Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:34:16 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15828
#KOTW15828
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 28, 2015
அதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று நீர். இந்த அடிப்படை தேவையை சுற்றி - அடுத்த உலக போர் நிகழும் என்று கூட ஒரு சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, உணவு உற்பத்தி போன்ற காரணத்திற்கு - நீருக்கான தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. முக்கியத்துவம் அடிப்படையில் இந்த நீராதாரம் - அரசாங்கங்களால் பகிர்ந்து வழங்கப்படாத காரணத்தால், போராட்டங்களும் அவ்வபோது வெடிக்கிறது.

காயல்பட்டினத்தில் இருந்து இயங்கும் DCW தொழிற்சாலைக்கான நீர் தேவை - தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாகவும் (3 Million Gallons Per Day; 3 MGD), குடிநீர் வடிகால் வாரியத்தின் தொழிற்சாலைகளுக்கான சிறப்பு திட்டம் மூலமும் (0.5 Million Gallons Per Day; 0.5 MGD) பூர்த்தி செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. 1 காலன் என்பது சுமார் 4.5 லிட்டர்.



தாமிரபரணி ஆற்றில் இருந்து தினசரி 3 மில்லியன் (30 லட்சம்) காலன் தண்ணீர் எடுக்க - தமிழக அரசின் பொதுப்பணி துறை, DCW நிறுவனத்திற்கு 1994ம் ஆண்டு அனுமதி கொடுத்தது. இந்த அனுமதி 1991-1996ம் கால கட்டம் வரையிலானதாகும்.

இந்த ஒப்பந்தத்தை - தற்போது காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தீர்ப்பாயத்தில் எதிர்த்துள்ள விரிவாக்க திட்டத்திற்கான ஆவணத்தில், DCW நிறுவனம் இணைத்திருந்தது. தெளிவில்லாத அதன் வாசகங்களும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தெளிவான வாசகங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

DCW நிறுவனம் தனது விரிவாக்க EIA அறிக்கையில் இணைத்திருந்த தெளிவில்லாத நீர் அனுமதி அரசாணை







DCW நிறுவனத்திற்கான தெளிவான வாசகங்கள் கொண்ட நீர் அனுமதி அரசாணை







1996 ம் ஆண்டே அனுமதி முடிவுற்றிருந்தாலும், DCW தொழிற்சாலை தொடர்ந்து - தாமிரபரணி ஆற்றில் இருந்து - நீர் பெற்று வருகிறது. மேலும் - DCW தொழிற்சாலை, தாமிரபரணி ஆற்று நீர் சம்பந்தமாக - அரசு பொதுப்பணி துறை மீது தொடர்ந்துள்ள வழக்கு (WP 37936/2002) நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலும் உள்ளது.

DCW நிறுவனத்தின் ஆவணப்படி - அதன் அன்றாட நீர் தேவை (விரிவாக்க திட்டங்கள் தவிர்த்து) - 9938 கிலோ லிட்டர்.

விரிவாக்க திட்டத்தின் மூலம் கூடுதலாக 4874 கிலோ லிட்டர், ஒவ்வொரு தினமும் தேவைப்படும்.

DCW நிறுவனத்தின் 2006ம் ஆண்டு விரிவாக்க திட்ட அறிக்கையில் இருந்து



DCW நிறுவனத்தின் 2011ம் ஆண்டு விரிவாக்க திட்ட அறிக்கையில் இருந்து



DCW நிறுவனம் அன்றாடும் பயன்படுத்தும்/ பயன்படுத்த நாடும் நீரின் அளவு எவ்வளவு பெரியது என்பதை புரிந்திட, காயல்பட்டினம் நகரின் அன்றாடும் குடிநீர் தேவை விபரம் உதவியாக இருக்கும்.

மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்கத்தில் இருந்து தினமும் காயல்பட்டினம் 20 லட்சம் லிட்டர் - அதாவது 2000 கிலோ லிட்டர் - தண்ணீர் பெறுகிறது.

DCW நிறுவனத்தின் தேவையோ - அன்றாடும், இதைவிட 5 மடங்கு அதிகமாகும். அது மட்டும் அல்லாமல், விரிவாக்க திட்டத்திற்கு பிறகு - இது - காயல்பட்டினம் நகர் குடிநீர் பயன்பாட்டை விட - சுமார் 7.5 மடங்கு அதிகமாகும்.

ஏப்ரல் 2008 முதல் பிப்ரவரி 2015 வரை - DCW நிறுவனம், தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுத்த நீரின் அளவினை - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. இதில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், அந்நிறுவனம் பெற்ற நீர் அளவு இல்லை.



இவ்வகைக்கு - DCW நிறுவனம், பொதுப்பணி துறைக்கு செலுத்திய தொகை விபரத்தையும், காயல்பட்டணம்.காம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.



தாமிரபரணி ஆற்றில் இருந்து - ஆண்டொன்றுக்கு, சுமார் 20 லட்சம் KLD அளவு தண்ணீர், DCW நிறுவனம் பெற்றதாக பொதுப்பணி துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதற்கு அந்நிறுவனம் செலுத்தும் தொகை சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது - 1000 லிட்டருக்கு சுமார் 50 பைசா மட்டுமே!

இத்தொகையை தான் - தமிழக ஆறுகளில் இருந்து நீர் பெறும், தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுக்கு செலுத்துகின்றன என தெரிகிறது (G.O. Ms.No.474 dated 13.11.2001).

காயல்பட்டினம் போன்ற உள்ளாட்சி மன்றங்கள், 1000 லிட்டருக்கு - 4.50 ரூபாய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்துகின்றன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், தொழிற்சாலைகளுக்கு, 1000 லிட்டருக்கு - 15 ரூபாய் என்ற கணக்கில் தான், நீரும் வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும், காயல்பட்டினம் நகராட்சி - குடிநீர் வகைக்கு, 33 லட்ச ரூபாய் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்துகிறது. இது போக, குடிநீர் வகைக்கான மின்சார செலவு தனியாக செலுத்தப்படுகிறது.

[நகராட்சிக்கு பொது மக்கள் - குடிநீர் வரியாக, 600 ரூபாய் செலுத்துகின்றனர். DCW தொழிற்சாலை, அரசுக்கு செலுத்தும் தொகையோடு ஒப்பிட்டால், நகரின் குடிநீர் வரி செலுத்தும் ஒவ்வொருவரும், ஆண்டொன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறவேண்டும்!]

ஆனால் - காயல்பட்டினம் நகரின் குடிநீர் வகை தேவையை விட, 3 மடங்குக்கு மேல் நீர் பெறும் DCW நிறுவனம், நகராட்சி செலுத்தும் தொகையை விட சுமார் 3 மடங்கு குறைவாகவே, அரசுக்கு செலுத்துகிறது.

அதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்!

[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 6:30 pm / 28.4.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Shaik Abdul Cader (KayalPatnam) [28 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40259

காயல் பட்டிணத்தில் ஊர் பேர் கொண்ட இணையதளங்கள் நிறையவே உண்டு....அவைகளில் பெரும்பாலானவை உபயோகமானவை, அத்தியாவசியாமானவைகளை கொண்டவையே... ஆனால் செய்திகளுக்கான இணைய தளத்தில் காயல்பட்டிணம்.காம் முதல் படி. அனைத்து விஷயங்களையும் ஆதாரத்துடன் சொல்வதாகட்டும்.

செய்திகளை முந்திதருவதாகட்டும்.. போலி நபர்களின் விமர்சனங்களை நிராகரிப்பதாகட்டும். இதையெல்லாம் விட மேலாக யாருக்கும் வளைந்து அல்லது விலை போகாமல் நடுநிலையுடன் அனைத்து செய்திகளையும் விரிவாக அலசி ஆராய்ந்து உண்மையை மட்டுமே சொல்வதாகட்டும்... இவை அனைத்தையும் விட முக்கியமானது ஊர் நலனில் அக்கரை கொண்டு உண்மைகளை கண்டறிந்து செய்திகள் வெளியிடுவது....

நோ சான்ஸ்... பிற இணைய தளங்களை குறை கூறுவதற்காக இந்த பதிவு இல்லை. மாறாக மனதில் பட்டதை மகிழ்வுடன்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re
posted by kamalmusthafa (abha.ksa) [28 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40260

நாமளும்தான் வருடம் இரண்ட்டுமுறை d c w எதிர்து போராட்டம் பன்னுகிறோம்செவிடன் காதில்சங்கு ஊதுற மாதிரிதான் இருக்கு அதில் எந்த முன்னெற்றமும் இல்லை ஒரு வேலை உலஹமே திரும்பி பார்க்கும் வகையில் எதவாதுநடந்ததால் அரசாங்க காதுகளில்விழுமோ என்னவோ அதுக்கு சர்வதிகாரி ஹிட்லர் தான் வரனும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [29 April 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40262

காயல்பட்டணம்.காம் என்ன சொல்லவருகிறது. இறுதியாக நாங்கள் பயன்பெறும் அல்லது பாதிப்புக்குள்ளாகும் நிலை இதுதான் என்ற ஒரு உன்மை செய்தியொடு உங்கள் பதிவை முடித்திருக்கலாம்.கணினி அறிவு வேகத்தைவிட காயலரின் கணீரென்ற கவ்வுமறிவு வேகமதிகம் என்ற கணிப்பில் அப்படியே விட்டு விட்டதோ?.

ஒரு ஊருக்குள்ள தொழிற்சாலை பெறும் மொத்த நீரின் அளவைவிட குறைவாக மூன்றில் ஒரு பகுதி மாத்திரமே அந்த ஊர் மக்கள் அனைவர்களுக்கும் கிடைக்கிறது.அதிலும் அந்த தொழிற்சாலைக்கு 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா மட்டுமே.ஆனால் அந்த ஊர் மக்கள் கொடுப்பதோ 4 ரூபாய் 50 காசுகள்.என்ன கொடுமையா இது?

குடிமக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கவேண்டியது அரசுனுடைய கடமை( ஆனால் அரசு பாட்டலில் அடைத்து வியாபாரம் செய்கிறது அது வேறு விசியம் ) நம்மூருக்கு கொடுக்கும் நீரின் விலையை விட மிக மிக குறைவான விலைக்கு ஒரு தொழிற்சாலைக்கு அதாவது அந்த நிர்வாகம் கோடி கோடியாய் சம்பாதிக்க வழிவகை செய்து,மக்கள் எப்படி நீரில்லாமல் நாசமாய் போனாலும் பரவாயில்லி,உங்கள் தேவைக்கு ஒரு சம்பரதாய விலையை நிர்ணயித்து தருகிறோம் என்றால்,

இதையும் சரிகாணும் எத்தனையோ சண்டாளர்கள், அரசியல்வாதிள்,ஆலை அடிவருடிகள், ஆட்சிமன்ற பச்சோந்தி பிரதிநிதிகள் பக்கபலமாக இருக்கும்பொழுது இப்படிப்பட்ட நிர்வாகம் இதுவும் செய்யும் இதற்கு மேலையும் செய்யும்!

நமதூருக்கு வரும் நீரின் அளவைவிட 7.5 மடங்கு நீர் DCW ஆலைக்கு செல்கிறதாம் .நாம் இங்கு போதிய தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறோம் அத்தனையையும் அந்த நிர்வாகம் உறிஞ்சுவதற்கு வழிவகுக்கப்படுகிறது!

காயலர்களின் நீரை உ றிஞ்சுவதென்ன அவர்கள் உயிரை உறிஞ்சினாலும் அதையும் உளமார வரவேற்று போற்றி புகழும் பேடிகள் நம்மோடு இருக்கும் வரை நமெக்கென்ன கவலை என்று கம்பீரமா கர்ஜிக்கிறது அந்த அசுர ஆலை!

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் நம் "கெப்பா"வின் பணி காயல் நலன் காப்பதென்பதில் தப்பாதாகி விடக் கூடாதப்பா! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தண்ணி காட்டுறோ
posted by Javed Nazeem (Chennai) [29 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40263

இரண்டு வாரங்களுக்கு முன், பூவுலகின் நண்பர்கள் ஏற்பாட்டில் "Even the Rain" என்கிற படம் சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. நண்பன் பஷீர் தகவலில் அவனும், மற்றொரு நண்பனும், நானும் சென்று படத்தைப் பார்த்தோம். 2000 ஆண்டு வாக்கில் பொலிவியாவில் நடந்த நிகழ்வின் பின்னணியில் அந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

பின்னணி இது தான் - பொலிவிய அரசு தண்ணீரை தனியார் உடமையாக்கி அதனை விற்கும் உரிமையை ஒரு MNC க்கு தருகிறது. மழை நீரின் ஒரு துளி கூட மக்களுக்கு சொந்தமில்லை. மீறினால் கடும் தண்டனை. மக்கள் எதிர்ப்பு வெடிக்கவே தனியார் கம்பெனி ஊரை விட்டு வெளியேறுகிறது.

விழிப்புணர்வு ஏற்பட்டு தக்க முயற்சிகள் எடுக்கவில்லையெனில் ஒரு துளி நீருக்காக அலையும் நிலை ஏற்படலாம். இறைவன் காக்க வேண்டும்.

சகோதரர் ஷேக் அப்துல் காதர், நம்முடைய இணைய தளம் பற்றி நல்ல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. "செய்திகளை முந்திதருவதாகட்டும்.." - இது மட்டும் வஞ்சப் புகழ்ச்சி போல் தோன்றுகிறது. அப்ரூவ் பண்ணும் போது அட்மினே சிரித்து இருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [29 April 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40264

ஆற்றுக்கு அருகில் உள்ள சுற்று வட்டார மக்களுக்கு குடிக்க நீர் இல்லை... DCW இரசாயன தொழிற்சாலைக்கு 1000 லிட்டர் குடிநீர் 50 பைசாவா..! என்ன கொடுமை இது..!

இரசாயன தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இங்குள்ள விவாசய நீரை / குடி நீரை எடுப்பது வேதனை அளிக்கிறது - இரசாயன தொழிற்சாலை பயன்பாட்டிற்கு நீர் வேண்டும் என்றால் கடல்நீரை சுத்தரிப்பு செய்து எடுத்துக்கொள்ளட்டும் - வெளிநாடுகளில் உள்ள அணைத்து தொழிற்சாலைகளும் கடல்நீரை சுத்தரிப்பு செய்து நீர் தேவையை பயன்படுத்துகிறார்கள்.

தமிழக மக்களிடையே இது குறித்த தெளிவும் / விழிப்புணர்வும் இல்லாதவரை இந்த நாட்டையும் / இந்த நாட்டின் விவாசய மக்களையும் வறுமைக்கு உள்ளாக்கி நாட்டின் நிலங்களை வறண்ட பூமியாக விரைவில் இந்த DCW மற்றும் பல வட நாட்டு தொழிலதிபர்கள் ஆக்கிவிடுவார்கள்.

ஆத்தூரில் இருந்து நம் நகருக்குள் வரும் நீர் அளவை கணக்கிடும் மீட்டர் (கணக்கீடு) குறித்த தெளிவு / விழிப்புணர்வு நமது நகர் மக்களுக்கிடையில் இல்லை என்பதை நமது நகராட்சி அதிகாரிகளும் / இரசாயன தொழிற்சாலையும் மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட நன்கு உணர்ந்து / தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

நகருக்கு புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் நீர் கணக்கீடு (மீட்டர் அளவு) குறித்த தினசரி நீர் RECIVED / DELIVERY அறிக்கை மாதம் தோறும் நமது நகராட்சியில் கேட்டு பெற்று ஆய்வு செய்தால் மேலும் பல திடுக்கிடும் முறைகேடுகள் அம்பலமாகும்..! ஆத்தூரிலிருந்து நகருக்குள் வரும் நீரின் RECIVED / DELIVERY அறிக்கை பெற நகராட்சியில் தண்ணீர் வரி செலுத்தும் நம் அனைவருக்கும் பொறுப்பு / கடமை உள்ளது. அதையும் இந்த இணைதளம் தான் அறிக்கை பெற்று நமது பார்வைக்கு தரவேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரியல்ல..! நமக்கான தேவைக்கு நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல்.

நகர்நலன் குறித்த பல தகவலை தன்னால் இயன்ற வரை இந்த இணையதளம் அளித்து வருகிறது - பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Shaik Abdul Cader (KayalPatnam) [29 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40265

சகோ....ஜாவித் நழீம் ....வஞ்சப்புகழ்ச்சி எனும் உங்கள் எண்ணத்தை உஙகளுக்கே சமர்ப்ப்னம் செய்கிறேன்.. மனதில் உள்ளதை அறிபவன் அல்லாஹ் ஒருவனே என்பது அடியேனின் எண்ணம்.... செய்திகளை முந்திதருவது என்ற எனது கருத்து இந்த DCW ன் தண்ணீருக்கான விலை நிர்னயத்தை ஆதாரத்துடன் எந்த நம்மூர் இனைய தளமும் வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஒருவேளை அப்படி ஏதும் செய்தி வந்திருந்தாலும் கூட எனது அறிவுக்கு அது வரவில்லை ,அல்லது நான் அதை அறிய வில்லையே தவிர வஞ்சப்புகழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:..To Shaik Abdul Cader
posted by Javed Nazeem (Chennai) [02 May 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40326

"வஞ்சப்புகழ்ச்சி" என்கிற வார்த்தை இங்கே நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது - நேரடி அர்த்தம் கொள்ள வேண்டாம். முன் பின் வரிகளை சேர்த்து படித்தால் புரியக் கூடும். புண்படுத்தும் / குறைகூறும் நோக்கம் சிறிதும் இல்லை. அப்படி நீங்கள் கருதும் பட்சத்தில் வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved