Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:26:30 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16995
#KOTW16995
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 13, 2015
கடலூர் மழை வெள்ள நிவாரணத்திற்காக ரூ. 30 லட்சம் வரை சேகரம்! பாதிக்கப்பட்டோருக்கு டிச. 15 அன்று நேரில் வினியோகித்து களப்பணியாற்றிட முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதியாக காயல்பட்டினம் மக்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளதாகவும், புத்தாடைகள் - பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் என பல்லாயிரக்கணக்கில் ஆடைகளும், பாத்திரங்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (எ) ஹாஜி காக்கா வெளியிட்டுள்ள அறிக்கை:-

பொதுமக்களுக்கு அறிவிப்பு:

“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நகர்வலமாகச் சென்று, பொதுமக்களிடம் நிவாரண நிதியைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரி - நகரின் அனைத்து பள்ளிவாசல்களது ஒலிபெருக்கிகள் வாயிலாகவும், உள்ளூர் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

களப்பணி:

திட்டமிட்ட படி, 08.12.2015. செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்திலிருந்து, நிவாணரப் பொருட்களைத் திரட்டுவதற்காக - பிரிவுக்கு இரண்டு வாகனங்கள் என 4 சரக்கு வாகனங்களில், நகரின் வட பகுதிகளில் ஒரு பிரிவினரும், தென் பகுதிகளில் மறு பிரிவினரும் களமிறங்கினர்.



பங்கேற்றோர்:

காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் துணைத்தலைவர்களான எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான், ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, ஒருங்கிணைப்பாளர்களான வி.ஐ.புகாரீ, வி.டி.என்.அன்ஸாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, யு.நவ்ஃபல், பொருளாளர்களான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், செயலாளர்களான மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ‘பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட்’ பிரபு ஹபீப் முஹம்மத், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், உலக காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளர்களான எம்.எஸ்.செய்யித் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகிய நிர்வாகிகளும், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘ஹாங்காங்’ ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்டோரும், இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் - சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளது அங்கத்தினரும், தன்னார்வத்துடன் இளைஞர்களும், மாணவர்களும் களப்பணியில் ஈடுபட்டனர்.



மழையைப் பொருட்படுத்தாமல் தொடர் பணி:

10.30 மணிக்கு வாகனங்கள் கிளம்பின. அடுத்த சில நிமிடங்களில் மழை சாரலில் துவங்கி, கனமழையாக மாறியது. எனினும், குழுவில் அங்கம் வகித்த பெரியவர்கள் குடைகளை உயர்த்திப் பிடித்து வாகனங்களில் நின்றவாறு சென்றனர். இளைஞர் - மாணவர் குழுவினரோ இம்மழையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு, உடைகள் நனைவதைச் சிறிதும் கருத்திற்கொள்ளாமல், சாலைகளில் தேங்கியிருந்த நீர்களில் இறங்கியும், மழையில் நனைந்தும் வீடு வீடாகச் சென்று வாளியேந்தி நிவாரண உதவிகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தனர்.

13.00 மணியளவில் முதற்கட்ட களப்பணி நிறைவுற்றது. இரண்டாம் கட்ட களப்பணி, அதே நாளில் 16.30 மணிக்கு, மகுதூம் ஜும்ஆ பள்ளியிலிருந்து துவங்கி, நகரின் எஞ்சிய பகுதிகளைச் சுற்றி, பொருட்களைத் திரட்டியது. 20.30 மணியளவில் இரு பிரிவினரும் பெரிய நெசவுத் தெருவிலுள்ள தற்காலிக அலுவலகமான - எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தை வந்தடைந்தனர்.



கணக்கெடுப்பு:

காலையில் பெய்த மழையின்போது திரட்டப்பட்ட நன்கொடைப் பணங்கள் முழுவதும் மழையில் நன்கு நனைந்திருந்ததால், உடனடியாக தொகையைக் கணக்கிட இயலாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஹீட்டர் கொண்டு, நனைந்த பணத்தாள்கள் அனைத்தையும் நீண்ட நேரம் காய வைத்த பின், எண்ணும் பணி நடைபெற்றது. களப்பணியில் ஈடுபட்டோர் அனைவரும் கணக்கிடும் பணியிலும் இறுதி வரை இருந்தனர்.











விடுபட்ட பகுதிகளில் சேகரிப்பு:

விடுபட்ட நான்கு தெருக்களில், மறுநாள் (09.12.2015. புதன்கிழமை காலை முதல் மதியம் வரை நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன. நகர்வலம் மூலமாக பெறப்பட்ட மொத்த தொகை சுமார் 6.75 லட்சம் ஆகும்.

மழலையரின் நெகிழ வைத்த நன்கொடை:



கையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கண்டதையும் வாங்கி வீணாக்கும் குழந்தைகள் உள்ள இக்காலகட்டத்தில், அரிதாக சில குழந்தைகள் தமக்குக் கிடைக்கும் பெருநாள் அன்பளிப்பு உள்ளிட்ட பணங்களை - தம் பெற்றோர் வழிகாட்டலுடன் உண்டியலில் சேகரித்து வந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 குழந்தைகள், தாம் சேகரித்த அவ்வுண்டியல்களை அப்படியே நிவாரணக் குழுவினரிடம் நன்கொடையாக ஒப்படைத்தனர். அவற்றை உடைத்துப் பார்த்தபோது, ஒவ்வொரு உண்டியலிலும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. ஓர் உண்டியலில், “மறுமை” என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூ. 30 லட்சம் சேகரிப்பு:

மொத்தத்தில் 50 லட்சம் ரூபாய் வரை சேகரித்தே ஆக வேண்டும் என “காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” திட்டமிட்டிருந்தது. எனினும், நகர்வலம் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை, நகரின் தனவந்தர்களிடம் பெறப்பட்ட தொகை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சேகரித்தளித்த 1 லட்சத்து 1 ஆயிரத்து 786 ரூபாய் தொகை, உலக காயல் நல மன்றங்கள் மூலமாகப் பெறப்பட்ட தொகை என மொத்தத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது.

ஆடைகள், பாத்திரங்கள் பிரித்தெடுப்பு:

இது தவிர, புத்தாடைகள் - பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் என பல்லாயிரக்கணக்கில் ஆடைகளும், நல்ல நிலையில் ஆயிரக்கணக்கான பாத்திரங்களும் சேகரிக்கப்பட்டு, பெரிய நெசவுத் தெரு அலுவலகம், ஜாவியா அரபிக்கல்லூரி ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்து வகைப்படுத்துவதற்கு, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற வளாகம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) ஆகிய இடங்களில், அவற்றின் நிர்வாகத்தினர் தன்னார்வத்துடன் தாமாக முன்வந்து பொறுப்பேற்று, செய்து முடித்துள்ளனர்.











கடலூரில் சிறப்புக் குழு கள ஆய்வு:

இவை ஒருபுறமிருக்க, கடலூரில் நிவாரணப் பொருட்களை முறைப்படி வினியோகிப்பது குறித்து திட்டமிடுவதற்காக,

(1) டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
(2) மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ,
(3) ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத்,
(4) வி.ஐ.புகாரீ,
(5) வி.டி.என்.அன்ஸாரீ,
(6) யு.நவ்ஃபல்

சிறப்புக் குழு அறிக்கை:

ஆகியோரடங்கிய குழுவினர் கடலூருக்கு நேரடியாகச் சென்று, இரண்டு நாட்களாக அங்குள்ள - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு செய்து வந்துள்ளனர். தமது ஆய்வறிக்கையை, 12.12.2015. சனிக்கிழமையன்று (நேற்று) 20.00 மணியளவில், பெரிய நெசவுத் தெரு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புக் குழுவினர் சமர்ப்பித்தனர்.





அதன் தொடர்ச்சியாக, கடலூருக்கு நேரடியாகச் செல்லவும், நிவாரணப் பொருட்களை வினியோகிப்பதோடு, இயன்றளவு களப்பணியாற்றவும் குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்காக, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் இன்று (13.12.2015. ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்

தகவல்களிலும், படங்களிலும் உதவி:
M.M.முஜாஹித் அலீ


காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.. நேரத்தை ஒதுக்குவது என்பதே பெரிய விஷயம் அல்ஹம்து லில்லாஹ்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [13 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42407

கணினி ஜாம்பவான் என்று சொல்லப்படும் BILL GATES தனது கணினி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர் கைக்குட்டை கை தவறி கீழே விழுந்து விட்டதாம். அவர் குனிந்து அதை எடுக்கும் நேரத்தில் 500 US டாலர் சம்பாத்தியத்தை இழந்து விடுவாராம். அவ்வளவு பிஸி. அதை நேற்றுவரை நம்ப முடியாமல் இருந்தது.

ஆனால் வெள்ள நிவாரண பணியில் தங்களை இணைத்துக்கொண்டு தெரு தெருவாக அலைந்து திரிந்தவர்கள் அதுவும் கொட்டும் மழையில் வீடு வீடாக சென்று வசூல் செய்த பிரமுகர்கள் வெறும் சாதரணமானவர்கள் அல்ல.

தொழில் அதிபர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் கணினி முன்னால் இருந்து அன்றாட வரவு செலவுகளை பல லட்சம் ரூபாய் வருமானங்களை கணக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள், ஊழியர்களுக்கு வேண்டிய வழிகாட்டு முறைகளை ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நினைத்திருந்தால் சில லட்சங்களை வெள்ள நிவாரண நிதியாக அனுப்பி விட்டு அவரவர்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.. ஆனால் அவர்கள் எல்லாம் நேரத்தை ஒதுக்கி களப் பணியில் ஈடுபட்டதை நேரில் பார்த்த எனக்கு மெய் சிலிர்த்தது.

நமக்கு இவர்களுடன் வெளியில் அலைந்து திரிய உடல்நலம் இடம் தரவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

30 லட்சம் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஆடைகள் எல்லாம் நிறைந்து வழிவதை நிழல் படமாக பார்க்கும்போது நமதூர் மக்களின் வள்ளல்தன்மை இயற்கையானது.

பல்லாண்டு காலங்களுக்கு முன்னால் வாழ்ந்த சீதக்காதி வள்ளலை பற்றி படித்திருக்கிறோம் . இன்று நிதர்சனமாக அவர்களை காண்கிறோம் . அல்ஹம்து லில்லாஹ். சீதக்காதி பணத்தை மட்டும்தான் அள்ளிக் கொடுத்தார்கள். தெரு தெருவாக அலைந்து தங்கள் பொன்னான நேரத்தை கொடுத்ததாக தகவல் இல்லை .எனவே இவர்கள் எல்லாம் வள்ளல் சீதக்காதியைவிட உயர்ந்தவர்கள் .

நான் நோயுற்றிருந்தேன் என்னை நீ வந்து பார்த்து நலம் விஜாரித்தாயா...நான் தாகித்து இருந்தேன் எனக்கு தாகம் தீர தண்ணீர் தந்தாயா நான் பசியாக இருந்தேன் எனக்கு உணவு தந்தாயா நான் ஆடை இல்லாமல் இருந்தேன் நீ எனக்கு ஆடை தந்தாயா என்று மறுமை நாளில் அல்லாஹ் கேட்பானே அப்போது இவர்கள் எல்லாம் ஆம் சென்னையிலே கடலூரிலே நாங்கள் மக்கள் துயரங்களை துடைத்தோம் என்று தோளை உயர்த்தி சொல்வார்கள் அல்லாஹ் மகிழ்ச்சியடைந்து இவர்களை சொர்க்கத்துக்கு அவர்கள் விரும்பும் தலைவாசல் வழியாக உள்ளே செல்லும்படி சொல்வான் இன்ஷா அல்லாஹ்.

இந்த புனித பயணத்தில் செல்பவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் போகும் வழிகளில் பயமின்மையையும் கொடுத்து அவர்கள் பொருளாதாரத்திலும் நல் அபிவிருத்தியை கொடுப்பானாக என்று உளமார பிரார்த்திக்கிறேன்.

சென்று வாருங்கள். ஏழை மக்களின் உள்ளங்களை வென்று வாருங்கள்.அல்லாஹ்வின் அருளை கொண்டு வாருங்கள்.

நாம் பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42408

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ......இந்த நல்ல செயலை நினைத்து யாவர்களும் மகிழ்கிறார்கள் .....நம்மில் இந்த ஒற்றுமையையும் & பணக்காரர்கள் முதல் '' நடுத்தினர்கள் + ஏழைகள் வரை & நம்மில் ஒரு சில விசையத்தில் ,,கொள்கையில் வேறுபட்டு இருந்த நம் ஊர் மக்கள் கூட ஒன்றாக இணைத்து செயலாற்றியதை நினைக்கும் போது ரொம்ப ,, ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ......

வல்ல இறைவன் நம் ஊரில் இந்த ஒற்றுமையை + பாகுபாடு அற்ற தன்மையையும் எப்போதும் நிலையாக்கி ,,சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்.....

பெருமைகலந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறது ...... இந்த சேகரிப்பு பணம் முறையாகவே ...தற்போதைய சூழ் நிலைமையில் உள்ள மக்களுக்கு போய் சேர இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்.....

கஷ்ட சமையத்தில் உதவுவதில் நம் ஊர் மக்களுக்கு இணை வேறு யாரும் இல்லை .....ஒன்று என்றால் அள்ளி கொடுப்பதில் வல்லவர்கள் .....

தற்போதைய சூழ் நிலைமையில் உள்ள மக்களை அவர்களின் கஷ்டத்தில் இருந்து நீக்கிடவும் நாம் பிராத்திப்போமாக ........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved