Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:46:58 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16629
#KOTW16629
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 30, 2015
சட்டசபையில் DCW தொழிற்சாலை குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரை - முழு விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2766 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் - நேற்றோடு நிறைவுற்றது. செப்டம்பர் 28 அன்று நடந்த சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி பேசினார்.

அவரின் உரையில் - கொடைக்கானல் யூனிலீவர் - மெர்குரி பிரச்சனை, உடன்குடி பி.எஸ்.வி. மீன் அரைவை தொழிற்சாலை பிரச்சனை, ஒ.என்.ஜி.சி. பாறை வாயு பிரச்சனை ஆகியவை உட்பட பல்வேறு பிரச்சனைகள் இடம்பெற்றிருந்தன.

காயல்பட்டினம் DCW தொழிற்சாலை குறித்து பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கீழ்க்காணுமாறு பேசினார்:

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதை கொள்கை விளக்கக் குறிப்பிலே படிக்க முடிந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரத்திலே, DHRANGADHRA இரசாயன ஆலை - DCW என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் - அந்த ஆலை தொடர்ச்சியாக அந்த பகுதியினுடைய சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய வகையிலே, மாசு கழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்த ஆலை - நாங்கள் மெர்குரி பாதரசத்தை பயன்படுத்தவில்லை, அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக சொன்னாலும் கூட, இப்போது கூட அந்த ஆலையினுடைய கழிவு நீரிலிருந்து மெர்குரி வெளியேறி, அங்கே கடலில் பாதரசம் கலந்து, அதன் காரணமாக மீன்களினுடைய வயிற்றிலும் கூட பாதரசம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அந்த பகுதி மக்கள் மத்தியிலே இந்த ஆலையினுடைய கழிவு நீரின் காரணமாக புற்று நோய், தோல் அரிப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழலையையும் பார்க்கின்றோம். இது மட்டுமல்லாமல், இந்த DHRANGADHRA அமைந்திருக்கூடிய சாகுபுரத்தின் அருகிலே, காயல்பட்டினம் என்ற ஊர் இருக்கின்றது. பக்கத்திலே - திருச்செந்தூர் இருக்கின்றது. திருசெந்தூரிலே, கடலிலே குளிக்கக்கூடிய பக்தர்களுக்குக்கூட இதனுடைய பாதிப்பு இருக்கக்கூடிய நிலை இருக்கின்றது.

எனவே - இந்த ஆலையினை முழுமையாக ஆய்வு செய்து, இந்த DHRANGADHRA CHEMICAL WORKSனுடைய மாசிலிருந்து அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.


இவ்வாறு பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சட்டசபையில் பேசினார்.

பேராசிரியர் பேச்சுக்கு பதில் கூறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இவ்விஷயங்கள் குறித்து அரசு கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

தகவலில் உதவி:
என்.ஏ.தைமியா,
மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. re:
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [30 September 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41922

முதலில் உங்களுக்கு எங்கள் ஊர் மக்களின் சார்பாக உள்ளம் பூரித்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.. எல்லா புகழும் இறைவனுக்கே..

அந்த அமில ஆலைக்கு எதிராக நாங்கள் எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு எங்களிலேயே சில எட்டப்பர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், எங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் பெரும் இடையூறாக மனதை வேதனை படுத்தி கொண்டு இருந்த நேரத்தில் உங்களின் இந்த பெரும் முயற்சி எட்டப்பர்களால் எங்கள் நகர் மக்கள் உள்ளத்தில் ஏற்பட்ட காயங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆறுதலாக (மருந்தாக) இருந்தது என்பதை மறுபதற்கில்லை சகோதரரே..!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [30 September 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41923

கேடுகெட்ட DCW பற்றி சட்ட சபையினில் ஆதங்கத்தை பதிவு செய்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அன்பொழுகும் நன்றி
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [30 September 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41924

ஊரால் வேறுபட்டிருந்தாலும், நம்மின உணர்வால் ஒன்றுபட்டு ஒரு உண்மையான சகோதர வாஞ்சையுடனும், உரிமையுடனும் எங்கள் ஊருக்காகவும் அம்மக்களின் சொல்லண்ணா துயர்பிணி அகற்றும் அக்கறையுடன் அரசு சபையில் அந்த நச்சு ஆலையின் அவல முடிச்சை முதன் முதலில் பிரித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு அனைத்து காயல் உள்ளங்களின் சார்பாக அன்பொழுகும் நன்றியினை மறுமுறையும் மறுமுறையும் கூறிக்கொள்வதில் மெத்த பெருமையடைகிறோம்!

அதுசரி, இந்த தொகுதி MLA /MP யை யாராவது பார்த்தீர்களா? பார்த்தால் தயவு செய்து அவர்களிடம் கேட்கவும் DCW என்ற ஒரு ஆலை எங்கே இருக்கிறது என்று? அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [30 September 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41925

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ...நம் சமுதாயத்தை சேர்ந்த...தாங்கள் எங்களின் இந்த துயர சம்பவத்தை பற்றி சட்ட சபையில் உரையாற்றிய தங்களை நாங்கள் எப்படி தான் பாராட்டுவது என்றே தெரிய வில்லை .....கோடான கோடி நன்றிகளை கூறி கொள்கிறோம் ..

தாங்கள் எங்கள் ஊரில் வந்து உரையாற்றிய போது சொன்னதை போலவே ..சட்ட சபையிலும் எங்கள் ஊர் மக்களுக்காக உரையாற்றி காயல் மக்களின் மனதில் நிறைந்து விட்டீர்கள் ....அல்ஹம்துலில்லாஹ் .....எல்லா புகழும் இறைவனுக்கே .....

இன்ஷா அல்லாஹ் ...தங்களின் இந்த உரையின் மூலம் நிச்சயம் தமிழக அரசின் முழு கவனத்துக்கு சென்று விட்டது ....மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கவனம் செலுத்தி நல்லது .... எங்கள் ஊருக்கு நடக்கும் என்றும் எதிர் பார்க்கிறோம் .....

அருமை நண்பர் குறிப்பிட்டது போல ஒரு சில கேடு கேட்ட குள்ள நரிகள் நமது ஊரில் இருக்கும் வரைக்கும் ....நம் மக்களின் நிலை பாடு மோசம் தான் ...ஊர் பொது மக்களின் தீவிரமான போராட்டத்தை பற்றியோ அல்லது ஊர் மக்களின் உயிர் கொல்லி நோயை பற்றியோ கொஞ்சம் கூட இவர்களுக்கு அக்கறை இல்லை ....பணம் மட்டும் தான் இவர்களின் குறிக்கோள் .......வல்ல இறைவன் தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேணும் .....

நம் ஊர் நகர் மன்றத்தை நகர்த்த விடாமல் ஒரு சில உறுப்பினர்கள் மூலம் செயல்படுகின்ற நமது ஊர் பணம் படைத்தவர்களுக்கும் & நம் ஊரின் முக்கியமான ஒரு அமைப்புக்கும் இந்த நாசமா போன >> DCW << தொழிற்ச்சாலைக்கு '' சாதகமாக '''' செயல் படுகின்ற ...ஒரு சில நகர் மன்ற உறுப்பினர்களை பற்றி தெரியாத என்ன ?? அல்லது இவர்களுக்கு தெரிந்தும் இவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா என்ன ?? அல்லாஹு ....அறிவான் ....

நமது ஊரின் ஒரு பெண்கள் தைக்காவுக்கு >> DCW << மூலம் ஒரு உறுப்பினர் பணம் வாங்கி கொண்டதும் ..அதன் பிரச்சனைகளும் யாவர்களும் அறிந்ததே ..... இதுவும் பணம் படத்த & முக்கியமான ஒரு அமைப்புக்கு தெரியாதா என்ன ....ஊர் மக்களின் நலனில் இவர்களுக்கு அக்கறை எங்கே போனது ....நகர் மன்ற உறுப்பினர்களுக்கு இவர்கள் சாதகமாக செயல் படுவதில் தப்பு இல்லை ...அது நல்ல ,,நேர்மையான ,,தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய கூடியவராகவும் நகர் மன்ற உறுப்பினர் இருக்கணும் .. அதான் முக்கியமே .....

திரும்பவும் .... நம் மரியாதைக்குரிய .ஜனாப் .பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ...பாரட்டுக்கள் + ஊர் மக்களின் துவாவும் உண்டு .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [05 October 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41947

DCW - வின் அக்கிரமங்கள் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைத்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

இங்கே ஒரு கருத்தாளர் இத்தொகுதி MLA மற்றும் MP குறித்து வினவியுள்ளார். கீழ்காணும் எனது வாக்கியங்கள் அவருடைய கருத்திற்கு பதிலளிப்பதாக ஆகாது.

இத்தொகுதியின் தற்போதைய MLA ஆனவர் திமுகவைச் சார்ந்தவர். அவர் DCW குறித்து மட்டுமல்ல, வேறு எந்த பிரச்சனை குறித்தும் சட்டப்பேரவையில் பேசமாட்டார். ஏனெனில் அவர் பிரச்சனையே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அவைகளை மக்கள் மறக்கும் விதமாகத்தான் பிறந்த வீடு முதல் இறந்த வீடு வரை வருகை புரிதல் மற்றும் பலவற்றை செய்து வருகிறார்.

இத்தொகுதியின் தற்போதைய MP ஆனவர் அதிமுகவைச் சார்ந்தவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் தானே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பதவிக் காலங்களிலும் DCW-வின் அக்கிரமங்கள் குறித்து இவர் மக்களவையிலே பேசுவார் என்ற நம்பிக்கை எமக்கில்லை. இதற்கு முன்பிருந்த திமுகவைச் சார்ந்த MP - யைப் போலவே இவரது செயல்பாடுகளும் இருக்கும் என நம்பலாம்.

பெரும்பான்மை மக்கள், கட்சி மாயை மற்றும் வாக்கிற்கு லஞ்சம் பெறுவது போன்றவற்றிலிருந்து மீளும் வரை இது மாதிரியான MLA, MP - க்களே பதவிக்கு வருவர்.

"நமக்கு நாமே" (ஒரு கட்சியின் தற்போதைய "நமக்கு நாமே" கோஷம் அல்ல) என்று செயல்படாதவரையில் விடியலுமில்லை, அக்கிரமங்கள் முடிவிற்கு வருவதுமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (30/9/2015) [Views - 2596; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved