Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:48:32 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16866
#KOTW16866
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 21, 2015
கே.டீ.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5720 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று 11.15 மணியளவில் துவங்கி, தற்போதும் (14.45 மணி) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.











நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வரும் இப்பணியின்போது, நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளர், திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.









கே.டீ.எம். தெருவிலுள்ள பல வீடுகளின் கோட்டைச் சுவர்கள் இதன்போது அகற்றப்பட்டு வருகிறது.











சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த வரிசையிலேயே இப்பணியும் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவயதையறிந்து, ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள் தம் கோட்டைச் சுவரைத் தாமாகவே முன்வந்து இடித்தகற்றியுள்ளார்.

இப்பணியையொட்டி, மின்வாரியத்தினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக நிகழ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும், காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



கள உதவி:
ஹாஃபிழ் N.A.M.ஈஸா ஜக்கரிய்யா

படங்களுள் உதவி:
M.A.K.ஜைய்னுல் ஆப்தீன்
(துபையிலிருந்து...) ஸிராஜுத்தீன்


காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:49 / 22.11.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆட்சியார்கள் தவறா வீட்டு உரிமையாளர்கள் தவறா...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42292

ஆக்கிரமிப்பு இரண்டு வகைப்படும். ஒன்று சட்டப்படி பத்திரப்படி நமக்கு உரிமை இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் இழுத்துக் கட்டுவதில் என்ன தப்பு என்று சற்று அலட்சியமாக செய்வது. இது மார்க்கப்படியும் தப்பான விஷயம் என்று தெரிந்தே எல்லோரும் செய்கிறோம்.

மற்றது அரசு அல்லது நகர்மன்ற அதிகாரிகள் குறிப்பாக கட்டிட இன்ஸ்பெக்டர் அதை கண்டுகொள்ளாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிளான் பாஸ் பண்ணுவது. இரண்டுமே மனசாட்சிப்படி தப்புதான்.

ஆனால் பத்திரப்படி நமக்கு உரிமை இருந்தும் தெருவை அகலப் படுத்துவதற்காக நமது இடத்தை இடிப்பதற்கு முன் நமக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு தர வேண்டும். நபி தோழர் உமர் அவர்கள் ஆட்சியா நடக்கிறது. இங்கு...இதை எல்லாம் பேசுவதற்கு?

நீதிமன்றம் செல்வதற்கு ஆகும் செலவு, வழக்கு எவ்வளவு நாள் இழுத்தடிக்கும் என்ற பயம், நியாயம் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலை இவற்றையெல்லாம் மனதில் நினைத்துப் பார்த்து ''சனியன் தொலையுது'' என்று விட்டு விடுபவர்கள்தான் அதிகம்.

பிளான் பாஸ் பண்ணுகின்ற அதிகாரி வீடு கட்டி முடிந்த பிறகு அது பிளான்படி கட்டப் பட்டுள்ளதா என்று பார்ப்பதில்லை இது நகர்மன்றம் அல்ல கார்பரேசன் வரை இந்த கூற்றுதான். சென்னை நகரம் முழுவதும் இதுதான் நடக்கிறது. காயல்பட்டினம் என்ன விதி விலக்கா...? எனவே இந்த விஷயத்தில் அரசுக்கு பணிந்து போவதை தவிர வேறு வழி இல்லை. எதிர்த்து பேசினால் குண்டர் சட்டத்தில் அல்லது தேச துரோக வழக்கில் போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

இதுதான் இலவச ஆலோசனை. NO SERVICE CHARGE LEVIED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [21 November 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42293

< V D Sadak Thamby · Anna University
மெயின் ரோடு என்ன ஆச்சு? அங்குதான் ஆக்கிரமிப்பு அதிகமாகவும் ரோடு குறுகலாகவும் உள்ளது > C & P

மெயின் ரோடு மற்றும் L K லெப்பை தம்பி சாலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [21 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42294

"கே.டீ.எம். தெருவிலுள்ள பல வீடுகளின் வரவேற்பறைகள், கோட்டைச் சுவர்கள் இதன்போது அகற்றப்பட்டு வருகிறது"(கோப்பி&பேஸ்ட்)

இந்த தெருவில் எந்த வீட்டின் வரவேற்பறையோ இன்னும் சொல்லப்போனால் வீட்டில்ன் ஒரு செங்களோஅகற்றப்பட வில்லை,அகற்றப்பட்டதெல்லாம் கோட்டை சுவர்களும் படிகள் மட்டும் தான்,செய்தியாளர் சற்று மிகைப்படுத்தி உள்ளார்.

Moderator: வரவேற்பரை போல் தென்பட்ட ஒரு கோட்டைச் சுவர் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டு, கூடுதல் தகவலும் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [21 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42295

கே.டீ.எம் தெரு தாயும் பள்ளி மையவாடிக்கு பின்புறம் உள்ள ஓடையின் ஆக்கிரமிப்புகள் எப்போது அகற்றப்படும் - மழை காலங்களில் மட்டுமே இந்த ஓடையை மக்கள் நினைவு கூறுகிறார்கள்.

இந்த ஓடைக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆக்கிரமித்தவருக்கும் இதிலே மகிழ்ச்சிதான்...
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [21 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42296

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

” தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – இது ஒரு மகிழ்ச்சியான செய்தி “

உங்களுக்கெல்லாம் இதில் மகிழ்ச்சி இருக்கோ! இல்லையோ!! –
ஆனால் இதிலே எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி! – ஆக்கிரமித்தவருக்கும் இதிலே மகிழ்ச்சிதான்.

-------------------------

இடிக்கப்பட்டிருக்கின்ற கட்டிடத்திற்கு சொந்தக்காரர் இன்று நஷ்டப்படலாம்!, வெட்கப்படலாம்!! – ஆனால் ஆகிரத்திலே மகிழ்ச்சியோடு இருக்க வாய்ப்பு அதிகம்.

எவர் ஒருவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்தில் ஒரு ஜான் எடுத்தாலும் (ஆக்கிரமித்தாலும்) மறுமையில் அவர் கழுத்தில் அது பாம்பாக சுற்றப்படுமே!

இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக அவர், அந்த கொடிய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுகிறாரே! அதனால் அது அவருக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்!?.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nizam (india) [22 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42297

தெரிந்தோ தெரியாமலோ தவறு நடந்துள்ளது. ஆனால் விளாவரியான புகைப்படங்களை தவிர்த்திருக்கலாம். தவறு என்பது திருத்திக் கொள்ளத்தான் தவிர பரிகாசிக்க அல்ல. தாங்கள் வெள்ளோந்தியாக செய்தி வெளியிட்டீருக்கலாம். ஆனால் மனக்கசப்புக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. ஏனென்றால் காயல் நெட் அனைத்து காயல் மக்களின் அங்கம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...தெரிந்து செய்வது தவறு..! தெரியாமல் செய்வது குற்றமா..?
posted by AnbinalA (Jaipur) [23 November 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42310

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் தவறாக வந்துள்ளார்கள்..? ஏன்னெனில்! உண்மையில் யாரும் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து விட்டுதான் சென்றிருப்பார்கள்..! ஏன்..? படியும், கம்பவுண்ட் சுவர் மட்டும் இடிக்கப்பட்டது..? ஒருவர் கூட "ஒரு இன்ச்" ஆக்கிரமிப்பு செய்யவில்லை..? எனவே தான் எந்த கட்டமைப்பும் இடிபாடில் சிக்கவில்லை...சிக்கியதும் தங்கவில்லை..!

இதுபோன்று அதிகாரிகள் மீண்டும்... மீண்டும் வருவது வாடிக்கையாகவும்,வேடிக்கையாகவும்,அன்றைய தினம் பரபரப்பான தலைப்பு செய்தியாகவுமே ஊலா வருகிறது என ஊர்மக்கள் ஊமையாகா ஊதுவது செவிக்கு உணவு படைக்கிறதே! அல்லாது நமக்கு உணர்வு படைக்கவில்லை என்கிறார்கள் நடுநிலையாளர்கள்...நல்லவர்கள்...!

நேர்மையானவர்கள் ஆட்சியாளர்கள் என்றால்
அந்நாட்டு மக்களிடம் நேர்மை,தர்மம்,ஒழுக்கம்
எப்போதும் நிலைநாட்டப்படும்..!
நேர்மையானவர்கள் மக்கள் என்றால்
அந்நாட்டு ஆட்சியாளர்களிடம் சத்தியம்,நடுநிலை,உண்மை
எப்போதும் கடைபிடிக்கப்படும்..!

ஆக்கிரமிப்புகளை கண்டு
அஞ்சுகின்ற நல்லவர்கள்..?
ஆக்கிரமிப்புகளை கண்டும்,காணாமல்
இருக்கும் நல்லவர்கள்..?
ஆக்கிரமிப்புகளை,அபகரிப்புகளை
நியாயப்படுத்தி - அவர்கள்
பின்னால் துணை நிற்கும் நல்லவர்கள்..?

இதில் நாம் எந்த வகை நல்லவர்கள்...?

வாழும் போது இந்த உலகில்
அனைத்தும் போதாது என்று
நினைத்தவனை - இறுதியாக
அணைத்துக் கொண்டது இந்த
கல்லறைக் குழி போதுமானதாக....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved