Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:40:20 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16726
#KOTW16726
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 18, 2015
காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் ஆணையர், ஒப்பந்தப் பணியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3705 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் ஜி.அசோக் குமார். ஏப்ரல் 27, 2012 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக பொறுபேற்ற இவர், பிப்ரவரி 6, 2014 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து மாற்றலானார். இவர் பொறுப்பில் இருந்த 21 மாத காலத்தில், பல்வேறு முறைக்கேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

காயல்பட்டினம் நகராட்சியின் கடந்த ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படாத 11 ஒப்பந்தப் பணியாளர்களில் ஒருவர் - எம்.எஸ். நசீர் கான். இவர் காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக கணினி இயக்குனராக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர். இவரின் பணி நியமனம் உட்பட - ஏனைய 11 ஒப்பந்தப்பணியாளர்களின் நியமனமும், முந்தைய நகர்மன்றம் பொறுப்பில் இருந்தப் போது, முறைக்கேடாக நடைபெற்றன என்ற குற்றாசாட்டுக்கள் உள்ளன.



2013ம் ஆண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள காயல்பட்டினம் நகராட்சியின் 0491 0100 0015 112 என்ற எண் கொண்ட வங்கி கணக்கில் இருந்து, 525033 என்ற எண் கொண்ட காசோலை மூலம், நசீர் கான் என்ற நபருக்கு 1,19,800 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த காசோலை மூலமான பணம், மார்ச் 27, 2013 அன்று - நசீர் கான் என்பவரின் வங்கி கணக்கிற்கும் சென்றடைந்துள்ளது.

இந்த பண பரிவர்த்தனை குறித்து சில மாதங்களுக்கு முன்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் விசாரணை செய்ததில், நசீர் கான் என்பவர் காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கணினி இயக்குனர் என்றும், அந்த பணம் - நகராட்சிக்கு கணினி வாங்கப்பட்ட வகைக்கு கொடுக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கணினி வாங்க நகராட்சி தீர்மானம் இல்லாத பட்சத்தில் எவ்வாறு கணினி வாங்கியிருக்க முடியும் என்றும், அந்த கணினி எங்குள்ளது என்ற விபரம் குறித்தும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அதிகாரிகளிடம் வினவியுள்ளார் என்று தெரிகிறது. தனது கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் வழங்கப்படாதை அடுத்து, நகர்மன்றத் தலைவர் - தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு (DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION; DVAC), தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு, சில மாதங்களுக்கு முன்னர், புகார் மனு அனுப்பியிருந்தார் என்றும் தெரிகிறது.

நகர்மன்றத் தலைவரின் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ள, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வழங்கிய அனுமதியை தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை அதிகாரிகள் - விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்த லஞ்ச் ஒழிப்பு துறை அதிகாரிகள், விசாரணையின் இறுதியில் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் ஆணையர் ஜி. அசோக் குமார் (தற்போது வாலாஜாபேட் நகராட்சியில் ஆணையராக உள்ளார்) மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் ஒப்பந்தப் பணியாளர் எம்.எஸ். நசீர் கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி தலைமை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை (FIRST INFORMATION REPORT; FIR) தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கில், தற்போது மூல ஆவணங்கள் - நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்) [18 October 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42036

அய்யய்யோ.. ஒரு பூதம் மட்டும்தான் வெளியில் வந்துள்ளதா..?

இன்னும் எத்தனை பூதங்கள் வெளிவரப் போகின்றதோ தெரியவில்லையே..?

நகராட்சி தலைவி ஆணையரிடம், நகராட்சி வங்கி கணக்கு விவரங்களை கேட்டும், முறையாகவும் முழுமையாகவும் வழங்காதது, யார் யாருக்கு செக் கொடுத்துள்ளது என்று தலைவி அவர்களை பார்வையிட்ட புத்தத்தை, ஆணையர் அவர்கள் தலைவி அறைக்கு அதிரடியாக சென்று, அடாவடியாக பிடுங்கி சென்ற சம்பவங்கள் எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், பூதங்களின் மாயாஜால வேலைகள் தெரிகின்றன.

ஏதோ கம்ப்யூட்டர் வாங்கியது, அது அலுவலகத்தில் இல்லை என்று ஈசியாக கண்டு பிடித்து விட்டாச்சு.

கல்லு, மண்ணு, ரோடு, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலே, லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை என்று பல ஆயிரம் வழிகளில் ஊழல் நடைபெற்றால் எப்படி கண்டு பிடிப்பது? இதில் எல்லாம் ஊழல் இல்லை என்று நம்புவோமாக.

வல்ல அல்லாஹ் நடப்பவைகள் அனைத்திலும் நன்மையை தருவானாக

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [18 October 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42037

நகராட்சியில் கணினி பிரிவில் ஒப்பந்த பணியாளராக சில காலமே பணியாற்றி வந்த தனி நபர் நசீர் கான் என்ற ஒருவருக்கு நகராட்சியின் காசோலை வழங்க பட்ட செய்தி வாட்சப் மற்றும் முகநூல் நண்பர்களுக்கு பழைய செய்தியாக இருக்கலாம்..! இது குறித்த (காசோலை) செய்தியை ஊர்ஜிதம் செய்து நடப்பு செய்தியாக வழங்கிய இணையத்திற்கு நன்றி..!

நகர்மன்ற தலைவரின், உறுப்பினர்களின் கண்களை மறைத்து அவர்களுக்கு தெரியாமல் மேலும் எத்தனை.. எத்தனை..! லட்சங்கள் - ஆயிரங்கள் - நகராட்சியின் காசோலைகள் மூலம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது மர்மமே..! இப்படி என்ன.. என்ன...! பொருட்கள் வாங்க யார்.. யார்..! பெயருக்கு (நமது வரி பணம்) காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து நகர்மக்கள் அனைவருக்கும் மர்மமாக உள்ளது - ஆகவே இது குறித்து காயல்பட்டினம் நகராட்சி மீது (உளவு பிரிவின் தகவலின் பேரில்) சிறப்பு விசாரணை மேற்கொள்வது சிறந்து.! அல்லது - நகரின் ஏதாவது ஒரு பொதுநல அமைப்பின் சார்பாக நகராட்சியில் கடந்த பத்து ஆண்டுகளின் (காசோலைகள் மூலம்) பண பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் நீதி மன்றம் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பொதுநல வழக்கு பதிவு செய்ய முன் வர வேண்டும்..! என்பது நகரின் சமூக ஆர்வலர் பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது ..

மேலும் நமது நகராட்சியில் பத்திர ஆவணங்கள் / கட்டிட வரைபடம் / விண்ணப்ப மனு எதுவுமே இல்லாமல் நகராட்சிக்கு தினமும் வந்து போகும் புரோக்கர்களின் உதவியால் கவனிக்க கூடியவர்களை திருப்தியாக கவனித்தால் சொத்து வரி (புதிய வீட்டு தீர்வை) மிக சுலபமாக கிடைக்க பெறுகிறது என்ற குற்றசாட்டும் நகரில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. திடுக்கிடும் செய்திகள் வெளிவர வேண்டும் என்றால் ...
posted by N.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்) [20 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42059

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காயல்மாநகர மக்கள் நேற்றும், இன்றும் ஏமாந்தவர்களாக! ஏமாற்றப்படுகிறவர்களாக!! இருந்திருக்கலாம் / இருக்கலாம் – ஆனால் என்றும் அப்படி இருக்க மாட்டார்கள், அப்படி இருக்கவும் விடமாட்டார்கள்.

-----------------------------

திருவாளர் நசீர் கான் நல்லவர் என்று சொல்லவரவில்லை – அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுக்கு அவருக்கு உடந்தையாக பலரும் இருந்திருப்பார்கள் என்பது நிச்சயம் – பலரும் என்பதில் அதிகாரிகள் மட்டும் அல்ல - அதில் அங்கத்தினர்களும் அடங்குவர்.

இதை திருவாளர் நசீர்கானிடம் கேட்டால் அவரே நகைச்சுவையாக சொல்லக்கூடும்… என் பாக்கெட்டை நிறைக்கலாம் என்று வந்தேன் , அட உன் பாக்கெட்டு என்ன , இரும்பு பெட்டியையே நிறைக்கலாம்

இங்கே எவனும் ஒன்னும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டாங்க என்று இன்ன, இன்ன நபர் தைரியம் சொல்லி ஆசைக்காட்டி சிக்க வைத்து விட்டானுங்க – இப்பம் சிக்கல் எனக்குதான் உதவிக்கு எவரும் வருகிறமாதிரி தெரியவில்லை என்ற பதிலே வரக்கூடும்.

--------------------------------

சரி இந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் என்பது எல்லாம் ஜுஜுபி.

இது விசயமாக தொடர்கிற வழக்கின் தீர்ப்பு வரும்போது திருவாளர் அசோக் குமாரின் பேரப்பிள்ளை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் மற்றும் திருவாளர் நசீர்கானின் பேரப்பிள்ளை ஸ்டேட் மினிஸ்ட்ராகவும் இருப்பார்கள்.

அதனாலே குற்றம் சாட்டப்படுகிற தொகை ஒரு கோடி அல்லது குறைந்தது ஐம்பது இலட்சம் என்று இருந்தால் பல சுவாரசியமான தகவல்கள், பல திடுக்கிடும் செய்திகள் எல்லாம் வெளிவரும் – வழக்கும் விரைவில் தீர்ப்பாகும் – தீர்ப்பு என்னமோ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாகத்தான் – ஆனால் மக்கள் கொஞ்சம் கண்விழிப்பார்கள்.

-------------------------------

திடுக்கிடும் செய்திகள் வெளிவர வேண்டும் என்றால் குடிநீர் மற்றும் சொத்துவரி வசூல் சம்பந்தமான கணக்குகளை தனிக்கை செய்ய வேண்டும் குறைந்தது பத்து வருடத்திற்கான கணக்கை தனிக்கை செய்தாலே போதும் ஊழல் தொகை குறைந்தது ஐம்பது இலட்சம் வரக்கூடும் - அதில் சிக்குகிறவர்கள் சிக்கல் எடுக்கமுடியாமல் விழி பிதுங்குவார்கள்.

என்னடா இவன் இப்படி எழுதுகிறானே! என்று பார்க்காதீர்கள் எல்லாம் நம்ம தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான் எழுத வைக்கிறது.

---------------------------------

அடுத்து வரக்கூடிய நகர் மன்றம் நல்லதாக அமைய வல்ல அல்லாஹ்! அருள் புரிவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 October 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42073

அஸ்ஸலாமு அலைக்கும்

அட ,,என்னப்பா ..நம் ஊர் நகராசியில் ...... தோண்ட ,, தோண்ட ...இன்னும் என்னவெல்லாமோ வரும் போல தெரிகிறது ...லஞ்ச ஒழிப்பு துறை உள்ளே வந்து விட்டது .....நாம் பொருத்து இருந்து நாடகத்தை பார்ப்போம் ......

இருப்பின் நம் ஊர் மக்களின் வரி பணம் அல்லவா ...இப்படி தேவைகற்று வினாக போகிறது.....நம் ஊர் நகராசி அதிகாரிகள் இடம் நம் சொந்த வேலையாக போனால் அவர்கள் பேச்சும் பேச்சுக்களை எழுதவும் முடியாது ....சொல்லவும் முடியாது .....நம் காதில் இருந்து ரத்தம் தான் கொட்டும் ..... அப்படி பேசுவார்கள் ...நான் அவர்களிடம் நல்லாவே அனுபவம் பெற்று // வேதனையும் அடைந்து உள்ளேன் ......இவர்கள் அப்படி பேச காரணம் நம் நகர் மன்ற ஒரு சில உறுப்பினர்களின் சப்போட்டால் ( பலத்தால் ( தான் ......

பூதம்'' இப்பதான் கிளப்பி உள்ளது ....எங்கு தான் சென்று அடைகிறது என்று . பொருத்து இருந்து பார்ப்போம் ...இதில் இன்னும் யார் ,, யார் ,, எல்லாம் உள்ளே வருகிறார்கள் என்று ??

ஒரு சில அதிகாரிகளிடம் நான் பேசியதில் நாங்கள் காயல் நகராச்சிக்கு மாறி வர பல '' L '' ரூபாய் '' கொடுத்து தான் வந்து இருக்கிறோம் ...... என்பார்கள் .....அப்படியானால் இது போன்ற தவறுகள் '' நடக்க கண்டிப்பாக வாய்ப்பு நிச்சயம் உண்டு .....

நம் ஊர் பொது மக்கள் ஒரு சில பேர்கள் கூட நகராச்சி அதிகாரிகளுக்கு சப்போட்டாக பேசவும் ,, இணைய தளத்தில் '' எழுதவும் செய்கிறார்கள் .....அதான் வேதனையாகவே உள்ளது .....

இன்ஷா அல்லாஹ் ...வருகின்ற நகர் மன்ற தேர்தலில் நல்லவர்கள் வெற்றி பெற்று .....நகர் மன்றம் சென்றால் தான் ஊருக்கு நல்லது நடக்கும் ...நகராச்சி அதிகாரிகளும் மிக கவனமுடன் செயல் படுவார்கள் ....தற்போதைய நம் நகர் மன்ற தலைவி ஒருவரால் மட்டும் நகராச்சி அதிகாரிகளை கேள்வி கேட்டகவும் ,, முறையாக பேசவும் முடியாது .......நம் உறுப்பினர்கள் ஒரு சிலர் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்களே ...நாம் என்ன செய்ய .......

திரும்பவும் நம் தற்போதைய தலைவிக்கு ஆதரவாக .... செயல் படும் விதமாக உறுப்பினர்கள் நகர் மன்றத்துக்கு தேர்வாகி வந்தால் தான் ...நம் ஊருக்கு நல்லது,, & பல நல்ல திட்டங்களை செயலாக்கவும் முடியும் .......நம் வரி பணமும் நமக்கே உபயோகமாகும் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரு நாட்களாக இதமழை!  (19/10/2015) [Views - 3351; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved