Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:09:11 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15772
#KOTW15772
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 16, 2015
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6628 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் – காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.ஏ.பீர் முஹம்மத், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் பீ.செ.செய்யித் அஹ்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.எல்.ஷெய்கு நூருத்தீன் அவர்களின் மருமகனாரும்,

குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் அல்ஹாஜ் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் இ.எஸ்.செய்யித் இஸ்மாயில் ஆகியோரின் சகோதரி மகனும்,

ஹாஜ்ஜா எஸ்.என்.முஹ்யித்தீன் ஃபாத்திமா என்பவரின் கணவரும்,

குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், அல்ஹாஜ் எஸ்.என்.முஹம்மத் நூஹ் ஆகியோரின் மைத்துனரும்,

குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.கபீர் அவர்களின் சகளையும்,

மர்ஹூம் செய்யித் அபூதாஹிர், அல்ஹாஜ் கே.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஜனாப் எம்.எம்.ஷெய்கு சுலைமான் ஆகியோரின் மச்சானும்,

ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் மருத்துவ உதவிக் குழு உறுப்பினர் டாக்டர் பீ.எம்.செய்யித் அஹ்மத், அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் அல்ஹாஜ் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன், சிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினர் அல்ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஹாஜ்ஜா பீ.எம்.முத்து ஆமினத் ஆகியோரின் தந்தையும்,

அல்ஹாஜ் ஓ.ஏ.கே.ஷஃபீயுல்லாஹ்வின் மாமனாரும்,

ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, எம்.டீ.கிதுரு முஹம்மத் ஃபாயிஸ், ஹாஃபிழ் எம்.டீ.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எம்.டீ.யாஸர் அரஃபாத், ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் தாய்மாமாவும்,

டாக்டர் எம்.எம்.சுல்தான் ராஷித், எஸ்.ஏ.பீர் முஹம்மத், எஸ்.முஹம்மத் உமர் ஆகியோரின் அப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
O.A.K.ஷஃபீயுல்லாஹ்

படம்:
ஹாஃபிழ் S.M.B.முஹம்மத் முஹ்யித்தீன் மூலமாக
M.N.L.சுலைமான்
(MNL ஏரோ ட்ராவல்ஸ்)


[விரிவான தகவல்கள், படம் இணைக்கப்பட்டன @ 17:33 / 16.04.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...إنا لله وإنا إليه راجعون
posted by Kulam Ahmed Mohideen (Jeddah) [16 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40143

என் ஆருயிர் நண்பன் டாக்டர் செய்து அஹமது வின் வாப்பா அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்தேன்..إنا لله وإنا إليه راجعون எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு' அவர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து அவர்களது நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை கொடுப்பானாக. என்னையும் தன மகனாக பாவித்த உயர்ந்த தோழவாப்பா அவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாத இழப்பு. யா அல்லாஹ் எனது தோழவாப்பா அவர்களது கபூரை ஒளி பொருந்தியதாகவும் விசாலமானதாகவும் ஆக்குவாயாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வபாத் செய்தி
posted by hasbullah mackie (dubai) [16 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40144

إنا لله وإنا إليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [16 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40146

انالله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by siddique (chennai) [16 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40149

إنا لله وإنا إليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [16 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40151

​​​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.​​


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [16 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40152

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ன லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!!

பீர் மாமா மறைவு செய்தி ஜெட்டஹ்வில் இருந்து சுமார் 15 நிமிடத்திற்கு முன்பு நண்பன். எஸ். ஆ.எம். மெய்தீன் தம்பி தொலை பேசியில் கூறியது உண்மையில் மனதுக்கு சங்ககடமஹா இருந்தது.

நான் அவர்ஹளுடன், பல ஆண்டுஹல் மிஹவும் நெருங்கி பலஹி, நிறைய அறிவுரைஹல், துஆக்கள், பெற்று வந்ததுண்டு. என் வாழ் நாள் இறுதிவரை மறக்க முடியாத மாமனிதர். அந்த காலத்து பேர் சொல்லும் தலை சிறந்த பட்டாதாரி!! வயது ஆனா காலத்திலும் திருக்குரானை கஷ்டப்பட்டு மனனம் செய்தர்ஹல்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும், மற்றும் துணைவியார். ஹாஜா. மொஹிடீன் மாமி, மருத்துவர். பி.எம். செய்தஹமது, பொறியியல் வலுனர். பி.எம். ஹுசைன் நூருதீன், ஹாபில். சர்ஜூன்., + தங்கைக்கும், அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [16 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40153

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக. ஆமீன்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [16 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40156

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [16 April 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40157

إنــاّ لله وانـاّ الـيـــه راجـعـــــــــــون

أللّـهــــمّ اغـفـــر لــه وارحـمــــــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Cnash (Makkah ) [16 April 2015]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40158

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் . அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக அவர்களை இழந்து வாடும் நண்பன் சர்ஜூன் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அறிவின் பொக்கிஷம்
posted by Prabu Shaikna (Bangalore ) [16 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40159

அறிவின் பொக்கிஷம் நம்மை விட்டும் சென்று விட்டது என்ற கவலைதான். அல்லாஹுவின் கலா கதிர்க்கு சபூர் செய்து கொண்டேன். انا لله وانا اليه راجعون அன்னாரின் பிழைதனை வல்ல அல்லாஹ் பொருத்து ஜன்னதுள் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதிதனை கொடுத்து நல்லருள் புரிவானாக أمين أمين يارب العالمين


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [16 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40160

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [16 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40163

​​​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.​​


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [16 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40164

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, மண்ணறையில் சுவனத்தின் தென்றலை வீசச்செய்து, மறுமையில் சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

கவலையில் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும், அன்பு நண்பன் ஹுஸைன் நூருத்தீன் அவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [16 April 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40165

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

அன்பிற்குரிய அருமை பீர்மாமா அவர்களின் மறைவுச்செய்துயறிந்து மிகவும் கவலைடைந்தேன் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் சரி க்ஹைர் இறைவனுடைய கட்டளை கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும், மாமா அவர்கள் மாஷா அல்லாஹ் கண்ணியமான கம்பீரமான மனிதரும் ஆவர்கள் மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம்கொண்டவர்களும்கூட தாம் உயர்ந்தபடிப்புபடித்திருந்தாலும் எப்போதுமே அதைவெளிக்காட்டிக்கொள்ளாதவர்கள் , மாஷா அல்லாஹ் மக்களுக்கு நல்லபடிப்பைக்கொடுத்து ஒவ்வொருவரையும் வெவ்வேறுதுறையில் ஆளாக்கியுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

மாமா அவர்கள் தமதுஇளம்வயதிற்குப்பின்னரும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இறைமறையை தன்னிச்சையாக மனனம்செய்து முடித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ். வல்ல இறைவன் அவர்களுடைய எல்லா நற்காரியங்களுக்கும் நிறைந்தகூலியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

டாக்டர் பீ.எம்.செய்யித் அஹ்மத், அல்ஹாஜ் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன், அல்ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின்சார்பில் இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம் ஏக நாயன் உங்களுக்கு அழகிய பொறுமையைத்தருவதோடு பீர்மாமா அவர்களின் நல்லமல்களையேற்று மண்ணறையைவிசாலமாக்கி வெளிச்சமாக்கி நாளைமறுமையில் அண்ணலார் நபியவர்களின் நற்பரிந்துரையோடும் இறைவன் தனது அழகுதரிசனத்துடன் மேலானசுவத்தில் வீற்றிருக்கசெய்வானாக ஆமீன்.

இன்னும் இன்ஷா அல்லாஹ் மாமா அவர்களின் இடத்திற்குத்தகுதியானவரை விரைவில் உங்கள் குடும்பத்திற்கு நியமித்துத்தருவானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. வருந்துகிறோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [16 April 2015]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 40166

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிவூன்.

என் அருமை நண்பர்களாகிய டாக்டர் செய்யத் அஹமத் மற்றும் சர்ஜஜூன் அவர்களின் பாசமிக்க தகப்பனார் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக கவலையுற்றேன். கன்னியமிக்க பெருந்தகை மர்ஹூம் அவர்கள் பெரும்பாலும் மஃரிப் தொழுகைக்கு கடற்கரை திறந்தவெளி குருவித்துறை பள்ளிக்குத் தொழ வருவார்கள். கண்டிப்பும் கனிவுமிக்க நல்லடியார்.

மர்ஹூமின் பிரிவால் மீளாத்துயர் கொண்டிருக்கும் மக்களுக்கும் உற்றார் உறவினர்க்கும் மேலான பொறுமையை வல்ல நாயன் வழங்கியருள்வானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மண்ணறையை விசாலப்படுத்தி வெளிச்சமாக்கி சுவனத்தின் வாடையை நுகரச்செய்து, நாளை மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை வழங்கியருள்வானாக...ஆமீன்.

கனத்த மனதுடன்.
ஹிஜாஸ் மைந்தன். சிங்கப்பூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. اللهم اغفر له وارحمه أمين
posted by M.S.Kaja Mahlari (Singapore ) [16 April 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 40168

அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பறக்காதுஹு. எனது அருமை மச்சான் அல்ஹாஜ் பீர் முஹம்மத் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அருமை மச்சான் எல்லோரிடமும் அன்பாகவும் , சிரித்த முகத்துடனும் பேசும், பழகும் நற்குனமுடையவர்கள்.

சன்மார்க்க அறிவும், சன்மார்க்க சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும் அனைத்திலும் கலந்து கொள்வார்கள் .

ஐங்கால தொழுகையினை இமாம் ஜமாத்துடன் தொழும் வழமை உடையவர்கள்.நமது முஹல்லாவில் நடைபெறும் மொலூது, கந்தூரி, புர்தா, கத்தம்தமாம் , என அணைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்ளுவார்கள் .ஸுபுஹ் தொழுகை முடிந்து நமது முஹல்லாவில் உள்ள “வலிமார்களின்” தர்காவிற்கு சென்று அணைத்து ஜியாரத்களையும் முறைப்படி நிறைவேற்றியே இல்லம் திரும்புவார்கள் .

ஒரு சிறந்த நிர்வாகியை நமது முஹல்லா இழந்துவிட்டது ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் .

என்னை காணும் நேரமெல்லாம் “ஓய் மட்சினன்” என அன்புடன் கூப்பிட்டு சுகநலம் விசாரித்து மார்க்க விசயமாக ஏதாவது கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளுவார்கள் .

“அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் “கொள்கையில் பற்றும், உறுதியும் உள்ள அவர்கள் இந்த அகீதாவிர்க்கு மாற்றமான கொள்கைகளை கடுமையாக எதிர்த்து, தானும் தவிர்ந்து, பிறரையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துவார்கள்.

அன்னாரின் இழப்பு ஒரு பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் உற்றார் , உறவினர்கள் , குடும்பத்தார்கள் குறிப்பாக எனது அருமை நண்பர் டாக்டர் அல்ஹாஜ் செய்யித் அஹ்மத், அருமை தம்பி அல்ஹாஜ் ஹுசைன் நூர்தீன் , அல்ஹாஜ் சர்ஜூன் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சபூர் செய்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் . அல்லாஹ் உங்கள் யாவருக்கும் நிறைந்த பொறுமையையும், உயர்ந்த நற்கூலியையும் வாரி வழங்குவானாக !

எல்லா வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள், அறிந்தோ, அறியாமலோ செய்துவிட்ட பாவங்கள் யாவையும் மன்னித்து, அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி, விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலகுவாக்கி , கப்ரை ஜன்னது பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நாயகம் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் சபாஅத் எனும் பாக்கியத்தை பெற்றவர்களாக, அன்னாரோடு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் அசல் பாகத்தில் குடியமர பேரருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Mohamed Thamby (Dubai) [16 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40170

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Seyed Ibrahim P.M.S.R. (Abu Dhabi) [16 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40171

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [16 April 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40173

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

மர்ஹூம் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Fareed (Dubai) [16 April 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40174

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. .اللهم اغفر له وارحمه
posted by அபூ தாஹிர்.mik (புனித மக்கா ) [16 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40175

வரும் வாரம் புனித ரஜப் மாதம் துவங்க உள்ளது. நமதூர் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வைபவங்களும் இன்ஷா அல்லாஹ் துவங்க உள்ளது. இத்தருணத்தில், மர்ஹூமாகிவிட்ட, இறையருளை பெற்று விட்ட இந்த சங்கைக்குரிய பெருந்தகையை பற்றி கசிந்த கண்களோடு ஒரு தகவல்,

புனித ரஜப் மாதம் அதிகாலை தஹஜ்ஜத் வேளையில் மஜ்லிஸிற்கு வருகை தந்து, தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றி விட்டு, விரிப்புகள் விரித்து, நறுமண பொருட்கள், கிதாபுகள் அனைத்தையும் எடுத்து வைத்து மஜ்லிஸை தயார் செய்ததற்கு பிறகு, அருகாமையில் இருக்கும் மஹான் பெரிய முத்துவாப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் ஜியாரத்தை முடித்து விட்டு, பள்ளியில் சுபுஹு தொழுதுவிட்டு மீண்டும் மஜ்லிஸிற்கு வருகை தந்து உலமாக்கள், முதலில் புனித புஹாரி ஷரீப் ஓதியதற்கு பிறகு இவர்களும் ஓதிவிட்டு செல்வார்கள். இப்படி ரஜப் பிறை ஒன்று முதல் முப்பது வரையிலும் தொய்வின்றி செய்து வருவார்கள். இவ்வாறு சுமார் 20 ஆண்டு காலங்கள் இப்பணியை தன் பணியாக செய்து வந்ததும் குறுப்பிடத்தக்கது.

"இது என்னுடைய கிரந்தம்" என்று ஏந்தல் நபிகள் நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்ன இந்த புனித சஹீஹுல் புஹாரி ஷரீபின் பொருட்டல் வல்ல ரஹ்மான், அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்துவிட்ட பாவங்கள் யாவையும் மன்னித்து, அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி வைத்து, சுவனத்து பட்டாடைகளை வழங்கி அவர்களை கண்ணியப்படுத்துவானக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by mohammad jameel (RIYADH) [16 April 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40177

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

முஹம்மது ஜமீல்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான். (ஜித்தா..) [16 April 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40178

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

என்னன்பு பள்ளி நண்பன் மருத்துவர்,பி.எம்.செய்யது அஹமதுவின் அன்புமிகு தந்தை எனது பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய எஸ்.ஏ .பீர் முஹம்மது மாமா அவர்கள் நீண்ட காலம்மாக சவுதியில் பேரோடும் புகழோடும் பணியாற்றி வந்த ஜித்தாவில் உள்ள மிக பிரபலமான அல்-ஈஸாயி எனும் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் என்னை சேர்த்து விட்டும் மேலும் நானும் அவர்களோடு இணைந்து பணியாற்றியதோடு இன்று வரை பணியாற்றி இறையருளால் அவர்களது கண்ணியத்தை காத்து வருகின்றேன்.

என்னைப் போல் நமதூர் மக்கள் நிறைய நபர்களை அவர்கள் இந்த கம்பேனியில் சேர்த்துவிட்டு எங்கள் வாழ்வில் வழிகாட்டி ஒளியேற்றி சிறப்பாக்கி வைத்துள்ளார்கள். ஜசாக்கல்லாஹ் ஹைரா.

இவர்கள் இன்று மறைந்து விட்டார்கள் எனும் செய்தியை நண்பர் குளம் எம்.ஏ.அஹமது முஹியித்தீன் மூலம் அறிந்து பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளானேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்த மரண நடப்பை அவர்களது நீண்டகால நண்பரும் எமது மேலாளருமான சவூதி அவர்களிடம் கூறிடவும் பெரும் அதிர்ச்சி அடைந்து கவலைக்குள்ளாகியும் பிரார்த்தித்து கொண்டார்கள். மற்றும் அவர்களோடு பணியாற்றிய சக ஊழியர்களிடமும் கூறிடவும் யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகி பிரார்த்தித்து அவர்கள் மக்களிடம் ஸலாம் மற்றும் சபுரை சமர்ப்பிக்குமாறும் சொல்லி கொண்டார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட எனது பெரும் மரியாதைக்குரிய எஸ்.ஏ .பீர் முஹம்மது மாமா அவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அருமை மகன்கள் ,மகள், மனைவி மற்றும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் .

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...சப்தமில்லாமல் மறைந்த ஒரு சகாப்தம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40179

பீர் முஹம்மது காக்கா அவர்களை நேற்று பகல் குருவித்துறை பள்ளியில் சந்தித்தேன். அமைதியாக போவார் வருவார். எங்கள் வீட்டு எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக கலந்து கொள்வார். அமைதியாக வருவார் போவார். நல்லமல்கள் நடக்கும் இடங்களில் அமைதியாக வந்து அமர்ந்து அமைதியாக புறப்பட்டு விடுவார். தம்பி தம்பி என்று வாய் நிறைய மனம் குளிர கூப்பிட்டு மகிழ்வார்.

அவரது பள்ளி பருவங்கள் மனதை உருக்கும். இவரைப் போல் கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும் என்று எங்கள் வாப்பா சொல்வார்கள். பாரத வங்கியின் மேலாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் மாணிக்க வியாபாரியாக பரிணாம வளர்ச்சி பெற்று பின் அரபு நாட்டில் தன் முத்திரையை பதித்தார். மக்களையும் நல்ல உயர்ந்த படிப்புக்கள் படிக்க வைத்ததுடன் மனித நேயத்தையும் அவர்களுக்கு கற்று கொடுத்தார். மருத்துவர் ENT SPECIALIST செய்து அஹ்மத் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாது அமைதியாக இருப்பார்.

சப்தமில்லாமல்- இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது போலவே அவர் வாழ்க்கையும் கணப் பொழுதில் சப்தமில்லாமல் யாருக்கும் சங்கடம் கொடுக்காமல் முடித்துக் கொண்டார்.

செய்தி என்னை வந்தடைந்தபோது அடி வயிற்றில் அமிலம் சுரந்தது காக்காவா... நேற்றுதானே சந்தித்தேன் எந்த நோய்க்கானா அறிகுறியோ அசத்தியோ அவர் முகத்தில் தெரியவில்லையே....

VA ITHAA JAA''A AJALUHUM LAA YASTHAUKIROONA SAA''ATHUN VALAA YASTHAQDHIMOON என்ற இறை வசனம்தான் நினைவுக்கு வந்தது .

எல்லாம் வல்ல அல்லாஹ் அருமை காக்கா அவர்களின் பாவங்களை மன்னிப்பானாக அவர்கள் நற் செயல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வெளிச்சமாக்கி வைப்பானாக. மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக.

ஒரு அருமையான - அமைதியே உருவான- குடும்பத் தலைவரை இழந்து நிற்கும் எல்லா உடன் பிறப்புக்களுக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by nizam (india) [16 April 2015]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 40180

இன்னாளிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் அருமை நண்பர் ஹுசைன் நூர்தீன் அவர்களுக்கு நல்ல சபூரை இறைவன் கொடுப்பானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. கொஞ்.......சமும் எதிர்பார்க்கவில்லை!
posted by S,K.Salih (Kayalpatnam) [16 April 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40181

இளைஞன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கும் - அதிகாலையிலும் புத்துணர்ச்சியுடன் பள்ளிவாசலை நோக்கி வரும் அவர்களைப் பார்த்து...

எங்கள் மஹல்லாவான குருவித்துறைப் பள்ளியில் ஐவேளைத் தொழுகையிலும் முதல் வரிசையில், தலைப்பாகையுடன் முற்கூட்டியே காத்திருந்து கலந்துகொள்வார்கள். குருவித்துறைப் பள்ளியை விட்டால் கடைப்பள்ளிதான் அவர்களுக்குப் போக்கிடம்.

அவர்கள் வஃபாத்தான இன்று, கடைப்பள்ளியில் அஸ்ர் தொழுகை ஜமாஅத்தை முடித்துவிட்டு வழமை போல துஆ ஓதிய இமாம் தங்கள் புகாரீ மாமா அவர்களுக்கு துஆவினிடையே தொண்டை கரகரத்து, அடுத்த சொல் வாயில் வரவில்லை... அழுதுவிட்டார்கள் என எம்.என்.எல்.சுலைமான் சாச்சப்பா என்னிடம் கூறினார்.

மரணத்தைப் பார்த்தால், மையித்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளும், அவர்களது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய ஒத்தாசைகளும்தான் என் மனதில் முன்னிற்கும் என்பதால், எளிதில் கண்ணீர் வடித்து விட மாட்டேன். ஆனால் இன்று நான் தோற்றுவிட்டேன்.

எங்கள் தாய் வீட்டில் இன்று உறவினர்களுக்கு விருந்து நிகழ்ச்சி. சாப்பிட ஆவலாய்க் காத்திருந்தபோது, மாமாவின் வஃபாத் செய்தியை அவரது மருமகனார் நண்பர் ஷஃபீயுல்லாஹ் எனக்குத் தொலைபேசியில் தெரிவிக்க, அதன் பின்னர் உணவுண்ண வேண்டும் என்ற எண்ணமே கசந்து போனது. உடனடியாக கே.எம்.டீ. மருத்துவமனைக்குச் சென்று என்னாலியன்ற கடமைகளைச் செய்தேன்.

சில நாட்களுக்கு முன் குருவித்துறைப் பள்ளியில் என்னைச் சந்தித்த மாமா, “வாப்பா! நீ ஒரு மத்ரஸா நடத்தினாயே...? இப்ப நடத்தவா செய்றா?” என்று கேட்க, “இல்லையே மாமா... நிறுத்திட்டேனே...?” என்றேன். “என் பேரன் குர்ஆனைப் பார்த்து ஓதி முடித்துவிட்டான் என்றாலும் அவனுக்கு தஜ்வீத் முறைப்படி ஓதிக்கொடுக்கனும்” என்றார்கள். “எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள், என் மனைவி சொல்லிக் கொடுப்பாள்” என்றேன். அடுத்த நாளே அனுப்பி வைத்துவிட்டார்கள்.

மய்யித்தைப் பார்க்க வந்த ஒவ்வொருவரும் சொன்ன புகழாரமெல்லாம், “ஒரு ஜமாஅத் விட மாட்டாங்களே...?” என்பதுதான்.

“கிடையில் கிடந்து, யாருக்கும் தொல்லையெல்லாம் கொடுத்துவிடாமல், அல்லாஹ் என்னைப் பாதுகாக்கனும்... சத்தமில்லாமல் போய் சேர்ந்துடனும்” என்று KEPA தலைவர் ஹாஜி மாமாவிடம் சில நாட்களுக்கு முன்பு கூட கூறினார்களாம். அது இப்போது மெய்யாகிவிட்டது.

“உங்களுக்கென்ன மாமா...? நீங்கள் யாருக்கும் தொந்தரவு தராமல் நிம்மதியாகப் போய்விட்டீர்கள்... ஆனால், உங்களின் இந்தத் திடீர் பிரிவை எங்களால் எளிதில் தாங்க இயலவில்லையே...?

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய தாய் மெய்தீன் மாமி அவர்கள், என் மரியாதைக்குரிய டாக்டர் காக்கா அவர்கள், அவர்கள் என் மீது கோபமுற்ற காலங்களிலும் நான் மிகவும் நேசிக்கும் என் அன்பிற்குரிய ஹுஸைன் காக்கா அவர்கள், என் உயிர் நண்பன் ஹாஃபிழ் ஸர்ஜூன், அன்புத் தங்கை உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [17 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40182

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

கண்ணியம் மிகுந்த பீர் முஹம்மத் மாமா அவர்கள் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தார்கள்.தனக்கென்ற பிரத்யேக பாணியில் கம்பீரமாக வாழ்ந்து வந்தார்கள். பள்ளிவாசலில் ஜமாஅத் நடைபெறும்பொழுது தோலில் இருக்கும் துண்டை கொண்டு தலைப்பாகை கட்டிகொள்வார்கள். ஜமாஅத் முடிந்து பள்ளியில் வெளியில் அமர்ந்து இருப்பார்கள். அவர்களை சந்திக்கும் பொழுதெல்லாம் மருமகனே சுகமா இருக்கீங்களா என்று அன்புடன் கேட்பார்கள்.

அடிக்கடி ஜமாத்தில் சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரொம்ப நாளாக அவர்களை யார் என்றே தெரியாமலே இருந்தேன். சில ஆண்டுகள் முன்னேதான் அவர்கள் என் இனிய நண்பன் ஹுசைன் நூர்தீன் அவர்களின் தந்தை என அறிந்தேன். என்னுடைய பள்ளிகூட வயது நண்பர் அல்ஹாபில் முஸ்தபா அவர்களின் தாய் மாமனார் என அறிந்து மிகுந்த சந்தோசம் அடைந்தேன். வயதின் களைப்பை தூரமாக்கி ஒரு இளைஞ்சனை போல் அவர்கள் சுற்றிவந்தது என் நினனைவில் வருகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து,சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக ஆமீன்.

அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக, குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வல்ல இறைவன் வழங்கிடுவானாக,,,

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA K.S.A) [17 April 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 40184

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் . அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுதருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 April 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 40187

அஸ்ஸலாமு அலைக்கும்

..>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் <<<<

மர்ஹும் அவர்களின் அனைத்து பாவங்களையும் வல்ல இறைவன் மன்னித்து ...மர்ஹும் அவர்களின் அனைத்து நல அமல்களையும் ஏற்று ..கபூரை விசாலமாக்கி ,, சொர்க்கத்தையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ...

வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [17 April 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40191

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by shaik dawood (Sharjah) [18 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40196

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ன லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .
posted by Mohamed Hassan (Jeddah) [18 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40201

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா - கத்தார் ) [18 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40202

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் செய்து அஹமது டாக்டர், ஹுஸைன் நூர்தீன் காக்கா மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.​​


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by abdul wadood (jaipur) [18 April 2015]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 40204

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக. ஆமீன்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [18 April 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40207

​​​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [18 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40209

அன்பர்களுக்கு,

தயை கூர்ந்து கொள்கை, அகீதா விஷயங்களை வபாத் கருத்துகளில் பேச வேண்டாம். இது ஆறுதல் சொல்லி துஆ செய்யும் நேரம்.

என் நண்பர் சர்ஜூனுக்கு ஆறுதல் சொல்லி, அவரின் தந்தைக்கு துஆ செய்து , இங்கு வந்து பார்த்தால் ஒரு கருத்தாளர் "...அவர்கள் இந்த அகீதாவிர்க்கு மாற்றமான கொள்கைகளை கடுமையாக எதிர்த்து..." ஒருவரின் வபாத் செய்தியில் / விஷயத்திலும் கொள்கை விளக்கம் தேவையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by Mohamed Mohideen (Madinah) [18 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40210

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...புஹாரி
posted by HYLEE (COLOMBO) [20 April 2015]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40221

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [20 April 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40232

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் நண்பர் ஹாஃபிழ் சர்ஜூனின் தந்தை ஹாஜி பீர்முஹம்மது அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

அனுதினமும் ஐவேளை தொழுகையையும் ஜமாத்துடன் கடைபிடிக்கக்கூடிய சிறந்த மனிதர். அமைதியான சுபாவம் கொண்டவர்.

எல்லாம்வல்ல இறைவன் அண்ணாரின் பிழைகளை மண்ணித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக.

அண்ணாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.

அருமை சகோதர்ரகளான டாக்டர் செய்யித் அஹ்மது, ஹுஸைன் நூர்தீன், நண்பர் சர்ஜூன் ஆகியோர்களுக்கு என் ஸலாமை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
சில நிமிடங்கள் இதமழை!  (16/4/2015) [Views - 2542; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved