Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:03:08 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16324
#KOTW16324
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 26, 2015
ஒரு தவறான செயலுக்கு என் கைகள் என்றும் துணைப் போகாது: ஜூலை 27 கூட்டம் குறித்து நகர்மன்றத் தலைவர் முகநூலில் கருத்து பதிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5307 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் நாளை (ஜூலை 27; திங்கள்) காலை 10:30 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில், தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:

எல்லாப்புகழும் இறைவனுக்கு; வல்லோன் அவனே துணை நமக்கு!

காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் மே 29, 2015 அன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திற்கான அஜெண்டாவினை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் பெரும்பாலானோர், அந்த கூட்டத்தினை புறக்கணித்தனர்.

இது போல பிப்ரவரி 27, 2015 அன்று அழைக்கப்பட்ட கூட்டத்திற்கான அஜெண்டாவினை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள், அந்த கூட்டத்தினையும் புறக்கணித்தனர்.

இடைப்பட்ட மாதங்களில் - முறையான பட்ஜெட், முழுமையான நிதி நிலை அறிக்கை போன்ற விபரங்களை அஜெண்டாவில் ஆணையர் இணைக்காததால், உரிய காலத்தில் கூட்டம் நடத்த முடியவில்லை. இது குறித்த விரிவான பதிவினை நான் ஏற்கனவே முகநூலில் செய்துள்ளேன். இம்மாதம் 8ம் தேதி அன்று, நகர்மன்ற உறுப்பினர்கள் 15 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று தபால் மூலம் எனக்கு கிடைத்தது. அதில் 43 சாலைப் பணிகள் குறித்து கோரிக்கை இடம்பெற்றிருந்தது.

7வது வார்டு, 13 வது வார்டு உறுப்பினர்கள் சம்பந்தமான கோரிக்கைகள் அதில் இல்லை. 15வது வார்டு உறுப்பினரின் இதர சாலை கோரிக்கைகள் விடப்பட்டு, அந்த வார்டு சார்ந்த அக்பர்ஷா தெரு சாலை கோரிக்கை மட்டும் இடம்பெற்றிருந்தது.

பொதுவாக, உறுப்பினர்கள் கோரிக்கை - சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் கோரி மட்டுமே இருக்கும். அதனை தொடர்ந்து, அதிகாரிகள் மதிப்பீடு தயாரித்து, அந்த தொகைக்கான ஒப்புதல் பெறுவார்கள். வழக்கத்திற்கு மாறாக - உறுப்பினர்கள் கோரிக்கையிலேயே மதிப்பீடு தொகையும் இடம்பெற்றிருந்தது. மதிப்பீடு தயாரிக்க உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை.

மேலும் - உறுப்பினர்கள் கடிதத்தில், 10 நாட்கள் காலக்கெடு விதித்து, கூட்டத்தை நடத்தவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடத்த வில்லை என்றால், துணைத் தலைவர் கொண்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

உறுப்பினர்கள் கடிதம் இணைத்துள்ளேன்.























3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 43 பணிகள் குறித்த கூட்டத்தினை துணைத் தலைவர் கொண்டு நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை என்றாலும், உறுப்பினர்களின் கடிதம் கிடைக்கப்பெற்ற மறுநாளே, அந்த கடிதத்தினை ஆணையருக்கு அனுப்பி வைத்தேன்.

மேலும் எனது இணைப்பு கடிதத்தில் - ஆணையரிடம், ஜூலை 24 அன்று கூட்டம் நடத்த அஜெண்டா தயாரிக்கும்படியும்,

--- அந்த அஜெண்டாவில் உறுப்பினர்கள் மனுவில் இடம்பெறாத சி-கஸ்டம்ஸ் சாலை மதிப்பீட்டையும்,

--- 7வது வார்டு, 13வது வார்டு, 15வது வார்டு உறுப்பினர்களின் மன்றப் பொருட்களையும் இணைக்கும்படியும்,

--- இது தவிர நகருக்கு அவசியமான வேறு சில பணிகளையும் இணைக்கும்படியும் கூறி கடிதம் எழுதினேன்.

அந்த கடிதத்தின் நகல் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மற்றும் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும் அனுப்பப்பட்டது.







ஆணையருக்கு 9-7-2015 அன்று கடிதம் அனுப்பியப் பின் அது குறித்த தகவலை, 18 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் - பதிவு தபால் மூலம் அனுப்பினேன்.

அந்த தபாலில் - ஆணையருக்கு நான் அனுப்பிய கடிதத்தின் நகலையும், நான் ஆணையரிடம் பல மாதங்களாக கோரி வரும் தகவல்கள் எனக்கு தரப்படாமல் இருப்பது குறித்தும் தனியாக கடிதமும் அனுப்பியிருந்தேன்.





ஜூலை 17 அன்று 100 கூட்டப் பொருட்கள் அடங்கிய அஜெண்டா - எனது ஈமெய்லுக்கு ஆணையரால் அனுப்பப்பட்டது. உறுப்பினர்களின் 43 பொருட்களும் அதில் இருந்தது.

ஜூலை 17 அன்று ஆணையரால் அனுப்பப்பட்ட 100 பொருட்கள் அடங்கிய மாதிரி அஜெண்டா: பார்க்க இங்கு அழுத்தவும் >>

ஆனால் - எனது 9-7-2015 தேதிய கடிதத்தில் கோரப்பட்டிருந்த பல தகவல்கள் இல்லை.

7வது வார்டு, 13வது வார்டு, 15வது உறுப்பினர்கள் கோரிக்கை இடம்பெறவில்லை.

சி கஸ்டம்ஸ் சாலை மதிப்பீடு இல்லை (மதிப்பீடு தயார் செய்ய அனுமதி கோரி மட்டும் பொருள் இருந்தது).

மேலும் - கூட்ட அஜெண்டாவில் உள்ள பொருட்கள் குறித்த ஆவணங்கள் எனக்கு தரப்படவில்லை.

ஜூலை 18, 19 விடுமறை. ஜூலை 20 - அன்று ஆணையர் ஊரில் இல்லை. ஜூலை 21 அன்று ஆணையருக்கு - அஜெண்டா சம்பந்தமாக விபரங்கள் கோரியும், ஆவணங்கள் கோரியும் மெயில் அனுப்பினேன்.





ஆவணங்கள் அலுவலகத்தில் இருப்பதாக அவரிடம் இருந்து பதில் வந்தது. ஜூலை 21 அன்று நகராட்சி சென்றேன்.

சாலைகள் குறித்து மதிப்பீடு கோப்புகள் ஒன்றும் நகராட்சியால் தயாரிக்கப்படவில்லை என்றும், உறுப்பினர்கள் தகவல் அடிப்படையில் அந்த மதிப்பீடுகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவித்தார்.

அஜெண்டா தொடர்பான வேறு கோப்புகளையும் என்னிடம் தர அதிகாரிகள் மறுத்தார்கள்.

ஜூலை 22 அன்று மீண்டும் ஆணையரிடம் இருந்து அஜெண்டா ஈமெயில் மூலம் வந்தது. தற்போது - கூடுதலாக 5 பொருட்கள் இணைக்கப்பட்டு 105 பொருட்களாக அந்த அஜெண்டா இருந்தது.

ஜூலை 22 அன்று ஆணையரால் அனுப்பப்பட்ட 105 பொருட்கள் அடங்கிய மாதிரி அஜெண்டா: பார்க்க இங்கு அழுத்தவும் >>

அஜெண்டா முழுவதையும் பார்த்தப்பிறகு, ஜூலை 23 நகராட்சி சென்றேன். அங்கு - அஜெண்டா புத்தகத்தில் ஒட்டப்பட்டிருந்த, மாதிரி அஜெண்டாவில் தேவையான விபரங்களை பதிவு செய்தேன்.

உதாரணமாக - தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ள 43 சாலைகள் கடைசியாக எப்போது போடப்பட்டது என்ற விபரம் கோரியிருந்தேன். ஏன் என்றால் - உறுப்பினர்களின் 43 சாலைப் பணிகளில், சமீபத்தில் போடப்பட்ட அப்பப்பள்ளி தெருவும் இடம்பெற்றிருந்தது.

11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை போடப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள் அது பழுதானது. ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், அந்த சாலையை 5.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க ஆணையர் கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த சாலையை புனரப்பைப்பது - ஒப்பந்ததாரரின் பணி என நான் கருத்து பதிவு செய்திருந்தேன். தற்போது அதே சாலையின் 100 மீட்டர் பகுதியை 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்னும் பல விபரங்களும் கேட்டிருந்தேன்.









அஜெண்டா புத்தகத்தில் நான் எழுதிய பதிவுகளை, கடிதத்திலும் எழுதி, நான் கோரிய தகவல்களை உடனடியாக தரும்படியும், (மறு தினம் ஜூலை 24 என்பதால்) அதிலிருந்து 7 நாட்கள் கழித்து கூட்டம் நடத்தலாம் என்றும் ஆணையருக்கு ஜூலை 23 அன்று பதிவு தபால் அனுப்பினேன். அதன் நகலை - துணைத் தலைவருக்கும் தபால் மூலம் பின்னர் அனுப்பினேன்.

ஜூலை 24 அன்று உறுப்பினர்கள் சார்பாக தபால் ஒன்று எனக்கு வந்தது. அதில் ஜூலை 24 அன்று கூட்டம் கூட்டப்படவில்லை என்றும், அதனால் 43 பொருட்களை கொண்டு, ஜூலை 27 அன்று - துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.





















(உறுப்பினர்கள் கடிதம் எனக்கு கிடைத்த அன்றே), ஜூலை 24 மாலை ஆணையர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் நான் கேட்ட ஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றை நான் பார்வையிட்டு - ஜூலை மாத கூட்ட தேதியினை தரும்படியும் தெரிவித்திருந்தார். வேடிக்கை என்ன வென்றால், அந்த ஈமெயில் அனுப்பப்பட்ட ஒரு சில நிமிடங்கள் கழித்து, நகராட்சி ஊழியர் வாயிலாக - துணைத் தலைவர் மூலம் ஜூலை 27 அன்று கூட்டம் நடத்த அஜெண்டா - உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னிடமும் ஆணையர் கொடுக்க சொன்னதாக - அந்த ஊழியர் என் வீட்டிற்கு வந்தார். நான் அதனை வாங்கவில்லை.

சில உறுப்பினர்களும், ஆணையரும், சில உயர் அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள் என்பது தெளிவு.





இந்த முறையில், துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்த நகர்மன்ற சட்டங்கள் அனுமதிக்கவில்லை; எனவே அவ்வாறு கூட்டத்தினை நடத்த தடை விதிக்க கோரி - மாவட்ட ஆட்சியருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும் அனுப்பியுள்ளேன். அக்கடிதத்தின் நகலையும் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன்.







ஜூலை 27 அன்று துணைத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கூட்டம் சட்டப்படி முறையானதா, யாரின் தூண்டுதலின் பெயரில், எந்த ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது என்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.

சாலைகளை வழங்குவது மட்டும் நகர்மன்றத்தின் கடமையில்லை; அவை தரமானதாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுவதும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிக்கும் உள்ள பொறுப்பு. அந்த அடிப்படையில் தான் - ஜூலை 27 கூட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் செயல் புரிகிறார்களா?

(1) நெய்னார் தெரு சாலை, அப்பாப்பள்ளி தெரு சாலை உட்பட பல பணிகளை முறையாக செய்யாத ஒப்பந்ததாரரை நகராட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நான் தீர்மானம் கொண்டுவந்தப்போது அதனை ஏன் ஆதரிக்கவில்லை?

(2) விதிமுறைகள்படி சாலைகளுக்கான உத்தரவாத காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட வேண்டும் என்று நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஏன் ஆதரிக்கவில்லை?

(3) போன ஆண்டு வேலை ஆணை வழங்கப்பட்ட ஆரம்பபள்ளி தெரு சாலை ஏன் இது வரைக்கும் போடப்படவில்லை? யார் தடுக்கிறார்கள்? இது போன்ற பல கேள்விகள் உள்ளன. காலம் பதில் சொல்லும்.

ஒரு தவறான செயலுக்கு - இன்றல்ல, என்றும் என் கைகள் துணைப் போகாது என்ற மன திருப்தி, என் ஆயுள் வரை துணை நிற்கும்.


இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் பதிவு செய்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by CADER (JAIPUR) [27 July 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 41420

தலைவியின் facbook பக்கம் பார்க்கவும் அதில் மிக தெளிவாக இருக்கின்றது. மக்கள் இதை புரிந்து கொள்ளுவார்கள். ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் பற்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [27 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41421

நகர்மன்ற தலைவர் அவர்களே..! நீங்கள் நேர்மையாக நீதியாக அரசு நிர்வாகத்தில் ஈடுபட்டால், தலையிட்டால் பல சோதனைகள், மிரட்டல்கள், விமர்சனங்கள் வருவது வாடிக்கை தான்...! நிர்வாகத்தில் ஒரு தவறான செயலுக்கு உங்கள் கைகள் எப்போதும் துணைப் புரியுமென்றால் சோதனைகள், மிரட்டல்கள், விமர்சனங்கள் தவிர்க்கப்படும்.! இதை தான் உள்ளூர் ஆளும் கட்சியின் பொறுப்பிலுள்ள நபர்களும் விரும்புகிறார்கள்.. அவர்களின் தேவையை உடல் உழைப்பில்லாமல் காலத்தை ஓட்டவேண்டும் அல்லவா..!

ஆணையருக்கும் சில உறுப்பினர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நகராட்சியில் எந்நேரமும் புரோக்கர் வேலை செய்யும் எடுபிடிகளுக்கு வாக்காலத்து பேசும் எவராவது கொஞ்சம் விளக்கம் / விபரம் தர முடியுமா...!

ஆணையரால் இதுவரை 2015-16 ம் ஆண்டிற்கான (உத்தேச வரவு - செலவு அறிக்கை) பட்ஜெட் தயார் செய்து நகர்மன்ற தலைவருக்கோ..! நகர்மன்றத்தின் 18 உறுப்பினர்களுக்கோ..! வழங்க படவில்லை என அறிகிறேன், ஆனால் தமிழக அரசோ 2015 - 2016 நிதியாண்டுக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு மானியமாக பல லட்சங்கள் வழங்கி வருகிறது..!

நமது நகராட்சியின் ஆணையர் திரு, காந்திராஜ் நமது வரி பணம் குறித்த உண்மையான பல வரவு - செலவு தகவல்களை மறைத்து பொய்யான / முரண்பாடான வரவு - செலவு அறிக்கையை சமீபத்தில் தலைவரிடம் அளித்தாராம்..!

அதில் உதாரணமாக, மாநில நிதிக்குழு மானியம் (SFC) வகை வரவு 80 லட்சம் என குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் - நகர்மன்ற தலைவர் கூறுகிறார் இவ்வகை வருவாய் 3 கோடி ரூபாய்க்கும் மேல், ஒவ்வொரு ஆண்டும் நமது நகராட்சிக்கு வருகிறதாம் - ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..? இந்த உறுப்பினர்களும் இது விசியத்தில் மவுனம் காப்பது ஏன்..?

தொடரும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மக்கள் வரி பணம் மக்களுக்காக செலவிட படவேண்டும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [27 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41422

மேலும் ஆணையர் காந்திராஜ் அளித்த முரண்பாடான தகவல் என்னவெனில்.. காலிமனை வரி மூலம் நமது நகராட்சிக்கு வருவாய் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாராம்...! ஆனால் - புதிய கட்டுமான உரிமங்கள் கொடுக்கும்போது, காலி மனை வரி - நமது நகராட்சியில் வசூல் செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..? இது விசியத்தில் உறுப்பினர்களும் மவுனம் காப்பது ஏன்..?

மேலும் - இதே ஆணையர் திரு காந்திராஜனின் ஒரு வியப்புக்குரிய அதாவது இது வரையில் நகர்மக்கள் எவரும் கேள்வி படாத செலவீன தகவல் இதோ..! நம் நகரின் குடிசை பகுதிகள் பராமரிப்புக்கு என ஆண்டுக்கு 45 லட்சம் என்றும், நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு 75 லட்சம் என்றும் - நமது நகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத முரண்பாடான செலவு தகவலை நகர்மன்ற தலைவரிடம் அளித்தாராம். (குறிப்பு:- கடந்த மழை காலத்தில் ஏழை எளிய மக்களின் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்த போது நகரின் சமுதாய கட்சிகள், பொதுநல அமைப்புக்கள் உதவிகள் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இதில் ஆணையர் குறிப்பிடும் நகராட்சியின் உதவி தொகை பல லட்சம் யாருக்கு சென்றது..? நமது வரிபணத்தை நகராட்சி மூலம் ஆணையர் திரு காந்திராஜ் குடிசைகளுக்கு வழங்கிய உதவி தொகை குறித்த பயனாளி பட்டியலை நகர்மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..? இது விசியத்தில் உறுப்பினர்களும் மவுனம் காப்பது ஏன்..?

அடுத்து ஆணையர் திரு காந்திராஜனின் மிக பெரிய திகைப்பூட்டும் தகவல் இதோ..! நம் நகரின் பூங்கா பராமரிப்புக்கு என ஆண்டுக்கு 75 லட்சம் செலவு செலவீனங்களை காண்பித்துள்ளாராம்..! நம் நகரில் நமது நகராட்சியால் இவ்வளவு பெரிய தொகை (75 லட்சம்) செலவிடும் அந்த பூங்கா எந்த பகுதியில் அமைந்துள்ளது குறித்த விபரத்தை மன்ற கூட்டத்தில் ஆணையர் காந்திராஜன் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..? இது விசியத்தில் உறுப்பினர்களும் மவுனம் காப்பது ஏன்..?

மேலும் நகராட்சியின் நிதி நிலை அறிந்திட நகராட்சி பெயரில் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளது - அது எந்த எந்த வங்கிகளில் / ஊர்களில் தொடங்கப்பட்டு (நம் வரி பணத்தின் வரவு - செலவு) செயல்பட்டு வருகிறது என்ற விபரத்தை ஆணையர் திரு. காந்திராஜ் மன்ற கூட்டத்தில் சமர்பிக்க முன் வருவாரா..? அல்லது.. நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையரிடம் இது குறித்து கேள்விதான் எழுப்புவார்களா..! ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..? இது விசியத்தில் உறுப்பினர்களும் மவுனம் காப்பது ஏன்..?

நகராட்சிக்கு வாங்கபடாத கணினிக்கு முன்னாள் ஒப்பந்த தொழிலாளர் நசீர் கான் என்பவர் பெயரில் 1,18,000 க்கு காசோலை என மேலும் பல முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது - பொருள் வாங்கமலேயே நகராட்சி காசோலை விநியோகம் இது விசியத்தில் உறுப்பினர்களும் மவுனம் காப்பது ஏன்..?

இது குறித்து நியாயமான கேள்விகள் நகரின் சமூக ஆர்வலர்களின் / பொது நல அமைப்புக்களின் பார்வை நகராட்சியை நோக்கி அமையா வரை இது போன்ற கீழ்த்தரமான, கேவலமான, சுயமரியாதையற்ற அவலம் தொடரத்தான் செய்யும்.

குறிப்பு:- மேலே குறிப்பிடும் தகவல் பொய்யாகவோ... அவதூறாகவோ இருப்பின் நகராட்சி சார்பாக என் மீது தாரளமாக வழக்கு தொடராலாம்.. அதை மனதார ஏற்று நீதி மன்றத்தின் மூலம் நகராட்சி ஆணையரின் அலுவலர்களின் சில உறுப்பினர்களின் நிர்வாக சீர்க்கேட்டின் முகத்திரையை கிழித்து இன்ஷாஹ் அல்லாஹ்.. நகர் மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.. இறைவன் மிக பெரியவன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [28 July 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41443

காக்கா தமிழன் முத்து இஸ்மாயில் அவர்களின் நியாயமான கேள்விக்களுக்கு வார்டு மெம்பெர் யாராவது பதில் கூறுவார்களா? முறைகேடுகள் இன்ஷா அல்லாஹ் களைய அனைவரும் பாடுபடவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [30 July 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41461

அஸ்ஸலாமு அழைக்கும்

நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களின் ...முக நூல் ''பக்கத்தை படிக்கின்ற அனைவர்களும் நிச்சயம் நம் தலைவி அவர்களை மனதாரவே உள்ளம் உகந்து பாராட்டி '' அவர்களின் ஹக்கில் '' துவா '' செய்வார்கள் இது தான் உண்மை .....

அவர்களின் இந்த ( ..... ஒரு தவறான செயலுக்கு என் கைகள் என்றும் துணைப் போகாது ...... )..... தலைப்பே நம்மை மெய் '' சிலிர்க்க வைத்து விட்டது ....நேர்மை என்றால் இது தான் ......நிச்சயம் மேடம் '' தங்களின் நேர்மை வெல்லும் ....அல்லாஹ் தங்களுக்கு துணை இருப்பானாகவும் ஆமீன்........தங்களின் இந்த முக நூல் தகவலை மற்ற இணைய தளங்கள் ...ஏன் அவர்களின் இணைய தளத்தில் பதிவு செய்ய வில்லை ......மறைக்க காரணம் ....

நம் தலைவி அவர்களின் நேர்மைக்கும்,, நம் ஊர் மக்கள் மீது அவர்கள் வைத்து உள்ள அளவுக்கடந்த பாசத்துக்கும் ....( அதான் இவர்களை வழி கெடுக்காமல் பாதுகாட்கிறது ....) மற்றவர்களின் பணத்துக்கும் ....அடிமையாகாமல் நேர்மையுடன் வழி நடக்க செய்கிறது .....

நாம் நல்லதோர் நகர் மன்ற தலைவி அவர்களை பெற்றும் ,, ஒரு சிலரின் தவறான செயல்பட்டால் ...அவர்களை நம் ஊர் நலன் பக்கம் செல்ல விடாமல் தடுக்கிறது ...இல்லை ,, தடுக்கபடுகிறது என்றே தான் சொல்லணும் .....

வருகின்ற கால நகர் மன்ற தேர்தலில் ஊர் மக்கள் யாவர்களும் ஊருக்கும் ,, தொகுதி மக்களுக்காகவும் நேர்மையாக உழைக்ககுடிய நல்லவர்களாக பார்த்து ...உறுப்பினர்களை தேர்வு செய்ய வேணும் ....இப்போது இருக்ககூடிய நபர்களை முக கவனமுடன் தேர்வு செய்ய வேணும் ...இது தான் முக்கியம் .....போதும் ஐயா ,, உங்களை எல்லாம் தரவு செய்து இந்த 5 வருடத்தில் ஊரும் சரி ,, தொகுதியும் சரி காய்ந்து போய் கிடக்கிறது ........பொது மக்களின் வரி பணங்கள் தேவைகற்று போய் கிடக்கிறது ...அதான் யாவர்களுக்கும் மன வருத்தமே ........

யாரின் சொல்லை கேட்டு இந்த ஒரு சில நம் நகர் மன்ற உறுப்பினர்கள் ....பொது மக்களை நினைக்காமல் ....ஆடுகிறார்களோ ?? யாம் அரியோன் .......

எங்களுக்கு நேர்மையானவர்களும் ,, பொது மக்களை நினைத்து பார்ப்பவர்களாகவும் இருப்பவர் தான் வேணும் .....

நம் அருமை சகோதரர் .முத்து இஸ்மாயில் அவர்களின் அனைத்து கேள்விகளும் முற்றிலும் முறையானதே .....இவரின் இந்த கேள்விக்கு யார் சார் தக்க பதில் சொல்வார்கள் ..என்று பார்ப்போம் ....நம் உறுப்பினர்கள் மௌனம் சாதிப்பார்களா ?? அல்லது இவர்களாவது தக்க முறையான பதிலை தருவார்களா ????பொருத்து இருப்போம் ......

குறிப்பு:- மேலே குறிப்பிடும் தகவல் பொய்யாகவோ... அவதூறாகவோ இருப்பின் நகராட்சி சார்பாக என் மீது தாரளமாக வழக்கு தொடராலாம்.. அதை மனதார ஏற்று நீதி மன்றத்தின் மூலம் நகராட்சி ஆணையரின் அலுவலர்களின் சில உறுப்பினர்களின் நிர்வாக சீர்க்கேட்டின் முகத்திரையை கிழித்து இன்ஷாஹ் அல்லாஹ்.. நகர் மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.. இறைவன் மிக பெரியவன்...!

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved