Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:55:40 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17091
#KOTW17091
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 2, 2016
பிரதான வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! பொதுமக்கள் திரட்சி!! நகரில் பரபரப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4302 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட காயல்பட்டினம் பிரதான வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று 10.30 மணியளவில் துவங்கி, 17.30 மணி வரை நடைபெற்றது.





நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வரும் இப்பணியின்போது, நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் முத்துராஜ், சாலை ஆய்வாளர் வசந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.









பிரதான வீதியில் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றுள், ஆக்கிரமிப்பின் கீழுள்ள பகுதிகள் 2 பொக்லைன் இயந்திரங்கள் துணையுடன் அகற்றப்பட்டன.







சில கட்டிடங்களின் முன்பகுதியை இடித்து அகற்றுகையில், சில ஆண்டுகளுக்கு முன் அச்சுவர்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அனைத்தும் தெளிவாகக் காணக் கிடைத்தன. ஒருவரைப் பார்த்து ஒருவர் தம் வசதிக்கேற்ப கட்டிடங்களை மேலும் மேலும் முன்னோக்கிக் கட்டிக்கொண்டு வந்ததே இதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் காரணம் என திரண்டிருந்த பொதுமக்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது.























சில கட்டிடங்களின் உரிமையாளர்கள், தம் கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளை தாங்களே இடித்து அகற்றிக்கொள்வதாகவும், பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டாம் என்றும் கேட்டபோது, தற்போதைய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் நிறைவுறுவதற்கு முன்பாக அவற்றை இடித்துக்கொள்ளுமாறும், தவறினால், நெடுஞ்சாலைத் துறை அகற்றும் என்றும் அதிகாரிகள் அவர்களிடம் கூறினர்.













காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகிலிருந்த பேருந்து பயணியர் தரிப்பிடமும் இடித்தகற்றப்பட்டது.





அதனருகிலிருந்த ஓர் அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் அக்கட்சியினரால் முன்னரே அகற்றப்பட்டிருந்தது. அகற்றப்படாத இதர கம்பங்கள் குறித்து வினவியபோது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தால் மட்டுமே அவற்றை அகற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டதால் இடித்தகற்றப்பட்ட சுவர்களையும் தாண்டி சாலையில் இருந்த - பல ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்து வளர்ந்துள்ள வேப்ப மரங்கள் குறித்து வினவியபோது, அதை அகற்ற தங்களுக்கு உத்தரவு இல்லை என்று அவர்கள் கூறினர்.



ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவயதையறிந்து, சில கட்டிடங்களைச் சேர்ந்தவர்கள் தம் கட்டி தாமாகவே முன்வந்து இடித்தகற்றியுள்ளனர்.



இப்பணியையொட்டி, மின்வாரியத்தினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக நிகழ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். நகர் முழுக்க மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.





சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த வரிசையிலேயே இப்பணியும் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:07 / 03.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [02 January 2016]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42718

போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள பஸ் நிறுத்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது . அதனை ஒட்டினாற்போல மேற்க்கே உள்ள கட்டிடம் ( SBI-ATM முதல் SJM Medicals வரை எதிர்புறம் உள்ள கட்டிடம் ) சுமார் ஐந்து அடி முன்தள்ளி இருக்கிறது. அது ஏன் இன்னமும் இடிக்கப்படாமல் உள்ளது ? யார் காரணம் ? இதை தடுப்பது யார் ?

ஒருவேளை அது சரியான அளவில்தான் உள்ளது எனில் அருகிலுள்ள பஸ் நிறுத்த கட்டிடம் ஏன் இடிக்கப்படவேண்டும் ? இதில் உள்ள முரண்பாடு என்ன ? மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவேண்டும்.

அந்த இடம் மட்டும் குறுகலாக இருப்பது கண்கூடாக தெரிகிறது . ஒருவேளை அந்த கட்டிடம் முறையாக அமைந்திருப்பினும் தற்கால தேவையை கருத்தில் கொண்டு அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை நிலஆர்ஜிதம் செய்து சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.

சாலை விரிவுபடுத்துவதில் இது ஒரு அவசியமான தேவை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அடுத்து மூப்பனார் ஓடை மீட்பு பெறலாம்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [02 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42723

வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என கட்டிட ஆக்கிரமிப்புக்களை அகற்றும் நீதி மன்றம் மற்றும் அரசு இயந்திரம் மழை காலங்களில் மழை நீர் வடிந்தோட வழியில்லாமல் அடைபட்டு கிடக்கும் நமது நகரின் மூப்பனார் ஓடையை ஆக்கிமிப்பு செய்திருக்கும் கட்டிட ஆக்கிரமிப்புக்களை தயவு தாட்சனமின்றி அகற்ற நமது நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும் என அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசுவதைக் கேட்க முடிந்தது.

விண்ணப்பமே இல்லாமல் திருட்டுத் தனமான கட்டிட பிளானுக்கு சொத்து வரி ரசீது அளிபத்திலும் / திருட்டுத் தனமான குடிநீர் இணைப்புக்கும் முனைப்பு காட்டி ஈன பிழைப்பை அரங்கேற்றும் நமது நகராட்சி அலுவலர்களால் அடைபட்டு கிடக்கும் நமது நகரின் மூப்பனார் ஓடை ஆக்கிமிப்பு மீட்பு நடவடிக்கை என்பது நடக்காத காரியமே எனவும் பொது நல வழக்கு மூலமே மூப்பனார் ஓடை ஆக்கிமிப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசுவதைக் கேட்க முடிந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (india) [03 January 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42731

ஆக ஆக்கிரமிப்புகளுக்கு ஒருமுடிவுரை எழுதப்பட்டுவிட்டது. ஆனால் வேகத்தடை என்ற பெயரில் நடக்கும் தாந்தோன்றிதனத்துக்கு எப்போது முடிவுரை கிடைக்கும் என்று தெரியவில்லை.

பர்சனாலாக பாதிக்கபட்டதினால்தான் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டிய நிலை நெசவுதேருவை Thiruchendur சாலையோடு இணைக்கும் சாலையின் இரு பகுதியிலும் அமைக்கப்பட்ட வரம்புக்கு மீறி உயரத்தில் அமைக்கப்பட்டதால் எனது மடிகணினி சேதம் அடைந்து மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி உடனே கவனம் செலுத்தி அந்த இரண்டு வேகத்தடைகளை சட்டபூர்வமான உயரத்தில் அமைக்க வேண்டுகிறேன் அவ்வாறு செய்யாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Azath Jawahar (kayalpatnam) [03 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42733

நீக்கியது சரியே..... அது போல மீண்டும் முளைக்காமல் இருக்க வேண்டும்...... நெடுஞ்சாலை துறை இடித்தாலும் கட்டிடம் கெட்ட அனுமதி கொடுப்பது யார்? சொத்து வரி வசூலிக்கும் நகராட்சி தானே!!

காசு வந்தா போதும் நாடு ரோட்ல கூட வீட்டை கெட்டுங்கள் என்று சொல்வார்கள் ஏன் என்றால் நமது நகருக்குள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருக்கிறது அதை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் செயல் படுமா? இல்ல இதுக்கும் சப்பை கெட்டு கெட்டுவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...பேருந்து தரிப்பிடம் இடிக்கப்பட்டதுதான் மகிழ்ச்சி தருகிறது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [03 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42734

சில மாதங்களுக்கு முன் அ.க. வணிக வளாகம் கட்டும்போது இந்த பேருந்து தரிப்பிடம் மிக அசிங்கமான தோற்றத்தில் உள்ளது அதை புதிப்பித்துக் கட்டி மக்கள் வசதியாக உட்கார்ந்து கொள்ள தனது சொந்த செலவிலேயே அதை புதுப்பித்து தருவதாக அந்த வளாக கட்டிட சொந்தக் காரர் நமது நகர்மன்றத்தில் சொன்னதாகவும் அதற்கு நகர்மன்றம் மறுத்து விட்டதாகவும் அந்த வளாக உரிமையாளரே என்னிடம் சொன்னார்,

சமூக விரோத செயல்களுக்கு ஒரு இடமாக அது இருப்பதாகவும் புகார்கள் வந்தன. அதை காரணம் காட்டியாவது இந்த இடத்தை இடித்திருக்க வேண்டும் நகர்மன்றம். அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆக்கிரமிப்புக்கள் அகற்றப் பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படியானால் ஆக்கிரமிப்புக்கள் உண்மைதான் என்பது புலனாகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு இறைவன் இருக்கிறான் மறக்காதே.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...காணவில்லை குளங்களை..? அகற்றுங்கள் ஆக்கிரமிப்புகளை..?
posted by AnbinalA (Jaipur) [03 January 2016]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 42736

காயலில் இரட்டைக்குளம், கற்புடையார் குளம், தருவைக்குளம், மாளாக்குளம், கீரிக்குளம், பச்சிரான் குளம், மாட்டுக்குளம் மற்றும் எண்ணற்ற குளங்களையும், அதிக ஓடைகளையும் காணவில்லை...

அதில் மூப்பனார் ஓடை மட்டும் பாதி சுருங்கி வாழ்கிறது; மீதி வீட்டுமனைகளாக வாழ்கிது..?

இன்னும் மற்ற தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் பேசிக்கொண்டது பரவலாக ஊர்மக்கள் ஊதுவது நமது காதுகளில் கேட்கிறது.! ஆகவே ஊர்ப் பெருமையும்,குளப்பெருமையும் பேசுவது எந்த நன்மையும் இந்த மண்ணுக்கு தரப்போவதில்லை..!

நமதூரும் எப்போதுமில்லாத அளவுக்கு சென்றாண்டும், இந்தாண்டும் மழைவெள்ளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.! இதை கவனத்தில் கொண்டு தன்னார்வமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நமக்கு நாமே நன்மைகளை செய்துக் கொள்ளவில்லை என்றால் வரும் காலங்களில் நமது பிள்ளைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக எழுவதற்கு நாமே துணை போனவர்களாகிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம்..? என்ற சிந்தனையை இதுபோன்ற சீற்றத்தைக் கண்டும் திருந்த வில்லையெனில்! நாம் அறிவாளிகள் இல்லை என்பதை இன்றும்,இன்னும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்..!

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது..?

மனிதன் மட்டுமே சிந்திக்கிறான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved