Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:25:36 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16871
#KOTW16871
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 22, 2015
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளருக்கு (பொது தகவல் அலுவலர்) தகவல் ஆணையம் - 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3794 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கபப்ட்ட கேள்விக்கு பொய்யான தகவல் வழங்கிய காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளருக்கு ரூபாய் 25,000 அபராதம் - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தினகரன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘மதுரை ஐகோர்ட் உத்தரவே கிடைக்கவில்லை’ என மனுதாரருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத் தில் தவறான தகவல் தெரிவித்த காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் ஆணையம் உத்தர விட்டது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி வடக்கு சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பட்டங்கட்டியார். இவர் காயல்பட்டினம் கடையகுடி தெருவில் உள்ள சந்தஎஸ்தேவ் சுவாமி கோயிலுக்கு மேனேஜர் என்ற பெயரில் தீர்வை செலுத்தி வந்தார். இந்த தீர்வையை ‘பங்குத் தந்தை’ என பெயர் மாற்றம் செய்து கடந்த 2005ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி காயல்பட்டினம் நகராட்சி உத்தரவிட்டது.

‘இந்த பெயர் மாற்றம் சட்டத்திற்கு புறம்பானது. எனவே இதை ரத்து செய்து உத்தர விடவேண்டும்’ என ஸ்டீபன் பட்டங்கட்டியார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை நீதிபதி சிவஞானம் விசாரித்து, காயல்பட்டினம் நகராட்சி கமிஷனர் உரிய விசாரணை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படி ஆணை பிறப்பிக்க கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி உத்தரவிட்டார்.

எனினும் இது குறித்து காயல்பட்டினம் நகராட்சி எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இதையடுத்து ஸ்டீபன் பட்டங்கட்டியார் மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் நகலை அமல்படுத்தக் கோரி காயல்பட்டினம் நகராட்சிக்கு பதிவு தபாலில் மனு அனுப்பினார்.

இதற்கும் நடவடிக்கை இல்லாததால், அவரது மகள் அன்னம்மாள் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீதி மன்ற உத்தரவு நகலோ, ஸ்டீபன் பட்டங்கட்டியார் அனுப்பிய மனுவோ கிடைக்கவில்லை என காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலரும், சுகாதார ஆய்வாளருமான பொன்வேல் ராஜ் பதில் தெரிவித்தார்.

ஆனால் மதுரை ஐகோர்ட் துணை பதிவாளர் (நிர்வாகம்) வரதலட்சுமி, ஐகோர்ட் உத்தரவின் நகல் 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஐகோர்ட் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என தவறான தகவல் தெரிவித்த காயல்பட்டினம் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், காயல்பட்டினம் நகராட்சி பொது தகவல் அலுவலரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வசூலித்து அரசு கருவூல கணக்கில் செலுத்தவும், டிச.11ம் தேதி நடக்கும் மறு விசாரணைக்கு நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு தகவல் மறுத்த மேல்முறையீட்டு அலுவலரும், அப்போதைய நகராட்சி ஆணையருமான அசோக் குமார் மீது 30 நாட்களுக்குள் நகராட்சி நிர்வாக ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தர விட்டார்.

அசோக் குமார் தற்போது வேலூர் மாவட்டம், வாலாஜாபாத் நகராட்சி ஆணையராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



தகவல்:
'மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி' S.E.அப்துல் மாலிக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அந்த சுவருக்கும் கேட்கின்ற செவி இருக்கும்.. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்..
posted by mackie noohuthambi (kayalpatnam ) [23 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42305

''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'' என்ற பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது. ''அந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் .. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்'' என்று இன்னொரு பாடல்...

நாம் செய்யும் தவறுகள் எவ்வளவு காலத்துக்கு பின் வெளி வருகிறது பார்த்தீர்களா...இது நகர்மன்ற தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம்....

தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கூட தோல்வியை சந்திக்க அதே தகவல் அறியும் சட்டம்தான் காரணமாக இருந்தது என்பது இங்கு நினைவு கூர தக்கது.

பொது வாழ்வில் தூய்மை என்பது நாடு தூய்மையாய் இருக்க வேண்டும் என்று கவலைப் படுவதை விட முக்கியம் என்பதை அரசியல் தலைவர்களும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறை வழியில் தங்கள் செல்வங்களை வாரி வாரி வழங்கிய இறை தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அதே மாதிரி தன் செல்வங்களை இறை வழியில் வாரி வாரி வழங்கிய வள்ளல் - நபி தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களும் இறைவனிடம் கணக்கு கொடுத்துவிட்டு கடைசியாக தான் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற செய்தி நம்மவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் நாம் எவ்வளவு தூரம் அதைப் பற்றி கவலைப் படுகிறோம் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் இந்த இழிவான செயலிலிருந்து பாது காப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தினமும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டக்கூடிய ...
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [23 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42312

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

குற்றம் செய்தோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்புக்குரியது – அதுவும் நமது நகராட்சி பணியாளர்களுக்கென்றால் மிகவும் சந்தோசமான விசயம் – ஆனால் இந்த சுகாதார ஆய்வாளருக்கு அபராதம் விதித்திருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது.

யாருக்கோ கிடைக்க வேண்டிய அபராதம் இவருக்கு கிடைத்ததாக கருதுகிறேன் – பொது தகவல் அலுவலர் என்ற பொறுப்பில் இருப்பதால் சட்டப்படி இவருக்கு கிடைத்திருக்கிறது – நியாயப்படி வேறு யாரோ அனுபவிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

------------------------

உண்மையாக பார்த்தால் தினமும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டக்கூடிய அளவில்தான் நமது நகராட்சி நிர்வாகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

என்னப்பா இந்த ஆள் இப்படி ஜோக் அடிக்கிறாரே! என்று நினைக்க வேண்டாம் – நகராட்சியிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்கள் பெரும்பாலும் முன்னுக்குப் பின் முரனாகத்தான் இருந்திருக்கிறது.

------------------------

எந்த தகவலும், தகவல் அறியும் உரிமை சட்டப்படி 30 நாட்களுக்குளோ அல்லது மேல் முறையீடு செய்து அதன் நியமப்படி 45 நாட்களுக்குள்ளோ கிடைப்பதில்லை.

தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல் முறையீடு செய்து, அவர்கள் ஆணை பிரப்பித்தப்பின் அவசர, அவசரமாகத்தான் 8 மாதம், ஒரு வருடம் என்று தாமதமாகத்தான் பதிலை தருவார்கள் – தருவார்கள் என்ன? தந்தார்கள்.

-------------------------

முன்னுக்குபின்னான பதில்கள் வரக் காரணம் அவசர, அவசரமாக பதிலை தருவது மட்டும் அல்ல – நகராட்சியிலே கோப்புகளே! இல்லை – அல்லது கோப்புகள் முறையாக வரிசைப்படுத்தி வைப்பதில்லை என்பதாலேயே தவறான பதில்கள் கிடைக்கிறது.

நகராட்சியிலே பணி செய்பவர்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பு இல்லை என்பதே எமது குற்றச்சாட்டு – அதன் காரணமாகத்தான் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

-------------------------

மேலும் நகராட்சிக்கு வரக்கூடிய ஆணையர்கள், நகராட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை , அவருக்கு அளிக்க வேண்டிய உரிமையை அளிப்பதில்லை – காரணம் அவர்களுக்கே! அவர்களுடைய பொறுப்பு மற்றும் கடமை என்ன என்பது சரியாக , முறையாக தெரியாது.

கடமையை அவர்கள் முழுமையாக தெரிந்தவர்களாக இருந்தால் , நகர்மன்ற தலைவருக்குரிய உரிமையை பரிக்கவோ, தடுக்கவோ மாட்டார்.

நகர்மன்ற தலைவரும் தன்னுடைய உரிமையை போராடி பெறக்கூடிய சக்தி பெற்றவராக தெரியவில்லை.

-------------------------

இனி வரக்கூடிய நகர்மன்றம் உரிமையை விட்டுக்கொடுக்காத தலைவரையும், உறுப்பினர்களையும் உள்ளடக்கிய மன்றமாக அமைந்து மக்களுக்கு பயன் அளிக்க, வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Lukman (Tiruvallur) [24 November 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 42314

Assalamu alaikkum
கடந்த காலங்களில் கடயக்குடியில் வசித்து வந்த ச்டீபான்பட்டங்கட்டியார். சிறந்த சமூக அக்கறை கொண்டவர். கடையக்குடி என்ற பெயரை கொம்புதுரை என்று தான் குறிப்பிட வேன்றும் என்று இது வரை போராடிக்கொண்டிருப்பவர். RTI மூலம் பல தகவல்களை திரட்டி வைத்திருக்கிறார். பார்பதற்கு சிறிய வுருவம் போலிருந்தாலும் உயர்ந்த எண்ணகளையும் சிந்தனையும் கொண்டசிறந்த மனிதர்

Lukman
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இதிலிருந்து காயல்பட்டினம் நகராட்சி RTI குறித்த தெளிவான பல பாடங்களை படிக்கட்டும்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [24 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42315

நகராட்சியிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்கள் பெரும்பாலும் RTI சட்டத்திற்கு புறம்பாகவும், எதிராகவும் மனுதாரருக்கு வழங்கி விட்டு பிறகு மாநில தகவல் ஆணையத்தால் அபராதம் மற்றும் கண்டன அறிவுரை எச்சரிக்கை அறிவிப்பு காயல்பட்டினம் நகராட்சிக்கு வழக்கமாகி விட்டது -

கடந்த ஓர் ஆண்டு முன்பு நான் கோரிய சில தகவலுக்கு பதில் தருவதை மறுத்து என்னை திசை திருப்பும் விதமாகவும் என்னை மிரட்டும் விதமாகவும் எனக்கு பதில் வழங்க பட்டது - பிறகு மாநில ஆணையத்தில் முறையிட்ட பிறகு நான் கோரிய தகவல் எனக்கு கிடைக்கப் பட்டது மட்டுமல்லாமல் நகராட்சியால் எனக்கு விடுத்த மிரட்டல் குறித்து சரமாரியான கேள்விகள் / குறுக்கு விசாரணைகள் நடந்து பிறகு நகராட்சி பொது தகவல் அலுவலர் (மேலாளர்) / மேல் முறையீட்டு அலுவலர் (ஆணையாளர்) இருவரும் விளக்க கடிதம் அளித்து பின் எனது வழக்கு முடிவுக்கு வந்தன -

தற்போது RTI குறித்த எனது கேள்விகளுக்கு மிரட்டலான பதில்கள் தவிர்க்கப்பட்டு சில மனுக்களுக்கு பதில் முறையாகவும் சில மனுக்களுக்கு பதில் முழுமை பெறாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

மொத்ததில் நகராட்சியில் தவறு செய்த முக்கிய நபரை காப்பாற்ற எடுக்க முயற்சி / காப்பாற்ற நேர்ந்த பரிவு உபசாரம் அது பிறகு பொது தகவல் அலுவலரையே மாநில தகவல் ஆணையத்தின் முன்பும் / நீதி மன்றதின் முன்பும் தலை குனிந்து நிற்க வைக்கின்றன - இது தேவை தானா..!

இதிலிருந்து இனியாவது காயல்பட்டினம் நகராட்சி RTI குறித்த தெளிவான பல பாடங்களை படிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved