Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:07:22 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16626
#KOTW16626
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 29, 2015
DCW குறித்து சட்ட சபையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேச்சு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2761 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை, பல ஆண்டுகளாக சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்த்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே - நேற்று தமிழக சட்டசபையில் நடந்த சுற்றுச்சூழல் துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் - DCW தொழிற்சாலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். அப்போது - இது குறித்து ஆய்வு செய்வதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் பேச்சு குறித்து தந்தி தொலைக்காட்சியின் மெய்ப்பொருள் காண்பது அறிவு நிகழ்ச்சியில் இன்று காலை சில நிமிடங்கள் விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

(27வது நிமிடத்தில் இருந்து) தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு காண
இங்கு அழுத்தவும்

தகவலில் உதவி:
என்.ஏ.தைமியா,
மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmed younus (abdudhabi) [29 September 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41912

பேராசிரியர் அவர்களுக்கு நன்றி... அமைச்சர் இடம் இருந்து விளக்கம் கேட்கும் வரை இந்த கேள்வி தொடர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by netcom buhari (chennai) [29 September 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41914

பேராசிரியர் அவர்களுக்கு நன்றி... உங்கள் பணி எங்கள் ஊரில் தொடரட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.I.மூசா நெய்னா (காயல்பட்டணம்) [29 September 2015]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 41916

மதிப்பிற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், 2 தினங்களுக்கு முன்பு மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுகூட்டத்தில் உரையாற்றிய மதிப்பிற்குரிய ஹாருன் ரஷீத் அவர்கள் , " இந்த ஊர் பொதுமக்கள் போராட்டம் எதிலும் ஆர்வமாக கலந்து கொள்வதில்லை " என்ற தனது வருத்தத்தை தெரிவித்தார். அவரின் கருத்து 100 சதவீதம் உண்மை என்பதே எனது கருத்தாகும்.

தற்பொதைய சூழ் நிலையில் வீரியமான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மற்ற ஊர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது போராட்டங்களில் அது எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் சரி, நமது மக்களின் பங்களிப்பு மிகவும் குறைவே. யாரோ , எந்த அமைப்போ போராடுகிறார்கள் , நமக்கென்ன என்ற குறுகிய எண்ணம் நம்மில் பலருக்கு உள்ளது. எனவே ஊரின் நன்மைக்காக ஒட்டுமொத்த மக்களும் திரண்டு போராட்டத்தில் பங்கெடுத்து நமது வலிமையை காட்டினால் மட்டுமே ஆட்சியாளர்களின் கவனம் நமது பக்கம் திரும்பும் என்பது எதார்த்தமான உண்மை.

எனவே இனி வரும் காலங்களிலாவது DCW போன்ற மிக முக்கிய போராட்டங்களில் அதிகமான மக்கள் பங்கெடுப்பதின் மூலம் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நமக்குள் ஒருவருக்கொருவர் கருத்தை பரிமாறிக்கொண்டோ , இணையதளங்களில் தங்களின் கருத்துக்களை எழுவதினால் மட்டுமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அன்பொழுகும் நன்றி
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [30 September 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41917

ஊரால் வேறுபட்டிருந்தாலும், நம்மின உணர்வால் ஒன்றுபட்டு ஒரு உண்மையான சகோதர வாஞ்சையுடனும், உரிமையுடனும் எங்கள் ஊருக்காகவும் அம்மக்களின் சொல்லண்ணா துயர்பிணி அகற்றும் அக்கறையுடன் அரசு சபையில் அந்த நச்சு ஆலையின் அவல முடிச்சை முதன் முதலில் பிரித்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு அனைத்து காயல் உள்ளங்களின் சார்பாக அன்பொழுகும் நன்றியினை காணிக்கையாக்குகிறோம்!

அதுசரி, இந்த தொகுதி MLA /MP யை யாராவது பார்த்தீர்களா? பார்த்தால் தயவு செய்து அவர்களிடம் கேட்கவும் DCW என்ற ஒரு ஆலை எங்கே இருக்கிறது என்று? அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அம்மாவின் 110ம் வள்ளுவரின் 110ம்
posted by mackie noohuthambi (colombo) [30 September 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41919

அம்மா அவர்கள் எல்லா திட்டங்களையும் விதி என் 110 இல் அறிவிக்கிறார்கள்.

முன்பெல்லாம் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்து கருத்துக்கள் பரிமாறப் பட்டு திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு அல்லது நிராகரிக்கப் பட்டு ஒரு ஜனநாயக அணுகு முறை இருந்தது. ஒரு வகையில் இதுவும் சரியாகத்தான் தெரிகிறது வீணான விவாதங்கள் நடப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம் ஆனால் அந்த 110 விதியின் கீழ் வெளியிடப் படும் திட்டங்கள் எதுவுமே நடைமுறைப் படுத்தப் படுவதில்லை என்ற குறையும் இருக்கிறது.

பேராசிரியர் அவர்கள் DCW விவகாரத்தையும் இந்த விதி 110 இன் கீழ் முடிவு செய்ய அம்மா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். என்றாலும் பேராசிரியர் அவர்கள் கடந்த 5 ஆண்டு காலங்களில் சமுதாயத்துக்காக குரல் கொடுத்த செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்ததில்லை. சட்டமன்றம் இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நமதூருக்காக குரல் கொடுத்திருப்பதை மனமார வரவேற்கிறோம். வள்ளுவர் குறள் என் 110 இல் ஒரு செய்தியை சொல்கிறார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

பேராசிரியர் அவர்களுக்கும் DCW விஷயமாக ஆவன செய்வதாக வாக்களித்த அமைச்சர் அவர்களுக்கும் இந்த குறள் எண் 110படி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. re:
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [30 September 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41921

முதலில் உங்களுக்கு எங்கள் ஊர் மக்களின் சார்பாக உள்ளம் பூரித்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.. எல்லா புகழும் இறைவனுக்கே..

அந்த அமில ஆலைக்கு எதிராக நாங்கள் எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு எங்களிலேயே சில எட்டப்பர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், எங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் பெரும் இடையூறாக மனதை வேதனை படுத்தி கொண்டு இருந்த நேரத்தில் உங்களின் இந்த பெரும் முயற்சி எட்டப்பர்களால் எங்கள் நகர் மக்கள் உள்ளத்தில் ஏற்பட்ட காயங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆறுதலாக (மருந்தாக) இருந்தது என்பதை மறுபதற்கில்லை சகோதரரே..!

அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து உங்களின் தூய்மையான பொது வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வானாகவும் ஆமின்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (30/9/2015) [Views - 2597; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved