பையா.

“இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது. ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய ‘கீப்’ வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள். ‘எஸ்கார்ட்’ வண்டியையும், சர்க்யூட் ஹவுஸையும் எடுத்துவிட்டால் ஒருவரும் அமைச்சராக இருக்க விரும்பமாட்டார்கள்.



ஒரு கூட்டம் கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். இப்போது, யாருக்கும் கூட்டம் வருவது இல்லை. கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். ‘மாவட்டம்’, ‘வட்டம்’ எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? வாகனங்களில் கூட்டத்தை அழைத்து வரத்தானே? எந்தப் பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது? எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது. புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி. ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை. தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

சமுதாயம் சந்தைப்பொருளாகி, கடவுளையும் சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கடவுள் நம்பிக்கை கெட்டுப் போய்விட்டது. மதங்கள் நிறுவனங்களாகிவிட்டன. உண்டியல் பணமே மந்திரிகளுக்குப் போகிறது” என்று பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டே போனார். ‘நேரம் முடிந்து விட்டது’ என்று கருப்பையாவுக்கு துண்டுச்சீட்டு கொடுக்கப்பட்டது. அரங்கத்தில் இருந்தவர்கள், பேச்சை முடிக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பினர். எனவே, அவர் தொடர்ந்து பேசுவதற்கு சோ அனுமதித்தார்.

தொடர்ந்து அவர், “அதிகார வர்க்கம் ஒத்துழைக்காமல் இவர்கள் ஓர் அணாகூட கொள்ளையடிக்க முடியாது. சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள். நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள்.

சங்ககாலத்தில் ‘பா வீடு’ என்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாடு படையெடுத்து அங்கிருக்கும் ஆநிறை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, அதை தனது படை வீரர்கள் முதல் ஜோதிடர் வரை பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இந்த நாட்டில் மீண்டும் திரும்பியுள்ளது. மந்திரி கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார் பழ.கருப்பையா.

பழ.கருப்பையா ஆளும் கட்சியில்தான் இருக்கிறாரா எனத் தெரியவில்லை என்றார் சோ. அவர், அ.தி.மு.க-வில் இருக்கிறாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

தகவல்:
விகடன் இணையதளம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [20 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42891

# பழ.கருப்பையா எம்.எல்.ஏ.அவர்கள் காயலர்கள் மிகுதியாக வசிக்கும் மண்ணடி ஏரியாவை உள்ளடக்கிய சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார்.

# இவரின் எம்.எல்.ஏ.அலுவலகம் உயர் நீதிமன்ற பேரூந்து முனையத்திற்கு அருகில் உள்ளது.(அதிகபட்சம் பூட்டியே இருக்கும்)

# சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு கூட்டத்தில் பேசும்போது "அவ்வளவு பணத்தை கொண்டு அரசியல்வாதிகள் தலையணை செய்து படுக்கவா போகிறார்கள்" என்று பேசினார்.

# எதையும் விசாரிக்காமல் தடாலடி முடிவெடுக்கும் [தலைமை] இன்னமும் மவுனம் காப்பது ஆச்சர்யமாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இவர் பழ கருப்பையா அல்ல பழைய கருப்பையா
posted by mackie noohuthambi (kayalpatnam ) [20 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42892

காயல்பட்டினத்தில் ஒரு கூட்டம். ஹாமித் பக்ரி ஆலிம் அவர்களின் மறுபிரவேசம் - இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தருகிறோம் என்று மக்களை மறுமலர்ச்சியின் பக்கம் அழைத்த ஒரு இயக்கத்தின் பிதாமகனுடன் கைகோர்த்து சென்ற எனது இனிய மருமகன், மில்டன் அவர்கள் எழுதிய PARADISE REGAINED என்ற கவிதைக்கு உயிரூட்டி அந்த மாயையில் இருந்து விடுபட்டு ஐக்கிய சமாதான பேரவையின் நிறுவனராக களம் இறங்கிய நாட்கள் அவை. பழ கருப்பையா அவர்கள் அன்றைய கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ஆற்றிய உரைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.

இவர் ஏன் இன்னும் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறார் என்று எண்ணும் அளவுக்கு இஸ்லாமிய விழுமியங்களை மிக நேர்த்தியாக எடுத்துரைத்தார். அவர் இன்று துக்ளக் விழாவில் பேசிய பேச்சுக்கள் எல்லாமே நிதர்சன உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மட்டுமல்ல இனி எந்த கட்சியிலும் இனைந்து பணியாற்ற முடியாது. அவர் சொல்லும் இலக்கணங்களை உள்வாங்காத கட்சி எதுவுமே இன்று தமிழகத்தில் இல்லை.'' நீரே அழுக்கு''.

மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம். கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது?

கங்கையே சூதகமாகி உள்ளது. எல்லா கட்சிகளும் இயக்கங்களும் இந்த லட்சணத்தில்தான் இருக்கின்றன. சகாயம் ஒரு தனி கட்சி ஆரம்பித்தால் அதில் இவர் சேரலாமே தவிர காங்கிரஸ் கட்சியும் காவி கட்சியும் கூட இவரை ஏற்றுக் கொள்ளாது.

''மூடு டாஸ்மாக்கை மூடு'' என்றால் அப்படி சொல்பவனை தேச துரோக வழக்கில் கைது செய்யும் நாடு இது. ''பட்டத்து யானை பவனி வரும்போது எறும்புகள் சாவதை தடுக்க முடியுமா'' என்று கேட்டால் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கும் காலம் இது. ''எல்லோரும் ஒன்று பட்டு இந்த ஆட்சியை மாற்றுங்கள் என்று சொல்லும்போது கூடவே என்னை முதல்வராக்குங்கள்'' என்று முழங்கும் தலைவர்கள் உள்ள நாடு இது. இன்னும் எத்தனை காலம் உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல் மௌனியாக இருக்க முடியும் .

பேசாமல் இருந்தோமா அம்மா புகழ் பாடினோமா ஒரு இன்னோவா காரில் பயனித்தோமா நிம்மதியாக வாழ்கையை ஓட்டினோமா - ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்கினோமா என்று இல்லாமல் தனது வாழ்வின் பிந்திய காலங்களை இப்படி கழிக்க எப்படி அவருக்கு மனது வந்தது. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் வாய் மூடி மௌனியாக இருப்பதும் பேசக் கூடாத நேரத்தில் எதையாவது பேசி மாட்டிக் கொள்வதும் பழ கருப்பையா போன்றவர்களின் வழக்கம்.மக்கள் இன்னும் முதிர்ச்சி அடைய வில்லை என்பதை அவர் அறியவில்லை போலும். இலவசங்கள் ஆளும் நாட்டில் இவர் விலாசங்களை இழந்து விடுவார்.

பாவம் பழ கருப்பையா - இவர் ஒரு பழைய கருப்பையா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இந்த பழுத்த பழம் இனி அ.தி.மு .க மரத்திலிருந்து தானாக வீழும் ...
posted by Refaye (Abudhabi) [20 January 2016]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42895

இந்த பழுத்த பழம் இனி அ.தி.மு .க மரத்திலிருந்து தானாக வீழும் இல்லை என்றால் வீழ்த்தப்படும்.

வீழ்த்தப்படும் இப்பழத்தை "கை " கொண்டு தாங்கபடலாம்

அரசியலில் இ(து) எல்லாம் சகஜம்பா.

Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42898

பாராட்டுக்கள்.. பாராட்டுக்கள்.. ஐயா எம்.எல்.ஏ பழ.கருப்பையா அவர்களுக்கு.

அந்த கட்சியில் ஒரு துணிச்சலான ஆள் இருக்கின்றார் என்பதை நிரூபித்தூள்ளார்.

காங்கிரஸ் காராருடன் இப்படி மேடையில் அமர்ந்ததற்கே கட்டம் கட்டி இருக்கனும், அதுவும் ஆஹா என்று சிரித்ததற்கே கூடதலாக கட்டிடமே கட்டி இருக்கலாம். அதற்கும் மேலாக இப்படி போட்டு உடைத்ததற்கு.....???

ஆனாலும், மேலிடம் கொஞ்சம் பொறுமை காக்கும். காரணம் அனைத்து ஊழல்களையும் நன்கு அறிந்தவர். முள்ளில் சேலை விழுந்துவிட்டது, கவனத்துடன் கையாளுவார்கள்.

கொஞ்சம் நெருடல் என்னன்னா, இத்தனை நாட்கள் மௌனம் காத்துவிட்டு, ஆட்சி முடியும் நேரத்தில் திருவாய் மலர்ந்ததுதான்.

சாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பொங்கலோ பொங்கல்...! தை பொங்கல்...!
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [20 January 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42903

அட அட அட அட....!

குரல்வளை நெரிக்கப்பட்ட, தன் மானம் மறுக்கப்பட்ட கூண்டிலிருந்து ஒரு குயிலின் கூவலா...?

சபாஷ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...உண்மையை உரைத்தீர்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [20 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42910

வெளிப்படையான பேச்சு - சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள். நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள் CP

- உண்மையை உரைத்தீர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved