Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:55 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15773
#KOTW15773
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 16, 2015
CRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4270 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை மாநகராட்சியின் மெரினா லூப் சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையின் இரண்டாம் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. 47 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம், சென்னை சாந்தோம் சாலை போக்குவரத்தினை மேம்படுத்த, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு CRZ ஒப்புதல் வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக கடந்த மாதம், நீதிபதி சொக்கலிங்கம் தலைமையிலான இத்தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு - இடைக்கால் தடை விதித்திருந்தது. மேலும் - சாலை விரிவாக்கம் திட்டம் - விதிமுறைகளை மீறுகிறதா என விசாரிக்க, இத்தீர்ப்பாயம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்தும் இருந்தது.



இதற்கிடையே - தொடர்ந்து நடந்த விசாரணையில், மாநகராட்சி தரப்பில் - இத்திட்டத்திற்கு என பெறப்பட்ட CRZ ஒப்புதல் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னை டி.நகர் சார்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர், CRZ ஒப்புதலுக்கு தடை விதிக்க கோரி, தீர்ப்பாயத்தை அணுகினார்.

புதிய மனு, நேற்று (புதன்கிழமை), பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான இரண்டாம் அமர்விற்கு முன்னர் வந்தது. அம்மனுவில் - இத்திட்டம், சில இடங்களில் உயர் அலை எல்லைக்குள் வருகிறது என்றும், அலைகளின் எல்லைகளுக்கு இடையிலான பகுதி CRZ - 1 பகுதி என விதிகள் கூறுகின்றன என்றும், எனவே இப்பணிகள் - CRZ NOTIFICATION 2011 படி, அனுமதிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவித்தது.

வழங்கப்பட்ட CRZ ஒப்புதல், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்றும், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ ஒப்புதல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபப்டவில்லை என்றும் மனு தாரர் கூறியிருந்தார்.

அரசு வழக்கறிஞர்கள், இது தொடர்பான் மற்றொரு வழக்கு, இதே நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கை இணைக்கலாம் என கூறினாலும் - CRZ ஒப்புதலுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கினை மே 5க்கு நீதிபதி ஜோதிமணி ஒத்தி வைத்தார்.

தகவல்:
தி ஹிந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நமது நகராட்சிக்கு மட்டும் இது விதிவிலக்கா..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [17 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40183

இச்செய்தி நமது நகரின் நகராட்சிக்கும் விரைவில் பொருந்தலாம்..!

காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? எடுக்க போகிறது..? மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பாகவும் / குழப்பமாகவும் / இருவேறு கருத்தாகவும் உள்ளது..

முதலில் ஒரு திட்டம் (கட்டிடம்) அமையும் இடதிற்கு செல்லும் சாலை முதலில் பிரச்சனை (தடை) இல்லாத வகையில் சாலை அமைப்பு உள்ளதா என அறிந்த பிறகே எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கு அமைக்கும் கட்டிட பணியை தொடங்க வேண்டும், அதற்க்கு மாற்றமாக நமது நகராட்சி CRZ வரைமுறைக்குள் வரும் (சாலைக்கு என தனி பத்திரம் மூலம் நன்கொடையாக பெறப்பட்ட 1 - 5 ஏக்கர் நிலம்) சாலை அனுமதி குறித்த சட்ட தெளிவு எதுவும் பெறாத வகையில் இக்கடிட வேலையை முதலில் அவசர அவசரமாக / அதுவும் ரகசியாமாக ஆரம்பித்திருப்பது நகர் பொதுமக்களின் வரிப்பணத்தை வீண் விரயமாக்க செய்யும் முயற்சியே இன்றி வேறில்லை...!

சென்னையில் நடந்த இச்சம்பவத்திற்கு / தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இச்செய்திக்கு பிறகாவது நமது நகராட்சியின் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்..!

அதிகாரிகள் சிந்திப்பார்களா..? அல்லது கட்டிடப்பணி முடிந்து மக்கள் வரிப்பணம் விரயமான பின்பு இறுதியில் சாலை குறித்த தடைக்கு பிறகு சந்தோஷ படுவார்களா..?

கட்டிட வேலை முடிந்தன ஒப்பந்தகாரர் மகிழ்ச்சி அடைந்தார் - அவர்களுடன் அதிகாரிகளும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் - இனி சாலைக்கு தடை வந்தால் என்ன..! வராவிட்டால் என்ன..! தமது தேவை பூர்த்தியாகி விட்டது என ஒதுங்கி கொள்வார்கள்..!

எரிவாய்வு மையத்தை அடையும் சாலை குறித்த தெளிவு இல்லாமல் நமது நகராட்சி கட்டிட பணி மேற்கொள்வது குழப்பமாகவே உள்ளது..! இந்த குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு நகரின் பல பொதுநல அமைப்புக்களின் எதாவது ஒரு அமைப்பு சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக அமையும் - இல்லையெனில் இறுதியில் மக்கள் வரி பணம் வீண் விரயம் ஆகுவதில் சந்தேகமே அல்ல..!

குறிப்பு :- BUFFER ZONE குறித்த தெளிவும் அவசியம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [17 April 2015]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 40185

======இந்த குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு நகரின் பல பொதுநல அமைப்புக்களின் எதாவது ஒரு அமைப்பு சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே. =================

பொது அமைப்புகள் பற்றி இப்போதுதான் சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று தமிழில் சொல்வார்கள் .எல்லாம் காலம் கடந்த ஞானோதயம். அதிலும் பாருங்க எந்த பொதுநல அமைப்புன்னு சொல்றதுக்கு துணிவு வரவில்லை. பொது நல அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீதிமன்றத்தை அணுகுவார்கள். நீதி மன்றத்தைதான் நாடுவது என்று இருந்தால் அது நம் தலைவிதி. அதை யாரும் மாற்ற முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஊருக்கு நாலு பேர் நல்லவர் இல்லாமலா போயிடும் ?கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு..தப்பு செஞ்சவன் உப்பு தின்பான்.அப்ப தெரிஞ்சுடும்.
posted by Sheik Abdul Cader (Kayal Patnam) [17 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40186

பொது நல அமைப்பு என்ன ??? இதே இணையம் பல முறை இந்த விஷயத்தைப் பற்றி நியாயமான முறையில் , வெளிப்படையாக ,இதன் நிறை குறைகளை வெளியிட்டிருக்கிறது.. ஊருக்கு ஊர் ஊழல்.. எல்லா இடத்திலும் ஈகோ. காயல் மக்கள் ஒன்றும் செம்மறி ஆட்டுக்கூட்டம் அல்ல... ஊருக்கு நாலு பேர் நல்லவர் இல்லாமலா போயிடும் ? கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு.. தப்பு செஞ்சவன் உப்பு தின்பான். அப்ப தெரிஞ்சுடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by nizam (india) [17 April 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40192

அட்மினிக்கு வேண்டு கொள்

தவறுதலாக நான் எழுதி முடிக்குமுன் பட்டன் அமுத்தி விட்டேன் இதையும் சேர்த்து முந்திய கமண்டில் வெளியிடவும்

எனது பாமர ஸ்தானத்தில் இருந்து ஒரு கருத்து CRZ விசயத்தில் எப்போது அரசு. விழித்து கொண்டது சுனாமி ஏற்பட்டு பல்லாயிரகணக்கான உயிர்கள் காவு கொண்ட பிறகு. அதன்பிறகு அரசு ஆணை பிரபித்தது கடற்கரையில் ஐநூறு மீட்டருக்கு மக்கள் குடி இருப்பு கட்ட கூடாது என்பது. அது எந்த அளவுக்கு பின்பற்ற பட்டுள்ளது என்பது ஊர் அறிந்த உண்மை.

முக்கிய நோக்கமே சுனாமி காலத்தின் போது ஐநூறு மீட்டரில் உள்ள மக்களை வெளியேற்றுவது அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். இப்போது எனது பாமரத்தனமான கேள்வி இந்த குப்பைமேட்டை சுனாமி தாக்கினால் என்ன உயிர்சேதம் ஏற்படும். இந்த பிலாண்டில் வேலை செய்யும் அதிபட்சம் ஐந்தாறு பேரை வெளியேற்ற என்ன சிரமம் ஏற்படும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வேகத்தில் விவேகம் வீழ்ந்துவிடக்கூடாது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [17 April 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40193

ஊருக்கு நன்மையான இந்த பயோ காஸ் திட்டம் வரவேண்டும், அதுவும் சீக்கிரம் வந்திடாதா என்ற ஆவலுடனும், அபிலாசையுடனும் எதிர்பார்க்கிறோம்! எப்பிரிவினர்களின் முயற்சியாலும் முழுமை அடையவேண்டும் என்பதில் இரு கருத்துக்கள் ஏதுமில்லை என்பதே இந் நலத்திட்டத்தை நாடும் நடுநிலையானவர்களின் எண்ணமோட்டமாகும்!

அதே நேரத்தில் இத்திட்டத்தை முறைப்படி அணுகி, இதன் செயல்பாடுகளில் எதிர்காலத்தில் எந்தவித சட்ட சிக்கலோ,அரசாணையின் அத்து மீறலோ இல்லாமல் இருக்கிறதா என்பதை தீர்க்கமாக தெளிவு பெற்றிடவேண்டும்!

இத்திட்டம் இந்த இடத்தில் வருவதை எதிர்ப்பவர்களை எப்படியாவது வென்றிடவேண்டும் என்ற அவசர கோலத்தில் அரைகுறையாக அந்த அதிகாரி வாக்குறுதி தந்துவிட்டார், இந்த வழியை பின்பற்றி செல்லலாம் என்று,எந்த ஒரு சட்ட சிக்கலோ ,அரசு விதி மீறலோ இருந்தாலும் அதை அலட்சியம் செய்து விட்டு காரியமாற்றி முடிவில் அவை அனைத்திற்கும் ஒரு அவலம் வருமேயானால், முட்டிவிட்டு குனிந்த கதையாகிவிடும்!

இது 90 இலட்சம் திட்டமாட்சே ஆகவே எந்த ஒரு ஆணையரும் இதில் கடுமை காட்டாமல் விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்தால், அது இலவு காத்த கிளிக்கு இலவம் பஞ்சு கிடைத்த கதையாகிவிடும்!

ஏனெனில் சென்னையில் 47 கோடிக்குறிய திட்டத்தையே சாலை வசதி சரி இல்லை என்று பசுமை தீர்ப்பாணையம் தடைவிதித்திருக்கும் போது, அத்திட்டத்துடன் ஒப்பிடுகையில் நம் திட்டம் மிக,மிக சிறிய திட்டமாகும். ஆனால் நம்மை பொறுத்தவரை நமக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு கனவு திட்டமாகும். அத்திட்டத்தை முறைப்படி எந்த சட்ட சிக்கலோ ,அரசு விதி அத்து மீறலோ இல்லை என்பதை தெளிவாக தீர்க்கமாக அறிந்த பிறகு ஆக்கப்பூர்வமான பணிகளில் இறங்குவதே சாலச்சிறந்தது!

அதை விட்டுவிட்டு எம்முடைய எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடனும், ஆத்திரத்துடனும் அவசர கோலத்தில் அரைகுறை தகவல்களுடன் அள்ளித்தெளிக்கும் காரியங்களில் ஈடுபடுவோமேயானால், ஒரு திட்டத்தை எப்படி செயலாக்க வேண்டும் என்ற அணுகுமுறை தெரியாத அனுபவசாலிகள் என்று நம் அறியாமையை அடுத்தவர்கள் பார்த்து எள்ளி நகையாடக்கூடிய நிலைமைக்கு நாம் தள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு அரிய பெரிய அழகான திட்டம் நம் கையைவிட்டு கழன்றோடிவிடும் என்பதும் திண்ணமே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. CRZ 1 குறித்து தெளிவு பெற நீதி மன்றத்தை தானே அணுகுவார்கள்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [17 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40195

பொது நல அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீதிமன்றத்தை அணுகுவார்கள். CP

நகரின் பொதுநல அமைப்பு ஆதிக்க அமைப்பாக / சுயநல அமைப்பாக / ஒரு சிலரின் சுய ஆதாய அமைப்பாக அவ்வமைப்பு மாறும் போது / செயல்படும் போது CRZ 1 குறித்து தெளிவு பெற நீதி மன்றத்தை தானே அணுகுவார்கள்.. இதில் தவறு என்ன இருக்கு..!

இதற்கிடையில், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை தவறாக வழிநடத்தியவர்கள் யார்..? என்ற அடையாளம் அறியவும் / இனி இது போன்ற கேள்விகள் / குழப்பங்கள் எழாமலும் / நமக்குள் எழும் இருவேறு கருத்துக்களுக்கும் நீதி மன்றம் சரியான முடிவை / தெளிவை நமக்கு அளிக்கலாம் அல்லவா..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40198

“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினிலே”.

சர்வே எண் 278-ல் பயோ கேஸ் திட்டம் வருவதை எதிர்க்கும் இந்த இணையதளமும், MEGA அங்கத்தினர் அனைவரும் இது நாள் வரை சொல்லி வந்த விஷயம், “இந்த திட்டம் CRZ-ல் வருகிறது” என்பது. இதே இணையத்தில் பல கட்டுரைகள் வந்துள்ளது.

ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? // (C&P)

அதாவது, அந்த plant அமைய இருக்கும் இடம் ‘CRZ வரைமுறைக்குள் வரவில்லை’ என்ற உண்மையையை முதன்முறையாக ஒப்புக் கொண்ட சகோதரர் முத்து இஸ்மாயீல் அவர்களுக்கு நன்றிகள் பல. இந்த இணையதளம், சகோதரரின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதா? என்பது தெரியவில்லை. உண்மை நிலைத்தே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும்.

இப்போதைய குற்றச்சாட்டு, “அந்த இடத்துக்கு போவதற்கான பாதை, CRZ-ல் வருகிறது என்பதாகும்” ஒரு திட்டம் வரும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இந்த திட்டம் நடைபெருகிறது. அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள். சட்ட சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

அதிகாரிகள், இத்திட்டத்தை, சட்டப்படி தான் செயல்படுத்துகின்றனரா? என்று அறிய // சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக அமையும் // என்பதில்லை. RTI-ல் கேட்டால் பதில் கிடைத்து விட போகிறது. RTI-ல் கேள்வி கேட்பதில் தான் MEGA தேர்ச்சி (expert) பெற்றவர்கள். அதை அந்த அமைப்பு செய்யும் என்று நம்புகிறேன்.

RTI-ல் கேள்வி கேட்டு பதில் தெரிய MEGA அமைப்பினர் விரும்பவில்லை என்றால், அவர்களே, நீதிமன்றத்தை (தம்பி முத்து இஸ்மாயில் சொல்லுவது போல்) நாடி விபரம் அறிந்து கொள்ளலாம். வேறு அமைப்பு எதற்கு வழக்கு தொடர வேண்டும்? அப்படி நீதிமன்றம் சென்று, இத்திட்டம் சட்டப்படி நடைபெற முயற்சி எடுத்தால், அந்த அமைப்பினரை பாராட்டலாம்.

-சாளை. அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நமதூரில் CRZ-1 பகுதியா? அப்படி CRZ-1 பகுதியாக இருந்தால், எந்தெந்த பகுதிகள் (தெருக்கள்) அதில் அடங்கும்?.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40199

இந்த இணையதளம், கடந்த இரண்டு வருடங்களாக CRZ பற்றியும், சர்வே எண் 278-ல் வரும் பயோ கேஸ் திட்டம் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே அந்த தலைப்பாகவே இருப்பதால், என்னைப் போல் சிலர் சலிப்பு தட்டி அதை முழுமையாக படிக்காமல் இருந்திருப்போம்.

இதற்கிடையில், “அறியாமையா? அசட்டுத் துணிச்சலா?” (News ID # 15727) என்ற தலைப்பில் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறையில்) மீனவர்களுக்கு என - சுனாமி தொடர்பான திட்டமாக, 169 தொகுப்பு வீடுகள் பற்றியும், // காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இந்தத் திட்டம் குறித்து எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கியது. இத்திட்டத்தை எதிர்க்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தத் திட்டத்திற்கு என அரசு கையகப்படுத்திய நிலம் - CRZ வரைமுறைக்குள் வருகிறது என்பதுதான் வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம்.// (C&P).

ஒரு விஷயம் “மக்களுக்கு” தகவலாக சென்றடைந்துவிட்டது. அதாவது, சுனாமி குடியிருப்புக்கு தடை கொடுக்கப்பட்ட காரணம் , அந்த பகுதி CRZ வரையறைக்குள் வருகிறது. அதே போல் தமிழக அரசின் கீழ் செயல்படுத்த இருக்கும் ‘பயோ கேஸ் திட்டமும்’ அந்த வரையறைக்குள் வருவதால், இத்திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் எப்படி முயற்சி செய்கிறார்கள்? என்று.

என் போன்றோரின் கேள்வி (விபரம் அறிய தான்), நமதூர், CRZ-ல் எந்த zone-ல் வருகிறது (1,2 3)? அந்த ZONE-ல் எந்தெந்த பகுதிகள் வரும்?

கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?

அப்படி (ஒருகால்) இந்த பகுதிகெல்லாம் CRZ வரையறைக்குள் வந்தால், என்னென்ன பிரச்சனை வரும்?

1) ஏற்கனவே இருக்கும் வீடுகளுக்கு பிரச்சனை வருமா?
2) இருக்கும் வீட்டை இடித்து விட்டு, புதியதாக அதே இடத்தில் வீடு கட்டினால், பிளான் அப்ரூவலில் பிரச்சனை வருமா?

3) காலி நிலத்தில் வீடு கட்டும் போது பிளான் அப்ரூவலில் பிரச்சனை வருமா?

4) அந்த தெருக்களில் ஏற்கனவே இருக்கும் ரோட்டை புதிப்பித்து போட்டால் பிச்சனை வருமா?

5) புதியதாக சாலை போட பிரச்சனை வருமா?

இந்த சந்தேகங்களை, இந்த இணையதளம் தனி செய்தியாக தந்தாலோ , அல்லது விபரம் அறிந்தவர்கள் கருத்து பதிந்தாலோ, சட்டத்தை அறிவதற்கு இலகுவாக இருக்கும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இத்தனை காலம் சொன்னது பொய்தான் என்று இப்பவாவது ஒப்புக்கொண்டீர்களே? சந்தோஷம்!
posted by Hameed Rifai (Jeddah) [18 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40200

“மொத்த இடத்தையும் CRZ என்று சொன்னவர்கள் தற்போது ரோடு மட்டும்தான் CRZ என்கிறார்கள்" என்று சாளை லுக்மான் அவர்கள் கூறுகிறார்கள்.

MEGA இந்த இடத்தை திட்ட அமைவிடம், சாலை வரும் இடம் என என்றுமே பிரித்துக் கூறியதில்லை. அது வெளியிட்டுள்ள பிரசுரங்களே அதற்கு சான்று.

சாலை இல்லாமல் திட்ட இடம் கிடையாது; திட்டமில்லாமல் சாலைக்கு அவசியமும் கிடையாது. இது விஷயத்தில் MEGA அன்றும், இன்றும் தெளிவாகவே உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள இடம் CRZக்குள் வருகிறது. அவ்வளவுதான்!

ஆனால், தங்களைப் போன்றவர்கள்தான் சாலைக்கான இடம் CRZக்குள் வருவதாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

அரசு விதிகளைப் பொருத்த வரை சாலையையோ, மீதமுள்ள இடத்தையோ பிரித்துப் பார்க்காது. இரண்டும் சேர்த்துதான் திட்டத்திற்குரிய இடம். அதை மறந்துவிட வேண்டாம்!

சாலை CRZக்குள் வருகிறது என இப்போது கூறியிருக்கிறீர்கள். இந்த உண்மையை மறைத்துதான் 2 ஆண்டுகளாக, “CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்..... CRZ அல்லாத இடத்தைத் தரப்போகிறோம்....” என தொடர்ந்து பொய்யைக் கூறி வந்துள்ளார்கள் / வந்துள்ளீர்கள். அது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

ஏனையோருக்கு வேண்டுமானால் இவ்விடம் குறித்த தெளிவு இல்லாமலிருந்திருக்கலாம். நிலத்தைத் தருபவர்களும், அதற்குப் பரிந்துரைத்தவர்களும், அதை ஆதரித்தவர்களும் உண்மையாளர்களாக இருந்திருந்தால், “சாலை மட்டும் CRZ எல்லைக்குள் வருகிறது, மற்றவை CRZக்குள் இல்லை” என அப்போதே கூறியிருக்கலாம். அப்படிக் கூறியிருந்தால் இத்தனை செய்திகளுக்கும், இந்த விவாதங்களுக்கும் அவசியமே இருந்திருக்காது.

அந்த இடத்தில் CRZ எல்லையைத் தொடாமல் சாலைக்கு இடம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பதை விபரமறிந்தவர்கள் நன்கு அறிவர். ஆனால், ஏதோ இப்பதான் புதிதாகக் கண்டுபிடித்தது போல தங்களைப் போன்றவர்களும், ஐக்கியப் பேரவையும், முன்னாள் நகர்மன்றத் தலைவரைச் சார்ந்தவர்களும்தான் ஏமாற்றி வந்திருக்கிறீர்கள் என்பதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள்.

ஆக மொத்தத்தில், சாலை CRZக்குள் வருகிறது என சாளை லுக்மான் காக்கா அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பதற்கு மிக்க சந்தோஷம். அடுத்த நடப்புகளையும் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கோயபல்ஸ் கொள்கையை விட்டு முதலில் வெளியே வாருங்கள்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40208

தம்பி ஹாமீத் ரிபாயீ, // இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!! // இது உங்கள் கருத்து. (Comment Reference Number: 39629)

இந்த கருத்து நீங்க சூப்பரா உட்ட ரீலா, தம்பி?

//ஆனால், தங்களைப் போன்றவர்கள்தான் சாலைக்கான இடம் CRZக்குள் வருவதாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.// (C&P)

என்னுடைய கமேன்ட்சில், இந்த நிலத்துக்கு செல்லும் பாதை CRZ-ல் வருகிறது என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன்? அதை (C&P) பண்ணி காட்ட முடியுமா? பதில் கொடுக்கும் முன், எதிராளி என்ன கருத்து பதிந்துள்ளார் என்று முழுமையாக வாசிப்பதில்லையா? அவ்வளவு அவசரமா?

நான் ஆரம்பத்திலிருந்து கூறி வரும் குற்றச்சாட்டு "கோயபல்ஸ்" அமைப்பினர். அதாவது, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால், உண்மையாகிவிடும் என்ற கொள்கையில் உள்ளவர்கள். அந்த பொய்யை உறுதிபடுத்துவது போல், நான் பதியாத கருத்தை மீண்டும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

//அடுத்த நடப்புகளையும் விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.// (C&P)

என்னுடைய கருத்தை மீண்டும் வாசியுங்கள்.

அதில், //அதிகாரிகள், இத்திட்டத்தை, சட்டப்படி தான் செயல்படுத்துகின்றனரா? என்று அறிய // சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக அமையும் // என்பதில்லை. RTI-ல் கேட்டால் பதில் கிடைத்து விட போகிறது. RTI-ல் கேள்வி கேட்பதில் தான் MEGA தேர்ச்சி (expert) பெற்றவர்கள். அதை அந்த அமைப்பு செய்யும் என்று நம்புகிறேன்.

RTI-ல் கேள்வி கேட்டு பதில் தெரிய MEGA அமைப்பினர் விரும்பவில்லை என்றால், அவர்களே, நீதிமன்றத்தை (தம்பி முத்து இஸ்மாயில் சொல்லுவது போல்) நாடி விபரம் அறிந்து கொள்ளலாம். வேறு அமைப்பு எதற்கு வழக்கு தொடர வேண்டும்? அப்படி நீதிமன்றம் சென்று, இத்திட்டம் சட்டப்படி நடைபெற முயற்சி எடுத்தால், அந்த அமைப்பினரை பாராட்டலாம். // (C&P)

நீங்கள் RTI-யில் கேள்வி கேட்டு தெளிவு பெறுவீர்கள் அல்லது நீதிமன்றத்தை நாடி விபரம் அறிவீர்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

அதை முதலில் செய்யுங்கள். உங்களை செய்ய வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே? உங்களின் அடுத்த நடப்புகளையும் விரைவில் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுள் நானும் ஒருவன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Hameed Rifai (Jeddah) [18 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40212

சகோதரர் லுக்மான் அவர்களுக்கு,

// தம்பி ஹாமீத் ரிபாயீ, // இந்த நிலத்தை (278) ஒட்டினார்போல் - கிழக்கில் கடல், வடக்கில் ஓடை. அதாவது மீட்டர் கணக்கு, கிலோ மீட்டர் கணக்கு அல்ல, ஒட்டி! ஒட்டி!! ஒட்டினார் போல!!! அதாவது 0 மீட்டர்!!!! // இது உங்கள் கருத்து. (Comment Reference Number: 39629)

இந்த கருத்து நீங்க சூப்பரா உட்ட ரீலா, தம்பி? // C&P

புனைப்பெயரில் ரீல் உடுவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும்போது, நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் காக்கா?

எது உண்மை, எது பொய் என்பதை காயல்பட்டணம்.காம் செய்தி எண் 15744 இல் உள்ள கீழ்க்கண்ட வாசகத்தை பார்க்கவும்.

செய்தி எண் 15744
----------------

அவரது நிலத்தின் - 278/2 உட்பிரிவில் அமைந்துள்ள நிலவியல் பாதையை ஒட்டி, 4 ஏக்கர் நிலம் தராமல், அதன் மேற்கு கோடியில் நிலத்தை ஒதுக்கியதற்கு காரணம், DCW நஞ்சு வாய்க்கால் - சர்வே எண் 278இன் வடக்கு மத்தியில், நிரந்தரமாக உள்வாங்கியுள்ளதால், அப்பகுதி - CRZ-1 வரைமுறைக்குள் வருவதாகும்.

http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா?

// என்னுடைய கமேன்ட்சில், இந்த நிலத்துக்கு செல்லும் பாதை CRZ-ல் வருகிறது என்று எங்கு குறிப்பிட்டுள்ளேன்? அதை (C&P) பண்ணி காட்ட முடியுமா? // C&P

என்ன காக்கா அதுக்குள்ள உங்க கமெண்ட்ட மறந்துட்டீங்க?

// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? // (C&P)

இப்ப என்ன சொல்லப்போறீங்க, நான் முதல் பாதியைத்தான் உண்மை என்று சொன்னேன், இரண்டாம் பாதியை இல்லை என கூறப்போகிறீர்களா? சொன்னாலும் சொல்வீங்க!

எதுக்கு காக்கா, வளவளன்னு பேசிகிட்டு ஜவ்வு மாதிரி இழுக்கணும்.

நான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.

நீங்கள் அடித்தோ, உதைத்தோ, சத்தியம் செய்தோ, சொல்லுங்கள் - 5.5 ஏக்கர் நிலம் முற்றிலும் CRZ வரைமுறைக்கு வெளியிலேயே உள்ளது என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. விளங்கி கருத்து பதியுங்கள் சகோதரரே!
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [18 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40213

அய்யோ அய்யோ, தம்பிக்கு தமிழ் வாசிக்க தெரியும் தானே? வாசிக்கிறது தான் வாசிக்கிறீங்க. ஒழுங்கா வாசிக்க கூடாதா?

தம்பி முத்து இஸ்மாயீல் உடைய கருத்து பதிவை காப்பி & பேஸ்ட் பண்ணியதை கூட ஒழுங்காக வாசிக்காமல், அந்த வாசகம் என்னுடையது என்று 'கோயபல்ஸ்' மாதிரி மீண்டும் பொய் சொல்கிறீர்களே?

//காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? எடுக்க போகிறது..? மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பாகவும் / குழப்பமாகவும் / இருவேறு கருத்தாகவும் உள்ளது..// (C&P) Comment Reference Number: 40183 தம்பி முத்து இஸ்மாயீல் உடைய வாசகம். அவர் ஒத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவரின் பதிவை மேற்கோள் காட்டி இருந்தேன்.

யார் என்ன கருத்து பதிந்திருக்கிறார் என்று படிப்பதில்லையா? ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மைபடுத்தி விடலாம் என்று பார்க்கிறீர்கள்.

//நான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.// (C&P) இது உங்களின் கருத்து. இதையும் என்னுடைய கருத்து என்று திரித்து சொல்லி விடாதீர்கள்.

//உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்.// (C&P) தம்பி சாளை பஷீர் அவர்களின் கருத்து.Comment Reference Number: 38767. தம்பி பஷீர் பதிந்தது ஜனவரி மாதம். அவரும் மெகா அமைப்பின் உறுப்பினர் தான்.

இப்போது ஜோராக வேலை நடைபெறுகிறது. திட்டம் நடைபெறும் இடத்தை அதிமுகவின் அங்கத்தினர் பார்த்து வந்துள்ளனர். முடிஞ்சா தலைவி மற்றும் ஏன் என்றே தெரியாமல் / அறியாமல் எதிர்க்கும் நண்பன் உறுப்பினர் சம்சுதீன் அவர்களையும் அந்த இடத்துக்கு போய் பார்க்க சொல்லுங்கள்.

இப்போதாவது மக்களுக்கு வேலை நடைபெறும் இடத்துக்கு மக்களை அழைத்து சென்று, இந்த திட்டம், (உங்களின் கருத்து படி) எந்த வகையில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுகிறது? என்று காட்டினால், "ஏமாந்தது போதும் மக்களே...!" என்ற உங்களின் கோஷத்துக்கு (MEGA 03-01-2015 நோட்டிஸ்) ஆதரவாக மக்களும் உங்களுடன் சேர்ந்து போராடுவார்கள்.

//http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா? //

(உங்களின் கருத்து) உங்களிடம் கருத்து பதியும் பொது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுள்ளது. வேறொருவரின் கருத்தை காப்பி பேஸ்ட் பண்ணினாலும் என் கருத்து என்று தவறாக புரிந்து, என் மேல் இட்டுக் கட்டி விடுகிறீர்கள்.

என் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு? நான் இந்த செய்திக்கு கருத்து பதிந்து இருக்கிறேனா? இருந்தால் அதையும் காட்டுங்கள்.

//இப்போதைய குற்றச்சாட்டு, “அந்த இடத்துக்கு போவதற்கான பாதை, CRZ-ல் வருகிறது என்பதாகும்” ஒரு திட்டம் வரும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இந்த திட்டம் நடைபெருகிறது. அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள். சட்ட சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம். // என்ற என் கருத்தை காப்பி & பேஸ்ட் பண்ணுகிறேன்.

சரி சரி, CRZ பற்றி இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அந்த department உங்களுடையது இல்லையா? இதில் இன்னும் expert ஆகவில்லையோ?

Expert பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ப்ளீஸ் CRZ 1 வரைமுறைக்குள் சாலை வரவில்லை - அல்லது - வருகிறது எதவாது ஒன்னு ப்ளீஸ் காக்கா பதில் தாருங்கள்
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [18 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40214

இப்போதைய குற்றச்சாட்டு, “அந்த இடத்துக்கு போவதற்கான பாதை, CRZ-ல் வருகிறது என்பதாகும்” ஒரு திட்டம் வரும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இந்த திட்டம் நடைபெருகிறது. அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள். சட்ட சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம். CP

பாதை, CRZ-ல் வருகிறது என்பதை சகோதரர் அப்துல் ரஜாக் ஆகிய தாங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா..! இல்லையா..? அதை தாங்கள் வெளிபடையாக ஏன் உண்மையை சொல்ல மறுக்கிறீர்கள்..?

மடியில் கனமில்லை எனில் தாரளமாக துணிந்து சாலைக்கான நன்கொடை பத்திரத்தில் CRZ 1 வரைமுறைக்குள் சாலை வரவில்லை என கூற முடியுமா..? எனது இந்த கேள்விக்கு உங்களால் பதில் கூற தான் முடியுமா..?

அப்துல் ரஜாக் காக்கா ப்ளீஸ் CRZ 1 வரைமுறைக்குள் சாலை வரவில்லை - அல்லது - வருகிறது எதவாது ஒன்னு ப்ளீஸ் காக்கா பதில் தாருங்கள் - மவுனம் வேண்டாம் - ரெம்பவும் இக்கட்டான கேள்வியை நான் கேட்டு விட்டேன் என ஈகோ பார்க்காமல் காக்கா சாலை குறித்து தெளிவுக்கு மட்டும் பதில் தாருங்கள் ப்ளீஸ்..! ப்ளீஸ்..! ப்ளீஸ்..!

இப்போதும் நான் சொல்வேன் இனி எப்போதும் நான் சொல்வேன் பயோ கேஸ் பிளான்ட் / குப்பை கிடங்கு அமையும் நிலம் CRZ வரைமுறைக்குள் வரவில்லை ஆனால் நன்கொடையாக பெறப்பட்ட 5.5 ஏக்கரில் சாலைக்கான 1.5 ஏக்கரில் உள்ள பகுதி CRZ வரமுறைக்குள்ளே வருகிறது என நான் திட்டவட்டமாக / உறுதியாக கூறுவேன் - உங்களால் இத்திட்டதில் CRZ வருகிறது / CRZ வரவில்லை இப்படி கூற முடியுமா..!

சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்..! காக்கா சும்மா அதாவது இணையதில் கருத்து எழுதுவோம் என எழுத கூடாது காக்கா எதையும் மன உறுதியுடன் / தெளிவாக / தானும் குழம்பாமல் / பிறரையும் குழப்பாமல் / உண்மையை உண்மையாக / கருத்து எழுதுங்கள் காக்கா..!

அடுத்து ஒரு சிறிய விபரம் / தெளிவு வேண்டும் காக்கா - குப்பை கிடங்கு அமையும் பகுதி CRZ வரைமுறைக்குள் வரவில்லை ஆனால் அத்திட்டம் அமுலாக நகர்மன்றத்தின் BUFFER ZONE தீர்மானம் அவசியமா..? அவசிமில்லையா..? இது குறித்து உங்கள் கருத்து என்ன காக்கா..? இப்போது குப்பையின் துர்நாற்றத்தால் அவதி படும் சூழ்நிலை நாளை இங்கு கொட்டப்பட இருக்கும் குப்பையால் ஏற்படும் பிரச்சனைக்கு உங்கள் கருத்து என்ன காக்கா..?

அட்மின் அவர்களுக்கு - இது விவாதமல்ல அவரின் கருத்தை நானும் பிற வாசகர்களும் அறியவே இப்பதிவு..! கத்திரி போடாமல் இதை வெளியிடவும்.. நன்றி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Hameed Rifai (Jeddah) [19 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40215

சாளை அப்துல் ரசாக் காக்கா!

அ.தி.மு.க. பிரமுகர்கள் சர்வே எண் 278இல் ஆய்வு தகவல் பார்த்தேன், புல்லரிச்சிப் போய்டிச்சு போங்க. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தையும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தையும் ஒரே இடத்தில் பார்த்த மாதிரி ஒரு புத்தணர்ச்சி ஏற்பட்டுடிச்சி! அமீரக பேராசிரியர் லுக்மான் இல்லாத குறைதான் போங்க!

அது கிடக்கட்டும் ...

தமிழ் வாசிக்கத் தெரிந்தா மட்டும் போதாது காக்கா! தெளிவா எழுதவும் தெரியனும்!! உண்மையாகவும் எழுத தெரியனும்!!! கொஞ்சம் சிரமம்தான்... இருந்தாலும் முயற்சி செய்ங்க காக்கா!

// ஆனால், முதன்முறையாக, MEGA உறுப்பினர் தம்பி முத்து இஸ்மாயீல், ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். // C&P

இது யாருடைய வாசகம்?

உங்க வாசகம்தானே?

முத்து இஸ்மாயில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருப்பது நீங்கதானே?

சரி, அந்த உண்மை என்னான்னு - முத்து இஸ்மாயில் கருத்தையும் நீங்கதான் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறீர்கள்: "சாலை - CRZ-1 பகுதிக்குள் வருகிறது" என்றும் சேர்த்து.

முத்து இஸ்மாயில் ஒத்துக்கொண்டதுல, பாதிதான் உண்மை, மீதி உண்மை இல்லை - அப்படின்னு நீங்க நினைச்சா - அத தெளிவா நீங்கதானே சொல்லியிருக்கனும் காக்கா? தெளிவா சொல்ல உங்களை எது தடுக்குது? ஊரில் இருந்து உங்களுக்கு வஹீ - அபுதாபிக்கு இன்னும் வந்து சேரவில்லையோ?

பரவாயில்ல லுக்மான் காக்கா, இன்னும் காலம் கடந்து போகல! இப்பவாச்சும் சொல்லுங்கோ காக்கா!!

... 1, 2, 3 - முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தந்த 5.5 ஏக்கர் நிலம், CRZ-1 வரைமுறைக்குள் இல்லை, இல்லை, இல்லை ...

---அப்படின்னு சத்தமா சொல்லுங்க காக்கா, விளங்க மாட்டேங்குது. காத்துதான் வருது போங்க. சத்தத்தை காணோம்.

அப்படி - உண்மைய சொல்ல தைரியம் இல்லைன்னா, விபரம் பத்தலைன்னா, அமைதியா இருங்க! இன்னும் கொஞ்....ச நாள்தான்! எல்லாம் விளங்கும் இறைவன் நாட்டத்துடன்!

// நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். // C&P

செத்துச்சு போங்க, CRZ என்றால் என்ன என்ற அடிப்படை அறிவும் இல்லாமதான் இத்தனை வளவளா, கொழகொழவா? கோடை விடுமுறை தொடங்கிருச்சு! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! தீர்ப்பாய நீதிபதி - உங்களுக்கும், உங்க சகாக்களுக்கும், ஐக்கிய வர்த்தக சபைக்கும் சேர்த்து CRZ பாடம் சொல்லித் தருவார். அப்ப தெரிஞ்சுக்கலாம்.

// //http://kayalpatnam.com/shownews.asp?id=15744

இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா? //

என் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு? நான் இந்தச் செய்திக்குக் கருத்து பதிந்து இருக்கிறேனா? இருந்தால் அதையும் காட்டுங்கள். //// C&P

கெட்டுச்சு போங்க, 278 இடத்துக்கும் - DCW ஓடைக்கும் 300 மீட்டர் தூரம், 200 மீட்டர் தூரம் என்று கதை அளந்தீங்களே? 278 நிலத்திலேயே, அந்த ஓடை ஓடுதூன்னு விளக்கும் செய்திதான் அது ...

தாங்க முடியல காக்க! உங்களுக்கு விளக்கம் சொல்லியே, என் சீவன் போய்டும் போல இருக்கு காக்கா.

ஏதோ சொல்வாங்களே, நீங்க அறிவாளியா, இல்லை அறிவாளி மாதிரி நடிக்கிறீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. முடங்கிய பின் புலம்பி புண்ணியமில்லை.. சகோதரரே..
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [19 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40216

அப்துல் ரஜாக் அவர்களே..! நான் கேட்ட கேள்வி தலைவியின் செயல்பாட்டை குறித்து அல்ல..! தாங்கள் வாசகர்களை திசை திருப்பாதீர்கள்..! சாலைக்கான 1.5 CRZ 1 குறிதது / சாலை CRZயில் வருகிறது / சாலை CRZ யில் வரவில்லை இரண்டில் ஒரு பதில் போதும் - மவுனம் வேண்டாம் - பிறரை திசை திருப்ப வேண்டாம்..!

சட்டச் சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம். CP

இப்படி நம்பி நம்பி தானே தாங்களின் முகல்லா மொகுதூம் ஜும்மா மயானத்தில் குடி நீர் தேக்க தொட்டி (மக்கள் வரி பணம் செயல் படாமல்) முடங்கி கிடக்கிறது - முடங்கி கிடக்க காரணம் நான் அறிந்தது பம்பு செய்யகூடிய டெக்னிக் சரியாக கையாள வில்லையாம் - இதை (டெக்னிக் தெளிவு) முதலில் சரியான பின்பு தொட்டி கட்டும் வேலையை ஆரம்பித்து இருந்தால் இன்று பல லட்சம் மக்கள் வரி பணம் (குடி நீர் தொட்டி) வீண் விரையம் ஆகி இருக்குமா..! சகோதரரே..?

ஆகவே சர்வே எண் 278 ல் சாலைக்கான 1.5 ஏக்கரில் சாலை குறித்த தெளிவு பெறாமல் இத்திட்டத்தில் கட்டிட பணியை மேற்கொள்வது குறித்து கவலை அளிக்கிறது - அக்கவலையை போக்க நீதி மன்றதின் மூலம் தெளிவு பெறுவது இக்கால சூழ்நிலையில் அவசியாம்கிறது..!

நமது வரி பணம் 90 லட்ச ரூபாய் இத்திட்டத்தின் மூலம் முதலில் சாலை வசதி தெளிவு இல்லாமல் கட்டிபணியை ஆரம்பிப்பது சரி என ஏற்றுகொள்ள முடியவில்லை - நகரில் இந்த குடி நீர் தேக்க தொட்டியே ஒரு முன் உதாரணம்.. ஈகோ அல்ல..!

கண்கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம் பண்ணி புண்ணியமில்லை - அது போன்று 278 ல் கட்டிட பனி முடிந்த பின்பு சாலை வசதி அமையபெற வில்லை என முடங்கிய பின் புலம்பி புண்ணியமில்லை.. சகோதரரே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
சில நிமிடங்கள் இதமழை!  (16/4/2015) [Views - 2560; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved