Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:23:18 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15599
#KOTW15599
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 18, 2015
பார்க்காம உக்காந்தா பிட்டி கிழிவது உறுதி! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3635 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில் மாலை நேரங்களில் கண்ணியம் பேணும் பொதுமக்களே பெரும்பாலும் வந்து செல்கின்றனர். ஆனால் ஆள் அரவமற்ற காலை - மதிய நேரங்களில் அது பெரும்பாலான சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது.

தடை செய்யப்பட்ட கஞ்சா, மதுபானங்களை கடற்கரையில் அமர்ந்தவாறு சர்வசாதாரணமாக உட்கொள்வதும், மங்கையருடன் உல்லாசம் காண்பதும் அவர்களின் வாடிக்கை.

இவ்வாறிருக்க, தற்போது கூடுதலாக ஒரு பழக்கமும் அவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்துகொண்டு மதுபானங்களைக் குடித்து முடித்ததும் அவ்விடத்திலேயே மதுப்புட்டியைத் துண்டு துண்டாக உடைத்து சிதறடித்துச் செல்வதை கடந்த சில நாட்களாக அவதானிக்க முடிகிறது.







அவற்றைப் பலர் பார்த்து திட்டியவாறு கடந்து செல்வதும், சில சமூக ஆர்வலர்கள் தமது பொழுதுபோக்கை மறந்து அவற்றைத் தம் கைகளால் பொறுக்கியெடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதன் மூலம் பொதுமக்களுக்கு நன்மை செய்வதையும் காண முடிந்தது.





பொதுமக்கள் கடற்கரையைப் பயன்படுத்தாத இதுபோன்ற நேரங்களில் முறையான கண்காணிப்பு அன்றாடம் அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காயலின் பாதுகாப்பு கேள்விக்குறியே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [18 March 2015]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 39668

சின்னஞ்சிறு மழலைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வந்து போகும் கடற்கரை மணலில் இப்படி கண்ணாடி பாட்டில்களை நொறுக்கிப் போட்டிருப்பது மிகப்பெரிய அயோக்கியத் தனம்.

ஒரு காலத்தில் இருந்த கண்ணியமும் கட்டுப்பாடும் இன்று காயல் கடற்கரையில் இல்லாது நமது கைவிட்டுப் போனது நம் துரதிர்ஷ்டாமே! பல்வேறு ஊர்களில் இருந்தும் பல வகைப்பட்ட மனிதர்கள் கூடும் இடம். குறிப்பாக வீட்டில் வெந்து புழுங்கி நொந்து போகிறோமே என காயல் தாய்க்குலங்கள் தம் கணவர், மற்றும் குழந்தைகளோடு இரவு உணவை முடித்து விட்டு இங்கு வந்து போவது வழக்கம்.

ஓடிவிளையாடும் அந்த பிஞ்சுப் பாதங்களில் இந்த நீசர்கள் உடைத்தெறிந்த பாட்டில் துண்டுகள் குத்திக் கிழித்திருந்தால்...? நினைக்கவே நெஞ்சம் கூசுகிறது. காவல்துறை, காயல் பொதுநல அமைப்புகள், இளைஞர் அணி, கடற்கரை பயணாளிகள் சங்கம் ஆகியவற்றின் அங்கங்கத்தினர் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். கடற்கரையில் உட்கார்ந்து தண்ணி அடிக்கிறவனை அங்கனெயே போட்டு மிதிக்கணும். அயோக்கியர்கள். உள்ளம் குமுறுகின்றது.

எப்பா... நகர்மன்ற உறுப்பினர்களே..! நீங்க என்ன செய்வீங்களோ? ஏது செய்வீங்களோ? எந்த ஜமாஅத்துலெ போய் உத்தரவு வாங்குவீங்களோ? தெரியாது. காவல்துறையின் அறிவுறுத்தலின் படி உடனே ஊருக்குள்ளே முக்கிய இடங்களில் CCTV யை வைக்க ஏற்பாடு செய்யுங்க. நாளுக்கு நாள் நம்ம ஊர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது நல்லதல்ல..!.

மன வருத்தத்துடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 March 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39669

அடப் பாவிகளா.

சின்ன குழந்தைகள் வெறும் காலில், அழகான கடற்கரை மணலில் ஓடி விளையாடும் சமயம் காலில் பட்டால்..! அதுவும் இரவு நேரமாக இருந்தால்... நினைக்கவே பதறுகிறது.

முன்பு கஞ்சி வாங்கி குடித்துவிட்டு கண்டி கிளாசை உடைத்து மண்ணில் புதைத்துவிட்டு சென்றார்கள். பலருடைய பாதங்களை பதம் பார்த்து, அதை கண்ட பலருடைய மனதையும் துன்புறுத்தியது. கண்ணாடி கிளாஸ்கள் கொஞ்சம் கொஞ்சம் மாறி, பிளாஸ்டிக், பேப்பர் கிளாஸ் என்று புது என்ட்ரி ஆகி, வேறு விதத்தில் தொல்லைகள் கொடுக்கின்றன.

ஊரில் நடைபெறும் செயல்களை கண்டால், கண்காணிப்பு கேமரா அவசியம் என்பதை தான் உணர்த்துகிறது.

தலைப்பு "பார்க்காம உக்காந்தா பிட்டி கிழிவது உறுதி", கடும் வேலை பளுவில் சிரிக்க வைத்தது.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Comment Reference Number: 5907
posted by A.R.Refaye (ABudhabi) [18 March 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39680

[11 July 2011] அன்று இதற்காக நான் பதிவு செய்த கருத்து மீண்டும் நினைவு கூற

Comment Reference Number: 5907

தயவு செய்து கடற்கரை வியாபாரிகள் குறிப்பாக கஞ்சி கடை நடத்துவோர் கண்ணாடி கிளாசை பயன் படுத்த வேண்டாம், காரணம் சில சமயங்களில் அது உடைந்து அதன் துகள்கள் கடற்கரை மண்ணோடு மண்ணாக உட் புதைந்து அதுவால் நாமோ, நம் பிள்ளைகளோ,பொதுமக்களோ காலனி இல்லாமல் கடற்கரையில் உலவும் போது அந்த கண்ணாடி உடைந்த பாகங்கள் நம் பாதங்களை பதம் பார்க்காமல் விட்டதில்லை அனுபவத்தால் என் நண்பர் மகளின் காலில் கண்ணாடி துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி கொண்டு மருத்துவரிடம் கொண்டு சென்ற நிகழ்வுகள் என் மனதில் மாறாத வடுவாகவே உள்ளது.

ஊரில் நான் இருக்கும்போதெல்லாம் கடற்கரையின் கஞ்சி வியாபாரிகளை கடிந்து கொண்டும் எந்த பயணம் இல்லை, காயல் கண்மணிகளே கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது நம் பிஞ்சு பிள்ளைகளின் பாதங்கள் நம் நினைவுக்கு வந்து கழிவுகளையும், கண்ணாடி பொருள்களையும் நாம் இரட்டிப்பு கவனம் செலுத்த அகல்வாய் கரைக்கு வரும் அனபர்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு, நகராச்சி இதில் கவனம் செலுத்த முற்படவேண்டும். என்பதை இதில் பதிவு செய்கிறேன்.

A.R.Refaye-Abudhabi.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Fasi Ismail (Guangzhou) [19 March 2015]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 39694

காலியான சாராய பாட்டில் சொல்லுது , இன்று உன்னால் நான் காலி, நாளை என்னால் நீ காலி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான், (yanbu) [19 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39702

"கன்னித்தீவு கதைக்கு முடிவும் இல்லை -நம்
காயல் கடற்கரைக்கு விடிவும் இல்லை!"

=அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (17/3/2015) [Views - 2633; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved