Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:14:10 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16321
#KOTW16321
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 26, 2015
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யஃகூப் மேனனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்! செய்தியாளர் சந்திப்பில் பேரா. ஜவாஹிருல்லாஹ் கருத்து!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இன்று 17.30 மணியளவில் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அவரது கருத்துக்கள் வருமாறு:-



2009ஆம் ஆண்டு மனித நேய மக்கள் கட்சி தொடக்கப்பட்ட நாள் முதல், தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்களது முதல் போராட்டமே மதுக்கடைகள் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்தான். தமிழகம் தழுவிய அளவில், மது ஆலைகள் முன்பும், மதுக்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிகள் முன்பும் போராட்டம் நடத்தி இருக்கிறோம். சட்டமன்றத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் முழுமையான மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என பேசியிருக்கிறோம்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நல அமைப்புகளும் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. தமிழக அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மதுக்கடை விற்பனை மூலம் அரசுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கிரானைட் குவாரியை அரசே ஏற்று நடத்துவது போன்ற மாற்று வழிகளைக் கையாள்வதன் மூலம் மதுவிலக்கு காரணமாக இழக்கப்படும் வருவாயை விட பன்மடங்கு ஈட்ட முடியும். பெரியோர் முதல் சிறியோர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டு சீரழித்து வருகின்றனர். வளமான தமிழகம் அமைய மதுவிலக்குக் கொள்கையை அமுல்படுத்தியே ஆக வேண்டும்.

உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை தொடர்பான வழக்கில் மாநில போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்த வழக்குகளில், ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில போலீசாரே விடுவிக்கலாம் என்று கூறியிருக்கிறது. இதனடிப்படையில், தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு இந்த மாத இறுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய சட்டப் புத்தகங்களில் தூக்கு தண்டனை என்பதே இருக்கக் கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தானாக முன்வந்து சரணடைந்தவர்தான் யாகூப் மேமன். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவான முறையில் நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. தூக்குத் தண்டனை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் முரண்பாடாக உள்ளதாக உச்சநீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகவாவது குறைக்கலாம்.

பொதுவாக தூக்குத் தண்டனை என்பது முஸ்லிம் பிரமுகர்களுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், அவசர அவசரமாக அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போது யஃகூப் மேமனுக்கும் அதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தின் நலனுக்குப் பாடுபடக்கூடிய - சமூக நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட கூடிய கட்சியுடன்தான் தேர்தலில் கூட்டணி வைப்போம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்புதான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அதிமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் பல்வேறு நன்மையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இன்னும் அதிக சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதலே மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளி மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

மத்தியில் வளர்ச்சியை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பல்வேறு ஊழல்களில் சிக்கித் தவித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டும் 2 மாதங்களும் ஆகிறது. மத்திய ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.

பொருளாதாரக் குற்ற வழக்கில் தேடப்பட்ட நபருக்கு வெளியுற துறை அமைச்சரே அபயமளிக்கும் வகையில் உதவியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்தப் பிரச்சனையில் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் நியாயமானதே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இதை விட அற்ப விஷயங்களுக்கெல்லாம் பாராளுமன்றத்தை பாஜக முடக்கியது.


இவ்வாறு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

படம்:
A.R.ஷேக் முஹம்மத்


தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:15 am / 28.7.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [27 July 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41423

யாகூப் மேமன் என்பதே சரியான பெயர், யாகூப் மேனன் அல்ல.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved